Jump to content

புனித வாரம்...


Recommended Posts

புனித வாரம்
 

கிறிஸ்தவ மக்கள் இந்த வாரத்தை புனித வாரமாக கொண்டாடுகின்றனர். அதிலும் சிறப்பாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களை சிறப்பான நாட்களாகக் கருதிக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் ஆண்டவராகவும், அரசராகவும், மீட்பராகவும் போற்றி வணங்கும் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முப்பெரும் நிகழ்ச்சிகளை இந்த மூன்று நாட்களும் நினைவுக்கூறுகின்றனர்.

இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர். இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார். தன் மரணத்திற்குபின் தன்னை மறந்துவிடாதவண்ணம் அந்த விருந்தாடலையே தன் நினைவாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணிக்கிறார். பசியால்வாடுவோருக்கு இறைவன் தோன்றினால் உணவாகத்தான் தோன்றவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்ன வாக்கை மெய்ப்பிப்பதைப்போல் உள்ளது. அதோடு நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையாக பிரப்பிக்கிறார். இங்கு தான்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவர் எப்படி அன்பு செய்தார் என்று பார்க்கும்போது, இந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே அதனை தெளிவுப்படுத்துகிறது.

washing the feet அந்த பந்தியிலிருந்து எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற உறவில் நிலைக்கொள்ளும் ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபது கூட்டல் முப்பது மொத்தம் தொன்னூறு நாட்களோடு மங்கிப்போகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. பணிவிடைச் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?
பெரிய வெள்ளி

இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நாள்! இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி, நல்ல வெள்ளி, புழழன குசயைனயல என்று அழைக்கப்படுகிறது. சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது. அதுவும், அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு, அவரது அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு, கலகக்காரனாக ஜோடிக்கப்பட்டு, நீதி துறையை வளையவைத்து, மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் செய்தக் கொலை. இந்த சாவு நிகழ்ந்த நாளைத்தான் ‘நல்ல வெள்ளி’ என்கின்றனர் கிறிஸ்தவர்கள். அந்த நாளில் அவருக்கு நடந்த ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டால் நல்லது என்று எதுவும் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே, நல்ல வெள்ளி என்று சொல்வது சற்றும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கும்.

way of crossநமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நமக்கு நடக்கின்றவைகளைக் கொண்டுமட்டுமே நமது நாட்களை நல்லது கெட்டது என்று பிரிப்போமென்றால் நல்லவைமீது நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தை கேள்வி குறியாக்குவோம். இயேசு கொலை செய்யப்பட்ட நாளை நல்லதாக மாற்றியது என்ன? அல்லது, அவர் தான் கொல்லப்பட்ட நாளை நல்லதாக ஆக்க என்ன செய்தார்?

முதன்முதலில் அவர்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் அவர் எதிர்பாராத ஒன்றல்ல. அவர் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்து சாவதே என்றாலும் தன் பணியிலிருந்து விலகுவதில்லை என்று நீடித்து நிலைதிருந்தது இந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்கிற்று.

வியர்வை இரத்தமாக கொட்டுமளவுக்கு அவர் கலக்கமுற்று இந்த துன்பக் கலம் தன்னைவிட்டு அகலாதா என்று மன்றாடினாலும், அவர் வெறுப்புணர்ச்சியும், கசப்பு உணர்வும் தன்னை மேற்கொள்ள விடவில்லை. அவரது சாவு சம்பவத்தில் உடல் வலி, மன வேதனை இருந்தன, ஆனால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போகவில்லை. அப்படி என்றால் அவர் சிரித்துக்கொண்டு பாடுகளை அனுபவித்தார் என்று சொல்வதன்று. பல சமயங்களில் சிரிப்பொலிக்குப்பின்னும், கொண்டாட்டகங்களுக்குபின்னும் சொல்லில்வராத சோகங்கள் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம். வேதனை எப்போதும் சோகத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதல்ல. கடின உழைப்பில் அடங்கியிருக்கும் வேதனை வெற்றிப்பெற கொடுக்கும் விலை என்றிருக்கும்போது மகிழ்ச்சித்தான் மிஞ்சும் அன்றோ! இயேசுவைப்பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல், இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும். இவ்வாறு இந்த சோகம் நிறைந்த வெள்ளியை அவர் நல்ல வெள்ளியாக மாற்றினார்.

அவருக்கு அன்று இழைக்கப்பட்ட வேதனையும், அவமானமும் அதிகாரவர்க்கத்தினரால் பலநாட்களாக வெகு நுணுக்கமாக திட்டம்தீட்டி, வேண்டுமென்றே தன்மேல் திணிக்கப்பட்டவை என்று அவர் நன்கு அறிந்திருந்தார். இருப்;பினும், அதனை நம்ப விரும்பாமல் அவர் தனது துயரத்தின் உச்சக்கட்டதில், விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே மூன்று ஆணிகளால் பிணைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தன்னை வதைத்தவர்களுக்காக, “பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்’ என்று மன்றாடி கோபமும் கசப்பும் நிறைந்த அந்த சூழலில் அன்பை பொழிந்து உலக வரலாற்றில் ஒரு அன்பு புரட்ச்சிக்கு வித்திட்டார். இதனால், அந்த அக்கிரமம் நிறைந்த வெள்ளி நல்ல வெள்ளியாயிற்று.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோரின் மொழியின்படி நமது வாழ்வையும் அதில் உள்ளவைகளையும் நிகழ்பவைகளையும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குவது நம்மைத் தவிர வேரொன்றுமில்லை என்று கற்றுக் கொள்வோமா?.
பெரிய சனி

கிறிஸ்தவ மக்கள் நேற்றய தினத்தை பெரிய வெள்ளியாக கொண்டடினர். புனித சனி என்ற இன்று அவர்கள் மரித்த இயேசுவின் உயிர்ப்புக்காக காத்திருப்பர்.

இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்தவே தன்னுயிர் துறந்து சிலுவையில் மரித்தார். happy easter ஒரு கவிஞன் தன் கற்பணையில் எழுந்த ஒரு காட்சியை இப்படி எழுதுகிறார்: இறைவனிடததில், ‘நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று கேட்டேன். அவர் இரண்டு கைகளையும் அகல விரித்து, ‘இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று காட்டி சிலுவையில் கைகளை விரித்து மரித்தார்.’ தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன்பே தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்த முற்பட்டார். அந்த விருந்தாடலையே தன் நினைவுச் சின்னமாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணித்தார். இதனையே இன்றும் கிறிஸ்த்தவர்கள் நற்கருணைப் பலியாக கொண்டாடிவருகின்றனர்.

அதோடு அவர் நில்லாமல், ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள்,’ என்று ஒரு புதிய கட்டளையைப் பிரப்பிக்கிறார். இவ்வாறு தன்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார். அவருடைய அன்பு எத்தன்மையினாதாக இருந்தது? அந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே நமக்கு அதனை தெளிவுப்படுத்துகிறது. அந்த பந்தியிலிருந்து அவர் எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார். அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு, அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை. மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம். அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார். அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சூழலில் மலரும்; ஒன்றல்ல என்றாலும், போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும். ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும், சகிப்புத்தன்மையும் அறுபதோ முப்பதோ நாட்களோடு மங்கிப்போவிடுவன என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும். அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும். ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த, தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது. அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும், பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும். என் வசதி, என் நிறைவு, என் மகிழ்ச்சி, என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும். பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும். உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல, என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படவேண்டிய ஒன்று. பணிவிடைப் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா?

 

அருட்திரு தந்தை திவாகர் க.ச.

http://anbinmadal.org/holyweek.html

 

http://www.youtube.com/watch?v=vzSkIOWd_0M

Link to comment
Share on other sites

  • 11 months later...

நாளை பெரிய வியாழன் இறுதி இராப்போசன நாள்

 

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவர்களினால் நாளை பெரிய வியாழன் எனப்படும் புனித வாரத்தின் யேசுக்கிறிஸ்துவின் இறுதி இராப்போசன நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.
நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். இவ்வுலக மனிதர்கள் நாம் செய்யும் பாவங்களுக்காக யேசு இறைவனின் சித்தத்தை ஏற்று தன்னையே பலிக்கடாவாக்கினார்.

இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.
உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். யேசுகிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராப்போசனத்தை உட்கொண்டார். வாக்களித்தபடியே தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராப்போசனம் நடைபெறலாயிற்று.
இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே பசாசு தூண்டியிருந்தது.நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார். வழிநடத்துகின்றார். இறைமகனுக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா…? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்ப்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்…….? மறுதலித்திருக்கின்றோம்…..? இவற்றை எல்லாம் நாம் விட்டுவிட வல்ல தேவன் நமக்கு மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தந்திடுவார்.

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன்.நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை நமது ஆளுமையை பணத்தை செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்கு பணி;விடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம்.
இன்றைய காலகட்டத்தில் குருத்துவத்திற்கான அழைப்பு நிலைகள் அருகி வரும் நிலையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. லௌகீக வாழ்வை மறுத்து இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய குருக்கள் கன்னியாஸ்திரிகளுக்கான அழைப்பின் தேவை உலகிலே பெருகி வருகின்ற நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு ஏற்ற பணியாளர்கள் உலகில் அழைக்கப்பட வேண்டி நிற்போம்.

அத்துடன் இந்த இறைபணியில் இதுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆயர்கள்;, அருட்தந்தையர், அருட்சகோதரிகள் தத்தம் பணியினை செவ்வனே ஈடுபடக்கூடிய உடல் உள வலிமையை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இன்றைய பெரியவியாழன் நாளில் இறைமகன் எமக்கு உணர்த்தி கடப்பாடுகளை நாம் செவ்வனே உணர்ந்தவர்களாக நமது கடமைகளை முன்னிறுத்தி நம் முன்னுள்ள தேவைகளுக்காக அவரிடம் இரந்து மன்றாடுவோம்

 

530158_632631530087600_43251194_n.jpg?oh
 

 

Link to comment
Share on other sites

கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
 
Jesus Died on a Thursday not on Friday
Posted on March 29, 2013
 
 
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேவப்பிரியா! கிறிஸ்தவத்திற்கு மிக முக்கியமான கண்டு பிடிப்பைப் பகிர்ந்து கொண்டமைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... வேறு மதத்தை சார்ந்தவன், என்றாலும்.... கிறிஸ்தவ மதத்தை நேசிப்பவன்.
வருடத்துக்கு, ஒரு சில நாட்களில் அருகில் உள்ள தேவாலயத்துக்கும் சென்று, மெழுகு திரி ஆவது கொழுத்தி விட்டு வருவேன்.
இந்த புனித, வாரத்தில்.... நான்கு நாள், தொடர்ந்து விடுமுறை கிடைப்பது இன்னும்.... மகிழ்ச்சி.
 

Link to comment
Share on other sites

 

கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
 
Jesus Died on a Thursday not on Friday
Posted on March 29, 2013
 
 
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார்.//
 
 

 

சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள்-  இயேசு மரணம் புதன் அன்று தான்

http://ad2004.com/prophecytruths/Articles/Prophecy/3days3nights.html

http://www.jesuschrist.com/jesus-christ-was-crucified-on-wednesday-not-friday/

http://www.wednesdaycrucifixion.com/

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.