Jump to content

வறுமை பட்டினிச்சாவுக்குள் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்!


Recommended Posts

கடந்த 16.04.2014 அன்று வேணாவில், இரணைப்பாலை, சிவநகர், ஆனந்தபுரம், வலைஞர்மடம் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்புகளின் போதே, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமை, அதனால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு வறுமையால் தாம் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் குமுறியுள்ளனர்.
 
குறித்த சந்திப்புகளின் போது மக்கள், காணி தொடர்பிலான முரண்பாடுகள், வீட்டுத்திட்டம் இழுபறிநிலை, வீதி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், மின்சாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை, குடிநீர் தட்டுப்பாடு, உணவு உற்பத்தி, சுயதொழில் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் பற்றியும், அத்தியாவசிய தேவைகள் பற்றியும் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
 
பரம்பரை வழித்தோன்றலாக தமக்கு இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி உரித்துடைய காணிகளுக்கு இன்றுவரை உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றும், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமையால் யுத்தத்துக்குப்பின்னர் தமக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டத்தையும்  இழந்து வாழ்க்கை முழுவதும் வீடே இல்லாமல் நாதியற்றவர்களாக்கப்பட்டுள்ளதாகவும்,
 
வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் தாம் யுத்தத்துக்குப்பின்னர் பெரும் கஸ்டப்பட்டு உழைத்து சிறுகச்சிறுக சேமித்த பணத்தையும், தம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை அடகு வைத்தும், கடன் பட்டுமே வீட்டுத்திட்டத்தை கட்டி முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டதாகவும், வீட்டுத்திட்டம் தங்களை கடனாளியாக்கியுள்ளதாகவும்,
 
வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணல் கருங்கற்களை இலகுவாக பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தூர இடங்களிலிருந்தே மணல் மற்றும் கருங்கற்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுவதால் மணல் கொள்வனவு பெறுமதிக்கும் மேலதிகமாக பயண வழித்தூரத்துக்கும் பணம் கொடுத்தே மணல் கருங்கற்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளதாகவும்,
 
வீட்டுத்திட்ட மதிப்பீட்டாளர்களும் கண்காணிப்பாளர்களும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமது வீடுகளை வந்து பார்வையிட்டு விட்டு பௌதீக சூழல் பிரச்சினைகளையும், வளப்பற்றாக்குறைகளையும் கவனத்தில் கொள்ளாமல் வீட்டுத்திட்டத்தை ஏன் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்று அழுத்தம் கொடுப்பதாகவும், குறை வேலைகளை முடிக்காமல் வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ள முடியாதென நெருக்குவதாகவும்,
 
தமது பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக மின்சார சபையினர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்து விட்டதாகவும், ஆனால் மின்சாரம் தமது வீடுகளுக்கு வழங்கப்படாமல் தமது கிராமத்தை ஊடறுத்து காடுகளிலுள்ள இராணுவ முகாம்களுக்கும், பயிற்சி தளங்களுக்குமே கொண்டு செல்லப்படுவதாகவும்,
 
தமது கிராமங்களுக்கு பேரூந்து வசதிகள் செய்து தரப்படாமையால் வைத்தியசாலை, கச்சேரி போன்றவற்றுக்கு சென்று உரிய கால நேரத்துக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும், 8-10 கிலோமீற்றர்களுக்கு மேல் கால்நடையாக சென்று பிரதான வீதியில் வைத்தே போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ள முடிவதாகவும்,
 
எவ்வித ஆதாரமுமின்றி மீளக்குடியேறி தொழில் தேடி சுயமாக உழைப்பதற்கு முன்பே நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உணவுக்கு பெரும் கஸ்டப்படுவதாகவும், எங்கும் தொழில் இல்லாத நிலைமைகளால் வறுமை நிலைக்குள் அகப்பட்டுள்ளதாகவும் உலர் உணவு உள்ளிட்ட முக்கிய நிவாரண பொருள்கள் தமக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும்,
 
வேலை வாய்ப்புகள், தொழில்கள் இல்லாமையால் தம் பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை செய்ய முடியாதுள்ளதால் அவர்கள் கற்றலிலிருந்து இடை விலகும் பாதகம் ஏற்பட்டுள்ளதாகவும், உயர்கல்விக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும், வயோதிபர்கள், அங்கவீனமுற்றவர்கள், விசேட தேவைக்குட்பட்டோர் உள்ள குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும்,
 
தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியையடுத்து கிணறுகளில் நீர் வற்றியுள்ளதால் நீரைப்பெறுவதற்கு அலைந்து திரிவதாகவும், 50–60 அடிகள் ஆழத்துக்கு அப்பாலும் நீரை காண முடியாதுள்ளதாகவும், குழாய் கிணறுகள் தோண்டுவதற்கு தம்மிடம் பணவசதி இல்லையெனவும், சில இடங்களில் பிரதேசபையால் குடிப்பதற்கு மட்டும் நீர் வழங்கப்பட்டாலும் அந்த நீர் போதுமானதாக தரப்படவில்லை எனவும்,
 
பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டவர்களும், விதவைப்பெண்களும் சிறு சிறு குழுக்களாக இணைந்து சுயதொழிலில் ஈடுபடுவதற்கேற்ப தம்மால் தெரிவு செய்யப்;பட்டுள்ள தையல், தோல் பொருள்கள் உற்பத்தி, தும்பு வேலைகள், பனம் பொருள்கள் உற்பத்தி, கருவாடு பதனிடல் போன்ற தொழில்களுக்கு ஆரம்ப நிதியை தந்துதவினால் பின்னர் தமது உற்பத்தி பொருள் விற்பனை மூலம் கிடைக்கின்ற வருவாயில் சேமிப்பை செய்து சுழற்சி முறையில் தாம் தமக்குள் கடன்களை வழங்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.
 
மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசி மிக விரைவாக தீர்வை பெற்றுத்தருவதாகவும், அவசர தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், சுயதொழில் ஊக்குவிப்புகளுக்கு தம்மால் முடிந்தளவு வரையான உதவிகளை செய்வதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மக்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.3.jpg5.jpg6.jpg1.jpg
 
 

http://www.thinakkathir.com/?p=57916

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.