Jump to content

1,2,3,...........05 செக்கன்கள் - உண்மைக்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து

டென்மார்க்  பயணம்.

 

அத்தானின் ஒரு வருட  துவசம் என்பதால்  பொருட்களையும் வாங்கி

அவசரமாக புறப்படுகின்றோம்.

 

இரவு ஓட்டம்

பலகாரச்சூடு  சமையல் என ஆட்கள் தேவை என்பதால்

யேர்மனி  சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு

பயணம் தொடங்குகிறது.....

 

நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன்.

ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்..

வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது..

 

நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன்.

திடீரென எனது பாதை  முடிவடைவதற்கான பதாதை  ஒன்று கண்ணில் தெரிகிறது.

பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர

அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை.

முன்னால் பார்க்கின்றேன்

எனது பாதை முடிவடைந்து விட்டது தெரிகிறது

பக்கத்தில் பார்க்கின்றேன்

பெரிய ரக றக்  ஒன்று நல்ல வேகத்தில் என்னை மறைத்தபடி செல்கிறது..

 

ஒரு சில செக்கன்களே உள்ளன

பிரேக் பிடித்தாலும் நிறுத்தமுடியாது

லொறிக்குள் ஓரங்கட்டப்பட்டு குடும்பத்தடன் நசுக்கப்படுவேன்

வாகனத்தின்  வேகத்தை அதிகரிப்பதைத்தவிர வேறு வழியில்லை...

 

கால்கள் உடனடியாக செயற்பட

வாகனம் வேகம் எடுக்கிறது.......

 

1,2,3,...........05 செக்கன்கள் 

வாகனம் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்துக்கு மேலெழுகிறது...

எனது பக்கம் ஒரு இஞ்சி

லொறிப்பக்கம் ஒரு இஞ்சி இடைவெளியில் வாகனம் லொறிக்கு முன்னால்  நகர்கிறது..

லொறிக்காறன் ஒலி ஒளி பாய்ச்சி தடுமாறுகின்றான் என்பது பின்னால் தெரிகிறது...

 

ஆனாலும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியது எப்படி என நம்பமறுத்து 

ஆளையாள் நலம் விசாரிக்கின்றனர்..

 

அடுத்த சில கிலோமீற்றரில் ஒரு பார்க்கில் வாகனத்தை நிறுத்திய  நான்

வெளியில் நடந்து பார்க்கின்றேன்

காலைப்பார்க்கின்றேன்

என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்

நடமாடுவது நான் தானா என...

 

(நாடுகள் மாறும் போது பதாதைகள் சம்பந்தமாக கவனமாக இருங்கள் உறவுகளே..)

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure: உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

 

 

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

Link to comment
Share on other sites

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

Link to comment
Share on other sites

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.
வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.
மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :oவாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure:உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

 

ஒன்றில் முதலில் காட்டிய  பதாதையை  நான் கவனிக்காமல் இருந்திருக்கணும்

அல்லது அந்த முதலாவது பதாதை போன பின் இந்த பாதைக்குள் (highway)  நான் வந்திருக்கவேண்டும்..

 

பிரான்சின் பதாதைகள் பழக்கப்பட்டவை......

ஆனால் நாட்டுக்கு நாடு வித்தியாசமானவை

(வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் ஒரே மாதிரியாக இருந்தபோதும் காட்டும்,  எழுதும் முறைகள் வித்தியாசமானவை)

 

இந்த வீதியில்  இந்த வேகத்தில் ஆயிரம்  கிலோமீற்றருக்கும் அதிகமாக ஓடவேண்டியிருந்ததாலும்

அப்பொழுது தான் உள்நுழைந்து  ஓடத்தொடங்கியிருந்ததாலும்  கொஞ்சம் அசட்டையீனம் இருந்திருக்கலாம்  என்று படுகிறது.

 

 

நன்றி  தம்பி  இசை

அன்புக்கும் கருத்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

 

 

பதாதையை  நான் தான் கவனிக்கவில்லை சோழியான்....

 

லொறிக்காறன் 2வது வரிசையில்

வேகத்தில் தான் வந்தான்...

அதேநேரம் நான் தப்பியதற்கு

பக்கத்தில் வந்தது  லாறி  என்பதும் ஒரு  காரணம்

இல்லாது விட்டால் வேகமெடுத்து முந்திச்செல்லமுடியாது   போயிருக்கும்.....

ஆனால் பிரேக்  பிடித்து பின்னால் நுளைந்திருக்கலாம் (பின்னால் வாகனங்கள் இல்லாதுவிடில்)

 

பிரேமனால் தான் சென்றேன்

ஆனால் அதற்கு இன்னும் 600 கிலோமீற்றர் போகணுமே..

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

 

 

உண்மையில் இப்ப நினைத்தாலும்  தப்பியதை நம்பமுடியவில்லை..

 

மற்றும்படி

அப்ப  இல்லை

இப்பவும்  பாட்சாதான்...... :D

(எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது)

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

 

 

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

இரண்டே இரண்டு  வழிகள் தான்

வேகப்படுத்தி முன்னுக்கு உள்நுழையணும்

அல்லது பிரேக்  பண்ணி அதே இடத்தில் நிறுத்தணும்..

பிரேக் செய்து நிறுத்தக்கூட இடம் போதாது என்பதால் ஒரே தெரிவு

வேகப்படுத்துதல்

தற்கொலைக்கு ஒப்பானது

வரும் லொறி பின்னால் ஒரு சிறு தட்டு தட்டினாலும் வாகனம் வட்டமடிக்க ஆரம்பிக்கும்.... :(  :(  :(

 

எனது பிள்ளைகள் 3 பேர் புது வாகனசாரதி பத்திரக்காறர்கள்

அவர்கள் வாகனத்தை செலுத்தியிருந்தால்

மூளை உடனே பிரேக்கில்தான் கால்வைக்கச்சொல்லும்

நான் செலுத்தியதால் 30 வருடத்துக்கு மேலான எனது அனுபவம் 

சில நொடிகளில் நிதானமாக முடிவேடுத்திருக்கு என்று பின்னர் நினைத்தேன்...

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

 

 

நன்றியண்ணா...

எனது அனுபவங்கள் மற்றவர்கள் ஒருவருக்கேனும் பாடமாக அமையணும் என்பதற்காகவே பதிகின்றேன்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

 

 

உண்மை கிருபன்

நீங்கள் சொல்லும் 2  காரணங்களும் உண்மை

அந்த லொறிச்சாரதி  சிறிது பிரேக் செய்தும் மற்றப்பக்கதால் சிறிது விலகியும் இருக்கலாம்

இந்த தப்புதலில் நிச்சயம் அவரது பங்கும் உண்டு என்று தான் நானும் நினைக்கின்றேன்....

 

நன்றி  நேரத்துக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.

வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.

மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

 

 

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

 

உசுப்பேத்த எழுதவில்லை ரதி

எனது அனுபவங்களை எழுதி

கவனம் என்றே எழுதினேன்...

 

காரணம் நாடுகளுக்கு போகும் போது மிக மிக அவதானமாக இருக்கணும்

பழக்கப்பட்ட பாதைகளுக்கும் பழக்கப்பட்ட பதாதைகளுக்கும் சிரமங்கள் இருக்காது

ஆனால் புதுபாதைகளும் மொழிகளும் தடுமாற வைத்துவிடும்...

 

மற்றும்படி

கார் ஒட்டத்தில் நானொரு வெறியன்

என்னிடமுள்ள ஒரேயொரு கெட்டபழக்கமும் இதுதான்....

இதையும் மற்றவர்களின் நலனுக்காகவே சொல்கின்றேன்..

 

நன்றி சகோதரி

அன்புக்கும் வருகைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.
ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நாஷனல் வீதிகளிலும் (ஒரே வீதியில் எதிரெதிராய் வாகனங்கள் வரும் வீதி). இப்படியான  சம்பவங்கள் நேர்வதுண்டு. ஆனால் அங்கு ஒரு வாகனத்தை முந்தும்போது வலு அவதானமாய் தூரத்தில் வரும் வாகனங்களைக் கவனித்து செய்யிறது.இங்கு அவர் இதை எதிர்பார்க்கவில்லை. லொறிக்காரன் ஒரே வேகத்தில் தான் 90 ல் சென்ருகொண்டிருப்பான், குறைக்கமாட்டான். நாம் 130ல் வேகமாய் அவரைத் தான்டிவிட முடியும், தான்டவில்லையெனில் தாட்டுப்போடும்...!

Link to comment
Share on other sites

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

 

 

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

 

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

 

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

 

 

ஒரு காரில என்னென்டைய்யா ரெண்டு பேர் ரேஸ் ஓடுவது ? 
 
ஒவ்வொருவரும் தங்கட காரில ரேஸ் ஓடுவமே என்டு கேக்கிறார்.
 
 
:D  :D  :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

பரிமளத்திட்டை எல்லாத்தையும் சொல்லுறதுக்கு நான் என்ன அரிச்சந்திரன் பரம்பரையே????  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

 

 

நிச்சயமாக  தம்பி  சேரன்

ஆனால் முடியல அப்பா

ஒழுங்கா  ஓடுவம் என்று முடிவெடுத்த ஓடினாலும்

எவனாவது குறுக்கவந்து கடுப்பேத்தி என்னை மாற்றிவிடுகின்றார்கள் :(

கீழே குமாரசாமியண்ணையைப்போல.... :lol:  :D

 

பிள்ளைகள் வளர்ந்தபின் ரொம்ப மாறியிருக்கின்றேன்

அவர்களும் என்னை  பின்பற்றக்கூடாது என்பதற்காக...

அதனால் தான் மணிக்கு 160 கிலோமீற்றர்....

 

நன்றி  தம்பி  அன்புக்கும் கட்டளைக்கும்...

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.

ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

 

 

நிச்சயமாக காட்டியிருப்பார்கள்

ஒன்றில் நான் இடையில் வந்திருக்கணும்

அல்லது கவனிக்காது விட்டிருக்கணும்

 

நன்றி  வாத்தியார்

அன்புக்கும் ஆலோசனைக்கும் அறிவுறுத்தல்களுக்கும்...

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

 

இப்படியிருக்கவில்லை  பஞ்ச்

 

வீதியை  முடித்தே விட்டார்கள்

ஒன்றில் வந்தபாதையில் நிறுத்தணும்

அல்லது அடத்த பாதைக்குள் நுளையணும்

2 தெரிவு தான்..

ஒரு பத்து மீற்றர்கூட  எனது கண்ணுக்குப்படவில்லை

 

நன்றி  விளக்கத்துக்கும் நேரத்துக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1- விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
2- அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
3-அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.

 

 

1-  எனது 30க்கும் மேற்பட்ட வாகன அனுபவம் தான் என்னைக்காத்ததாக நினைக்கின்றேன் அண்ணா

இதே எனது பிள்ளைகளோ

புது சாரதிகளோ

நிச்சயம்  பிரேக்கில் தான் கால்வைத்திருப்பார்கள். :(

 

2- எனது வேக ஓட்டம்  காரணமாக எப்பொழுதும் அவதானமாக இருப்பதால்தான் இதுவரை எதுவித விபத்தக்களிலும் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் வீட்டில் சொல்லியுள்ளேன் சந்திக்கும் விபத்து மிக பயங்கரமானதாக இருக்கும் என்று. .. :(

 

3- ஓடக்கூடிய  இடங்கிளிலேயே  ஓடுவது எனது பழக்கம்

மழை பனி  காலங்களிலும் வளைவுகளிலும் வீரம் காட்டுவதில்லை...

ஆனால் இந்த சூழ்நிலைகள் தவிர்ந்த இடங்களில் எப்பொழுதுமே வேகம் அதிகமாக இருக்கும்...

முன்பெல்லாம் 850 கிலோமீற்றர் லூர்து  மாதா கோயில் எனக்கு 51/2 மணித்தியால பயணம் தான்.

காலையில் போய்க்கும்பிட்டுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்..... :(

 

நன்றியண்ணா

அன்புக்கும் நேரத்துக்கும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.