Jump to content

ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை!


Recommended Posts


 
ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை!
by Editor on 19th-April-2013
 

Tamil-civilians.jpgஇலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும், அரசியல் தடங்களுக்கும் உள்ள இடைவெளியையும் இது சற்று பகிரங்கப்படுத்துவதை மறுக்க முடியாது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை சிறப்பு விமானங்களில் அனுப்பிய லண்டனுக்கு அதே இலங்கைத்தீவின் விமான ஓடுபாதையில் தனது தேசிய விமான சேவை விமானங்களை இறக்குவது ஒரு கடினமான விடயமும் அல்ல. இதேசமயத்தில் இலங்கை தொடர்பாக முடிவெடுக்கும் லண்டனின் தீர்மானமெடுக்கும் சக்தியில், ஈழத்தமிழ் மக்களின் திரள்நிலை அரசியலின் தாக்கம் இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.

ஶ்ரீலங்கா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் இன்னொரு தேசிய இனத்தின் மீதான மிகக் குரூரமான நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் திட்டமிடல்கள் குறித்த மேற்குலகின் அளவுமானிகள் பொதுவாகவே உண்மை நிலையை விட சற்றுக் கீழ்நிலையில் பேணப்படுவதே வழமை! இறையாண்மையுடைய நாடு என்ற ஶ்ரீலங்காவின் ஒரேயொரு தகுதியும் இதற்குக் காரணமாகும். இதனால்தான் தமிழ் மக்கள் கோரும் ஶ்ரீலங்கா மீதான பொருளாதாரத் தடை குறித்து இன்னமும் மேற்குலகம் பரிசீலிப்பதற்காக வேளையொன்று உருவாகவில்லை.

ஐ.நா.வின் சாசனத்திலுள்ள 47 ஆம் இலக்க சரத்து, மற்றும் அதன் தொடக்கவுரை ஆகியன சில உள்ளக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதாரத் தடைகள் உதவுவதாகக் குறிப்பிடுவதும், இதனைவிட அடிப்படை மனித உரிமைகள், ஆண் பெண் சமத்துவம், நல்ல அயலவர்களாக ஒன்றிணைந்த அமைதியான வாழ்வு, பொதுநலனுக்கு முரணான ஆயுதப் பலப்பிரயோகம் சம்பந்தமான கட்டுப்பாடு, எல்லா மக்களினதும் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கான அனைத்துலக மட்ட ஊக்குவிப்பு ஆகிய விடயங்களில் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவே பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக ஐ.நா.வின் சாசனம் மேலும் விபரிக்கின்றது.

ஆயினும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான முரண்நிலைகளை வெளிப்படுத்தும் கொழும்புக்கு எதிராக மட்டும் இன்னமும் பொருளாதாரத் தடைகள் என்ற பேச்சே எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் அறிக்கையிடல்களில் மட்டுமே மேற்குலகம் கவனம் செலுத்துகிறது. ஶ்ரீலங்கா விடயத்தைப் பொறுத்தவரை இன்னமும் மேற்குலகின் அரசியல் மற்றும் இராஜதந்திர முன்னெடுப்பின் ஒரு அங்கமாக ஒரு தீவிர நிலை உருவாகவில்லையெனிலும், கொழும்பின் தொடர் ‘நட்டாமுட்டித்தனம்’ விரைவில் அவ்வாறன ஒரு நிலையை உருவாக்கும் எனவே ஊகிக்கப்படுகிறது.

1995 இல் ‘Dayton Agreement’ எனப்படும் டேரொன் ஒப்பந்தத்தை சேர்பியர்கள் வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ள பொருளாதாரத் தடைகள் பெரும் பங்கு வகித்தபோது, அப்போதைய அமெரிக்க அரச தலைவர் பில் கிளிங்டன் ‘நாம் விரும்பிய முடிவை இராஜதந்திரமும் பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தியதாக’ குறிப்பிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகையால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானங்கள் 13 வருடங்களுக்குப் பின்னர் கொழும்புக்குப் பறந்ததன் ஊடாக அதிகமான கேள்வி எழுப்பி நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதற்குமாறாக உலக ஒழுங்கின் சில நீக்குப் போக்குத் தன்மைகளை உள்வாங்க வேண்டும். அமெரிக்கா – சீனா, வடகொரியா – தென்கொரியா, வெனிசூலா – அமெரிக்கா போன்ற நேரெதிர் நாடுகள் கூட தமக்கிடையே சில வணிக உறவுகளை பேணியபடியே முரண்படுவது உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.

ஆனால் பிரிட்டிஷ் எயார்வேஸ் தனது சேவைகளை மீண்டும் இலங்கைத் தீவுக்காக ஆரம்பிக்கத் துணிந்தமைக்கு ‘வீதிப் போராட்டங்களில் மட்டும் கவனமெடுக்கும் தமிழ்த்தரப்புகள்’, முடிவெடுக்கும் அதிகாரத்திலுள்ள ‘பிரித்தானியர்களை’ முறையாக அணுகத் தவறியமை ஒரு காரணமென்பதையும் மறுக்க முடியாது.

இதேபோல ஊடகப் பரப்புகளில் வளையவந்த லண்டனின் இலங்கை தொடர்பான அறிக்கையில் கூட பொதுநலவாய மாநாட்டில் லண்டன் பிரசன்ன மறுப்புப் குறித்துத் தெளிவாக சுட்டிக்காட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்டவிரோக ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உட்பட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடந்த ஆண்டிலும் நீடித்ததாக கொழும்பு மீது லண்டன் குற்றஞ்சாட்டுகிறது.

அத்துடன் முடிவுரையாக மனிதவுரிமை மேம்பாடு, ஜனநாயகம் போன்ற விடயங்களில் பொதுநலவாக அமைப்புக்களின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை பின்பற்றுமாறும் கொழும்பை அது வலியுறுத்துகிறது. அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாயத் தலைவர்களின் கொழும்பு மாநாடு ஆரம்பமாவதற்கு இடையில் தான் கோரும் கடப்பாட்டுக்கு கொழும்பு மசியாவிட்டால் ‘பொதுநலவாய’ முடிவு ஒன்று எடுக்கப்படுமென்பதை லண்டன் கோடிடுகிறது.

ஆனால் அண்மையில் இந்தியக் குழு மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின் பின்னர் ‘எழும்’ தமிழ் மக்களுக்குரிய இடைக்கால நிர்வாக அலகு குறித்த பேச்சுக்களில் கோத்தாபய காட்டும் சீற்றம், கொழும்பு மயில் ‘இறகு’ போடுவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறையை பொருத்தமற்றதெனக் கூறும் கோத்தா, இவ்வாறான தனியான நிர்வாக அலகொன்றை உருவாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் அவதானம் செலுத்துவதாகவும் அணண்மையில் இடம்பெற்ற இந்தியக் குழுவின் பயணத்தின்போது கூட்டமைப்பு இவ்வாறான யோசனையைப் பரிந்துரைத்தாகவும் கூறுகிறார்.

ஆனால், இதிலுள்ள வேடிக்கையென்னவென்றால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாக அலகு குறித்த யோசனைகளை தாம் முன்வைக்கவில்லையென கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் அடித்துக் கூறுகிறார். அத்துடன் ‘இடைக்கால நிர்வாக அலகு’ குறித்தல்ல, வட மாகாண சபைத் தேர்தலிலேயே தமது கவனம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அவ்வாறாயின் இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையை விடுக்கும் தமிழர் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவுநிலை முரண்பாட்டுக்குரியதென கூட்டமைப்பு அடையாளப்படுத்துகின்றதா என்பதும் தெரியவரவில்லை. இதனால் மலிந்தால் :சந்தைக்கு வருமென்ற நம்பிக்கையுடன் இடைக்கால நிர்வாக சபை குறித்த விடயத்திலும் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

http://tamilworldtoday.com/archives/5612

 

 

 
தொடர்ந்து வாசிங்கோ... -------------   களவிதிகளின் படி இணைப்பு முற்றாக கொடுக்கப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் நிறுவனத்தை பிரித்தானிய அரசு இயக்குவதாய் இருந்தால் இந்தக்கேளவியைக் கேட்கலாம்..

Link to comment
Share on other sites

பிரயாணிகள் கூடுகிறார்கள் எயர் லங்க்கா தனது தேவைக்கு மேலான பயணிகளை மற்றைய மற்றவற்றுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் இனி எல்லோரும் BA யிலாவது பறவுங்கள் கட்டாயம் இலங்கை போயேயாக வேண்டுமாயின்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.