Jump to content

சுவாமி விவேகானந்தர் துடிப்புள்ள முற்போக்கான இளைஞர்களுக்கு அருளியவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?
Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

மிகவும் அருமையான கேள்வி. அவர் ஆன்மீக வாழ்வுக்கு வருவதற்கு முன்னர் அவருக்கும் சாதாரண மனிதர்களுக்குள்ள காம உணர்வுகள் இருந்திருக்கும். அது இயற்கையானது. ஆனால் ஆன்மீக வாழ்வில் தியான பயிற்சியினால் மனதில் உள்ள பலவீனங்களை வென்று மாகாஞானியாக ஒளிர்ந்தவர் விவேகானந்தர். அவர் அமெரிக்கா வந்தபோது அவரிடமே இந்த கேள்வியை கேட்டார்கள். " சுவாமிஜி தாங்களோ ஆசைகளை வென்ற ஞானி. ஆனால் தங்களின் கம்பீரமான ஆண்மையும் உயிர்துடிப்புமுள்ள தோற்றம் தங்களைப்பார்க்கும் பெண்களின் மனதில் காம உணர்வை தோற்றுவிக்காதா" என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் " காமத்தை எரித்து பரிசுத்தமான அன்புமயமாக வாழும் என்னை பார்த்ததும் அந்த பெண்கள் அன்புமயமான குழந்தைகள் போலாகி விடுவார்கள்" அவர் கூறியவாறே நடந்தது. ஒரு நாள் சுவாமிஜி அமெரிக்காவில் ஒரு வீதியில் நடந்து போய்கொண்டிருந்த போது அவரது நண்பர்கள் அது விலை மாதுக்கள் வசிக்குமிடம் என்றும் அந்த வீதியால் செல்ல வேண்டாமென்றும் சுவாமிஜியிடம் கூறினார்கள். சுவாமிஜி அதனை பொருட்படுத்தாது   அவ்வீதியால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விலை மாதுக்கள் அவரிடம் வந்து தாம் பாவம் செய்து விட்டதாக கூறினார்கள். அதற்கு சுவாமிஜி அவர்களிடம் " உங்கள் அனைவரிலும் எனது தாயையே காண்கிறேன் என்று சொல்லி அவர்களது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவர்களின் ஆசி பெற்று சென்றார். விலைமாதுக்களில் கூட தனது தாயையே பார்த்த சுவாமி விவேகானந்தரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கிறது. அடியேனின் தனிப்பட்ட வாழ்வில் பல தடைகளை கடந்து பல வெற்றிகளை அடைவற்கு உந்து சக்தியாக ஆதரிசமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் சுவாமி விவேகானந்தர் மற்றவர் தலைவர் பிரபாகரன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விவேகானந்தர் கல்யாணம் கட்டாத பிரமச்சாரி.
 
அவர் தன வாழ்நாளில் எந்தப் பெட்டையையாவது, ஏறெடுத்துப் பார்த்ததில்லையா? அதாவது, காமத்தோடு பார்த்ததில்லையா?

 

 

பொடி பெட்டையை பார்க்கிறது.. பெட்டை பொடியப் பார்க்கிறது.. காமத்துக்கு அப்பால் தான் அதிகமே நிகழ்கிறது. இதற்கு பிரமச்சாரி என்ற நிலை தான் அவசியமென்றில்லை. காமம் என்பது வெறும் பார்த்ததும் வெகுண்டெழும் உணர்வு அல்ல. சில இயற்கையான தூண்டல்கள் எல்லாம் காமம்.. கலவியில் போய் முடிவதும் இல்லை. அந்த வகையில்.. குழந்தை முதல் வரும்... பசியைக் கூட கட்டுப்படுத்தலாம்.. உணவு கிடைக்கும் வரை. வாழ்க்கையின் ஒரு இடையில் வரும் காமத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பிரமச்சாரியம் தான் அவசியம் என்றில்லை. தனி மனித ஒழுக்கமும்.. மனக் கட்டுப்பாடும்.. மன ஒடுக்கமும்.. மனதை மூளையால் ஆளத்தெரிந்திருந்தால் போதும்.

 

பெண் என்பவள்.. காமத்துக்கு அப்பால் பார்க்கப்படும் போது இன்னும் அழகாகவும்.. நித்திய அன்போடும் தெரிவாள். ஆனால் பல பெண்களுக்கு ஆண்களை அப்படிப் பார்க்கும் பக்குவமின்மை தான் இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமே..! அதேபோல்.. காம உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் உலகில் அதனைக் கட்டுப்படுத்த வழிகாட்டல் இல்லை. அந்த வகையில்.. விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகள் பாடமாகக் கற்றுக்கொடுத்தவை இளைஞர்களுக்கு மட்டுமன்றி யுவதிகளுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

 

விவேகானந்தவரை விட எம் போராளிகள்.. கற்றுத்தந்தவை கூட சிறப்பான மன ஒடுக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நல்ல சான்றாகும். எத்தனையோ போராளிகள்.. குடும்ப வாழ்வு என்ற ஒன்றின் சிந்தனை இன்றியே.. தேசத்தை நேசித்ததற்காக தம் வாழ்க்கை என்ற ஒற்றை நினைப்புத் தவிர்த்து.. தம்மையே வெடியாக்கி சிதறிப் போனார்கள். அவர்கள் விவேகானந்தரை விட சிறந்த ஆன்மீகவாதிகள் என்றால் மிகையல்ல. அதுமட்டுமல்ல.. சாகிறேன் என்று தெரிந்தும்.. உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் போன்றவர்களும்.... காவி உடை.. பிரம்மச்சாரியப் பட்டம் தரியாக்காத ஆன்மீகவாதிகளே. ஆழ நோக்கினால்.. இங்கு வேறுபாடுகளின்றி.. அந்த மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை எமக்கு நல்ல பாடமாக இருக்கும். :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.