Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!


Recommended Posts

Germany

In the meaning above, Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [2] - violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

சாந்தி உங்களிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றது தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

தொலைபேசி தகவல்களை ரகசியமாக பதிவு செய்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை மூடப்பட்டது

பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஆப் தி வேர்ல்டு வெளியிட்டது.

இந்த பத்திரிக்கை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிக்கை நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நடிகை சியன்னா மில்லருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கியது. இந்த நிலையில் 168 ஆண்டுகள் பழமை வாய்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

இந்த பத்திரிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 25 லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும். பத்திரிக்கை அத்து மீறுவதாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆவேசப்பட்ட நிலையில் பத்திரிக்கை மூடப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் முர்டோக் தெரிவித்தார். முர்டோக் 1969ம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையை வாங்கி சர்வதேச மீடியா சக்தியாக உருவெடுத்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிக்கை நடத்தி வருகிறார். இவரது நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உள்ளன. முர்டோக்கின் நியூஸ் கொர்ப்பரேஷனில் பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளும் உள்ளன.

http://www.newsonews.com/view.php?20emAACQ0030eaXRlOm434eadBdBnZB4cbdcgE806ecddc4C608E4dbc425ZnBdcae430YmOldde022eoQMyOb02

தொலைபேசி உரையாடல்களை பதிந்து மறைமுக மிரட்டல்கள் விடுவோருக்கான எச்சரிக்கை செய்தி இது

Link to comment
Share on other sites

தொலைபேசி தகவல்களை ரகசியமாக பதிவு செய்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை மூடப்பட்டது

பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஆப் தி வேர்ல்டு வெளியிட்டது.

இந்த பத்திரிக்கை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிக்கை நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நடிகை சியன்னா மில்லருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கியது. இந்த நிலையில் 168 ஆண்டுகள் பழமை வாய்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

இந்த பத்திரிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 25 லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும். பத்திரிக்கை அத்து மீறுவதாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆவேசப்பட்ட நிலையில் பத்திரிக்கை மூடப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் முர்டோக் தெரிவித்தார். முர்டோக் 1969ம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையை வாங்கி சர்வதேச மீடியா சக்தியாக உருவெடுத்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிக்கை நடத்தி வருகிறார். இவரது நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உள்ளன. முர்டோக்கின் நியூஸ் கொர்ப்பரேஷனில் பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளும் உள்ளன.

http://www.newsonews.com/view.php?20emAACQ0030eaXRlOm434eadBdBnZB4cbdcgE806ecddc4C608E4dbc425ZnBdcae430YmOldde022eoQMyOb02

தொலைபேசி உரையாடல்களை பதிந்து மறைமுக மிரட்டல்கள் விடுவோருக்கான எச்சரிக்கை செய்தி இது

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

Link to comment
Share on other sites

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

Link to comment
Share on other sites

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

ஒருவர் தன்னை வெருட்டுகிறார் என்பதை பதிவு செய்து அதை பொலிஸில் ஆதரமாக கொடுக்கலாம் ஆனால் பதிவு செய்து கொண்டு அதை பொலிஸில் முறைப்பாடும் செய்யாது பிளைக்மெயில் செய்வது ஜரோப்பாவில் கடும் குற்றம்.................

ஆனால் மேல நடந்த்து வேற .. இது முறைகேடும் மற்றது அனுமதியில்லது மற்றவர்களின் தனிப்பட்ட வொய்ஸ்மையிலை கேப்பதும் அதை அழிப்பதும் குற்றமாக பார்க்க படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் வரவிரும்பவில்லை

ஆனால் எனக்கு தெரிந்ததை பதிகின்றேன்

சில அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசியை எடுக்கும்போது முதலிலேயே சொல்வார்கள்

இது சில பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் முதலிலேயே நிறுத்துமாறு கூறலாம்.

இதன்படி பார்த்தால்

முன் அறிவித்தலின்றி எதிரில் பேசுபவரது அனுமதியற்று அவரது பேச்சு பதியப்படுவது குற்றமே.

Link to comment
Share on other sites

இதற்குள் வரவிரும்பவில்லை

ஆனால் எனக்கு தெரிந்ததை பதிகின்றேன்

சில அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசியை எடுக்கும்போது முதலிலேயே சொல்வார்கள்

இது சில பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் முதலிலேயே நிறுத்துமாறு கூறலாம்.

இதன்படி பார்த்தால்

முன் அறிவித்தலின்றி எதிரில் பேசுபவரது அனுமதியற்று அவரது பேச்சு பதியப்படுவது குற்றமே.

ஒரு கொலையாளி தன் வாயால் தான் செய்த கொலையை சொல்லும் போது அதை பதிவு செய்து பிள்க்மெயில் செய்வது போன்றவையும் குற்றத்துக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனின் முக்கிய அலுவலகங்களோடு[வேலை வாய்ப்பு நிறுவனம்,வங்கி,வரி நிறுவனம்] கதைக்கையில் அதை ரெக்கோட் பண்ணுவார்கள்[காரணம் சரியான விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக] ஆனால் அதை ரெக்கோட் பண்ண முதல் பதியப்பட்ட குரல் ஒன்று சொல்லும் உங்கள் குரல் ரெக்கோட் செய்யப்படும் என்பதை ஆனால் அப்படி பதியப்படும் குரலை வைத்து பிளாக் மெயில் பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

இங்கு லண்டனின் முக்கிய அலுவலகங்களோடு[வேலை வாய்ப்பு நிறுவனம்,வங்கி,வரி நிறுவனம்] கதைக்கையில் அதை ரெக்கோட் பண்ணுவார்கள்[காரணம் சரியான விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக] ஆனால் அதை ரெக்கோட் பண்ண முதல் பதியப்பட்ட குரல் ஒன்று சொல்லும் உங்கள் குரல் ரெக்கோட் செய்யப்படும் என்பதை ஆனால் அப்படி பதியப்படும் குரலை வைத்து பிளாக் மெயில் பண்ண முடியாது.

இது ஒரு சிறுபிரச்சனை. ஆனால் இதை பெரிய பிரச்சனையாக்கி பழிக்கு பழி ரதத்துக்கு ரத்தம் என்றது போல் நினைப்பில் எழுதபடும் கருத்துக்களே. இதனால் ஒன்றும் ஆக போவது இல்லை.

Link to comment
Share on other sites

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. .... :lol: :lol:

Link to comment
Share on other sites

... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...

... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!

... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!

.... தொடரும் ...

Link to comment
Share on other sites

... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...

... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!

... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!

.... தொடரும் ...

ஜயோ நெல்லியான் நீங்கள் குருகுலம் பற்றிய விடயத்தில் ஆதாரங்களை இணைப்பீர்கள். அதை வைத்து சாந்தியை ஒரு போடு போடலாமென்று பார்த்தால். குருகுலம் பற்றி விட்டுவிட்டு வடமராட்சி சிறார்கள் என்றுகொண்டு நிக்கிறீர்கள். அதை விட்டிட்டு ஈலிங் கோயில் நிருவாகத்திடம் கேட்டு ஆதாரங்களை விரைவில் இணையுங்கள் . பால் பண்ணை பற்றிய விபரங்களும் அவர்களிடம் உள்ளது.

Link to comment
Share on other sites

... எவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்கிறோம் புலத்தில் ..... ஆனால் எம் மண் மீதும், மக்கள் மீதும் கொண்ட காதலால் ....கேட்டவைகளுக்கு அள்ளி எறிகிறோம்!!!!!!!!! ... தவறு!!! .... நாலு கேள்வி கேட்போம் ... பசப்பு வார்த்தைகளும், ஒப்பாரிகளும், ... தொடரத்தான் செய்யும் ... மீண்டும் இவைகளுக்கு வீழ்ந்து விடாமல் ... நாலு கேள்விகளை திரும்பவும் கேட்போம்!! ... பின் ....

Link to comment
Share on other sites

... "நேசக்கரமானது சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படுகிறதா"???????? .... ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், என்ற கேள்வியை கேட்டிருந்தேன் ... இன்றுவரை சரியாக பதிலளிக்கப்படவில்லை ... நான் இந்த அமைப்பிற்கு உதவிகள் செய்தவன், மற்றும் இப்படியான சந்தேகங்கள் பலர் மட்டத்தில் எழுந்த காரணத்தினால், இக்கேள்வியை கேட்டு, அதற்கு பதிலளிக்க தவறின், இவ்வைமைப்பினூடு நான் செய்யும் உதவிகளை நிறுத்த உத்தேசித்திருந்தேன்!!! சட்ட நிபுணர்களின் கருத்துகளின்படி கேள்விகள் எப்பொது அமைப்புகளின் மீதும் கேட்டும் உரிமை அனைவருக்கும் உள்ளது!!!. ... என்னால் எழுப்பட்ட கேள்விகளும் சட்டவரையறைகளை மீறவில்லை!!!! .. இங்கு எனது சந்தேகங்களுக்கு பலர் ... யாழ்கள உறவுகள் உட்பட ... ஆதரவளித்துள்ளார்கள்!! ... இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

மாறாக இவ்வமைப்பின் நிர்வாகிகள் ... இவ்வமைப்பை பயன்படுத்தி ... பலரது உரையாடல்களை அவர்களது அனுமதி அற்று ஒலிப்பதிவு செய்து, அதை மீண்டும் அவர்களது அனுமது அற்று இந்த யாழ்களத்திலேயே பிரசுரித்தும், மிரட்டியும் உள்ளார்கள்!!! இது இங்கிலாந்து, ஜேர்மனிய, பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புகளின் சட்டவரை முறைகளின் பிரகாரம் கிறிமினல் குற்றமாகும்!!!! ... இது தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எட்டணா காசை கொண்டுபோய் ஒரு எட்டுபேருக்கு சோறுபோட்டுவிட்டு...............

கத்தியும் கோடாரியோடும் நின்று கருத்துகளத்தை களமாக்குகிறீர்கள்?

30 வருடங்கள் ஒரு இனத்தையே வழிநடத்தி எத்தனையோ இன்னல்களுக்கும் முகம்கொடுத்து இந்த போராட்டத்தை வழிநடத்திய மகான்கள் மீது எத்தனை சேறுகளை அடித்தீர்கள்?

அப்போதெல்லாம் நாம் பணிவாகத்தான் கருத்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் எமது கருத்துகளை பதிந்துவந்தோம்.

கே.பி துரோகியாக இருக்கலாம் அதை மறுக்கவில்லை ஆனால் அதற்கான ஆதரங்கள் கையில் கிடைக்கும்வரை தயவு செய்து சேறடிக்காதீர்கள் அவர் ஒரு சூழ்நிலை கைதி அவர்களது நாடகத்திற்கு ஆடியே ஆகவேண்டும் என்று கூட எழுதினேன். எத்தனைகளையோ தீhத்துகொட்டினார்கள்.

வெளியில் இருந்து போரை நடத்துபவர்கள் எப்போதுமே சூழ்நிலை கைதிகளாகலாம் அதில் கவனம் எடுக்காதது எமது தவறும் கூட. அதற்கான வழிகளை தேடுவோம் என்ற போதெல்லாம்...................

"உண்மைகளை எழுதுகிறோம" என்று விண்ணாணம் பேசியபடி நீங்கள் அடித்த சேறுகள் ஏராளம்.

எந்த தன்னலமும் அற்று இந்த போராட்டத்தை சுமந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி. தயவு செய்து ஏன் அவர்களுடைய மனதுகளை புண்படுத்துகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு விடை இன்று வரை இல்லை?

பாதிரிகளாகவும்

பத்திரிகையாளராகவும்

காப்ளராகவும்

கடன்கொடுப்பாளராகவும்

இங்கே சுயவிளம்பரம் தேட தியாகிகளின் மீது சேறடிக்க திரிந்தவர்களிடம்.

நீதி நியாயம் இவைகளை எதிர்பார்பவர்கள்தான் ஏமாறபோகின்றவர்களே தவிர அவர்களுக்கு அவர்களுடைய எழுத்துக்களே சாடசியாக இருக்கின்றன.

இங்கே நான் இந்து மதத்தை விமர்சிக்கும்போது என்னை கேட்பார்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை விமர்சிப்தில்லை என்று................ விமர்சிக்கவே கூடாது என்பது எனது நிலைபாடு இல்லை ஆனால் எனது வீட்டை கழுவ வேண்டிய நிலையில் இப்போது நான் ஏன் எனில் நான் ஒரு இந்து. ஆனால் லாவகமாக எனக்கு ஞானஸ்தானம் தந்து இந்து மத அழுக்குகளை பாதுகாப்பார்கள்.

இப்போது ஒரு சோமாலிய பெண்ணுக்கு மதம் இழைத்த கொடுமைகள் பற்றி ஒரு தலைப்பு இந்து மத கொடுமைகள் பற்றி ஏன் இந்து பெண்களால் எழுத முடியவில்லை? சாதியத்தின் பெயரால் இந்துமதம் இழைக்கும் கொடுமைகளை கூடவே இருந்து செய்தோமே என்ற குற்ற உணர்வா? ஆறியாமையில் இருக்கும்போது எல்லோரும்தான் தப்பு செய்தோம் இப்போது உலகை அறிகிறோம் ஒரு பரந்தபட்ச உரையாடலுக்கு வாருங்கள் எம்மை சுத்தம் செய்வோம்.

உங்களுடைய "உண்மைகள்" எத்தனையோ உழைப்புகளை நாசம் செய்கின்றன என்பதை இனியாவது கருத்தில் எடுங்கள். விடுதலை போராட்டம் என்பது ஏதோ விடுதி வாழ்க்கை போன்று இங்கே கருத்து பதிபவர்களை இனியாவது கண்டுகொள்ளுங்கள் அதன் விலைகளை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். புலிகளால் பாதிக்க படாத ஈழ தமிழனே இல்லை..................... ஏன் என்றால் போரை நடத்தியவர்கள் புலிகள்தான். இதை ஏன் போருக்குள்ளேயே இருந்துவந்த தமிழர்கள் திரும்ப திரும்ப வாந்தியெடுக்க வேண்டும்? உங்கள் வீட்டிலும் மரணம் எனது வீட்டிலும் மரணம் புலிகள் போராடியதால்தானே நடந்தது? இதை ஏன் கருத்து எழுதி கற்பிக்க வேண்டும்?

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம். இன்று எல்லாம் முடிந்தாயிற்று என்று அங்கயற்கன்னிக்கு நீச்சல் பழக்க தொடங்கிவிட்டீர்கள்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் 17 வயதிலே வீட்டை விட்டு ஒடுகிறான் காரணம் அவனது மரணம் அவனை நோக்கி அவனது வீட்டு கதவை தட்ட சில மணி நேரங்களே இருந்தது. அந்த நொடியில் இருந்து அவன் மரணத்தோடுதான் உண்டு உறங்கி படுத்து பழகியே இந்த போரை சுமந்தான். 1985ம் ஆண்டே பிரபாகரனை சுடுவதற்கு றோ திட்டம் தீட்டுகிறது நான் சொல்லவில்லை முன்னாள் றோ வின் தலைவர் சொல்கிறார். அதே இந்தியவிடம் டெல்லி சென்று கிட்டதட்ட சிறை கைதிபோல் இருந்தார் மரணத்திலும் விட மாவீரர்களின் இலட்சியம் உயரியது என்ற ஒரே காரணம்தான். இந்திய காழ்வுபடை சுற்றி நிற்கவே ஆயுதங்களுடன் வந்து தீருவில் வெளியில் வந்து குமரப்பா புலேந்திரனின் சிதைகளுக்கு தீமூட்டி சென்றான். நானோ நீங்களோ நினைத்தோமா புலிகள் இருப்பார்கள் என்று? அவர்களுடைய இருப்பை எப்போதும் அவர்கள் உறுதிபடுத்தியதில்லை போராளிகளுக்கு அது தேவையுமில்லை அவர்களுடைய இலட்சிய இருப்பே அவர்களுக்கு தேவையானது. அது இருப்தும் இல்லாது போவதும் உங்களுடைய என்னுடைய கைகளில்தான் உண்டு போராட்டம் எனக்காகவும் உங்களுக்காவுமே நடத்தபட்டது.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

... யாராவது கோபத்தின் காரணத்தை உணர்ந்தால் ...

... யாழில் மே 18இற்கு பின்னம், தொடர்ச்சியான ஓப்பாரிகள் .... கேட்பவர்கள், வாசித்தவர்கள் மனம் உருகாமல் இருக்க முடியாது!! ... அதற்கு மேல் இது எங்கள் தொலைபேசி இலக்கம் எந்நேரமானாலும் எடுங்கள் .. தயவுசெய்து உதவுங்கள் ... யார்தான் விழ மாட்டார்கள்? ... அதில் நானும் ஒருவன்! ... தொலைபேசி எடுத்தோ, மடல்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உதவ வருகிறோம் என்றவுடன் ... உங்கள் பெயர், முகவரி, எல்லாவிபரங்களையும் தாருங்கள் ... கொடுத்தாயிற்று!! ... பின்பு தொலைபேசியில் அழைப்புகள் சிலதடவை!! ... எல்லாம் முடிந்து ... எங்கள் மனதில் சில சந்தேகங்கள்! கேட்டவுடன் ... நீ அவன்? நீ அப்படி செய்தனீ? உன் பெயர் முகவரிகள் இவைகள்? நீ கதைத்தவைகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறோம்? அதனை வெளியிடுவோம்? உனக்கு 40 நாள் தவணை? .... என்ன உது??? ... உங்களுக்கு உதவ வந்து விபரங்கள் தர, ... கொட்டனை கொடுத்து, நாமே அடி வாங்கும் நிலைமை!!! ... யாருக்கய்யா கோபம் வராது???

... இங்கு பணம் இல்லை பிரட்சனை! ... பணமாயின் ... மே18 இற்கு முன்னம், தமிழ்த்தேசியம் என்று வந்ததொன்று இங்கு நான் உடபட என் நண்பர்கள் பலரிடம் 40000பவுண்ஸுகளை சுற்றிச் சென்றது! ... விட்டு விட்டோம் ... கொட்டன் கத்தி கொண்டா திரிந்தோம்??

இதற்குள் மருதங்கேணி வந்து சேறடிப்பது பற்றி ... உந்த சேறடிப்புகளுக்கு பல தடவை பதில் சொல்லியாயிற்று. உண்மையான சேறடிப்புகளை பார்க்க விரும்பின் ... பதிவு, ஈழமுரசு, சங்கதி, தாய்நிலம்... போன்றவற்றை முதலில் போய்ப் பாரும்! அதுவும் சர்வதேச பிரிவாம், தலைமைச் செயலகமாம், புனர்வாழ்வுக்களாம், நாடு கடந்த அரசாங்கமாம் என்று ஒன்றுக்கொன்று சேறடிப்புகள் இந்த நிமிடம் வரை! அதற்கு மேல் தெருவில் நின்று கொத்து வெட்டுக்கள், அடிபிடிகள் வேறு!! ... அங்கு நடப்பது எல்லாம் தலைவரின் பெயர் சொல்லி! முதலில் அங்கு சென்று பார்த்து விட்டு இங்கு வந்து எழுதும்!!! ...

... யாழுக்கு முழுக்கு முற்றாக போடும் காலம் வந்து விட்டது ... தனிப்பட்ட காரணங்களுக்காக அன்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக ... ஆனால் ... அதற்கு முன் சில விடயங்களை செய்து முடிக்க வேண்டும் ... அதுவரை யாழில் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சுயநலம்.

இதைவிட சுருக்கமாக உண்மையை எழுத முடியாது!

Link to comment
Share on other sites

இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

நெல்லையன், இது உங்கள் தனிப்பட்ட விருப்பு. இதை பகிரங்கமாக களத்தில் எழுத வேண்டியது அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றாக சொன்னீர்கள் மருதங்கேணி.

அவர்களுக்கு இருந்த தைரியம், உறுதிப்பாட்டில், இலட்சத்தில் ஒரு பங்கு பலருக்கு(நான் உட்பட) இருந்திருந்தால் கூட கதையே வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம்.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றி ஐயா

நடந்தவை அனைத்தும் எனக்கும் உங்களுக்கும் எதிரிலேயே நடந்தன. அதை நாம் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். தீரவிசாரித்தும் புரிந்து கொண்டோம். அப்படியே அதனூடு பயணித்தோம். பயணிக்க வேண்டியதேவை இருந்தது. தேவையை சிங்களம் பெரிதாக்கிய படுத்தியபடியே இருந்தது.

தற்போது ஒன்றும் தெரியாது என்பதும் அப்படியா என்பதும் எம்மை தோல்வியிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மட்டுமே. அப்படி விடுவிப்பதால் சிங்களத்துக்கு சார்பான பாதையில் நாம் பயணிக்க தொடங்குகின்றோம் என்பதுடன் 35 வருட எமது பயணத்தையும் பங்களிப்பையும் விட்டு தூர விலகத்தொடங்குகின்றோம் என்பதையும்

மாவீரர் கல்லறைகள் போராளிகள் பொதுமக்கள் என விரியும் சிங்களத்தின் அழிப்புக்கள் தொடர்வதை கண்ணை மூடி அனுமதிப்பதும்

இதன் தொடர்ச்சி அது ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்யும் (எம்மையும் சேர்த்து) இன அழிப்பின் உச்சத்திலேயே முடியப்போவதையும்மறந்து வருகின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.