Jump to content

ஹைய்யா! நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!.


Recommended Posts

hj.gif
 (படம் இணையத்தில் இருந்து)
{இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} 

ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!"

"டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?"

"என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா"

"என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..."

"ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." 

 "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?"

"அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலமாவே பார்த்துகிட்டு."பேச்சித்தமிழும் இருக்குடே!" 

"அப்போ! தப்புத்தப்பா எழுதலாம்'ன்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லவில்லையே, இப்படி எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது'ன்னுதான் சொல்கிறேன். அதெல்லாம் பேச்சு மொழின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்.".

"சரி மேட்டருக்கு வா! உனக்கு மொக்கை போடத்தானே தெரியும் எப்படிடா இப்படி திடீர்ன்னு பதிவரான?"

"சிம்பிள் மாமு, சுடுதண்ணி எப்படி வைக்கிறது'ன்னு சுடச்சுட சொன்னா அது மொக்கை, அதையே சுடுதண்ணி வைத்து சுலைமானி எப்படி போடுறதுன்னு சொன்னா அது சமையல் குறிப்பு."

"அப்போ! என்னைப்போல பக்கம் பக்கமா எழுதுனா அது பதிவில்லையா???"

"நீ எழுதுவது கட்டுரை மாமா அதைப்படிக்கவும் ஒருகூட்டம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பக்கம்பக்கமா எழுதினால் அதையெல்லாம் உட்க்கார்ந்து படிக்கிற அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு நேரம் இல்லை."

"அப்படின்னா  எப்படி எழுதனும்னு சொல்ற?"

"எதைச்சொன்னாலும் நச்'ன்னு நாலு வார்த்தையில் சொல்லிடனும், அதே சமயம் வாசகர்களைக் கவரும் வகையிலும் இருக்கவேண்டும். அப்பறம் பாரு வாசகர்கள் பின்னூட்டம் வந்து குவியும்."

"நானும் நல்லாதாண்டா எழுதுகிறேன், ஆனால் ஒருவாசகர்கூட பின்னூட்டம் போடுவதேயில்லை, ரொம்ப கஷ்டமா இருக்குடா மச்சி!"

"டேய்! மாமா இதற்கெல்லாம் மனசு உடைந்துவிடக்கூடாது. நீ ஒரே மாதிரியான பதிவை மட்டும்தான் எழுதுற, நகைச்சுவை-கிண்டல்,கேலி'ன்னு பல ரகமான பதிவுகளை எழுது மாமு, அப்பறம் பாரு!.  இப்ப நீ எழுதுவது ஒரு விதமான வாசகர்களை மட்டுமமே கவருகிறது, வித விதமாக எழுதினால் பலவிதமான வாசகர்களையும் கவரும்."

"ஓ! இப்படி வேற இருக்கா? நான் என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே கட்டுரையா எழுதுகிறேன் மச்சி! வாசகர்களின் வருகையே இல்லை மச்சி!ரொம்ப பீலிங்கா இருக்கிறது."

"அப்படி இல்லை மாமா, மனசுல உள்ளதை அப்படியே எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு 'போர்' அடிச்சிடும். பாதியிலையே விட்டுட்டுப் போய்டுவாங்க. நகைச்சுவையையும் கற்பனையையும் கலந்து எழுதினால் அது காவியம், இப்பலாம் வாசகரை கவர மசாலாவையும் கலக்கனும் மாமு!"

"அப்ப நான் எழுதுவதெல்லாம் பதிவே இல்லை என்று சொல்கிறாயா?"

"நீ எழுதுவது பதிவுதான் மாமா, ஆனால் அதை முழுவதையும் படிக்க முடியலையே, பாதியிலையே நிறுத்திட வேண்டி இருக்கு, ஒரு விறுவிறுப்பும் இல்லை நகைச்சுவையும் இல்லை. பக்கம் பக்கமா சொல்லாமல் சொல்லவேண்டியதை சுருக்கமா சொல்லுங்கிறேன்."

"சரி எப்படி எழுதினால் வாசகர்கள் பின்னூட்டம் போடுவார்கள். சொல்லு அப்படியே செய்கிறேன்."

"திரும்பத்திரும்ப அதையேதான் கேட்க்கிறாய், மாமா வாசகர்கள் பின்னூட்டத்திற்காக மட்டும் பதிவு எழுதக்கூடாது. பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். பிடித்தவர்கள் பின்னூட்டம் போடுவார்கள் மற்றவர்கள் படித்துவிட்டுப் போய்டுவார்கள".

"சரிடா மச்சி! வாசகர்கள் எப்படிப்பட்ட பதிவுகளை ரசித்து பின்னூட்டம் போடுகிறார்கள்?"

"மாமா, வாசகர்களில் பின்னூட்டம் போடுபவர்கள் பலவிதம். சிலர் முழுப்பதிவையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுவார்கள், சிலர் மேலோட்டமாகவும், சிலர் பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டும் பின்னூட்டம் போடுவார்கள்."

"அடப்பாவிங்களா! இப்படி வேற செய்கிறார்களா? இப்படி படிக்காமல் வரும் பின்னூட்டத்தினால் என்ன பயன்? படிக்காமல் போடும் ஆயிரம் பின்னூட்டங்களை'விட , படித்துவிட்டுப் போடும் ஒரேயொரு பின்னூட்டமே போதும்டா மச்சி!"

"டேய், என் சிங்கி மாமா, பின்னூட்டம் என்பது ஊக்கமருந்து மாதிரி, அது எப்படி வந்தால் என்ன? சிலர் நல்லாருக்குன்னு சொன்னால்தானே , நீயும் சந்தோஷமா அடுத்தப்பதிவை எழுத போவ...அது எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம், 'அனுபவி' அது போதும்."

"இப்படி  வரும் பின்னூட்டம், எழுத்தாளனின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டது இல்லையே! அதனால் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதும் எழுத்துக்கு என்ன பயன்?"

"எழுத்தை மதிக்கிறார்களோ இல்லையோ! ஆனால் எழுத்தாளன் மதிக்கப்படனும், அவன் மனமுடைந்துப் போகக்கூடாது, எப்பவும் தொடர்ந்து எழுதணும், ஊக்கமது எந்த உருவத்தில் வந்தாலும் சரி அதையே படிக்கல்லாக நினைத்துகொண்டு தனது அனுபவங்களை எழுதணும் , இன்றைய எழுத்தாளனின் அனுபவம்தான் நாளைய இந்தியாவின் இலக்கியம்."

"ஆமாம், இப்ப என்னத்தாண்டா சொல்ல வர..."

"எழுத்தாளன் எழுதணும், அவரவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட 'திறமை'  இருக்கும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும். அவரவர்களுக்கென்று ஒரு 'ஸ்டைல்' இருக்கும் அப்படியே அதன்படியே எழுதவேண்டும். ஏகப்பட்ட குறிச்சொல் இருக்கிறது கதை, கவிதை, தொடர்கதை, சரித்திரம், அரசியல், தமிழ், நகைச்சுவை, சமையல், சினிமா, புனைவுகள், நிகழ்வுகள், மருத்துவம், கணினி, சாதி, மதம், சிந்தனை, பாடல்கள், பொது, நாவல்கள் என பலவகைகள் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனின் மனதிலும் இப்படி ஏதாவது பிரிவில் எழுதும் திறமை இருக்கும். அதை மறைக்காமல் அப்படியே எழுதவேண்டும்.
அவரவர் சொந்த கற்பனையை யாரும் குறைச் சொல்லபோவதில்லை, நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும், அதனை காலபோக்கில் சரிசெய்துகொண்டு மீண்டும் எழுதவேண்டும் என்றுதான் சொல்கிறேன்."

"நன்றிடா மச்சி! இனி நான் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், பின்னூட்டம் வந்தால்தான் எழுதவேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றிக்கொண்டு எழுதுகிறேன். யார் என்னச்சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன் தடையென்றால் மிதித்துச் செல்கிறேன், எனது எழுத்துப்பயணத்தை இனி யாருக்காகவும் எதற்காகவும் நிருத்தமாட்டேன்."

"ம்ம்ம்ம் சரி மாமா, இனி தன் மனதில் தோன்றுவதை தங்குதடையில்லாமல் எழுதுடா, எழுத்தாளர்கள்தான் தமிழின் வேர்கள் நாம் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் செத்துவிடும். நம் சிந்தனையை இழைத்து தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயிர்காப்போம்."

******நன்றி******
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடோய்... நீங்க, எங்கேயிருந்து... வாறீங்கள்.
முதலில், அடையாள அட்டையை காட்டுங்கோ பாப்பம்.
அதுக்குப்... பிறகு தான்... வரவேற்பா, ஆப்பா... என்று தெரியும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை பிழைத்துக்கொள்வீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ போங்கப்பா.நீங்க இதுன்கிரீங்க அவுக அதுன்கிறாங்க நான் எது என்னே புரிய மாட்டேங்குது.ஒரே அதுவா இருக்குப்பா.நிங்க அதுவா?இதுவா?இல்ல அவுக இதுவா அதுவா?எதுவா இருந்தாலும் பரவாயில்லை.இதுவா இருக்க கூடாது.(ஒஹ்ஹ்ஹ் நான் தான் பிழையா?சரி இதுவா இருந்தாலும் அதுவா இருக்கக் கூடாது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழீழன் நல்ல ஒன்றை கையாள்கின்றீர்கள்.தமிழ் எங்கள் தாய் மொழி என்பதை தாண்டி எமக்கு பேச்சையும் மூச்சையும் தந்தது.நாம் தமிழராய் பிறந்ததால் அடைந்த மகிழ்வைத் தவிர அடைந்த துயரங்களே மிகவும் அதிகம்.மாறவேண்டும்.எனக்கு மிகவும் கேவலமாக உள்ளது என்னை தாண்டிச்செல்லும் என்னவனை விட எப்போதோ கண்ட ஒரு வெள்ளையனின் கையை வில்லங்கமாய் குலுக்குகிரேனேஎன.இதுதான் எம் விழுமியமாய் நாம் பழகிப்போனோமோஎன .உதாரணத்துக்கு எத்தனையோ பாலியல் கொடுமைகள் என் தேசத்தில் எம் சகோதரிகளுக்கு நடந்தும் கண்டுகொள்ளாமல் டெல்லியில் நடந்ததை எம் கொல்லைக்குள் நடந்தது போல துடித்தெழுந்து பலதிரிகள் திறந்து நாட்கணக்கில் விவாதிக்கும் களஉறவுகள் போல.

Link to comment
Share on other sites

வணக்கம் anni lingam, தங்களைப்போல் எனக்கும் பேசப்பிடிக்கும்.மௌனம் அதைவிடப்பிடிக்கும்.அதிலும், மௌனமான இந்நேரத்தில் மௌனம்தான் பிடிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

 

யாழில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்காக... இலவச‌ கொப்பி, பேஸ்ற் ரெக்னிக்கை அறிமுகப் படுத்த உள்ளேன்.

பழைய உறுப்பினர்களுக்கு, க‌ட்டணம் வசூலிக்கப்படும்.

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

 

அல்வாயன். உதவி செய்ய... நாம் காத்திருக்கின்றோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்...நண்பர் தமிழ் சிறீ......எதிர்பார்க்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்...நண்பர் தமிழ் சிறீ......எதிர்பார்க்கிறேன்.....

 

இரண்டு வழிகள் உள்ளது அல்வாயன்.

முதலாவது... நீங்கள் என்ன படத்தை தெரிவு செய்யப் போகின்றீர்கள் என்பதை, கூகிழில் தேடுங்கள். உ-ம் மல்லிகைப் பூ என்று வைத்துக்கொண்டால்.... மல்லிகைப் பூ என்று தமிழில், எழுதி கூகிழில் தேடும் போது... பலவிதமான மல்லிகைப் பூ படங்கள் வரும். அதில் உங்களுக்கு பிடித்த படத்தை கிளிக் பண்ணும் போது.... உங்களது படம் மட்டுமே கணனித் திரையில் தெரியும்.

இப்போ படத்திற்கு அருகில், உங்கள் மௌசின் இடது பக்கத்தை... அமத்திக் கொண்டு படத்தின் மேல் மௌசை கொண்டு போகும் போது, படம் இள நீலநிறத்துக்கு மாறி விட்டதென்றால்... படம் மௌசில் கொப்பி(பிரதி) எடுக்கப் பட்டுவிட்டதென்று அர்த்தம். அதனை உங்கள் பதிவில் கொண்டுவந்து, மௌசின் வலது பக்கத்தை அழுத்தும் போது... Paste அல்லது Einfügen என்று காட்டும், அந்த இடத்தில்... மௌசின் அம்புக்குறியால் வலது பக்கம் கிளிக் பண்ணும் போது, படம் பதியப் பட்டு விடும்.

 

இரண்டாவது முறை. பீபீகோட் மூலம் இணைப்பது.

கீழே தரப்பட்ட இணைப்பை அழுத்தும் போது... (இந்த இணைப்பு யாழின் மேலே, திண்ணையின் வலது பக்கத்தில் உள்ளது)http://www.yarl.com/forum3/index.php?amp;&app=forums&module=extras&section=legends&do=bbcode கூகிழ் இமேஜ் என்று ஒரு தெரிவு காணப்படும். அதனை கொப்பி பண்ணி, உங்கள் பதிவில் இணைத்துவிட்டு, அம்புக்குறிக்குள் உள்ளதைத் தவிர மிகுதியை கவனமாக அழித்துவிடவும்.(அழிக்கும் போது... தேவையில்லாத இடைவெளியோ... அநாவசியமான எழுத்துக்களோ.. (ஐம்ஜி)(/ஐஎம்ஜி) என்ற பகுதிக்குள் இருக்கப் படாது. இப்போது... நீங்கள் கூகிளில் தேடிய படத்தின் மேல் உள்ள சட்டத்தில் தெரியும்....http://www.  என்று தொடர்ந்து வரும் எழுத்துக்களை கொப்பி பண்ணி... ஐஎம்ஜி என்ற இரண்டு அடைப்புக்கு நடுவில் பதிய... உங்கள் படம் இணைக்கப் பட்டு விடும்.

இந்த முறையில் செய்து பார்க்கவும், மேலதிக உதவி... தேவை என்றால் கேட்கவும்.3e-150x150.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.