Jump to content

குருவியார் பதில்கள்


Recommended Posts

 
குருவியார் பதில்கள்

குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (உமைய கணேஷ், மாயாகுளம்)

சிவப்பு தோலுடன், 6 அடி உயரத்தில், இந்தி பேச தெரிந்தவராக இருக்க வேண்டுமாம்!

***

விஜய் நடிக்கும் ‘கத்தி’ எப்படி இருக்கும்? (எச்.பகதூர், சென்னை)

‘பஞ்ச்’ வசனங்களுடன் ரொம்ப கூர்மையாக இருக்கும்!

***

குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம் எது, அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார்? (எஸ்.சந்திரசேகரன், முதியம் பாளையம்)

ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம், ‘ஜென்டில் மேன்.’ எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் அவர் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்!

***

‘ராமானுஜன்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்த சுஹாசினி, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிப்பாரா? (ஆர்.பிரபு, கரூர்)

‘ராமானுஜன்’ போன்ற சிறந்த கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால், ‘அம்மா’ வேடத்தில் நடிப்பது பற்றி யோசிப்பாராம்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் ஒரே ‘ஷாட்’டில் நடித்த பாடல் காட்சி எது? அந்த பாடல் காட்சி எந்த படத்தில் இடம்பெற்றது? (பி.சத்யராஜ், நாகர்கோவில்)

‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...எப்படி மனதை தட்டிப் பறிக்குது...’’ என்ற பாடல், ஒரே ‘ஷாட்’டில் படமாக்கப்பட்டது!

***

இப்போது உள்ள தமிழ் பட கதாநாயகிகளில் அதிக நிபந்தனைகள் விதிக்கும் நடிகைகள் யார்–யார்? (சி.அன்பழகன், போளூர்)

அனன்யாவும், ஸ்ரீதிவ்யாவும்...!

***

குருவியாரே, சிவகுமாரும், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தியும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (ஆ.கோ.தேவராசன், சிந்தலப்பட்டடை)

அப்படி ஒரு ஆசை அப்பாவுக்கும் இல்லையாம். மகன்களுக்கும் இல்லையாம்!

***

குருவியாரே, விக்ரம் பிரபு ஒரு படத்தை இயக்கி நடிப்பாரா? (என்.கருப்புசாமி, திருப்பூர்–4)

அதற்கெல்லாம் இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இப்போதைக்கு அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்!

***

தமிழ் திரையுலகின் ‘லேட்டஸ்ட்’ கனவுக்கன்னி நந்திதா எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் எதுவரை படித்து இருக்கிறார்? (சா.செல்வ ஜான்சன், கன்னங்குளம்)

நந்திதா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர், ‘எம்.பி.ஏ.’ வரை படித்து இருக்கிறார்!

***

குருவியாரே, லட்சுமி மேனனுக்கு சின்ன வயதிலேயே நடிப்பு மீது எப்படி இத்தனை ஆர்வம் வந்தது? (எம்.தேசிங்குராஜா, கூடலூர்)

அதற்கு பள்ளிக்கூட நாடகங்களே காரணம். லட்சுமி மேனன் சிறுமியாக இருக்கும்போதே பள்ளிக்கூட நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாராம். அதுவே அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து இருக்கிறது!

***

நகைச்சுவை நடிகர் மனோபாலாவுக்கு எத்தனை குழந்தைகள், அவர்கள் என்ன படிக்கிறார்கள்? (மு.வசந்த்குமார், பெங்களூர்)

மனோபாலாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர், அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, அனுஷ்காவுக்கு எத்தனை வயது ஆகிறது, அவர் பிறந்தநாளை கொண்டாடுவது உண்டா? (வி.ஜீவா, கோவை)

அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறதாம். தனது 33–வது பிறந்தநாளையும், திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும் ஐதராபாத்தில் சமீபத்தில் அவர் கொண்டாடினார். ‘மகாபலி’ படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தனர்!

***

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் எந்த நிலையில் உள்ளது? (கா.நரேஷ், கோபிச்செட்டிப்பாளையம்)

காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது!

***

குருவியாரே, நயன்தாரா சென்னை வரும்போது எங்கே தங்குகிறார்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

நயன்தாரா சென்னை வரும்போதெல்லாம் ஓட்டலில்தான் தங்குகிறார். நிரந்தரமாக அவர் ஒரே ஓட்டலில் தங்குவதில்லை. அடிக்கடி ஓட்டல்களை மாற்றிக் கொள்கிறார். சமீபகாலமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்!

***

சமந்தாவுக்கு சரியான போட்டி யார்? (இரா.பாஸ்கர பால்பாண்டியன், காரைக்கால்)

காஜல் அகர்வால்! பெரிய கதாநாயகர்களை வளைப்பதில் இரண்டு பேருக்கும் இடையே சரியான போட்டி இருந்து வருகிறது!

***

குருவியாரே, நடிகை அஞ்சலி அடியாட்களுடன் படப்பிடிப்புக்கு வருகிறாரே...அவருடைய பாதுகாப்பு செலவை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்? (எம்.ஏ.அந்தோணிசாமி, துத்துக்குடி)

பாதுகாப்பு செலவை அஞ்சலியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். அனாவசியமாக பட தயாரிப்பாளருக்கு அவர் தொந்தரவு கொடுப்பதில்லை!

***

மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத–டாப்சியிடம் மட்டுமே இருக்கிற அம்சம் எது? (ஜி.கோவிந்தராஜ், மதுரவாயல்)

ஒருவிதமான போதையூட்டுகிற சிரிப்பு!

***

‘‘பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா...மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா...’’ என்ற பாடல் இடம்பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (எஸ்.எம்.சுல்தான், மதுரை)

பாடல் இடம்பெற்ற படம், ‘குங்குமம்.’ பாடல் காட்சியில் நடித்தவர், விஜயகுமாரி!

***

குருவியாரே, பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்த தேவயானி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (எம்.செந்தில்குமார், சேலம்–7)

அடுத்த தொடருக்கான கதையை கேட்டு வருகிறார். விரைவில் அவர் நடிக்கும் புதிய தொடர் பற்றிய அறிவிப்பு வெளிவரும்!

***

சிவகார்த்திகேயன் மீண்டும் ‘சின்னத்திரை’க்கு வருவாரா? (த.இந்திரஜித், மேலவளவு)

கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர், மறுபடியும் சின்னத்திரைக்கு வரவேண்டிய அவசியம் ஏற்படாது!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குருவி என்றபெயருல கனபேர் திரியிறாங்கள் போல

 

எங்கட குருவியோ??? :):rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.