Jump to content

சர்வதேச நாடுகள் முன் மண்டியிட்டுள்ளது அரசு - படை வீரர்களை காட்டிக்கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது: கூட்டிலிருந்தாலும் சிறும் சிங்கம் பொன்சேகா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-fonseka-150jail.jpg

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் தளபதியாக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடந்தது. தமிழர்களை கொன்று குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். போர் முடிந்ததும் அதிபர் ராஜபக்சேகாவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபரின் உத்தரவுகளை நிறைவேற்ற பொன்சேகா மறுத்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து சரத் பொன்சேகாவை ராஜபக்சே அரசு கைது செய்தது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது. ஜாமீனில் வந்த அவர் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருவருமே இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்கள். இப்போது ஐ.நா. தீர்மானத்தால் போர்க்குற்ற நடவடிக்கைகள் விசாரணைக்கு வர இருப்பதால் சரத் பொன்சேகா நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

ஐ.நா. தீர்மானம் குறித்து சரத் பொன்சேகா கூறியிருப்பதாவது:

ஜெனிவாவில் ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதால் நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதை சரிக்கட்ட இலங்கையில் சிங்கக்கொடிகளை ஏற்றுங்கள் என்று கூறி அரசு திசை திருப்ப பார்க்கிறது. சிங்கக் கொடிகள் அல்ல, அதற்கு பதிலாக கறுப்புக்கொடிகளையே பறக்க விடவேண்டும். சர்வதேச நாடுகள் முன் இலங்கை மண்டியிட்டு விட்டது. இலங்கை அரசாங்கம் தான் நாட்டை சர்வதேச சமூகம் முன் மண்டியிடச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் படை வீரர்களையும் அரசாங்கம் காட்டிக் கொடுக்க முயற்சி செய்து வருகிறது.

படை வீரர்களை காட்டிக்கொடுத்து விட்டு அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.

இதற்கிடையே ஐ.நா. தீர்மானம் குறித்து இலங்கை சென்று கலந்துரையாட ஐ.நா. (சர்வதேச நாடுகளின்) பிரதிநிதிகள் திட்டமிட்டு இருந்தனர். இவர்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கை தனது முடிவை தளர்த்திக் கொண்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மட்டும் இலங்கை வரலாம் என்று அனுமதித்துள்ளது.

அவர் செல்லும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி மந்திரி லட்சுமண் அபயவர்த்தனா தெரிவித்தார். ஐ.நா. தூத்துக்குழு நாட்டுக்கு வரும்போதுதான் இதுபற்றி அரசாங்கம் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

ஏற்கனவே படை வீரர்கள் காட்டிக்கொடுத்துவிட்டர்கள். இப்பொழுது அரசியல்வாதிகளின் முறை, படைவீரர்களை காட்டிக்கொடுப்பது.

இந்த விவகாரத்தில் படை வீரர்களையும் அரசாங்கம் காட்டிக் கொடுக்க முயற்சி செய்து வருகிறது.

படை வீரர்களை காட்டிக்கொடுத்து விட்டு அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளீல விட்டால் இந்த சீறும் சிங்கமே காட்டிகொடுக்கும். 

Link to comment
Share on other sites

சிங்கத்திற்கு பல்லையும் பிடுங்கி நகத்தையும் வெட்டிவிட்டார்கள். சளிபிடித்த சிங்கம். சீறுகிறதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.