Jump to content

மஹிந்த ராஜபக்ஸவை விடவும் வை.கோ முக்கியமானவர் – பாரதீய ஜனதா கட்சி


Recommended Posts

vaiko%20&%20modi_CI.jpg

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ முக்கியமானவர் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ பாரதீய ஜனதா கட்சியின் பங்குதாரர் அல்ல எனவும், வை.கோ பாரதீய ஜனதா கட்சியின் பங்குதாரர் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் முரளீதரர் ராவோ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டையே மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு கௌரமான தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தமிழக அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இலங்கையை நிராகரிக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதாகவும், பாரதீய ஜனதா கட்சி இலங்கையுடன் உறவுகளைப் பேணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரே விதமான கொள்கைகள் காணப்பட்ட போதிலும், அணுகுமுறைகளில் வித்தியாசம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் இணைந்து செய்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் தொடர்புகளைப் பேண வேண்டுமேன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும், 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோருவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் முரளீதர் ராவோ குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111777/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.