Jump to content

ஊரும் உலகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

 

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

 

 

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

 

 

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

 

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

 

ஆரம்பிப்போமா?

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!

 

எங்கள் தலைமுறை, நீண்ட காலங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்த போதிலும், அது இன்னும் 'புலன்' பெயர்ந்து போகவில்லை!

 

மண்ணோடும், அதன் மணத்தோடும் இன்னும் தனது உறவுகளை, ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகளைப் பேணியே வருகின்றது!

 

அந்தத் தொடர்பை, நீடித்துக்கொள்வதில் 'யாழின்' பங்கு மிகவும் முக்கியமானது!

 

ஆனால், இளைய தலைமுறை, தன்னை வெகு விரைவாகத் தாயகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ளவே முனைப்புக் காட்டுகின்றது! இது மிகவும் கவலையைத் தரும் விடயம்!

 

குறிப்பாகச் சுபேஸ், ஜீவா, அஞ்சரன், ரதி, கவிதை, கிருபன், யாயினி  போன்றவர்களின் ஆக்கங்கள் மிகவும் அருகிச் செல்கின்றதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது! 

 

நிழலி, நுணா, யாழ் வாலி, தப்பிலி போன்றவர்களையும் இளையவர்களுடன் சேர்க்கலாம் என எண்ணுகின்றேன்!

 

யாழில் நடைபெறும் சில கருத்தாடல்களை, இவர்கள் தங்களை நோக்கிய கல்லெறிதலாகப் பார்க்கின்றார்களோ தெரியாது! அப்படியாயின் அது தவறு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்! 

 

தன்னையே ஆழ முனைந்த ஒரு இனத்தின் போராட்டம், ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது என்பதே உண்மையாகும்! இதில் எமக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! கட்டாயம் இருக்க வேண்டும்!

 

அதிலிருந்து, நாம் மீண்டு வரும் வழி வகைகளை ஆராய வேண்டுமேயன்றி, மேலும் மேலும் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்திச் செல்வது, எமது இனத்தின் தற்கொலைக்கே நிகரானது!

 

இனியொரு விதி செய்வோம் ! யாழிலாவது, ஒன்றாக இணைந்திருப்போம்!

 

எனது மண்ணைப்பற்றி நான் அறிந்திருக்காத பல விடயங்களை நான் 'யாழ்' மூலம் அறிந்திருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. எனக்கு எழுத தெரியாது என்பதால் வாசகியாக இத்திரியில் இணைந்திருக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்

கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்ளன. ஊருக்குக் குறுக்காகச் செல்லும் யாழ் பருத்தித்துறை வீதி (750 பஸ் இலக்கம்) தெற்கு, மத்தி பகுதிகளைப் பிரிக்கின்றது. இந்த வீதியில் உள்ள குஞ்சர்கடை எனும் சந்தியில் இருந்து இரு கிளைவீதிகள் தெற்காக கல்லுவம் நோக்கியும், வடக்காக உடுப்பிட்டி-வதிரி வீதியை நோக்கியும் பிரிகின்றன.

கரணவாய் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. முன்னர் இங்கு வசித்த சைவக் குருமார் பரம்பரை கணக்குப் பார்ப்பவர்கள் என்றும் அதனால் அவர்கள் கர்ண பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டதால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கர்ணவாய் என்று பெயரிட்டனர் என்றும் இதுவே பின்னர் கரணவாய் என்று மாறியது என கதைகள் உள்ளன. அத்தோடு பெயரை மேலும் சிறப்பாக்க கருணையம்பதி என்றும் அழைப்பார்கள்.

தோட்டங்களும், பனங்கூடல்களும், வயல்களும் அதிகமுள்ள கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாக உள்ளார்கள். அத்தோடு ஏறக்குறைய எல்லோருமே சைவர்களாகக்த்தான் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை. வாழ்பவர்கள் சைவர்களாக இருப்பதால் பல சைவக் கோயில்கள் நிறைந்துள்ள இடம். பிள்ளையார், அம்மன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிள்ளையார் கோவில்கள் திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்திபெற்றவை.

திருவிழாக்கள் சில குடும்பத்தாரினது என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் யாழ்ப்பாண சமூகத்திற்குரிய இறுக்கமான சாதிக்கட்டமைப்புக்கள் நிலவுகின்ற ஊராக இருப்பதால் அவை சாதியடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. திருவிழாக் காலங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நாதஸ்வர, மேளக் கச்சேரிகளும், சின்ன மேளக் கூட்டுக்களும், பாட்டுக் கச்சேரிகளும் இரவிரவாக நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் திருவிழாக்களுக்குப் போய்வந்த நினைவுகள் உள்ளன. எப்போதும் கிழக்கு வீதியில் சனக்கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறுவர்களாகிய நாங்கள் தேர்முட்டியில் அல்லது தீர்த்தக் கேணியில் நின்று விளையாடுவோம். பூசைமுடியும்போது மடப்பள்ளியில் பஞ்சாமிர்தத்தை அடிபட்டு வாங்கி நக்குவதும், இருட்டிய பின்னர் ஆளரவம் குறைந்த மேற்கு வீதியில் எமது எதிர்க் கோஸ்டிகளுடன் மல்லுக் கட்டி சண்டைபிடிப்பதுதான் தொழில்.

 

தொண்டமனாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து சக்கரைத் தண்ணியும், மோரும் வழங்குவது பெரிய இளைஞர்களின் திருப்பணி. அந்த வயது வரமுதலே ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டதால் அடியார்களுக்குத் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் கிருபன்.உங்களின் இந்த முயற்சியை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன்.
 
அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

Link to comment
Share on other sites

 

அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!

 

 

கருத்து எழுத தெரியும். மற்றவர்கள் ரசிக்கும்படி ஆக்கம் எழுத தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

பரிச்சயமான இடம்தானே. நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

:lol:

புறாப்பொறுக்கி வல்லைவெளியைத் தாண்டி வரும்போது முதலாவதாகக் குடிசனம் இருக்கும் பகுதி. இது இமையாணன் பகுதிக்குள் வரும். அருகில் துவாளி அம்மன் கோயில் இருக்கின்றது.

சில இடங்களினதும், தோட்டங்களினதும் பெயர்கள் மிகவும் வேடிக்கையானவை. ஏன் அப்படிப் பெயர் வந்தது என்று தெரியாது!

குஞ்சர்கடைக்குக் காரணம் மிகவும் எளிது. அங்கு குஞ்சர் என்பவர் சந்தியில் இருந்த ஆலமரத்தின் அருகில் ஒரு கடை போட்டிருந்தார். அவ்வளவுதான். இப்போது அங்கு ஆலமரம் இல்லை. வீதியை அகலப்படுத்துவதற்காகத் தறித்துவிட்டார்கள்.

 

 

Link to comment
Share on other sites

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

ஏன் எதுக்கு எண்டதை நீங்கள் சொல்லாட்டி என்ன ? எங்களுக்குத் தெரிஞ்ச கதைதானே. :lol:

Link to comment
Share on other sites

அருமையான திரி... கள உறவுகளே உங்கள் ஊர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள். நானும் சுண்டிக்குளி பற்றி எழுதுகின்றேன் (சரி சரி கட்டாயம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பற்றியும் கொஞ்சம் சொல்கின்றேன் :) )

Link to comment
Share on other sites

அருமையான திரி... கள உறவுகளே உங்கள் ஊர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள். நானும் சுண்டிக்குளி பற்றி எழுதுகின்றேன் (சரி சரி கட்டாயம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பற்றியும் கொஞ்சம் சொல்கின்றேன் :) )

 

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

 

Link to comment
Share on other sites

நல்ல விடயம் கிருபன் ,

யாழில் பலர் தம்மை இனம் காட்டவிரும்பாதாதாலும் ,பலர் மனம் திறந்து வெளிப்படையாக இருக்கவும் தயங்குவதால் இப்படியான திரிகள் இங்கு குறைவு என நம்புகின்றேன் .

அப்படி சிலர் எழுத முயன்றாலும் படம் போடுகின்றார் பந்தா கட்டுகின்றார் என்று சேறடிக்க தொடங்கிவிடுவார்கள் .

முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

கிழக்கே கரவெட்டியும்

 

 

 
கரவெட்டியும் எனது ஊரைப்போல் மிகவும் பரீட்சயமான ஊர். தந்தையாரின் ஊர் என்பது ஒரு காரணம். பாடசாலை விடுமுறைக்கு உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு. கோழிப் புக்கை அவர்களின் பிரத்தியேகமான ஒரு உணவு. சாப்பிட்டால் மண்டை வேர்க்கும். :D  உறைப்பு சொல்லி வேலை இல்லை.காலையில் பெண்கள் தண்ணீர் சேகரிக்க செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.தலையில் ஒரு குடமும் இடுப்பின் இரு பக்கமும் ஒவ்வொரு குடமுமாக தண்ணீருடன் நடக்கும் நடையை ஒரு ஜிம்னாஸ்ரிக் பயிற்சியாகவே பார்க்கிறேன். :)
 
முதலில் கரவெட்டிக்கு சென்று ஒழுங்கைகளூக்குள் மாறுப்பட்டு சென்றது மறக்க முடியாது.(இப்பவும் தான்) எல்லா ஒழுங்கைகளும் ஒரே மாதிரி தான் தென்படும். :D  இந்தியன் ஆமி இந்த ஒழுங்கைகளுக்குள் தடக்குப்பட்டது நல்ல ஞாபகம். :D
 
பஸ்ஸுக்கு நிற்க்கும் போது பஸ்நிலையத்தில் கரியால் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் முதல் வசனங்கள் வரை வாழ் நாளில் மறக்க முடியாதவை. :)  படிக்கும் காலத்தில் கம்பராமாயணம் ஞாபகம் இருக்கோ இல்லையோ சுவரில் யாரோ கிறுக்கிய வரிகள் ஞாபகம் இருக்கும். :) பாடசாலையில் இவற்றை நண்பர்களிடம் சொல்லி சிரித்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை.
 
கிருபன் இத்திரியை திறந்தமைக்கு நன்றிகள். பல ஊர்கள் பற்றி அறிய ஆவல்.
Link to comment
Share on other sites

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

 

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

 

 

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

 

 

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

 

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

 

ஆரம்பிப்போமா?

 

நீண்ட காலத்துக்குப் பின்னர் ஓர் ஆக்கபூர்வமான விடயம் கிருபன்ஜி யினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . எனது நண்பன் புங்கையூரன் எழுதிய கருத்தே எனது சுருக்கமான கருத்தாகும் . இந்தக் கருத்துக்களத்திலே பல திறமையான சுய ஆக்கங்களை தரக்கூடிய இளைய தலைமுறைகள் உண்டு . ஆனால் அவர்கள் காயடிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்ற வலியான உண்மையையும் நாங்கள் ஒத்துகொள்ளதான் வேண்டும் . இதை சொல்ல எனக்குத் தகுதி இருக்கா என்ற கேள்வியும் இதில் எழலாம் . புதிதாக எழுதுகின்ற அனைத்துக் கள உறவினது ஆகத்திலும் தவறாது கோமகனது கருத்தும்  ஊக்கமும் இருப்பதால்தான் எனது சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுகின்றேன் . நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவது நல்லவையாகவே இருக்கவேண்டும் .

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது . நல்லூர் இராசதானியின் இறுதி மன்னனான சங்கிலியின் அரண்மனை எனது கிராமத்தில் உண்டு . எனது ஊரின் ஊடாக செல்லும் பருத்தித்துறை வீதியின் சிறப்பு என்னவென்றால் , வலது பக்கம் நரை மண்ணையும் (களி மண் ) இடது புறம் செம்பாட்டு மண்ணையும் சரி சமனாக பிரித்து செல்கின்றது . கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும் , நாவலர் பாடசாலையும் , சரவண பவானந்தா பாடசாலையும் பல கல்விமான்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது . கோப்பாய் கோமகன் கு வன்னிய சிங்கமும் ,சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை ஐயா ,சபாபதி நாவலர் , பஞ்சாட்சர சர்மா ,  கோப்பாய் எஸ் சிவம் , அருளம்பலம் போன்ற பிரபலங்கள் பிறந்ததும் கோப்பாயில் தான் . எனது வீட்டிற்குப் பின்னால் கோப்பாய் வெளி தொடங்கி கைதடி உப்பங்கழி வரை செல்கின்றது . இந்த கோப்பாய் வெளி முன்பு பயிர் செய்கின்ற நிலமாக இருந்து ,இப்பொழுது வெறும் சம்பு புல்லு தரவையாகதான் இருக்கின்றது. கோடைகாலத்தில் கைதடி உப்பங்கழி வற்றி உப்பு படர்ந்திருக்கும் . நாங்கள் இயற்கை உப்பு எடுக்க போனது இப்பொழுதும் நினைவில் உள்ளது . மழை காலத்தில் எங்கள் நீச்சல் குளம் கைதடி பாலத்தடிதான் .  எனது வீட்டிற்க்குப் பின்னால் ஒரு பெரிய தாமரை குளம் உண்டு . மழைகாலங்களில் குளம் வலசை போகும் பறவைகளால் நிரம்பியிருக்கும் . நாங்கள் மீன் பிடிப்பதும் இந்தக் குளத்தில் தான் . வேறு ஏதாவது நினைவில் வந்தால் எழுதுகின்றேன் .கிருபன்ஜி க்கு மீண்டும் பாராட்டுக்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

வணக்கம் நான் தற்போது வசிக்கும் ஊாின் படம் அதன் வரலாறு போன்றவற்றை சேகரித்து விரைவில் ஒரு தொகுதியாக இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது .

 

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

 

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கு கரவெட்டி அதிகம் பரிச்சயமாக இருப்பது புதிய தகவல்! வடமராட்சிப் பகுதி யாழின் பிறபகுதிகளில் இருந்து நீரேரி, உப்புகடல் போன்றவற்றால் பிரிக்கப்பட்டிருப்பதால் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அலுவல்கள் இல்லாமல் வருவதில்லை.

கரவெட்டி அருகாமையில் இருந்தும் அதிகம் எனக்கு பரிச்சயமற்ற ஊர். பிரதான வீதிகளைத் தாண்டி ஒழுங்கைகளால் அதிகம் கரவெட்டியினூடு பயணிக்கவில்லை. ஆனாலும் சம்பந்தர் கடையடிப் பகுதியில் வசித்த நண்பர்களை சந்திக்க சில தடவை போயிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

 

மீண்டும் வருவேன்....

Link to comment
Share on other sites

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

 

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

 

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

 

மீண்டும் வருவேன்....

 

வேண்டாம் விசுகர் வேண்டாம்   :(  :( .......கருவில் இருக்கும் சிசுவிற்கும் புங்கையூர் வரலாறு தெரியும். :lol:  :D  :)

images.jpeg

Link to comment
Share on other sites

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் .

 

திசையறி கருவி இல்லை என்றால், கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண நகர பக்கம் போனால் அது தெற்கு. :) இப்ப திசையை சரிபாருங்கள். :)

 

நுணா அண்ணா இணைத்த படத்திலும் பார்க்கலாம். கோப்பாய்க்கு வடக்கு பக்கம் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை பற்றி அதில் இல்லை. இருபாலை கோப்பாய்க்கு தெற்கு பக்கமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

 

துளசி, நீங்க சொல்லுற குளத்தடிப் பிள்ளையார் கோவில் குளத்தில வளரிற நுளம்புகளின் 'சங்கீதம்' கொஞ்சம் வித்தியாசமான இனிமை கலந்து இருக்கும்! :D

 

றக்கா ரோட்டுக்கும், நாவலர் வீதிக்கும் இடையால தொடுத்து ஒரு றோட்டுப் போகும்! பேர் என்னவோ 'அரசடி வீதியோ' என்னவோ!

 

நல்ல 'குளுமையான' வீதி! :D

 

இதுக்குள்ள தானா சீனா வந்து கருத்து வைச்சால், அதுக்கு நான் பொறுப்பில்லை! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.