Jump to content

என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்(செத்தும் கொடுத்தான் சீதக்காதி)


Recommended Posts

அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இடர்ப்பாடு தூசு.

இவர்கள் இப்படி களப்பலி ஆனார்களேஇ கரும்புலி ஆகப் போனார்களே, இவற்றில் இருந்து தான் அல்லது இவர்களில் இருந்து தான் தேசியத் தலைவரை நான் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். ஹஅடி முடி அறியமுடியாதஇஉணரமுடியாத, விளங்கமுடியாத, அண்டப் பெரும் சக்தி’ என்று அவரை நான் விளங்கிக் கொள்கிறேன்.

இரண்டு சம்பவங்களை முதலில் நான் கூறிவிடுகிறேன். கணேசன் அய்யர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலை வாசித்தது என்பது ஒன்று. மற்றயது, சனல் 4 காணொளியில் தலைவரின் மரணம்பற்றிய மர்மம் துலங்கிவிடும் என்று மக்கள் பதை பதைத்தபடி காத்திருந்தது, அப்படிக் காட்டி விடுவார்களோ என்று அஞ்சி ஒரு தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பவில்லை. மற்றும் சிலர் அக் காணொளியைக் காண மறுத்தும் விட்டனர்.

அந்த மகா வீரனின் மரணத்தை மர்மமாக வைத்திருப்பது, அம் மாமனிதனுக்கு நாம் செய்யும் மரியாதைக் கேடு.அந்த நூலில் அய்யர் என்ன சொல்ல வருகிறார்? அந்நூல் முழுவதிலும் தேசியத்தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மூன்று வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

  1. தனிநபர் பயங்கரவாதம்
  2. அராஜகம்
  3. அரசியலின்மை

இப்படி வகைப்படுத்துவது ஒரு சுலபத்துக்கே அன்றி கொச்சைப்படுத்தும் நோக்கமல்ல. இக்குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்ற அய்யர் பலசந்தர்ப்பங்களில் இக் குற்றச்சாட்டுகளுடன் ஒத்தோடியாகவே காணப்படுகின்றார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது 55 வயதுக்கு மேற்பட்டவரும் அரசியல் முதிர்ச்சியின்பாற்பட்டவருமான அய்யர், களத்தில் நின்றுகொண்டு 20-25 வயதிற்கு இடைப்பட்ட இளம் போராளியான தேசியத்தலைவரை விமர்சித்தல் எங்கனம் தகும்? மேலும், ஆயுதப் போராட்டத்தை திட்டமிடலுடனும் தன்னம்பிக்கை உடனும் கையில் எடுத்துக்கொண்ட ஒருவரை, எவ்வித முன்னெடுப்புகளும் இன்றி, சிறு துரும்புகூட அசைக்காத ஒருவர் குற்றம் சாட்டுதல் என்னவகை நியாயம்?

தேசியத் தலைவரினது தளத்தையும், வயதையும், ஆரம்ப காலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.’அந்தப் பருவத்தில் அது அப்படித்தான் ஆகும்’ என்ற வாக்கியத்துடன் அதனை கடந்து நாம் போகலாம். தவறுகளில் இருந்து நாம் கற்கவேண்டும். அனுபவத்தை உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும். அய்யர்அத் தவறுகளில் இருந்து கற்றது என்ன? அந்த அனுபவங்களில் இருந்து எவ்வாறு அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்? அப்படியொன்றும் இல்லையெனில் இந்நூல் எழுதுவதன் அவசியம் என்ன?இ அரசியல் என்ன? பிரபா கரனைக் காட்டி இவரும் பிழைப்பு நடாத்துகிறாரா? இந்த அரசியல் சூழலை தனது ‘யாவாரத்துக்குப்’பயன் படுத்துகிறாரா? ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ கதை தான் நினை வுக்கு வருகிறது.

இரண்டு விசயங்கள் இதில் குறிப்பிட வேண்டி இருக்கின்றன. தேசியத் தலைவர் என்ற பெருமரம் தான் காய்த்தபடி இருக்கிறது. அய்யர் போன்ற சின்னஞ் சிறார்கள்அதற்குக் கல் எறிகின்றார்கள். உண்மையில் ‘செயற்கரிய செய்தவர்’ தேசியத் தலைவர். ‘பெரியன’ செய்ய தேசியத் தலைவர் களம் வருகின்ற போது, களத்தில் யாவற்றையும் கைவிட்டு வெறும் கையோடும் தோல்வி மனப்பான்மையோடும் தமிழகத்துக்கு வள்ளம் ஏற மன்னார் கரையை வந்தடைகிறார் அய்யர். காரியம் செய்தால் தானே குறையும் வரும், பிழையும் தெரியும். ஒரு காரியமும் ஆற்றாவிட்டால் யார் காணப்போகிறார்கள்? நிறைகுடம் தளும்பாது. குடத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் தளும்பாது.

இரண்டு, தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு அந்த அடுக்குகளில் மேல் அமைப்பைக் கட்டியவர்கள் மீதும் அதே குற்றச்சாட்டுக்கள் அடுக்கப் படுகின்றனவே! தலைவர் மீது குற்றம் சாட்டி உமாமகேஸ்வரன் பிரிந்து போகிறார். ஆனால் உமா மகேஸ்வரன் என்ன செய்தார்? என்பதனை கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் சொல்லும். முன்னூறுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தவர் உமாமகேஸ்வரன் என்று அந்நாவல் சொல்கிறது. உமாமகேஸ்வரனிடம் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர் உமாமகேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அந்த உமாமகேஸ்வரன் கொழும்பில் நட்ட நடு வீதியில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

ஆனால் நமது தலைவரின் சாதனை என்ன? மாபெரும் இயக்கத்தைக் கட்டி எழுப்பி, பல்லாயிரம் போராளிகளை உருவாக்கி, மகத்தான சாதனைகள் பல புரிந்து, உலகத்தமிழர் அனைவரும் தம் தலைவர் இவர் தான் என உணர வைத்தவர். இது எப்படி சாத்தியப்பட்டது? எப்படித் தேசியத் தலைவரால் இதனை நிகழ்த்த முடிந்தது?

நான் தேசியத் தலைவரை இவ்வாறு தான் புரிந்து கொள்கிறேன். அவரது உண்மை, நேர்மை, உறுதி, வீரம், ஓர்மம், வீறு இவை தாம் அவரை தலைவர் என்ற இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. இவற்றுடன் கடும் உழைப்பு, முன் முயற்சி, திட்டமிடல், தளம்பாத இலக்கு, தடுமாறாத இலட்சியம், தலைமைத்துவப் பண்பு இவைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன், தலைவர்’இறக்குமதி’ அரசியல் செய்யவில்லை. மார்க்சிய புராணம் பாடவில்லை. எவரையும் ஏத்தி ஏத்தி தொழுதவர் இல்லை. நான் சொல்ல ஒன்றே ஒன்று தான் உண்டு. மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார். தனக்கு எது இயலுமோ அதையே சொன்னார், செய்தார். தனது கொள்கையில் பிறழாது நின்றமையால் வீரனாக அவர் மண்ணில் வீழ்ந்தார். தனது குடும்பத்தையே ஒட்டு மொத்தமாகக் காவு கொடுத்தார். தாயையும் தந்தையையும் மக்களோடு மக்களாக அனுப்பி வைத்தார். உலகில் எந்த ஒரு மனிதன் இவ்வாறு செய்திருப்பான்? மகாத்மா எனப்பட்ட காந்தி செய்திருப்பாரா?

இறைவா, என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அது போதும் எனக்கு.

http://www.orupaper.com

Link to comment
Share on other sites

1. இருப்பிடம் எங்கே? - இந்தியா

ஈழத்தமிழர்கள் அகதி முகாமை விட்டே வெளியேறி சுதந்திரமாக நடமாட இந்திய காவல் துறை அனுமதிக்காத காலத்தில், கொலைகளுக்கு துணை போனேன், சேர்ந்தியங்கினேன் எனச் சொல்லிக் கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு தயார் என்று சொல்லிக் கொண்டு ஐயர் எப்படி இந்தியாவில், பல வாகன்களின் சொந்தக்காரனாக எந்த பயமும் இன்றி சுதந்திரமாக உலவ முடிகின்றது.

2. சூழ்ச்சி ?

ஐயரின் புத்தகத்தில் உள்ளவை பிழை என்று வாதிடவருபவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டியதுடன் தங்களது செயற்பாடுகளையும் கூறவேண்டியிருக்கும். விவாதத்துக்கு வரட்டும் எல்லோரையும் மாட்டுவோம் என்ற பெரிய சதியின் அங்கமாகவும் இது இருக்கலாம். ஆகையால் ஐயரின் புத்தகத்தை விமர்சிக்க சம்பந்தப்பட்டவர்கள் இப்போதைக்கு தயாரில்லை என அறியக் கிடைக்கிறது.

3. காட்டிக்கொடுத்தல் ?

சுய விமர்சனம் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஐயரின் புத்தகத்தில், ராகவன், ரவி, குலம், தனி, சற்குணம், ஞானம், கறுப்பி, சாந்தன், மதி, வாத்தி போன்ற பத்துக்கு மேற்பட்டோர் தொடர்பான தகவல்கள் உண்டு. இன்று வேறுவேறு நாடுகளில் வசிக்கும் இவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் தவறான தகவல்களுடன், உண்மைக்கு புறம்பான கற்பனைகளுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

4. இறுதியாக

சுருக்கமாகச் சொன்னால் நான்குவருடங்கள் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்த ஐயர் அப்ரூவர் ஆகி இருக்கிறார். இனியொரு இணையதளத்தை நடாத்தும் நாவலன் துணை போயிருக்கின்றார். ஹிட்லருடன் கூட இருந்தவர்கள் இன்றும் தேடித் தேடி கைது செய்யப்படுகையில், ஐயரின் தகவல்கள் யாருக்கு பயன்படபோகின்றது என்பதனை யாரும் இலகுவில் ஊகித்தறிந்து கொள்ள முடியும்.

http://www.orupaper.com/blogs/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்

அத்துடன் சிங்களத்துக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்....

Link to comment
Share on other sites

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தலைவன் நாட்டுக்கு தண்ட குடும்பத்தை கொடுத்தான்.

ஐயனட தலைவர்  மகளை அமெரிக்காவில்  லாயரா வைச்சு சொத்து வேண்டி போடுறார். 

சும்மா கண்ட கண்ட நாய் எல்லாம் காசு பார்க்க எழுத தொடங்கிட்டுதுகள். 

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

ஆயிரம் இளைய தலைவர்களை உருவாக்கி "மறைந்தார்".

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.