Jump to content

மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பெயரை மாற்ற திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
malaysian-airlines-290714-200-world.jpg

திடீரென மாயம், திடீரென வீழ்த்தப்பட்டது போன்று, தொடர்ந்து பயங்கர பாதிப்பை சந்தித்துள்ள, 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், தன் புகழை தக்க வைத்துக் கொள்ள, விமான நிறுவனத்தின் பெயரை மாற்றவும், புதிய முதலீடுகளை சேகரிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களை பின்பற்ற உள்ளது. கடந்த மார்ச்சில், ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் திடீரென மாயமான மலேசிய பயணிகள் விமானத்தின் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. கடந்த 17ல், 298 பேருடன் சென்ற மற்றொரு மலேசிய விமானம், உக்ரைன் நாட்டில் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கியது.

  

அதை, ரஷ்ய ஆதரவு உக்ரைன் பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என, உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. இத்தகைய இழப்புகளால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மலேசிய விமான நிறுவனம், பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது என, விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நாள்தோறும், 50 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமான நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். நிறுவனத்தின் அதிக பங்குகளை, மலேசிய அரசே வைத்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113988&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குதல், விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றை உறுதி செய்யாத வரை மக்கள் மலேசிய விமானத்தில் பயணிக்க பயப்பிடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250px-Toddy_fresh%26bubbling.jpg

 

புதிய மொந்தையில், பழைய கள்ளு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா துன்பப்படுவதை கண்டு மகிழ்ச்சி கொள்ள முடிகிறது. தமிழின அழிப்பில் மலேசியாவின் பங்களிப்பு.. சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதாக இருந்தது. அதுக்கு தண்டனை கிடைக்கத்தானே வேண்டும். எல்லாம் அல்கா விட்ட வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை மாற்றி பிரயோசம் இல்லை மலேசியன் ஏர் லைன்ஸ்க்கு அட்டமத்தில் சனி இருப்பதால் அவர்களின் விமான இலக்கங்களை இலக்கம் கூட்டவோ நேரடியாகவோ எட்டு இலக்கம் வராமல் இலக்கங்கள் போடவேண்டும் அது மட்டுமின்றி 8,17,26 போன்ற திகதிகளில் பறப்பை மேற்க்கொள்ளக்கொடாது அதிலும் 17 திகதியில் கண்டிப்பாக பறப்பை மேற்க்கொள்ளகூடாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காணாமல் போனதுக்கு ஒழுங்கான,உண்மையான பதிலை சொல்லியிருந்தால் அடுத்த இழுபறி வந்திருக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.