Jump to content

தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டு


Recommended Posts

தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை கடந்த 11ம் நாள் மார்ச் மாதம் Stade Chemin du Marais du Souci மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள்

அ பரிவில்

ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ

பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ

நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ நல்லூர்ஸ்தான் வி. கழகம் ஃ

யாழ்டன் வி.கழகம், ஃசெவரோன் வி. கழகம், ஃதமிழர் வி. கழகம் 93 (கறுப்பு)

உதயசூரியன் வி.கழகம், ஃ செந்தமிழ் வி.கழகம்

ஆ பிரிவில்

வன்னிஒன்றியம் வி. கழகம், ஃ தமிழர் விளையாட்டுக்கழகம் (வெள்ளை)

கிறீன்ஸ் கிங்ஸ் வி. கழகம், ஃஇளம் தமிழர் வி.கழகம், ஃசென்மேரிஸ் வி.கழகம்

வல்வைபுளுஸ் வி.கழகம், ஃ ஈழவர் வி. கழகம் (மஞ்சள்), ஃநெய்தல் வி.கழகம்

சென் பற்றிக்ஸ் வி.கழகம்

என பிரான்சில் உள்ள 22 விளையாட்டுக்கழகங்கங்களும் பங்கு கொண்டு

சிறப்புச்செய்துள்ளன.

தொடர்ந்தும் இறுதிப்போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இறுதிப்போட்டி யூலை

15நாள் மாவீரர் மெய்வல்லுனர் போட்டியன்று நடைபெறவுள்ளது.

தாயக மண்ணின் போட்டிகள் யாவும் விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

01-110.JPG01-111.JPG01-112.JPG1-114.JPG1-115.JPG1-116.JPG1-117.JPG1-118.JPG

www.Pathivu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அன்பு

பாரதி விளையாடடுக்கழகம் முதலாவதாவது ஆட்டத்தை ஈழவர் அணிக்கெதிராக ஆரம்பித்தபோது பாரதி விளையாடடுக்கழகம் சார்பாக கை கொடுத்து விளையாட்டை தொடங்கி வைத்தவன் என்கின்ற முறையில் தங்களது பதிவுக்கு நன்றிகள்.

இதில் எனது இரு மக்களும் உள்ளனர்.

(பாரதி என்பது எம்மால் புதுக்குடியிருப்பில் வைத்து புனர்வாழ்வுக்கழகத்தினூடாக பராமரிக்கப்பட்ட பாரதி இல்லைத்தை கனம் செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது)

முதலாவது ஆட்டத்தில் 1- 2 என தோல்வியைச்சந்தித்தாலும்

அடுத்த ஆட்டத்தில் வடடுக்கோட்டை கழகத்துடன் 4-2 என வென்று முன்னணியிலுள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பின் மண்டை வழுக்கையா அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு முன் உள்ளவர் தான் யான்.

ஆனால் முகம் காட்டாதது படப்பிடிப்பாளர் தப்பு :lol::D :D

சிவப்பு உடுப்பு போட்டிருப்பவர்கள் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டை நடாத்தும் நிர்வாகிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே முகத்தை காட்டியிருக்கலாம்...வி.அண்ணா கட்டையாக,குண்டாக இருப்பார் என நான் கற்பனை பண்ணி வைச்சன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிழமையும் நடக்குமோ ? :rolleyes:

ஆம்

விளையாட்டு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஞாயிறு

பாரதி விளையாட்டுக்கழகம் இந்த இரு கழகத்தில் ஏதாவது ஒன்றுடன் பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ விளையாடும்.

இணையவன் நான் அங்கு நிற்பேன்.

இடம் : Stade Chemin du Marais du Souci A Sevran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபே குடிக்கலாம் வாங்கோ.. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.