Jump to content

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வேலூர் வீரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1406535696-4192.jpg
 

 

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.

71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன.

இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் ஜெபல்பூரில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை சிவலிங்கத்தை ரோல்மாடலாகக் கொண்டு தானும் ஒரு பளு தூக்கும் வீரராக வரவேண்டும் என்பதில் சதீஷ்குமார் உறுதியாக இருந்தாகக் கூறப்படுகிறது.

சதீஷ் குமார் 10ஆம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவரது திறமையைக் கண்டு வியந்த உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ் குமாரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் சேர்த்தனர்.

1406535890-1942.jpg
அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் தென்னக ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. தென்னக ரயில்வே அணி வீரராக களத்தில் இறங்கி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2010 ஆம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த சாதனையாளர் சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். ஆனால் சதீஷ்குமார் 149 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். அதேபோல் ரவி கட்லு 142 மற்றும் 175 கிலோ எடைகளை தூக்கி வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ஜ் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 202 எடையைத் தூக்கி பூனம் யாதவ் வெண்கலம் வென்றார். இந்தப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நைஜீரிய வீராங்கனைகளான ஏடென்ஸ்மி தங்கப் பதக்கத்தை வென்றார்.

சதீஷ் பெருமிதம்...

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பெருமிதத்துடன் கூறும்போது, ''காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்வதற்காக இரண்டரை ஆண்டுகளாக தீவிர பயிற்சி எடுத்து வந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம். அரசின் உதவி, ஊக்கம் இருந்தால் பல திறமையான வீரர்கள் உருவாகுவார்கள். பயிற்சியாளர் உதவியுடன் முறையாக பயிற்சி எடுத்தால் வெற்றி பெறலாம்" என்றார்.

சதீஷ் பெற்றோர் மகிழ்ச்சி...

மகன் சதீஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் சதீஷின் பெற்றோர் சிவலிங்கம்-தெய்வானை தெரிவித்துள்ளனர். மேலும், சதீஷுக்கு, அர்ஜுனா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சதீஷ் தேர்வு பெற்றுள்ளதாக கூறிய அவரது பெற்றோர், ஒலிம்பிக்கிலும் சதீஷ் தங்கம் வெல்வார் என நம்பிக்கை உள்ளது என்றனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30659

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவு சதீஷ் குமார் சிவலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மேலும் சாதனைகள் புரிந்திடவும் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவு சதீஷ் குமார் சிவலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மேலும் சாதனைகள் புரிந்திடவும் வாழ்த்துக்கள் !

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சதீஷ்குமார்!

 

வியாபார ஸ்தாபனங்களில் 'ஆதரவு' அதிகமில்லாத போதும், உங்கள் சொந்த முயற்சியால் ஈட்டிய வெற்றி, உண்மையில் மிகவும் மெச்சத்தக்கது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சதீஷ்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றால் வாழ்த்துவது போன்று தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர் எவராவது சிறிலங்காவுக்காக விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் சாதித்தால் வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றால் வாழ்த்துவது போன்று தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர் எவராவது சிறிலங்காவுக்காக விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் சாதித்தால் வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கின்றது?

தமிழகம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு 'மாநிலம்' !

 

தமிழீழம் சிறிலங்காவின் ஒரு மாநிலமல்ல..! :o

 

அவ்வாறு அங்கீகரிக்கப்படுமிடத்து வாழ்த்துவதில் தவறேதும் இல்லை!

 

உங்கள் கேள்வி வடமாகாண அல்லது கீழ் மாகாணம் என்று குறிப்பிட்டிருந்தால், வாழ்த்துவதில் தவறேதுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1406535696-4192.jpg
 

 

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.

-----

இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
------

 

வாழ்த்துக்கள் சதீஷ்குமார்.

தமிழன் என்னும் முறையில்... பெருமையடைகின்றேன்.

 

சாதாரண ஒரு வேலை பார்த்துக் கொண்டு..... சர்வதேசப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் பெற அவர் எத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருப்பார்.

 

இதனை கருத்தில் கொண்டு, அவரின் சாதனையை.... ஊக்குவிக்கும் முகமாக அவருக்கு விளையாட்டுடன் சம்பந்தப் பட்ட அரச வேலை ஒன்றை வழங்க, தமிழக அரசு முன் வரவேண்டும்.

 

இப்படி ஊக்குவித்தால் தான்..... மற்றையவர்களுக்கும் விளையாட்டில் சாதனை படைப்பார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு: ஜெ., அறிவிப்பு.
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  ‘’காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த அற்புதமான சாதனையை செய்ததற்காக உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என 2011ல் அறிவித்திருந்தேன். இப்போது அந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு தாங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் பல பதக்கங்களை பெறவும் வாழ்த்து கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நக்கீரன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.