Jump to content

தாழிடப்பட்ட கதவு...


Recommended Posts

ஒற்றை சொற்களாய் உதிர்த்து
வானத்தை நிரப்பிய பின்,

உன்
துயரம் தோய்ந்த நாக்கு
என் தனிமையை தின்னத்தொடங்குகிறது.

இரவின் நீட்சியும்
வியர்வை நாற்றமும்
பிசுபிசுப்பின் அந்தரிப்பும்
மோகனத் தவம் கலைக்காமல்
சாய்ந்தெழும் பெருமூச்சும்
அவசத்துடன் பகிரப்படுகையில்

யாருக்கும் கேளாமல்
நீ சிந்திய ஓலமொன்று
நட்சத்திரங்களை விழுத்தியது.

நிராகரிக்கமுடியாத முத்தத்தை
அவமானத்துடனும்,
கண்ணீருடனும் 
அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று
நினைவுகளில் விரிகையில்,
சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது,

கதவுகள் மூடிய
கண்ணீர்வளையத்தின் மறைவில்
என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன்
உனக்குப் பரிசளிக்க.

வானத்தை நிரப்பிய உன் சொற்கள்
என் தனிமையை தின்று
நட்சத்திரங்களாய் பூக்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலவே, கவிதை,,,ஏக்கத்தின் சாயல் சுமந்து நகர்கின்றது!

 

வானத்தை நிரப்பிய உன் சொற்கள்
என் தனிமையை தின்று
நட்சத்திரங்களாய் பூக்கின்றன

 

சொல்ல வந்ததைப் 'பூடகமாகச்' சொல்லிச் செல்கின்றன, வரிகள்!

 

வாழ்த்துக்கள், நெற்கொழுதாசன்!

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வழக்கம் போலவே, கவிதை,,,ஏக்கத்தின் சாயல் சுமந்து நகர்கின்றது!

 

வானத்தை நிரப்பிய உன் சொற்கள்

என் தனிமையை தின்று

நட்சத்திரங்களாய் பூக்கின்றன

 

சொல்ல வந்ததைப் 'பூடகமாகச்' சொல்லிச் செல்கின்றன, வரிகள்!

 

வாழ்த்துக்கள், நெற்கொழுதாசன்!

 

மிக அன்புகள் புங்கையூரன் 

 

உங்கள் வரவுகள் என் இருத்தலை நிர்ணயிக்கின்றன.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமை போல் கவிதையின் வரிகள் நன்றாக உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நேற்கொழு தாசன்
உங்கள் கவிதை  வழமைபோல விளங்கிக்கொள்ளக் கடினமாக இருக்கின்றது :)

Link to comment
Share on other sites

அண்ணை இந்த மாதிரி கவிதை எழுத ரீயூசன் எடுப்பிங்களோ ?

நமக்கு சுட்டுப்போட்டாலும் இப்படி எழுத வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.