Jump to content

எல்லாப் பயங்கரவாதிகளும் மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்! ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பயங்கரவாதிகளும் மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்! ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் மஹிந்த
 

ICAPP%20654658.jpg

 

உலகிலுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே விதமானவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவத்துள்ளார். ஆசிய அரசியல் கட்சிகளின் 8ஆவது சர்வதேச மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தின் மஹிந்த ராஜபக்‌ஷ அரங்கில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபேதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நாடு பிரதானமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் போது பேதங்களைக் களைந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஜனநாயகம் மற்றும் கவர்ந்திழுக்க கூடிய சுலோகங்களை பயன்படுத்தி வெளிநாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன என்பதை நாம் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன். - என்றார். இந்த மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த 250 தலைவர்கள் பங்குகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 450 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள், பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். இரண்டு தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த பொதுச்சபை மாநாடு 'ஆசியான் சமூகத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வருகிறது.

malarum.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆசியான் சமூகத்தை
பிச்சை எடுக்கிறது ஜரோப்பா ,அமெரிக்கா சமுகங்களிடம் வீரவசனத்திற்கு குறைச்சல் இல்லை......
Link to comment
Share on other sites

மகிந்த என்ற பயங்கரவாதி போல் எல்லா பயங்கரவாதிகளும் மக்களை கொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொல் மட்டும் இல்லையென்றால்..

இன்று மகிந்த இங்கு பேசிக்கொண்டிருக்கமாட்டார்....... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தின் நாயகன் சீனாக்காரர் வந்த துணிவில் பேசுகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான். அரச பயங்கரவாதிகளையே நீங்கள் முதன்மைப் படுத்திக் கூறியுள்ளீர்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இவர் இப்படி பல சர்வதேச மா நாடுகளைத்தேடி, தேடி நடத்தி பயங்கரவாதம் பற்றி பேசிப்பேசி தான் ஒரு நல்லவர், வல்லவர் என நீருபித்து தண்டணைகளில் தப்ப முயற்சிக்கிறார். கேட்பவர்கள் இவரைப்பற்றி ஆழமான உண்மைகள் தெரியாமல் கேணையர்களாக இருக்கும் மட்டும் காதிலை நல்ல பூ சுற்றுவார். அவரை எல்லோரும் கேள்விகள் கேட்டார் அடங்குவார், அடக்குவார். இவரின் தமிழம்க்களின் மீதான பயங்கரவாதம் இன்றும் தொடர்கிறது. நவீன சாத்தான் வேதம் ஓதுகிறது.. நம்புங்கள்..

Link to comment
Share on other sites

எல்லாப் பயங்கரவாதிகளும் மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்! ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் மஹிந்த////////////

எல்லா அரசுகளும் நியாயமான விடுதலைக்காக போராடுகின்ற மக்களையும் பயங்கரவாதிகள் ஆக்கி கொல்வதிலையே .....குறியா இருக்கின்றன .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.