Jump to content

எதிரிகளையும் மன்னியுங்கள்!


Recommended Posts

பிப்.,18 - எறிபத்தர் குருபூஜை

குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர்.

கரூரில் அருள்பாலிக்கும் பசுபதீஸ்வரரை தினமும் வணங்கி வந்தனர். சிவகாமியாண்டார், பசுபதீஸ்வரருக்கு தினமும் பூஜைக்குரிய பூக்களை பறித்துச் சென்று கொடுத்து, சிவ கைங்கர்யம் செய்து வந்தார்.

ஒருநாள், அவர் பூக்கூடை யுடன் வரும் போது, மன்னரின் பட்டத்து யானை, மதம் பிடித்து ஓடி வந்தது. மக்கள் அலறியடித்து ஓட, சிவகாமியாண்டாரும் பயத்தில் ஒதுங்கி நின்றார். அப்போது, யானை, சிவகாமியாண்டார் கையிலிருந்த பூக்கூடையை பிடுங்கி வீசியது. தன்னை ஏதும் செய்திருந்தால் கூட, சிவகாமியாண்டார் பொறுத்திருப்பார். ஆனால், சிவனுக்குரிய பூக்கூடையை பறித்து எறிந்த யானை மீது, அவருக்கு கோபம் வந்து, ஒரு கழியை எடுத்துக் கொண்டு, யானையை விரட்டிச் சென்றார். அதற்குள் யானை ஓடிவிட்டது.

அப்போது, எறிபத்தர் அங்கே வந்தார். அவரிடம் எப்போதும் ஒரு மழு (கோடரி) இருக்கும். சிவபக்தர்களுக்கு யார் இடையூறு செய்தாலும், அதை வீசியெறிந்து அவர்களைக் காயப்படுத்தி விடுவார். பூக்கூடையை யானை பறித்தெறிந்த விவரத்தை அறிந்து, யானையைத் தேடிப்பிடித்து, அதன் துதிக்கையை மழுவால் வெட்ட, யானை இறந்து விட்டது. அத்துடன், யானையை அடக்க முடியாத பாகன் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களையும் கொன்று விட்டார்.

சம்பவத்தை அறிந்த மன்னர், யானை இறந்து கிடந்த இடத்திற்கு வந்தார். அங்கே ஐந்து ஊழியர்கள் இறந்து கிடப்பதை கண்டு கோபமடைந்தவர், அச்செயலை செய்தவர் யார் என வினவ, அங்கிருந்தோர், உடலெங்கும் திருநீறு பூசிய எறிபக்தரை காட்டினர். அவரைப் பார்த்ததும், மன்னரின் கோபம் தணிந்து, 'சிவனடியாரான நீங்கள் இச் செயலைச் செய்துள்ளீர்கள் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...' என்று கேட்டார். எறிபத்தரும் நடந்ததைச் சொன்னார்.

'ஐயனே... யானையை சரிவர பராமரிக்காமல் வளர்த்த நானே குற்றவாளி; இந்த ஊழியர்களைக் கொன்றது போல், என்னையும் கொன்று விடுங்கள்...' என்று, பணிவோடு வேண்டி, தன் வாளை எறிபத்தரிடம் கொடுத்தார்.

மன்னரின் இந்தச் செயல், எறிபத்தரின் மனதை நெகிழச் செய்து விட்டது. ஆத்திரத்தில் யானையையும், ஊழியர்களையும் கொன்று விட்டோமே என, வருந்தினார். 'மன்னர் நினைத்திருந்தால், 'ஒரு விலங்கின் செயலுக்கு யார் பொறுப்பாக முடியும்?' என கேட்டு, தன்னைக் கொன்றிருக்க முடியும். ஆனால், தன் செயலுக்கு தானே பொறுப்பு என்று கூறி, அதற்காக உயிரையும் விடத்துணிந்த இவரல்லவோ நிஜமான சிவபக்தர். தன்னை ஒரு கொலைகாரனாக கருதாமல், அன்பே சிவமென்று இவர் நிரூபித்து விட்டாரே...' என, கலங்கினார்.

அப்போது, சிவபார்வதி ரிஷபத்தில் அங்கு தோன்றினர். அம்மூவரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்தவே, இவ்வாறு திருவிளையாடல் நிகழ்த்தியதாக கூறிய சிவன், இறந்தவர்களையும், யானையையும் எழச்செய்தார்; சிதறிய பூக்கூடை நிரம்பியது.

மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற நற்பண்புகளை, உலகம் அறிய காரணமாய் இருந்த எறிபத்தரின் குருபூஜை, மாசி அஸ்தம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்நன்னாளில், இந்த நற்குணங்களை வளர்த்துக்கொள்ள நாமும் உறுதியெடுப்போம்.

தி.செல்லப்பா

Dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் மகிந்தாவையும் மன்னியுங்கள் என்று சொல்லுகிறிர்களா ?

Link to comment
Share on other sites

சரத் பொன்சேகாவை மன்னித்த படியால் தானே உங்க கூத்தமைப்பு யாழ்ப்பான மக்களிட்ட வாக்கு போட சொல்லி சனமும் அள்ளி போட்டிச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.