Jump to content

யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை


Recommended Posts

யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை

அன்பான தமிழ் உறவுகளே!

நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும்.

தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கருத்திற்கு அமைய நீங்கள் உங்களுடைய குரலை இனவழிப்பிற்கு எதிராக எழுப்ப வேண்டும்.

உங்களுடைய கையொப்பத்தை பயன்படுத்தி எதிர் வருங்காலங்களில் தமிழீழ மக்கள் மீது இனவழிப்பு நடைபெறாமல் இருக்கவும் இலங்கையில் இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் எமது உறவுகள் படும் சிரமங்களை கருதி இணையத்தளமூடாகவும் நீங்கள் உங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக நாம் ஒர் இணையத்தளத்தை (Online Petition) உருவாக்கியுள்ளோம். எமது செயற்பாடு வெற்றியளிக்க அனைத்து தமிழ் உறவுகளினதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

 

Online Petition: http://www.change.org/de/Petitionen/deine-stimme-gegen-v%C3%B6lkermord-an-den-eelamtamilen

 

மேலதிகதொடர்புகளிற்கு:

Mail: stimmegegenvoelkermord@yahoo.de

 

facebook: https://www.facebook.com/DeineStimmeGegenVoelkermord

 

296268_463610013724628_1469343100_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

கையொப்பமிட்டுள்ளேன் .

 

Link to comment
Share on other sites

இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளது. இப்பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களையும் மற்றும் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து தமிழீழத்தில் நடைபெற்ற தமிழினவழிப்வை விழிப்பாக்கவுள்ளோம். யேர்மன் குடியுரிமை உள்ளவர்கள் அவர்களது அவாவை சனநாயக முறையில் கூறுவதற்கு உரிமையுண்டு. நாம் எமது சனநாயக உரிமையை சிறந்த வழியல் பயன்படுத்த வேண்டும்.

 

"இனவழிப்பை எதிர்த்து உங்கள் குரல்" இந்த சொல்லின் கருத்திற்கு அமைவாக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இதுவரைகாலமாக ஈழத்தமிழர்களிற்கெதிரான இனவழிப்பை எதிர்வரும் காலத்தில் தடுத்து நிறுத்துவதற்காக. இனவழிப்பை தடுப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும். நாம் தயாரித்துள்ள மனுவில் நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை வைப்பதன் மூலம் யேர்மன் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கமுடியும். அரசியல்வாதிகள் தமிழினவழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க வைப்பதற்கு செயற்பட வேண்டும்.

 

எங்களுடைய இலக்கு: இலங்கையில் 60 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பு நடாத்தப்படுகின்றது. எங்களுடைய வாக்கை எதிர்பார்க்கின்ற அரசியல்வாதிகள் தமிழினவழிப்பிற்கு எதிராக ஆதரவை தந்து அதனை அங்கிகரித்து தமிழினவிப்பை உத்தியபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

 

(facebook: TYO)

 

சில நொடிகள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இனவழிப்பிற்கு எதிராக உங்கள் குரலை எழுப்புங்கள்!

 

எதற்காக?
உங்களுடைய கையொப்பத்தை பயன்படுத்தி எதிர் வருங்காலங்களில் தமிழீழ மக்கள் மீது இனவழிப்பு நடைபெறாமல் இருக்கவும் இலங்கையில் இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம். எமது செயற்பாடு வெற்றியளிக்க அனைத்து உறவுகளினதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

எமது கோரிக்கை:
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

 

(facebook: https://www.facebook.com/DeineStimmeGegenVoelkermord?ref=stream&hc_location=stream)

 

 

 

 

Link to comment
Share on other sites

கையொப்பமிட்டுள்ளேன் .

 

இது ஜேர்மனில் வாழ்பவர்களுக்கானது என நினைக்கிறேன். மேலே எடிட் பண்ணி விபரங்கள் இணைத்துள்ளேன். நாமும் வைக்கலாமோ தெரியவில்லை. :unsure:

 

 

Link to comment
Share on other sites

இது ஜேர்மனில் வாழ்பவர்களுக்கானது என நினைக்கிறேன். மேலே எடிட் பண்ணி விபரங்கள் இணைத்துள்ளேன். நாமும் வைக்கலாமோ தெரியவில்லை. :unsure:

நான் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது ..........யேர்மன் பாசையில் உள்ளது .....................எதற்கும் தமிழ்சிறி அண்ணாவைப்போல யேர்மனியில் வாழும் உறவுகளிடம்தான் கேட்கணும்  :D 

Link to comment
Share on other sites

நான் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது ..........யேர்மன் பாசையில் உள்ளது .....................எதற்கும் தமிழ்சிறி அண்ணாவைப்போல யேர்மனியில் வாழும் உறவுகளிடம்தான் கேட்கணும்  :D 

 

இது கையொப்ப வேட்டை என்பதால் அனைவரும் கையொப்பமிடுவோம். நன்றி கையொப்பமிட்டமைக்கு. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.