Jump to content

285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.


Recommended Posts

285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.

 

17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி.

எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன்.

இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான்.

சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யாவையும் செய்து கொண்டிருக்கிறான். எனினும் போதிய வருமானம் இல்லை.

உடலெங்கும் கலந்திருக்கும் இரும்புத்துணிக்கைகள் உயிரை எடுக்கும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வரையும் பல சத்திரசிகிச்சைகள் தொடர் மருத்தவத்தோடு காலம் கழிகிறது.

ஒரு தொழில் தனது குடும்பத்தின் நிரந்தர பொருளாதார முன்னேற்றத்திற்காக செய்ய விரும்பும் இந்தப் போராளியின் குடும்பத்திற்காக 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 285€) உதவியைக் கோரியுள்ளான்.

உங்கள் உதவி இக்குடும்பத்தின் நிரந்தர முன்னேற்றத்திற்கு ஆதரவாகும். உதவ விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

http://nesakkaram.org/ta/285e-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி இந்த போராளிக்காக நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை சில நாட்களில் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். கவலை வேண்டாம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் சகாரா உங்கள் பிறந்த ஊரில்தான் இவர் வாழ்கிறார். விபரத்தை மடலிடுகிறேன் நேரடியாகவே உதவுங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

 

நன்றி  தாயே

கடவுள் உங்களுடன் இருக்கட்டும்

Link to comment
Share on other sites

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

நன்றிகள் சகாரா,
நீங்கள் உதவிய குடும்பம் தன்து சுயபொருளாதாரத்தில் முன்னேறவும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடரவும் உங்கள் உதவி கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. 
 
இக்குடும்பத்திற்கு உதவுவுதாக சுவிசிலிருந்து ஒரு அமைப்பு விபரத்தை பெற்றுக் கொண்டது. விபரம் பெற்று ஒருமாதம் கடந்த நிலையில் தங்கள் அமைப்புக்கு குறித்த போராளி உண்மையில் போராளியென்பதனை உறுதிப்படுத்திய கடிதம் ஒன்று தங்களது மின்னஞ்சலுக்கு அவர்கள் அனுப்பினால் மட்டுமே தங்களால் உதவ முடியும் இழுபறிப்படுத்தினார்கள். இறுதியில் உங்கள் உதவியும் வேண்டாம் அந்தக்குடும்பத்திற்கு உபத்திரவமும் வேண்டாமென விட்டுவிட்டுத்தான் இங்கே விடயத்தை எழுதினேன். விடயத்தை பார்த்தவுடனேயே முன்வந்திருந்தீர்கள். 
 
கடவுளைவிடவும் இத்தகையவர்களுக்கு கைகொடுக்கிற போது ஏற்படும் மனநிறைவும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் வடிக்க முடியாது அவற்றை உணரவே முடியும். நீங்கள் அந்த இனிமையான உணர்வை உணர்ந்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.