Jump to content

சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ?


Recommended Posts

சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ?

 

2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம்.

25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி.

s5-1024x768.jpg

இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை தரக்கூடியதாக முதலில் நடைபெறத் தொடங்கியது. இத்தோடு உணவு உற்பத்திகளிலும் 11பேரையும் ஈடுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற 11பேருடன் மேலும் நான்குபேர் இணைந்து 15பேருடன் சாம்பிராணி உற்பத்தி ஆரம்பமானது.

நாளடைவில் பங்கு கொண்டிருந்த பெண்கள் ஆளாளுக்கு முரண்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ் நிருவாகத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தவருக்கு சாம்பிராணி உற்பத்தியைக் கவனிப்பதிலும் விட ஆளாளுக்கு நாளுக்கொரு முறைப்பாட்டோடு வரும் பெண்களை சமாளிப்பதே பெரும் தலைவலியாகியது.

s8.jpg

15பேரிலும் 8பேர் நாளடைவில் தங்களுக்கு மாதம் 10ஆயிரம் சம்பளம் தந்தால் மட்டுமே தங்களால் சாம்பிராணி உற்பத்தியில் ஈடுபட முடியுமென நிபந்தனை விதித்தார்கள். எவ்வித வருமானமும் இன்றி எம்மால் மாதாந்தம் 15பேருக்கும் 150000.00(ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) வழங்க நிதிவசதியில்லை. இந்த இழுபறியில் எம்மால் தொடர்ந்து இழுபட முடியாது போனது. ஒவ்வொருவராக விலகி 5மாதத்தில் 4பேர் மட்டும் மிஞ்சியிருந்தார்கள்.

தொழிலைத் தொடர விரும்பிய 4பெண்களும் தனித்தனியே வீடுகளில் இருந்து தொடர்ந்து சாம்பிராணி உற்பத்தியில் ஈடுபடவிரும்பி விண்ணப்பித்திருந்தனர்.

ஒரு நிர்வாக ஒழுங்கில் இயங்க மறுத்தவர்களைத் தவிர்த்து தனித்தனியே சாம்பிராணியை உற்பத்தி செய்ய விரும்பிய 4பெண்களுக்கும் உற்பத்திப் பொருட்களை பகிர்ந்தளித்து அவர்களை தனித்தனியே செயற்படவிட்டோம்.

சாம்பிராணி உற்பத்திப் பொருட்களோடு ஒருவருக்கு ஒரு தையல் மெசின் , இன்னொருவருக்கு கோழிவளர்ப்பு உதவி, மற்றைய இருவருக்கும் ஆடுவளர்ப்பிற்கு 30ஆயிரம் ரூபாவும் முதலீடாக வழங்கியிருந்தோம்.

சாம்பிராணி உற்பத்தியை பகுதிநேர உற்பத்தியாகவும் மற்றும் நிரந்தர வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட தையல் மெசின் , கோழிவளர்ப்பு , ஆடுகள் மூலம் தற்போது அன்றாடம் தேவைகள் பிள்ளைகளின் கல்வியை சமாளிக்கும் நிலமைக்கு வளர்ந்துள்ளார்கள்.

தற்போது இதில் ஒருவர் தனக்கு கிடைத்த மேற்படி உதவிகள் மூலம் கிடைத்த வருமானத்தில் சேமித்த பணத்தில் வீட்டுத் தோட்டமொன்றையும் அமைத்து தனது பிள்ளைக்கான கல்வியை உணவை வழங்கும் நிலமையிலிருந்து சற்று உயர்ந்து மேம்பட்டுள்ளார்.

சாம்பிராணி உற்பத்திக்கான தங்கள் நிதியுதவியை பிரான்சிலிருந்து சுவி அவர்கள் 50யூரோவும், அவுஸ்ரேலியாவிலிருந்து றட்ணா ராசாத்தி அவர்கள் 100அவுஸ்ரேலிய டொலர்களும் உதவியிருந்தார்கள். அவர்களது உதவியில் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தொடர்ந்து சாம்பிராணி உற்பத்தியை செய்ய விரும்பியவர்களுக்கான உற்பத்திப் பொருட்களாக வழங்கப்பட்டது.

மேற்கொண்டு இவ்வுற்பத்தியை அதிகரிக்க நிதியாதரவும் மேலதிகமாக இல்லாது போனது. அத்தோடு தொழிலில் ஈடுபட வருவோர் தாங்கள் கேட்கும் சம்பளத்தை தருமாறு எம்மை பெரும் தொழில் நிறுவன உயரத்தில் எண்ணிக் கொண்டு வருவதாலும் சாம்பிராணி உற்பத்தி 6மாதங்களுடன் தோல்வியடைந்து போனது. மற்றும் இப்போது போல 2வருடங்கள் முன்னால் எமக்கான பணியாள் வளமும் இல்லை.

 சாம்பிராணி உற்பத்தியின் ஆரம்பம் பயிற்சி பற்றிய செய்தி இணைப்பு கீழே :-

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.