Jump to content

வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி


Recommended Posts

வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி
 

 

 

ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.

 

கேரி பாலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் முதல் நாள் ஆட்டத்தில் தோனி கேப்டன்சியின் சில வினோதங்களைப் பார்ப்போம்.

இஷாந்த் சர்மா காயத்தினால் விளையாடவில்லை என்ற போதே தோனி நிச்சயம் தனது பாதுகாப்பு உத்திகளுக்கே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். அதுதான் நடந்தது.

 

டெஸ்ட் போட்டியை ஆட்டம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அலுப்பூட்டுவதாக மாற்றி விடுகிறார் தோனி.

அணித் தேர்வில் மீண்டு தவறு செய்தார் தோனி. அஸ்வினைத் தேர்வு செய்யாதது பெரிய தவறு என்பதை அவர் போகப்போக உணர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

 

அவர் பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதுவும் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் வீச வந்தவுடன் புத்தக வாசிப்பின் மீது அவரது கவனம் சற்றே தீவிரமானதாகவே இருந்தது.

 

இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் மற்றவர்கள் போல் ஐபிஎல் ஆடிவிட்டு இந்திய அணியில் இடம்பெற்றவர் அல்ல. சுமார் 4,5 ஆண்டுகளாக ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் இடம்பெற்று கிட்டத் தட்ட இந்திய அணியில் தான் இடம்பெறுவதற்கான தார்மீக உரிமையை குரல் கொடுத்துப் பெற்றுள்ளவர்.

 

ஆனால். நேற்று என்னவாயிற்று? குக் 15 ரன்களில் இருந்தபோது பங்கஜ் சிங் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கர் குக் மட்டையின் விளிம்பில் பட்டு 3வது ஸ்லிப்பில் ஜடேஜாவிடம் செல்ல எளிதான அந்தக் கேட்சை அவர் கோட்டை விட்டார். 300 விக்கெட்டுகளை அவர் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வீழ்த்திய பிறகு டெஸ்ட் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் வந்தவுடன் தவறான ஸ்லிப் ஃபீல்டர் தேர்வினால் முதல் விக்கெட்டைத் தவற விட்டார். மேலும் குக் அதன்பிறகு பலமாகச் சென்றார்.

 

தொடர்ந்து ஸ்லிப் திசையில் ஃபீல்டர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் தோனியின் கள உத்தியும் பங்கஜ் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய முதல் விக்கெட்டை அநியாயமாகப் பறித்தது.

 

குக்கிற்கு பேடில் பல பந்துகள் போடப்பட சில பவுண்டரிகளை அடித்தார். உடனே பவுலரை அழைத்து லெக் திசையில் வீச வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும் கேப்டன் தோனி. உடனே கல்லியில் இருந்த பீல்டரைத் தூக்கிவிட்டார். உடனேயே மொகமட் ஷமியின் பந்தில் பட்ட எட்ஜ் ஒன்று கல்லி வழியாக கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் பவுண்டரி பறந்தது.

 

ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிறுத்துவதிலும் தவறு செய்தார் தோனி. விக்கெட் கீப்பரை ஒட்டி முதல் ஸ்லிப் இருப்பதுதான் வழக்கம். ஆனால் தோனி தொடர்ந்து விசித்திரமான முறையில் முதல் ஸ்லிப்பை தனக்கு சற்றே இடைவெளி விட்டு நிறுத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். இதனை பயிற்சியாளர் பிளெட்சர் முதல் ஒருவரும் கண்டிப்பதேயில்லை. சில கேட்ச்கள் முதல் ஸ்லிப்பிற்கும் விக்கெட் கீப்பருக்கும் இடையே பல டெஸ்ட் போட்டிகளில் சென்றிருக்கிறது. ஆனால் தோனி திருத்திக் கொள்ளவில்லை.

 

 

நேற்று ஜடேஜாவை அவர் பந்து வீசச் செய்த விதமும் செட் செய்த ஃபீல்டிங் உத்தியும் விநோததிலும் விநோதம். இடது கை ஸ்பின்னர் என்பதால் முதலில் ஃபாவர்ட் ஷாட் லெக்கை நிறுத்துவதே சிறந்தது. ஆனால் அவரோ லெக் ஸ்லிப், மற்றும் ஒரு ஸ்லிப் என்ற உத்தியைத் தொடர்ந்து கையாண்டு வருகிறார்,நேற்றும் அப்படித்தான் செய்தார். ஜடேஜாவை லெக் திசையில் வீசச் செய்தார். இதனால் ஒரு பயனும் இல்லை. எரிச்சலூட்டக்கூடிய விதத்தில் சுலபமாக சிங்கிள்களை குக்கும், பாலன்ஸும் எடுத்தவண்ணம் இருந்தனர். விக்கெட் எடுக்கும் முயற்சி சிறிதும் இல்லை. நடுவருக்கும் ஸ்டம்பிற்கு இடையே புகுந்து வந்து வீசும் டயக்னல் முறைப் பந்து வீச்சே இடது கை வீச்சாளர்கள் காலங்காலமாக கடைபிடிக்கும் ஒரு சிறந்த உத்தி. ஆனால் ஜடேஜா முழுக்க முழுக்க ஓவர் த ஸ்டம்பிலேயே வீசினார் பந்தின் திசையும் அலுப்பூட்டும் விதமாக ஒரே மாதிரியாகவே இருந்தது.

டயக்னல் முறையில் வீசினால் பந்தின் கோணம், ஃபிளைட், மற்றும் ஃபார்வர்ட் ஷாட்லெக், சிலி மிட் ஆஃபை வைத்து பேட்ஸ்மென்களை மிரட்டலாம். இந்தப் பந்து வீச்சுமுறையில், இந்த நெருக்கமான பீல்டிங் அமைப்பை முறியடிக்க பேட்ஸ்மென்கள் மேலேறி வந்து ஆடியேயாகவேண்டும், அப்போது தவறுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. இங்கிலாந்து வீரர்கள் அவ்வாறு தவறுகளைச் செய்பவர்களே. ஆனால் தோனியின் கள வியூகத்தில் அவரால் ஜடேஜாவை வைத்துக் கொண்டு முரளிதரன் விக்கெட்டைக் கூட வீழ்த்தி விட முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

மேலும், இயன் சாப்பல் கூறுவது போல், ஒரு முனையில் டைட் செய்து இன்னொரு முனையில் விக்கெட் எடுக்கும் முயற்சி என்று தோனி முடிவெடுப்பது அறிவு பூர்வமானதல்ல. இது டெஸ்ட் போட்டி 2 முனைகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தவே பந்துவீசப்படவேண்டும் கள உத்திகள் வகுக்கப்படவேண்டும்.

 

தோனிக்கு ரஞ்சி போட்டிகளில் கேப்டன்சி செய்து பழக்கமில்லை. செய்ததில்லை. ஏதோவொரு ரஞ்சி அணிக்கு தோனி கேப்டனாக இருந்து வாசிம் ஜாஃபர், புஜாரா உள்ளிட்ட 200, 300 என்று அடிக்கும் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுக்க மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தால் இங்கு வந்து திணற வேண்டியிருக்காது என்பதோடு அடிப்படைத் தவறுகளையாவது செய்யாமல் இருப்பார்.

 

தோனி டெஸ்ட் கேப்டன்சிக்குத் திறமையற்றவர், குறிப்பாக அயல்நாடுகளில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். ஒருவரது கேப்டன்சியில் அதிகம் வெற்றிகளைக் குவித்திருப்பதற்கும் அவரது திறமைக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர் நேற்றைப் போல மந்தமாக கேப்டன்சி செய்தால் இங்கிலாந்தின் நீண்ட பேட்டிங் வரிசைக்கு எதிராக நிச்சயம் திக்கித் திணறுவார் என்பது உறுதி.

இதனால் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் வாய்ப்பே அதிகரிக்கும்

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6257677.ece?theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.