Jump to content

பாலியல் பிரச்சினை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள்  ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்

 பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த்து  கெட்டுபோகிறார்கள் இன்னும் பலரையும் கெடுக்கிறார்கள் .

பாலியல் கல்வி என்னும் போது பலியல் பற்றி பூரண அறிவு இல்லாததுதான் பாலியல் கல்வி இலங்கையில் இன்று பாடத்தில் சேர்க்கப்டாவிட்டாலும் எதிர்காலத்தில்  கட்டாயம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று நான் இலங்கையில் படிக்கும் போது

குடும்ப சுகாதாரம் என்ற பாடம் வரும் போது ஏதாவதை சொல்லிக்கொடுப்பார்கள் என்று பார்த்தால் இல்லை எதையும் சொல்லி கொடுக்கவில்லை

11ம் தரத்தில் விஞ்ஞான பாடத்தில் இனப்பெருக்கம் என்னும் பாடம் இருக்கிறது அதிலையாவது சொல்லிகொடுப்பார்கள் என்று பார்த்தால் இல்லை .வாத்தியார் வந்து நாளைக்கு இனப்பெருக்கம் என்னும் பாடம் இருக்கிறது அந்த பாடத்தை முழுமையாக வாசித்து வாருங்கள் என்றார் நான் அன்றுதான் இரவு 12 மணிவரை படித்தேன்  என்றால் பாருங்களன். :)  அடுத்த நாள் பாடசாலைக்கு வராதவனுகள் எல்லாம் வந்தானுகள் இனப்பெருக்கம் படிக்க ஆனால் பாடத்திற்கு வந்த வாத்தியாரோ நான் நீங்கள் எல்லாம் பிறந்ததுதான் இனப்பெருக்கம் என்றார்  அப்பதொடக்கம் இன்னும் சரியான பூரணமான விளக்கம் தெரியாது பாருங்கள் :rolleyes:எனக்கே இப்படியென்றால் சாதாரண மக்களுக்கு ?? :blink:

 

புள்ளி விபரப்படி பார்த்தால் இலங்கையில்

2012 –

330 -பாலியல் வல்லுறவு

1750 – சிறுவர் ,சிறுமிகள் பாலியல் வல்லுறவு

1194- சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்

5475- சிறுவர் பாலியல் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன இதற்க்கான காரணங்கள்  என்ன ,இதற்கு நாம் எவ்வாறான வழிவகைகளை செய்யலாம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள நிலைமையில் பாலியல் கல்வி பற்றிய அறிவுறுத்தல்கள் வயதுவந்தோருக்கும், முதியோருக்கும்தான்  அவசியம் தேவையாய் இருக்கின்றது.

 

சிறுவர்களைச் சிறுவர்களாக இருக்க விட்டாலே பெரும் புண்ணியமாய்ப் போகும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணை மத்திய கிழக்கில் உள்ளது போல் பாலியல் இணையத்தளங்களை தடை செய்தால் இளைய சமுதாயத்தை கொஞ்சம் சரி செய்யலாம்

மற்றும் தண்டனைகளை அதிகரித்தால்  ஓரளவு குறைக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.