Jump to content

லாஜிக்கைப் பாருங்க பாஸ் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg

நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும்.

 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ் ஏத்திக்கிறாரு. ஆனா படத்தோட முன்பகுதியில் ஸ்லீப்பிங் மோடுல உட்கார வெச்சு பற்பல கனெக்ஷன்ஸ் கொடுத்து சார்ஜ் ஏத்துறாரு விஞ்ஞானி ரஜினி. அப்புறம் எப்படி எலெக்ட்ரிக் போஸ்ட்ல இருந்து டைரக்ட்டா சார்ஜ் ஏத்துறாரு? ஆண்ட்ராய்டு போன்ல சார்ஜ் நிக்காதுனு தெரிஞ்சு பக்கத்துத் தெரு கடைக்குப் போனாலும்கூட சார்ஜரைக் கையில் எடுத்துக்கிட்டே சுத்துற நம்ம பசங்களுக்கு இது கூடவா தெரியாம இருக்கும்?

அடுத்து 'ஆரம்பம்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சி. ஸ்விஸ் பேங்க் அக்கவுன்டை அபேஸ் பண்ணக் கிளம்புகிற அஜித் - ஆர்யா டீம் பண்ற அலப்பறை இருக்கே... நைட் டிரெஸ் மாதிரி ஒரு கவுன் போட்ருக்காருங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக படு ஸேஃபான ஒட்டுமொத்த மீடியாவையும் கட்டிக்காக்கிற சர்வர் ரூமுக்குள்ளே ஏதோ செகண்ட் ஷோ சினிமாவுக்கு தியேட்டருக்குள்ள போற மாதிரி படு கேஷ§வலா ஆர்யா உள்ளே போறாரே, எப்படி? அந்தப் பக்கம் அஜித் உலக நாடே சென்சிட்டிவ் பிரைவஸியான பேங்க்னு சொல்ற அந்த பேங்க் மேனேஜராகவே ஆள் மாறாட்டம் பண்றார்.

அந்த மேனேஜரும் ஏதோ நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல ஆள் பிடிக்கிற டிராவல்ஸ் ஏஜென்ட்  கணக்கா, 'வாங்க சார், நம்ம பேங்க் ஸேஃப்டியானது, ராசியானது, நாணயமானது. அக்கவுன்ட் வெச்சுக்கலாம். பிம்பிள்ஸ் வராது, 10 வகையான பிராப்ளத்துக்கு நோ டென்ஷன்’னு பேரம் பேசிட்டு இருக்கார். அட எல்லாம் கற்பனைனாலும் அதிலேயும் ஒரு நியாயம் வேணாமா நியாயமாரே?

அடுத்ததா  'ஜில்லா’ படத்துல ஒரு சீன்ல விஜய் கார்ல வர்றார். டிரைவர் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். நல்லாக் கேட்டுக்கங்க, டிரைவர்தான் காரை ஓட்டிக்கிட்டு வர்றார். ஆனா டியூட்டி பார்க்கிற போலீஸான காஜல் அகர்வால் விஜய்யை மடக்கிப் பிடிச்சு லைசென்ஸ் எடுனு கேக்கிறாங்க. ஆத்தி. உள்ளே உட்கார்ந்திருக்கிற ஆளும் லைசென்ஸ் வெச்சுக்கணும்னு இந்தப் படத்தைப் பாத்ததுக்கப்புறம்தான்யா எனக்கே தெரியுது. யாருக்குத் தெரியும்... இதைப் பாத்துட்டு இனிமே பஸ்ல டிராவல் பண்றவங்களும் ஏன், கண்டக்டரும்கூட லைசென்ஸ் வெச்சுக்கணும்னு கவர்மென்ட்ல ஆர்டர் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லீங்க.

இப்போ சொல்லுங்க... உங்க கண்ணு வேர்க்குதா இல்லையா?

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://newscollectionboxx.blogspot.in/2014/02/blog-post_8435.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.