Jump to content

இறுதி யுத்தத்தின் முடிவில் கிழக்கிலிருந்த தப்பிச்சென்ற இரு பொறுப்புவாய்ந்த போராளிகள் தற்போது எங்கே? இவர்களின் தற்போதைய நிலை என்ன?


Recommended Posts

இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை?

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.

அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கிய புலித்தலைவர்களாவார்.

கேபி தன்னைத் தானே தலைமையென அறிவித்தார்

யுத்தம் கட்டம் கட்டமாக முடிவுற்றுக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கு பொறுப்பாகவிருந்த கேபி என்று அழைக்கப்படும் திரு. பட்மநாதன் தானே புலிகளின் அடுத்தகட்ட தலைமைப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட கிழக்கின் புலித்தலைவர்களோடு தொடர்வுகளை பேணியிருந்தார்.

கேபி யின் இப் புதிய தலைமை நிர்வாகத்தை புலிகளின் கிழக்கின் மருத்துவர் ரவிமோகன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோரைத் தவிர ஏனைய புலித் தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை.

தாயாமோகன் மற்றும் ரவிமோகன் வெளியேற்றம்

கேபியின் தலைமையை ஏற்றுச் செயற்பட்ட தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் ஏற்பாட்டுடன் அடுத்த கட்டத் தயார்ப்படுத்தல் சார்ந்து கேபியுடன் நேரடிக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடக இஸ்லாமியர்கள் போன்று தம்மை தோற்றம் மாற்றிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்.

கட்டுநாயக்கா விமாணநிலையம் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின்னர் அரச படைகளால் உச்சகட்ட பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிந்தபோதும் எப்படி? யாருடைய? பின்னணியோடு இவர்கள் நாடு கடந்து சென்றார்கள் என்ற விடையம் இன்றுவரை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இது இப்படியிருக்க மலேசியா சென்ற தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் நேராடி மேற்பார்வையில் இரகசியமான முறையில் இயக்கிரவப்பட்ட புலிப்பாசறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தாயாமோகன், ரவிமோகன் குடும்பத்தினர்

போரின் முடிவில் வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்த இவ்விருவரின் குடுப்பத்தினரும் மக்களோடு மக்களாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முகாம் ஓன்றில் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அரச புலநாய்வுப் பிரிவினர் ஒலிபெருக்கி ஊடக பெயர்களை அறிவித்து சரனடையுமாறு பயமுறுத்தினர்.

இச் செய்தியை அறிந்த தயாமோகன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார். இதன் பின்னர் கருணாவே தயாமோகனின் குடுப்பத்தினருக்கு பாதுகாக்கு வழங்கி வைத்திருந்தார் என்பது பல ஊடகங்களில் பலமுறை வெளிவந்த பலரும் அறிந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தியே.

கேபி பிடிபட்டார் (ரா)??

இத் தருணத்தில் கேபி அவர்கள் இலங்கை அரசபுலனாய்வுத்துறையின் பொறிக்குள் அகப்பட்டு நாடுகடத்தப்பட்டார். இதன் பின்னர் ரவிமோகன் மற்றும் தயாமோகன் ஆகியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கும் செல்ல முடியாமல் இருந்த காரணத்தால் கேபியின் சகாக்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்துக்கு விமாணம் மூலம் சென்று அரசியல் தஞ்சம் கோரினர்.

தயாமோகன் குடும்பம் சுவிஸில்

தற்பொளுது தாயமோகனின் குடும்பத்தினர் கடந்த 26.03.2012 அன்று சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக சுவிட்சர்லாந்துக்கு சென்றடைந்துள்ளனர். புலிகளுடன் சிறிய தொடர்புகளை பேணிவந்த சாதாரன மக்களைளே சிறீலங்கா அரசாங்கம் துன்புறுத்தி, சில சமயத்தில் கொலை செய்து வரும் நிலையில் புலிகளின் அரசியற்துறைப் பதவி வகித்த லெப் கேணல் தயாமோகன் குடும்பத்தினர் பத்திரமாக நாடு கடந்தமை எப்படி? இது தாமோகன் தற்பொளுது அரச புலனாய்வுத் துறையின் பிண்ணனியோடு இயங்கி வருகிறார் என்று ஏற்கனவே இருந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெற வைத்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் புலிகள் கட்டமைப்பை சிதைக்கப் பொறி

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வலுவான முறையில் இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்பை இலங்கைப் புலனாய்வுத்துறை அடியோடு அழிப்பதற்கு பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருகிறது. அதன் ஓர் கட்டமாக தகுதிவாய்ந்த தயோமோகன் போன்ற போராளிகளை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி தற்பொளுது இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்புகளுக்க நிகராக வெறொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதற்கென புலிகளில் நீண்ட காலம் செயற்பட்டுவந்த போராளிகளை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அனுப்பி வைத்தள்ளது.

முதற்கட்டமாக மாவீரர் தினங்கள் குறிவைப்பு / செயற்படும் நபர்கள்

இவ்வாறான சிலரே இத்தனை காலமும் ஓர் குடையின் கிழ் நாடத்தப்பட்டடுவந்த மாவீரர்நாளை இரண்டாகப் பிளவு படச் செய்தனர். மாவீரர்களை கடவுள்களுக்கு நிகராக பூசித்துவரும் தமிழ் மக்கள் இக்கபட நாடகத்தை விளங்கிக்கொள்ளாமல் உணர்வுபூர்வமான தமது ஆதரவை வழங்கினர்.

இப்படி புலிகளின் கட்டமைப்பை சிதைத்கவென சிறீலங்க அரச புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்டுள்ள குளுவினர் தாமே உன்மையான விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தாமே தலைமைச் செயலகமென்றும் குறிப்பிட்டுச் செயற்படுகின்றனர். இவர்களின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் சில நாடுவாரியாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

  • சுவிஸ்;: தயாமோகன் (பொறுப்பாளர்), நீலன் ( துணைப் பொறுப்பாளர்) மோகன், றாம்குமார், nஐயம் ( 2009 இற்கு முன் சுவிஸ் சூறிச் மானில புலிகளின் பொறுப்பாளராக இருந்துவிட்டு தற்பொளுது தலைமைச்செயலகம் என செயற்படும் தயாமோகன் அணிலில் தாவிச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது), வேந்தன் என பலர் கவிஸில் இயங்கி வருகின்றனர்.
  • பிரான்ஸ்: அறிவு, சுரேஸ்
  • லண்டன்: சங்கீதன்

ஒட்டுமொத்த நீர்வாகத்தையும் கட்டுப்படுதஇதம் பொறுப்பில் பாண்டியன் (நியூஸ்லாந்து) சுபன்; சுரேஸ்.

தயாமோகன் பின்னணியில் கருணா மற்றும் இலங்கைப் புலனாய்வு

புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் பெருமுயற்சியில் பங்குவகிக்கும் சூத்திரதாரிகளில் தயாமோகனும் இடப்பிடித்துள்ளதாக எமக்கு உள்ளகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்கது. தலைமைச்செயலகம் எனும் பெயரில் தாம் அதியுச்ச தமிழீழத் தெசியவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு இக் கும்பல் செயற்படுத்தப்படவேண்டும் என இலங்கையிம் பாதுகாப்புச் செயலரும், அதிபர் றாNஐபக்சேயின் சகோதரருமான கோத்தபாயவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுளதெனவும் உள்ளகத் தகவல்கள் தெருவிக்கின்றன.

ரவிமோகன் பொட்டுவின் ஆளாகச் செயற்பட்டார்

மருத்துவப் போராளியான ரவிமோகன் அவர்கள் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காலப்பகுதியில் கருணாவின் குகைக்குள் விடுதலைப்புலியாகச் செயற்பட்டவர். கருணா தன் ஆயுத பலத்தையும் ஆளானிப் வளத்தையும் பாவித்து கிழக்கின் தலைமைத்துவத்தை முற்றாக தானே கைப்பற்றச் செயற்பட்டார்.

கருணாவின் இத் திட்டத்தை முறியடிப்பதற்கும், கிழக்கை மீண்டும் கருணாவிடமிருந்து கைப்பற்றுவதற்கும் புலிகள் அமைப்பின் புலநாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ரவிமோகன் அவர்கள முதுகெலும்பாகவிருந்து செயற்பட்டார் என்பது இன்றுவரை வெளிவராத உன்மை.

புலிகள் அமைப்பிலிருக்கும் தனது விசுவாசம் காரணமாக ரவிமோகன் அவர்கள் தலைமைச் செயலகம் எனும் தனித்தியங்கும் செயற்பாட்டை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலைமைச்செயலகத்தின் பின்னணியில் கருணாவும் இருப்பதால் ரவிமோகனை வன்னிப்புலி என்று பட்டியலிட்டு அடியோடு ஓரங்கட்டிவிடப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் முற்றுப்பெறவழில்லை எனும் கருத்தை ரவிமோகன் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் இவரின் தற்போதைய உண்மையான நிலைப்பாடு கேள்விக் குறியாகவே உள்ளது.

http://www.thinasari.com/?p=7866

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.