Jump to content

ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்து விஸ்டென் சாடுகிறது -


Recommended Posts

5123download.jpg

ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது.

 

கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ பாணியிலான பிரிப்பு மற்றும் விதிமுறை' என லோவ்ரென்ஸ் பூத் எழுதியுள்ளார். 


மத்திய தலைமை பொறுப்பை இந்திய எடுக்க தயாராவதனால் சர்வதேச கிரிக்கெட் தனது மூச்சை நிறுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://metronews.lk/article.php?category=sports&news=5123

Link to comment
Share on other sites

இந்த ஊழல் நாடு இந்தியாவின் கையில் அதிகாரம் போனால் கிரிக்கட் அதற்கான தனித்தன்மையை இழந்துவிடும். Gentleman's game என அழைக்க முடியாது.

ஆனால் தவறு இந்தியாவினது அல்ல. ஐசிசியின் தவறு இது.

Link to comment
Share on other sites

எங்களை ஓரங்கட்டினால் 2 ஆண்டுகளில் போண்டியாகிவிடுவோம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

1397292825-8465.jpg

ஐசிசி. கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து என்ற மூவர் பவர் கூட்டணி கையில் எடுத்ததையடுத்து பாகிஸ்தானும் இந்தக் கூட்டணியின் நிர்வாகப் பொறுப்பேற்பை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 
ஆகவே நிபந்தனையின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூவர் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
 
ஏன் மூவர் கூட்டணிக்கு ஆதரவு? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி லாகூரில் செய்தியாளர்களிடையே தெரிவித்தபோது:
"தனிமைப்படுத்தப்படுவோம் என்பதை கருத்தில் கொன்டே ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளோம். பெரிய அணிகளுடன் நாம் விளையாடவில்லையெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் 2 ஆண்டுகளில் திவாலாகிவிடும். ஆகவே இந்தியாவுடன் உள்நாட்டு தொடரில் ஆடியே ஆகவேண்டும். சர்வதேச கிரிகெட்டை ஆடுவதன் மூலமே நமது உள்கட்டமைப்பு நடந்து வருகிறது.
 
இந்தியாவுடன் விளையாடியே ஆகவேண்டும், ஏனெனில் அதுதான் இன்று பண வருவாய்க்கு முதற்காரணம். நாம் நமது கிரிக்கெட்டை நடத்தியாகவேண்டும், தனிமைப்பட்டு போய் விடக்கூடாது. எனவே அனைத்து பெரிய அணிகளுடன் பாகிஸ்தான் விளையாடுமாறு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  என்றார் சேத்தி.
 
ஏற்கனவே பாகிஸ்தான் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.50 கோடியை எட்டிவிட்டது.
 
மூவர் கூட்டணியை பாகிஸ்தான் ஆதரிக்காததால் இருதரப்பு டெஸ்ட் தொடர்களை மற்ற நாடுகள் தங்களுக்குள் முடிவு செய்து கொள்ள தொடங்கிவிட்டன. ஒருவரும் ஆதரிக்காத பாகிஸ்தானுடன் பேசக்கூட தயாராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த பயங்கரத்தை நிகழ்த்தி கிட்டத்தட்ட மிரட்டி பாகிஸ்தான் அடிபணிய வைக்கப்பட்டுள்ளது.
 
பாலஸ்தீனத்தை மிரட்ட இஸ்ரேல் ஒன்றுமே செய்யாது. உணவுப்பொருட்கள் செல்லும் ஒரு 10, 15 டிரக்குக்களை சிறைபிடித்து வைத்து விடுவர். அவ்வளவுதான் பாலஸ்தீன மக்கள் பட்டிணி கிடந்து சாகவேண்டியதுதான்.
 
அதுபோன்ற ஒரு மோசமான கீழ்த்தரமான செயலையே பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை பாகிஸ்தானுக்குச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.