Jump to content

'எனக்கு அப்போ பதினாலு வயசு தெரியுமா?’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எனக்கு அப்போ பதினாலு வயசு தெரியுமா?’

வா.மணிகண்டன்

பெங்களூர் வந்த பிறகு சில சினிமா நடிகைகளிடம் பேச்சுவார்த்தை உண்டு. வெறும் பேச்சுவார்த்தைதான். வேறு எதுவும் இல்லை. அதுவும் நடிகைகள் என்றால் இப்பொழுது மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு சமயத்தில் பிரபலமாக இருந்தவர்கள். நான்கைந்து பேர்களுடனாவது தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் சில இணைய இதழ்களுக்காக நேர்காணல் செய்து கொடுக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. திரையில் பார்ப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதில் ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும்? இரட்டைச் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டேன். அந்த இதழ்களுக்கு சினிமா பி.ஆர்.ஓக்களோடு தொடர்பு இருக்கும் என்பதால் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார்கள். நமக்கு தோதான நாளாக பார்த்து கேள்விகளோடு சென்றால் போதும். அதுவும் கூட சில சமயங்களில் கேள்விகளையும் அவர்களே அனுப்பிவிடுவார்கள்.

ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிந்தது. நடிகைகள் என்பதால் ஆயிரத்தெட்டு கற்பனைகளோடும் ஏகப்பட்ட மேக்கப்களோடும்- என்ன பெரிய மேக்கப்? பின்னால் இருக்கும் முடியை இழுத்துக் கொண்டு வந்து முன்னால் இருக்கும் சொட்டையை மறைக்க படாதபாடுபடுவதுதான். அது துளி காற்றடித்தாலும் நமக்கு போக்கு காட்டிவிட்டு பின்னாலேயே சென்றுவிடும். வெகு சிரமம். பெங்களூரில் பிரபலமான ட்ரைக்காலஜி செண்டர்கள் உண்டு. முடியை வேரோடு பிடுங்கியெடுத்து மும்பைக்கு நகருக்கு பரிசோதனைக்காக அனுப்புவார்கள். ரிசல்ட் வந்த அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள். காசு மட்டும் கொடுத்தால் போதும். முடிக்கு வழி செய்துவிடுவார்கள். பதினெட்டாயிரத்தில் தொடங்கில் பல லட்சம் ரூபாய் வரைக்கும் வகை வகையாக முடி நட்டுகிறார்கள். விசாரித்துப் பார்த்தேன். இவ்வளவு காசு கொடுக்க எனக்கு மனம் வராது. தொலையட்டும், தினமும் குழம்புக்குள்ளும் ரசத்துக்குள்ளும் கிடக்கும் கறிவேப்பிலையை பொறுக்கி மென்று கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். வந்தால் முடி. போனால் __________.

ஆனால் மார்கெட்டில் இல்லாத நடிகர் நடிகைகளை பார்ப்பதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதற்கு வெகுகாலம் ஆகவில்லை. எதிர்பார்ப்பதைவிடவும் விடவும் மிகச் சாதாரணமாக இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பிலிருந்து கனவு கொண்டிருந்த ஒரு நடிகையின் வீட்டுக்கு ஃபோன் செய்தால் அவரே நேரடியாக எடுக்கிறார். வேலைக்கார பெண் எடுப்பார் என்று நினைத்திருந்தேன். வீட்டுக்குச் சென்றால் ஒரே ஒரு பெண் காலையில் வந்து பாத்திரம் கழுவிவிட்டுச் செல்வதோடு சரி. துணியை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் காயப்போடுவது வரை ஒவ்வொரு வேலையையும் அந்த நடிகையேதான் செய்து கொண்டிருக்கிறார். அமரச் சொல்லிவிட்டு வழியும் வியர்வையை துடைத்தபடியே வந்து ‘வீட்டை எப்படி கண்டுபிடிச்சீங்க?’ என்றார். பார்க்க வராமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எப்பொழுதும் கனவு தேவதையாகவே இருந்திருப்பார்.

நடிகர் திலீப்பை ஒரு முறை பார்க்கச் சென்றிருந்தேன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ திலீப். ஒரு விழாவுக்காக பெங்களூர் வந்திருந்தார். நேர்காணல் வேண்டும் என்ற போது சிரித்துக் கொண்டே ‘சும்மா பேசுவோம். என் பேட்டியெல்லாம் யார் சார் படிக்கப் போறாங்க?’என்றார்.

‘இல்லை சார்....ரஜினி கமல் கூட எல்லாம் நடிச்சிருக்கீங்க இல்ல’ என்று உளறிவிட்டேன்.

அவருக்கு சுருக்கென்று பட்டிருக்க வேண்டும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. ‘அதான் நானும் சொன்னேன். மார்க்கெட்டிலேயே இருக்கணும். இல்லைன்னா மார்க்கெட்டில் இருக்கிறவங்களைப் பத்தி பேசணும்..அதுவும் இல்லைன்னா நடிகைகள் பத்தி பேசணும்....திலீப்புக்குன்னு சொல்லுறதுக்கு சுவாரஸியமா என்ன இருக்கு சொல்லுங்க?’ என்றார். வாழ்க்கையில் ஓய்ந்துவிடுபவர்களுக்கு வரக் கூடிய விரக்தி அது. அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. வெறுமனே அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் உற்சாகமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த முறை வரும் போது இன்னமும் நிறைய பேசுவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் மறுமுறை சந்திக்கவே முடியவில்லை.

இன்னொரு நடிகை- அவர் எனது கல்லூரி பருவத்தில் ஒரே படத்தின் மூலம் மிகப் பிரபலம் ஆகியிருந்தார். இப்பொழுது பெங்களூரில்தான் வசிக்கிறார். சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. பேட்டி என்பதற்கெல்லாம் ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் அவரது மின்னஞ்சல் ஐடி கிடைத்திருந்தது. அந்த இணையதளத்தினர் ‘சாட்’ செய்து பாருங்கள் என்றார்கள். சில நாட்கள் கழித்து வேறொரு மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி வெளிநாட்டில் வசிப்பதாக மின்னஞ்சல் அனுப்பினேன். ஃபேக் மின்னஞ்சல்தான். அதற்கு பதில் அனுப்பினார். பிறகு ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்கு பிறகு ‘சாட்டிங்’ செய்யத் துவங்கினோம். அவரது நிறம், மேக்கப், புன்னகை என அத்தனையும் உதிர்ந்து வெறும் ரத்தமும் சதையுமான மனுஷியாகத் தெரிந்தார். அவர் பேசியது வெறும் அழுவாச்சி காவியம். தனது அப்பா சரியில்லை. வளர்ப்பு சரியில்லை. சினிமாவுக்குள் வந்தால் முதல் வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சரியில்லை. உடன் நடித்த நடிகர் சரியில்லை. எதிர்பட்ட எந்த ஆண்மகனும் சரியில்லை.

‘எனக்கு அப்போ வெறும் பதினாலு வயசு தெரியுமா?’ என்று உடைந்து போனார். அந்தத் தகவல்களையெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய எந்த அவசியமும் அவருக்கு இல்லை. ஆனால் அவருக்கு வேறு வடிகாலே இல்லை. அப்படித்தான் சொன்னார். பெங்களூரில் சொல்லிக் கொள்ளும்படியாக நண்பர்கள் இல்லை. சினிமாவிலும் தொடர்புகள் இல்லை. எத்தனை நேரம்தான் அம்மாவிடமே பேசிக் கொண்டிருப்பது? நிறையச் சொன்னார். அவருக்கு தன்னைப் பற்றிய தகவல்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பத்திரிக்கை, பேட்டி என்று வெளியே முகம் காடினால் ஏற்கனவே இருட்டடிக்கப்பட்டிருக்கும் தனது வாழ்க்கை இன்னமும் சீரழிந்துவிடும் என பயம்தான்.

முதல் படத்தில் நடித்த போதே ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு எந்தப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் தடுத்திருக்கிறார்கள். மீறி நடித்த சில படங்களும் மரண அடி. பதினான்கு வயதில் சினிமாவுக்கு வந்ததால் படிப்பு பாழானது. இந்த பொறுக்கிகளிடம் சிக்கி சினிமா வாய்ப்பும் தொலைந்து போனது. என்ன செய்வார்? பெங்களூரில் தனது அம்மாவோடு குறுகிக் கிடக்கிறார். சில நாட்கள் பழகிய பிறகு ‘உங்களோடு பேச வேண்டும்’ என்றார். அவரை அதற்கு மேலும் ஏமாற்ற விரும்பவில்லை. நமது உறவுக்காரப் பெண்ணொருத்தி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கும் போது அவளோடு எந்த நடிகனும் இயக்குநரும் குழாவினார்கள் என்று அறிந்து கொள்வதற்கு எப்படி மனம் வரும்? சரியா தவறா என்று தெரியவில்லை- அதன் பிறகு இன்றுவரை அந்த மின்னஞ்சல் அக்கவுண்ட்டை திறக்கவேயில்லை. திறக்கவும் போவதில்லை.

ஒதுக்கப்பட்டுவிட்ட பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு ஆறவே ஆறாத ஒரு காயம் இருந்து கொண்டேயிருக்கிறது. எந்தக் காலத்திலும் ஆறாத காயம் அது. வெற்றிகரமான நடிகர் நடிகைகளாக இருந்து பிறகு தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டவர்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் துளி வெளிச்சம் படத் துவங்கி பிறகு துளிர்க்கவே வழியில்லாமல் முடங்கிக் கிடப்பவர்களையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்டவர்களையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களால் அந்த வண்ண உலகை விட்டு வெளிவரவும் முடிவதில்லை. நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை சமாளிக்கவும் முடிவதில்லை. திரும்பத் திரும்ப அதையே நினைத்து தங்களைத் தாங்களே அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கலாம்- ஆனால் வெளியிலிருந்து பார்த்தால் சொர்க்கமாகத் தெரிகிற கனவு உலகில் கொடிகட்டிய ஆனானப்பட்ட ராபின் வில்லியம்ஸே மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று படிக்கும் போது மோனலும், குணாலும், சில்க் ஸ்மிதாவும் ஒரு வினாடி நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

http://www.nisaptham.com/2014/08/blog-post_14.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.