Jump to content

பொன்சேகாவின் விடுதலை: யாருக்கு அச்சுறுத்தல்? (பூராயப் பார்வை)


Recommended Posts

பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்டபோதிலும், கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விடயத்தில் திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா இவ்வருட முற்பகுதியில் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை கொழும்பிடம் வலியுறுத்தியிருந்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் றோபெர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சருக்கு கையளித்த கடிதம் ஒன்றில், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது.

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம் என்பவற்றுடன் பொன்சேகாவின் விடுதலையையும் அமெரிக்கா முக்கியமானதாக நோக்கியது. இவை தொடர்பாகப் பேசுவதற்கு வாஷிங்டன் வருமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அழைத்திருந்தார். மார்ச் நடுப்பகுதியில் அவரது வருகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காமையால் அமெரிக்கா செல்வதை பீரிஸ் தவிர்த்துக்கொண்டார். இந்தப் பின்னணியிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இருந்தபோதிலும், ஒத்திவைக்கப்பட்ட பீரிஸின் அமெரிக்க விஜயம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி ஹிலாரி கிளின்டனை அமைச்சர் பீரிஸ் சந்தித்ததார். அந்தச் சந்திப்பு இடம்பெற்ற போது பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கொழும்பு வெளியிட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்னையிலிருந்து வெளிவரும் 'இந்து' பத்திரிகையாளரிடம்தான் இது தொடர்பில் முதலில் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்சேகாவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இது நீதிமன்றத் தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக இருப்பதாதால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுக்க 3-4 நாட்கள் சென்றுள்ளது.

இருந்த போதிலும், இதற்கு முன்னரே பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ரிரான் அலஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்திவந்த போதிலும், ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனை ஒன்றுதான் அவரது விடுதலைக்குத் தடையாக இருந்தது. அதாவது, பொன்சேகா மன்னிப்பக் கோர வேண்டும், இல்லையெனில் பொன்சேகாவின் குடும்பத்தினர் யாராவது அவரது சார்பில் மன்னிப்பக் கோர வேண்டும் என ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொன்சேகா குடும்பத்தினர் கூறிவிட்டனர். இது ஜனாதிபதிக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலிருந்து ஜனாதிபதி இப்போது இறங்கிவந்திருப்பது இவ்விடயத்தில் அவர் மீது அதிகளவு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்விடயம் தொடர்பான பேச்சுக்களுக்காக ரிரான் அலஸின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருப்பது மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை காலை ரிரான் அலஸ் ஜனாதிபதியின் வாஸஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பொன்சோவின் விடுதலை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார். லண்டனில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டிரான் அலஸ் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் அவசரமாக அங்கிருந்து அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அனோமா பொன்சேகாவடனும் பேச வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருந்திருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு செல்வதற்கு அனோமா மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. இந்த நிலையிலேயே ரிரான் அலஸ் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி அங்கு சென்றிருக்கின்றார். ஜனாதிபதி ஒருவர் அரசியல் விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு மற்றொருவருடை வீடு தேடிச் செல்வது என்பது இராஜதந்திர மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதிக்குக் காணப்பட்ட நிர்ப்பந்தம் அந்தளவுக்கு இறங்கிச் செல்ல வேண்டிய ஒரு தேவையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் நிபந்தனைகளின் அடிப்படையில் பொன்சேகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதேவேளையில், ஜனாதிபதியால் அவர் மன்னிப்பு வழங்கப்பட்டவராக இருந்தாலும், இரண்டு வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதால் அடுத்துவரும் ஏழு வருட காலத்துக்கு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிலோ அல்லது மாகாண சபைக்கோ அவர் போட்டியிட முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது. உடனடியாக அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு இவை பொன்சேகாவுக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பது உண்மை!

இதனால், பொன்சோகாவின் விடுதலை உடனடியாக அரசுக்கு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரச எதிர்ப்பப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், அதன் மூலமாக தன்னுடைய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் அவர் முற்படுவார் என எதிர்பார்க்கலாம். அத்துடன், பொன்சேகாவின் அனைத்து அரசியல் உரிமைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தலாம். இவை அனைத்தும் அரசுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அரச எதிர்த் தரப்பு அவருக்குப் பின்பாக அணிதிரள்வதற்கு வழிவகுக்கலாம்.

அதாவது, அவரது தீவிர அரசியல் பிரவேசம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் முதலில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும். ஐ.தே.க. ஏற்கனவே பிளவுபட்ட ஒரு நிலையில்தான் உள்ளது. பொன்சேகா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஜித் அணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர உடபட அனைவரையும் அங்கு காண முடிந்தது. இந்த நிலையில் பொன்சேகாவுடன் இணைந்து தமது தீவிர அரசியலை முன்னெடுப்பதற்கு சஜித் குழுவினர் முற்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பொன்சேகா விடுதலையானபோது அவர் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ரணில் விடுத்த கோரிக்கையை பொன்சேகா நிராகரித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரணிலின் தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் ஐ.தே.க.வினர் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செய்ய முன்வரலாம். அதனைவிட ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினரும் பொன்சேகாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த நிலையில் பொன்சேகாவின் வருகை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பலமான எதிரணி ஒன்று உருவாக இது வழிவகுப்பதாக அமையலாம்! ஆனால், தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான நலன்களையும் பெற்றுத்தருவதாக இருக்கப்போவதில்லை.

- பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.pooraayam...2-13-20-49.html

Link to comment
Share on other sites

ஐ.தே.க. வுடன் சேரமாட்டேன் என கூறியுள்ளார். சேர்ந்தால் அது. ஐ.தே. க.வை மேலும் பிளவுக்கு உள்ளாக்கலாம். வேறு எந்த கட்சியிலும் சேரும் சாத்தியம் இல்லை.

அதேவேளை புதிய கட்சி ஆரம்பிக்கும் சாத்தியங்களே அதிகம். ஆனால் இவரால் பத்து வருடங்களுக்கு போட்டியிடமுடியாது, பிரச்சாரம் மட்டுமே செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவின் விடுதலைக்குச் சாதகமாக அழுத்தங்களை வழங்கிய

அமெரிக்க அரசு தமிழ்க்கைதிகளின் விடயத்தில் அமைதி காப்பது

கண்டனத்திற்குரியது.

இவரின் விடுதலை சிங்களம் தமக்கிடையில் அடிபட்டுக்கொள்ள

வழிசமைப்பதுடன் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை இன்னும்

சிக்கலாக்கும்

Link to comment
Share on other sites

மொத்தத்தில் பல்லு பிடுங்கிய பாம்பாக சரத் இருக்க வேண்டிய நிலை.அமெரிக்காவின் சொல் கேட்பது போல் மகிந்த கூட்டம் நடித்து தமக்கு உள்ள உலக அரசியல் அழுத்தத்தை குறைக்க முயல்கிறது.அத்தோடு ஐ.தே.கவின் பலத்தை மேலும் குறைக்க சரத்தின் வெளியேற்றம் உதவும்.ஒரு காலத்தில் எஸ்.பி.திசநாயக்காவுக்கு ஏற்பட்ட நிலை சரத்துக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளோ அல்லது தமிழ்/சிங்கள அமைப்புக்களோ இவரை அணுகி போர்குற்ற சாட்சியாக சாட்சியமளிக்க ஊக்கமளிக்க வேண்டும்.இவரின் வாயால் பல உண்மைகள் வரவழைக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

- ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்டது “பொதுமன்னிப்பு” அல்ல

- ஃபொன்சேகா குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு அப்படியே உள்ளது

- வெள்ளைக் கொடி வழக்கில், உயர்நீதிமன்றத்தால் சரத் ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி முற்றாக ரத்து செய்துள்ளார்

- இராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட ஹைகார்ப் வழக்கு விவகாரத்தில் ஒரு பகுதியைத்தான் ஜனாதிபதி ரத்து செய்துள்ளார் என்றும், எனவே இரு வழக்குகளில் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்

- ஃபொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட சிவில் உரிமைகள் அப்படியே நிலுவையில் இருக்கும்

- தேர்தல்களில் போட்டியிட முடியாத ஒரு நிலை தொடரவே செய்யும்

- சரத் ஃபொன்சேகாவுக்கு இதர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமைகள் உட்பட இதர உரிமை கிடைக்கும்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/05/120522_saratsilva_fonsekarelease.shtml

Link to comment
Share on other sites

மன்னிப்பை ஏற்குமாறு பொன்சேகாவின் வீடுதேடிச் சென்று மன்றாடியது அரசு!

'சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச்சென்று மன்னிப்பை பெற்றுக்கொள்ளுமாறு மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் அன்று கோரிக்கை விடுத்தும்கூட அவரை விடுதலை செய்யாத அரசு, இன்று ஹிலாரி கிளிண்டன் சொன்னதும் விடுதலை செய்துள்ளது.'

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற இறக்குமதிகள், ஏற்றுமதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச் சென்று தயவு செய்து மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. சரத் பொன்சேகா தவறிழைத்திருந்தால் அரசு ஏன் ஓடித்திரிய வேண்டும்? எது எப்படியிருப்பினும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டதையிட்டு நாம் சந்தோஷமடைகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=aadec015-897d-484e-bc8c-56064b1a0c84

Link to comment
Share on other sites

பொன்சேகா புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளாராம்

Jayantha Ketagoda, a member of the Sri Lankan parliament told PTI today that the former Army Commander and presidential candidate will form his own political party, an application for which has already been submitted.

"We have submitted the registration application to the elections commissioner under the name Democratic Party (DP)," Ketagoda said. Adding "this was done when the General (Fonseka) was in prison".

http://news.outlookindia.com/items.aspx?artid=763501

Link to comment
Share on other sites

நான் நினைப்பது என்னவென்றால் :D

சரத் பொன்சேகா மகிந்தவுக்கு ஆதரவாக இருப்பதாக ஒப்புக்கொண்ட பின் அல்லது ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட பின் தான் அவரை விடுதலை செய்திருப்பார்கள். :unsure:

இனிமேல் வெளியில் அரசாங்கத்தை பகைப்பது போல் காட்டிக்கொண்டு உட்பக்கமாக அரசாங்கத்திற்கு ஆதரவாக தான் நடப்பார். (விரும்பி அல்லது வேறு வழியில்லாமல்)

அமெரிக்காவையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றும் முயற்சி தான் நடக்கப்போகிறது. ஏமாறாமல் இருப்பது எம் கடமை. அதே போல் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவரை ஏற்றிவிட்டு அரசாங்கத்தின் போர்குற்றங்களை அவர் வாயால் வெளியில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

என்ன தான் இருந்தாலும் சரத் பொன்சேகாவும் ஒரு சிங்கள அரசியல்வாதி. அவர்கள் மோதிக்கொண்டாலும் அவர்கள் குணங்களோ கொள்கையோ மாறாது. எம்மவர்கள் போல் மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள். :wub:

எனவே சரத் பொன்சேகா விடுதலையானாரோ இல்லையோ தமிழர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்கப்போவது இல்லை. :( :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.