Jump to content

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்!!


Recommended Posts

வணக்கம் ,

கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்புகள் , இணைப்புகள் வரவேண்டுமானால் சிறவர் பூங்கா என்ற பகுதி வரவேண்டும் என நினைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பதியுங்கள் . நிர்வாகமும் கவனத்தில் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி இதன்மூலம் எமது சிறுவர்களும் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியும் இது பற்றி நிர்வாகம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகின்றேன் :)

உங்களின் ஆக்கபூர்வமான ஜோசனைக்கு எனது நன்றிகள் சகோதார !

Link to comment
Share on other sites

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

அதே தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் உடன்பாடு இல்லை சிறுவர்களுக்கு என தனிப் பகுதி தொடங்கினால் யாழ் இன்னும் கட்டுப்பாடோட இயங்க வேண்டும் அது கஸ்டம்...சிறுவர்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவே இன்னும் கட்டுப்பாடோட நாங்கள் எழுத வேண்டி வரும்

Link to comment
Share on other sites

[size=4]அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் [/size][size=4] [/size]மூடவேண்டும் :D

Link to comment
Share on other sites

அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் மூடவேண்டும் :D

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

Link to comment
Share on other sites

யாழில் சில வருடங்களிற்கு முன்னர் அப்படியொரு பகுதி தொடங்கப்பட்டது ஆனால் அதற்கு பெருமளவு வரவேற்று கிடைக்கவில்லையென நினைக்கிறேன் நிறுத்தப்பட்டுவிட்டது

Link to comment
Share on other sites

திறவுங்கள் ,திறவுங்கள் .............முக்கியமான ,தேவையான ஒன்று .எம்மை விட எம் குழந்தைகளை உற்சாகப்படுத்தி அவர்களை பக்குவமுள்ள படைப்புக்களை உருவாக்குவதற்கு இந்தப்பகுதி அவசியமானது .நன்றி கோ அண்ணா இப்படியான சிந்தனையை ,இங்கே முன்வைத்ததற்கு .............நிர்வாகத்திற்கு இதனால் என்ன என்ன சிக்கல்கள் இருக்கும் என்பதையும் என் மனதில் போட்டு ......நானும் இதை வலியுறுத்துகிறேன் ...........பல

கோணங்களிலும்

சிந்திதிதுபாருங்கள் .............சாத்தியக்கூறுகள் தென்பட்டால் முயற்சித்துப்பாருங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...showtopic=12138

http://www.yarl.com/...showtopic=16371

நல்லவிடயம்...ஒருமுறை மோகன் வழியமைத்து தந்த ஞாபகம்...முன்னெடுக்கப்படவில்லை என நினைக்கின்றேன் :rolleyes:

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

Link to comment
Share on other sites

உறுப்பினர்களாக சேரும் போது [size=5]18 வயதுக்குட்பட்டவராக[/size] இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

:wub: :wub:

Link to comment
Share on other sites

:wub: :wub:

ஹி ஹி tongue slip ஆகிட்டுது... 18 வயதுக்கு மேற்பட்டவராக என்று எழுதி இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

[size=5]சுண்டல், சுபேஸ் போன்ற குட்டிப் பெடியள் ஏற்கனவே இருக்கினமே![/size]

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

:lol:

Link to comment
Share on other sites

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

[size=4]சரி, மேற்குலக சிறுவர்களுக்கு இது பொருந்தலாம். [/size]ஆனால், ஈழத்தில், தமிழகத்தில் இருந்து சிறுவர்கள் இணைய விரும்பினால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சி முன்புபும் பலமுறை எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததற்கு காரணம்.

தமிழ் மூலமாக புதிய சந்ததியை இந்த இணையத்துக்கு இழுத்துவரல் சாதாரண விடயமல்ல.

அவர்களது உலகே வேறு.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதாது.

வேண்டுமானால் ஒரு இணைப்பாலமாக வேறு இடங்களிலுள்ளதை இங்கும் இங்கு உள்ளதை வேறு பல இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி பரவலாக்கி சிறு அறுவடை செய்யலாம்.

Link to comment
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

மிக்க நன்றிகள் நெடுக்கர் உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் . உங்கள் கருத்துத் தான் எனது கருத்தும் . சிறுவர்களை அவர்கள் பகுதிக்கும் பொங்கு தமிழ் தமிழும் நயமும் பகுதிக்குள் விடுவது நல்லது . மற்றயபகுதிகளுக்கு அவர்கள் வரமுடியாது செய்வது நல்லது . யாழாலதான் சிறுவர் கெட்டு போவார்கள் என்ற கருத்துக்கள் நாம் எங்கே நிற்கின்றோம் ?? என்ற இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பகுதி யாழுக்குத் தேவையா என்பதை யாழ் நிர்வாகம் தீர்மானிக்கலாம்.

ஆனால் அதனால் வரும் சங்கடங்களையும் நன்றாக யோசிக்க வேண்டும்.

சிறுவர்பகுதி என உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல்

சிறுவர்களுக்கான ஆக்கங்களை முன்னோட்டமாக இணைத்து

அதன் பலன்களை அறிந்து பின்னர் செயற்படுவது நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

[size=4]இது நிர்வாக சிக்கலுடன் சட்ட சிக்கலும் இருக்கலாம். இதை செய்யலாம், ஆனால் தலையிடிகள் இருக்கும். அவதானமாக செய்யாவிடின் யாழையே மூட வைத்துவிடலாம். [/size]

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

[size=4]இது மேற்குலகத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு. இந்தப்பிரச்சனைக்கு இதுதான் சரியான வழி என்று ஒன்றும் இதுவரை இல்லை. [/size]எனவே இந்தப்பிரச்சனைகளுக்கு யாழில் தீர்வு எட்டமுடியாது.

பதினாறு இல்லை பதினெட்டு வயதெல்லைகள் இருந்தாலும் இது தனிப்பட்ட ஒருவர் சம்பந்த்தப்படும்பொழுது அதன் வலி பெற்றோர்களால் மட்டுமே புரியமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.