Jump to content

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!


SUNDHAL

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வெளியில்

இதில் எதிலுமே பங்குபெறாது

எந்த பங்களிப்புமே செய்யாது

இவ்வாறு இணையங்களில் அநேமதேய  பெயர்களில் எழுதி

எமது நேரத்தை வீணடிப்பவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்????

 

விசுகர், இதற்கெல்லாம் நீங்கள் பதில் கொடுக்க வெளிக்கிட்டது நேர விரயம் என்பேன்! ஈழத்தமிழர்களுக்கு மேற்கத்தைய ஜனநாயகம் முற்று முழுதாகப் பொருந்தாது! ஜனநாயகமும் dictatorship உம் கலந்து கட்டி நடத்தினால் தான் காரியங்களைக் கொண்டு போகலாம் என்பது என் கருத்து. உலகம் அழிஞ்ச பிறகு ஒரு கல்வெட்டில புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பற்றின பதிவு இருந்தால் இந்தக் கேள்விகள் அங்கே இருக்காது, மக்களுக்கு விளைந்த நல்ல காரியங்கள் மட்டுமே இருக்கும்! பேசாமல் இந்தத் திரியிலோ வேறெங்கோ நீங்கள் இதைப் பற்றிக் கதைக்காமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறன்! :)

 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

அவர் ஒரு அகக்றையில தானே சொல்லியிருக்கிறார். எதுக்கு அதிகமா செலவு செய்ய வேணும். வடை மலிவா கிடைக்கிற கடையில போய் சாப்பிட்டால் இன்னும் ஒரு வடை அதிகமா அதே காசுக்கு சாப்பிடலாம் என்ற பொதுநலன் கருதி தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். :)

இது தேவையில்லாத அக்கறை வழிப்போக்கனுக்கு.. :D அவரின் காசில் யாரும் வடை சாப்பிடவில்லை. இவர்கள் அதிக செலவில் வடை சாப்பிட்டாலும் தெருவையாவது கூட்டியுள்ளார்கள்.. :wub: வழிப்போக்கன் சுத்தமான தெருவில் நடந்ததோடு சரி.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிரமதானத்தை செய்யும்வரை  வடை சாப்பிட்டுத்தான் வந்தோம்

சிரமதானத்தை ஆரம்பித்தபோது தான் பிரச்சினை வருகிறது

பொதுவாக நடுவில்  செய்யக்கூடாது

எமது வீட்டு கொல்லைக்குள் செய்யுங்கள் என..

 

இப்போ

சிரமதானத்தை தொடரலாமா?

நிறுத்தலாமா??

என்பதே கேள்வி???

 

விசுகு அண்ணையின் கருத்தைப் பார்த்தால் புங்குடுதீவு மத்தி முன்னேறினால்க் காணும். மற்றப் பக்கங்கள் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விடயம் என்பது மாதிரி இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் இந்த உதவித் திட்டத்தினால் சிலர் பாதிப்பும் அடைந்துள்ளார்கள். அதனாலேயே இந்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது

Link to comment
Share on other sites

புங்கிடுதீவு அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மக்கள் உதவி செய்யணும் ஆனா மத்திய மட்டும் தான் அபிவிருத்தி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.....

அது என்ன அண்ணே பின் தங்கிய ஒரு வட்டாரத்தை வாழ்விடமாக கொண்டவன் தன்னுடைய வட்டாரமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பில்ல தானே.... அது அவன் உரிமையும் கூட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கிடுதீவு அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மக்கள் உதவி செய்யணும் ஆனா மத்திய மட்டும் தான் அபிவிருத்தி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.....

அது என்ன அண்ணே பின் தங்கிய ஒரு வட்டாரத்தை வாழ்விடமாக கொண்டவன் தன்னுடைய வட்டாரமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பில்ல தானே.... அது அவன் உரிமையும் கூட....

 

உலக நாடுகளில், தலை நகரம் தான், முதலில் அபிவிருத்தி செய்யப்படும்.

அதற்குப் பிறகு படிப்படியாகத்தான்..... மற்றைய இடங்கள்,

இது, கூட... சுண்டலுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையில்லாத அக்கறை வழிப்போக்கனுக்கு.. :D அவரின் காசில் யாரும் வடை சாப்பிடவில்லை. இவர்கள் அதிக செலவில் வடை சாப்பிட்டாலும் தெருவையாவது கூட்டியுள்ளார்கள்.. :wub: வழிப்போக்கன் சுத்தமான தெருவில் நடந்ததோடு சரி.. :huh::D

கண்டு பிடிச்சிட்டாராமா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில், தலை நகரம் தான், முதலில் அபிவிருத்தி செய்யப்படும்.

அதற்குப் பிறகு படிப்படியாகத்தான்..... மற்றைய இடங்கள்,

இது, கூட... சுண்டலுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. :)

 

இந்தியாவைப் போலத் தமிழ் நாட்டைப் போலச் சேரிகளுக்குப்  பக்கத்தில்

உயர்மாடிகளைக் கட்டி வளைவலங்காரங்கள் அமைத்து நகரத்தை நாறடிக்கலாம் என்று கூற வருகின்றீர்களா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைப் போலத் தமிழ் நாட்டைப் போலச் சேரிகளுக்குப்  பக்கத்தில்

உயர்மாடிகளைக் கட்டி வளைவலங்காரங்கள் அமைத்து நகரத்தை நாறடிக்கலாம் என்று கூற வருகின்றீர்களா ?

 

வாத்தியார்.... நான் சொல்ல விளைந்தது, பழைய அரசாட்சிக் காலம்.

 

தமிழகத்தில்.... மதுரை முத்தமிழும் செழித்துக் கோலோச்சிய நகரம் தமிழ் நாட்டின் மத்தியில் உள்ளது.

 

அடுத்த உதாரணம், ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி தலை நகரமாக இருந்தது தானே....

 

சென்னை, கொழும்பு எல்லாம்..... ஆங்கிலேயரின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட தலை நகரகங்கள்.

அதை.... எல்லாம், நாங்கள் கணக்கில் எடுக்கக் கூடாது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.