Jump to content

பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி


Recommended Posts

பாடகி ஜென்சியுடனான  வானொலிப் பேட்டி

 
j3.pngஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு. 

jensy2.png"என் வானிலே ஒரே வெண்ணிலா" செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ 

"ஆராணு" பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில் 

கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன். 

"இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா" என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று "சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்" என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி. 

j5.png

பேட்டியைக் கேட்க 

 

Download பண்ண இங்கே அழுத்தவும் 

வணக்கம் ஜென்சிம்மா 

வணக்கம் வணக்கம் 

ஆஸ்திரேலிய நேயர்கள் சார்பிலே ஒரு ரசிகனாகவும் கூட உங்களை வானலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். 

உங்களை நீங்கள் எப்படி ஒரு பின்னணிப்பாடகியாக வளர்த்தெடுத்துக் கொண்டீர்கள், உங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது? 

எனக்கு ஐந்து ஆறு வயசிருக்கும் போதே சர்ச்சில் எல்லாம் பாடயிருக்கிறேன், அப்புறம் 10 , 11 வயதிலேயே வெளியே அறிமுகமாகி மேடைக்கச்சேரிக்கெல்லாம் போவதுண்டு, அதில் சுசீலாம்மா, ஜானகி அம்மாவோட தமிழ் மலையாளப்ப்பாடல்கள் எல்லாம் படிப்பேன். அப்புறம் அப்பாவின் நண்பர் மலையாள சினிமா இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜீனன் மாஸ்டரின் வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கம். அவர் என்னுடைய நிறையப்பாடல்கள் கேட்டிருக்கின்றார். அவர் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பை மலையாளத்தில் கொடுத்தார். 

அதாவது உங்களின் எத்தனை வயதில் ஒரு திரையிசைப்பாடகியாக அறிமுகமானீர்கள்? 

அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசிருக்கும். 

உங்களின் முதல் அறிமுகப்படம் ஞாபகம் இருக்கிறதா? 

ஆமாம், அந்தப் படம் அவள் கண்ட லோகம் 

பின்னர் தமிழ்த்திரையுலகிலே ஒரு பெரும் பின்னணிப்பாடகியாக நீங்கள் மாறக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள், அவருடைய அறிமுகம் எப்படிக் கிட்டியது? 

raja-jency.jpgஅந்த நேரம் 10 பாட்டுக்களுக்கு மேல் பாடி இருந்த வேளை , ஜேசுதாஸ் அண்ணாவோடு நிறையக் கச்சேரிகள் உள்ளூரிலும் , வெளியூருக்கும் போவதுண்டு. அந்த அறிமுகத்தில் தாஸண்ணா இளையராஜா சாரிடம் இந்தப் பெண்ணின் குரல் பிடிச்சிருந்தா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டார். அப்போது ராஜா சார் தாஸண்ணாவின் செக்கரட்டரிக்கு அழைத்து என்னை ஸ்டூடியோ வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அடுத்த நாளே நானும் அப்பாவுமாக சென்னைக்குப் போய் ராஜா சார் முன்னிலையில் வாய்ஸ் டெஸ்ட் பண்ணி அன்றைக்கு மத்தியானமே எனக்கு பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார். 

வாய்ஸ்ட் டெஸ்ட்டுக்கு ராஜா சாருக்கு எந்தப் பாடலையெல்லாம் பாடிக்காட்டினீர்கள்? 

ஒரு மலையாள கிளாசிக்கல் பாட்டு, அப்புறம் ஹிந்திப்பாட்டு "சத்யம் சிவம் சுந்தரம்" (பாடிக்காட்டுகிறார்) அப்புறம் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ராஜா சார் பாட்டு அப்போது தான் அந்தப் பாட்டு வந்திருந்த நேரம் கூட. அன்று மத்யானம் ஜானகி அம்மா கூட எனக்கு முதல் பாட்டு பாடக் கிடைச்சுது 

எந்தப் பாடலை நீங்கள் தமிழுக்காக முதலில் பாடினீர்கள்? 

திரிபுரசுந்தரி படத்தில் ஜானகி அம்மாவோடு கூடப்பாடும் "வானத்துப் பூங்கிளி" என்ற பாட்டு 

திரிபுர சுந்தரி படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஒரு எண்பதுகளிலே நிறையப்பாடல்களைப் பாடி நிறை ஹிட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா? 

நிறைய இல்ல ஒரு நாற்பது ஐம்பது பாட்டுக்கள் பாடினேன் 

அந்தக் காலகட்டத்தில் உங்களைப் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்த பாடல் என்றால் எதைச் சொல்வீர்கள்? 

எனக்குத் தோணுறது "என் வானிலே ஒரே வெண்ணிலா (பாடிக்காட்டுகிறார்) என்று நினைக்கிறேன், அப்புறம் தெய்வீக ராகம் திகட்டாத பாடல் (இரண்டு அடிகளைப் பாடுகிறார்) அப்புறமா காதல் ஓவியம், மயிலே மயிலே (பாடுகின்றார்), இரு பறவைகள் மலைமுழுவதும் அங்கே இங்கே பறந்தன, ஆயிரம் மலர்களே மலருங்கள், இதயம் போகுதே எனையே பிரிந்தே.... 

நீங்கள் மெல்லிசைப்பாடகியாக ஆரம்பத்தில் உங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பின்னணிப்பாடகியாக வருவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொண்டீர்கள்? 

அந்த நாளில் சாரின் இசையில் பாடுவது ரொம்ப பெருமையா இருந்தது ராஜா சாரைப்பார்ப்பதே பெருமையான விஷயம். அந்த நாளின் என்னோட ஊரில் இருந்து யாருமே பாடகியாக வந்ததே இல்லை. சுஜாதாவும் கூட. இருவரும் ஒரே ஊர்தான். 

அந்தக் காலகட்டத்தில் ராஜா சார் இசையில் தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்களா? 

ஆமாம், தெலுங்கில் பாடியிருக்கிறேன். மகேந்திரன் சாரின் முள்ளும் மலரும் படத்தோட தெலுங்குப் பதிப்பில் அடி பெண்ணே பாட்டை பாடியிருக்கிறேன். 

சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் கூட நீங்கள் பாடியிருக்கிறீர்கள் 

ஆமாம், பனிமலர் படத்தில் (பாடுகிறார்) பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம். 

அப்புறம் சந்திரபோஸ் சாரின் முயலுக்கு மூணு கால் படத்திலும், மலையாளத்தில் ஷியாம் சார், ஜோன்சன் மாஸ்டர் என்று பாடியிருக்கிறேன். 

உங்களுக்கு ரசிகர்களின் அமோக அங்கீகாரம் கிடைத்த அதே சமயம் விருதுகள் என்ற மட்டில் ஏதாவது கிட்டியதா? 

விருதுகள் ஒண்ணுமே கிடைக்கல, என்னோட பாட்டுக்கள் பிடித்தமான ரசிகர்கள் எனக்கு போன் பண்ணுவார்கள் அதுதான் எனக்குக் கிடைச்ச விருதுகள். இன்னும் இன்றைக்கும் மக்களோட இதயத்துல என்னோட இரண்டு மூன்று பாட்டுக்களாவது இருக்கும். அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கு ராஜா சாருக்கு என் லைஃப் பூராகவும் கடமைப்பட்டிருப்பேன். 

ராஜா சார் இசையில் பாடிய அந்த நாட்களில் மறக்க முடியாத அனுபவம் என்று ஏதாவது இந்த வேளை ஞாபகப்படுத்த முடியுமா? 

ராஜா சார் கிட்டப் பாடினதே எனக்குப் பெரிய அனுபவம். ஒரு பாட்டையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார். நீயே கேட்டுப்பாரு நீயே கரெக்டு பண்ணு அப்படிச் சொல்லுவார். எனக்கு பயம் அப்பவுமே இப்பவுமே (சிரிக்கிறார்) 

தமிழிலே ஒருகாலகட்டத்தில் பெரும் பின்னணிப்பாடகியாக இருந்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அன்னியப்பட்ட பாடகியாக மாறிய அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது? 

எனக்கு அந்த நேரம் மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது அதனால அந்தத் தொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா என்று நிறையப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எப்போது போகும்னு ஒண்ணுமே தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க. 

உங்களை மீண்டும் பாட வைத்த சந்தர்ப்பம்? 

நான் எங்கிருக்கேன் என்று தெரியாத நிலையில் பல வருஷங்களுக்குப் பிறகு ஆனந்த விகடனில் என் பேட்டி வந்திருந்ததைப் பார்த்து மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் நிறைய இடத்தில் தொடர்பு கொண்டு என் போன் நம்பரை கண்டுபிடிச்சுத் தன் படத்தில் பாடவச்சார். இசை ஶ்ரீகாந்த் தேவா. ஆனா அந்தப் படம் இன்னும் வரவில்லை அதனால் வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புக்கள் கிட்டல. 23 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் பாட்டுப் பாடியிருக்கிறேன். 

நீங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலகட்டத்தில் யாரும் உங்களைப் பாட வைக்க முயற்சிக்கலையா? 

அந்த நேரத்தில் என்னோட தொடர்பு கிடைக்காத காரணத்தால் நான் எங்கே இருக்கேன்னு கூடப் பலருக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்றிரண்டு மலையாளப்பாட்டு பாடியிருக்கேன். 

ராஜா சார் இசையில் மீண்டும் உங்களுக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிட்டியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் ஒரு செய்தி அறிந்தேன்? 

ஆமாமா, அந்தப் பாட்டு பாடும் நாள் காலை என்னுடைய மகன் விழுந்து தலை அடிபட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டி இருந்தது. நானும் பயந்து போயிருந்தேன். பாட்டுக்காக ராஜா சார் அழைச்ச நேரம் காலை எட்டு மணி. இதெல்லாம் முடிஞ்சு ஆனால் நான் அங்கே போனபோது பத்து மணி. அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடிட்டார். பரவாயில்லை அது கடவுள் எனக்குக் கொடுத்த பாட்டு இல்லை. 

ஜேசுதாஸ் சாரின் அறிமுகத்தில் தமிழில் பாடும் வாய்ப்புக் கிடைத்து, தமிழில் அவரோடு சேர்ந்து பாடிய பாடல்? 

ப்ரியா படத்தில் "என்னுயிர் நீதானே" அப்புறமா டிக் டிக் டிக் இல் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே" 

அத்தோடு இன்னொரு அருமையான பாடகர் ஜெயச்சந்திரனோடு கூட "கீதா சங்கீதா"? 

ஆமாமா, ரொம்ப நல்ல பாட்டு , வாலி சார் எழுதினது கீதா சங்கீதா சங்கீதமே செளபாக்யமே (பாடிக் காட்டுகிறார்) 

அந்தக் காலத்தில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எல்லாமே பாட்டு பதிவாகும் போது இருப்பாங்க, ஏதாவது தப்பா பாடினாக் கூட உடனேயே திருத்தம் சொல்லிடுவாங்க. ஏன்னா தப்பா பாடினா அது என்னைக்குமே ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா? 

அந்தக் காலகட்டத்தில் கிடைத்த மறக்க முடியாத பெரும் பாராட்டு? 

"இதயம் போகுதே" பாட்டு ரெக்கார்ட் ஆகும் நாள் சுசீலாம்மா ஸ்டூடியோ வந்திருந்தாங்க. அப்போ ராஜா சார் என்னை அழைச்சு "சுசீலாம்மா முன்னாடி அந்தப் பாட்டைப் பாடு" என்று கேட்டார். நான் நினைக்கிறேன் ராஜா சாருக்கு பெருமையா இருந்திருக்கும் அந்தப் பாட்டை என்னை வச்சு பாடவைச்சதால். சுசீலாம்மா "ரொம்ப நல்லா பாடியிருக்கீம்மா" என்று என்று பாராட்டியிருக்கின்றார். 

நீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு? 

எனக்கு காதல் ஓவியம் பாட்டு ரொம்ப பிடிக்கும் 

இப்படியான பாடல்களைப் பாடிவிட்டு அந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கு என்ற ஆவலும் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறதா? 

அந்த நேரத்தில் நான் பாடல் பாடிவிட்டு கேரளாவுக்கு போய் விடுவேன். அந்த நேரத்தில் எங்களூரில் தமிழ்ப் படங்கள் வரும் வாய்ப்போ அல்லது இப்போது மாதிரி டிவி வாய்ப்புக்களோ கிடையாது அதனால அந்த சந்தப்பம் வாய்க்கல. 

இப்போது தான் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கு, அப்படிப் பார்த்து ரசித்த பாட்டு, என் வானொலே, காதல் ஓவியம், தெய்வீக ராகம் அப்புறம் ஷோபா நடிச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை" அந்தப் பாடலின் ஒரு சில வரிகளைப் பாடக் கேட்கிறேன் பாடுகிறார். 

இத்தனை ஆண்டு இடைவெளி வந்துவிட்டதே என்ற ஏக்கம் எப்போதாவது வந்திருக்கிறதா? 

சில வேளைகளில் வருத்தப்பட்டதுண்டு ஆனால் ராஜா சார் கொடுத்ததெல்லாமே எனக்கு ரொம்ப நல்ல பாடல்கள், அதுவே போதும் என்றும் நினைப்பதுண்டு. 

பேட்டி முடிந்ததும் இவ்வளவு நேரமும் நல்லதொரு சம்பாஷணையைத் தந்ததுக்கு நன்றி சொல்லித் தன் விலாசத்தைக் கொடுத்து பேட்டியின் ஒலிப்பதிவை அனுப்ப முடியுமா என்கிறார். 

ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும். 

http://www.radiospathy.com/2011/01/blog-post_11.html

 

Link to comment
Share on other sites

தனித்துவமான அதீத இனிமையுடன் கூடிய குரல் வளம் உடைய பாடகி திரு.ஜென்ஸி அவர்கள். வார்த்தை உச்சரிப்பும் மிகத் துல்லியமாக இருக்கும்.

இவரும் பாடகர் ஜெயச்சந்திரனும் பின்னாளில் அதிகம் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை. இசையை ஆத்மார்த்தமாக ரசிப்பவர்களின் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் "என் வானிலே ஒரே வெண்ணிலா"....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுடைய பாலப் பருவத்தில் புரியாமலே கேட்ட அருமையான குரல். ஜென்ஸி தொடர்ந்து பாடியிருப்பாரானால் சித்ரா போன்ற பாடகிகளை இளையராஜா அறிமுகப்படுத்தி இருப்பாரோ என அதிகம் எண்ணியிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

raja-jency.jpg

 

அந்தக்காலத்திலை......இவை இரண்டுபேருக்கும் ஒரு மார்க்கமான கிசுகிசு இருக்கு எண்டு கதைச்சவங்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தனித்துவமான அதீத இனிமையுடன் கூடிய குரல் வளம் உடைய பாடகி திரு.ஜென்ஸி அவர்கள். வார்த்தை உச்சரிப்பும் மிகத் துல்லியமாக இருக்கும்.

இவரும் பாடகர் ஜெயச்சந்திரனும் பின்னாளில் அதிகம் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை. இசையை ஆத்மார்த்தமாக ரசிப்பவர்களின் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் "என் வானிலே ஒரே வெண்ணிலா"....!

 

 

எங்களுடைய பாலப் பருவத்தில் புரியாமலே கேட்ட அருமையான குரல். ஜென்ஸி தொடர்ந்து பாடியிருப்பாரானால் சித்ரா போன்ற பாடகிகளை இளையராஜா அறிமுகப்படுத்தி இருப்பாரோ என அதிகம் எண்ணியிருக்கின்றேன்.

 

 

raja-jency.jpg

 

அந்தக்காலத்திலை......இவை இரண்டுபேருக்கும் ஒரு மார்க்கமான கிசுகிசு இருக்கு எண்டு கதைச்சவங்கள். :icon_mrgreen:

 

10566483_1446841152254989_2033379574_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பிடித்த பாடகி இவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை ..

நுனாவிலான் ,உங்களுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

ஜென்சி அவர்கள் பாடிய முதல் பாடல் மிகவும் இனிமையானது. வானத்துப் பூங்கிளி மானென வாழ்ந்தவள் என்கிற இந்தப் பாடலை தாயகத்தில் இருந்தபோது கேட்ட ஞாபகம் இருந்தது. இரு வருடங்களுக்குப் முன்னர் இந்தப்பாடலை மீண்டும் கேட்டபோது பழைய ஞாபகங்கள் வந்து மனச் சஞ்சலத்தை உண்டாக்கியது. இன்று சில தடவைகள் கேட்டபோதும் அதே உணர்வுகள் வந்து முட்டி மோதின.  :( குறிப்பாக, பல்லவி முடிந்து வருகின்ற அந்த இடை இசை பல பழைய உணர்வுகளுக்குள் இட்டுச் செல்கிறது. :unsure:

 

http://www.tamilmp3.us/Music3/A-Z%20Songs/T/Thirupura%20Sundari/Vaanathu%20Poongkili.mp3

 

இந்தப்பாடலின் முதல் பாதியை ஜென்சி அவர்கள் பாடியுள்ளார்கள். மிகுதி எஸ்.ஜானகி அம்மாவின் குரலில்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பாடல், சிங்களவனுக்கு ஒரு காலமென்றால் எமக்கொரு காலம் வராமலா இருக்கும்?

Link to comment
Share on other sites

இவரது பிள்ளைக்குச் சுகமில்லாத நேரத்தில் இவரால் ரெக்கார்டிங்குப் போகமுடியவில்லையாம்.  அதனால் இளையராஜா மிகவும் கீழ்த்தரமாகப் பேசியதாகவும் அதனாலே தான் குடும்பத்தைக் கவனிப்பதற்காக வீட்டில் இருந்து விட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் வாசித்த ஞாபகம்.  ஏனோ, முந்தைய அவரது குரல் வளம் இப்போது இல்லை.  பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டார் போலும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளசுவின்ரை அந்தக்காலத்து ஜில்மா வேலையளெல்லாம் தெரிஞ்ச ஒரே ஆள் பாரதிராஜாதான்..... :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.