Jump to content

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்


Recommended Posts

rajini%20thiranagama%2055.jpg

 

1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.
 
வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார்.
 
1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த நூலை எழுதியமைக்காகவே இவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் நம்பப்படுகின்றது. 'மனித உரிமைகளுக்கான பல்கலை ஆசிரியர்கள் - யாழ்ப்பாணம்' என்ற மனித உரிமைச் செயற்பாட்டகத்தின் ஸ்தாபக உறுப்பினர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் சனிக்கிழமை 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நினைவுக் கூட்டம் நடைபெறும். அன்று மாலை 2 மணிக்கு திருநெல்வேலிச் சந்தியில் இருந்து ஆரியகுளம் சந்தி வழியாக வீரசிங்கம் மண்டபம் வரை அமைதி, ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி, ரஜினி திரணகம நினைவாக ஊர்வலம் ஒன்று இடம்பெறும். அடுத்த நாள் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு "நீதியான ஜனநாயக சமூகத்தை நோக்கி...." என்ற தலைப்பில் யாழ். பல்கலைகழகததின் கைலாசபதி அரங்கில் ஒரு கருத்தரங்கும் நடைபெறும்.
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி சொல்லுறியள்....சுவிசில் இருந்து ஒரு அடி பொடி...(எழுத்தாளன் ,பேச்சாளன் ...என்ற நினைப்பில் வாழ்பவர்) எழுதுகிறார்...மனிதன் உடனே கொல்வானாம்....தெய்வம் நின்று கொல்லுமாம்...அதாவது புலிகளி கதையை முடித்தது ....இந்த பெண்மணியின் ..இறப்பிற்கு சரியான தண்டனையாம்....புலி மறைந்த பின் ..புழுகு ..புனுகு கூட்டத்தினரின் தொல்லை பொறுக்க முடியலையப்பா

Link to comment
Share on other sites

நீங்கள் இப்படி சொல்லுறியள்....சுவிசில் இருந்து ஒரு அடி பொடி...(எழுத்தாளன் ,பேச்சாளன் ...என்ற நினைப்பில் வாழ்பவர்) எழுதுகிறார்...மனிதன் உடனே கொல்வானாம்....தெய்வம் நின்று கொல்லுமாம்...அதாவது புலிகளி கதையை முடித்தது ....இந்த பெண்மணியின் ..இறப்பிற்கு சரியான தண்டனையாம்....புலி மறைந்த பின் ..புழுகு ..புனுகு கூட்டத்தினரின் தொல்லை பொறுக்க முடியலையப்பா

 

ரஜனி திரணகம கொல்லப்பட வேண்டியவரா? 
இப்படி சிறுகச்சிறுக செய்த பல பிழையான விடயங்கள் தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. நியூட்டனின் மூன்றாம் விதி. 
Link to comment
Share on other sites

50 வருடமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நியூட்டனின் 3ம் விதி வேலை செய்யவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஜனி திரணகம கொல்லப்பட வேண்டியவரா? 
இப்படி சிறுகச்சிறுக செய்த பல பிழையான விடயங்கள் தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. நியூட்டனின் மூன்றாம் விதி. 

 

இவருக்கு இதுக்குமட்டும் 3ம் விதி வேலைசெய்யவேண்டும் போல....மற்றவை எல்லாம் அப்புறம் போல ...

Link to comment
Share on other sites

50 வருடமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நியூட்டனின் 3ம் விதி வேலை செய்யவில்லையே?

 

3ம் விதி என்பது போட்டு தள்ளுறது மட்டுமல்ல. சிங்கள பேரினவாதம் 50 வருசமா செய்த கொலைகளுக்கு எதிராக‌ தமிழர்களும் சர்வதேசமும் செயற்படுவதும் 3ம் விதி தான். ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர் தாக்கம் இருக்கும்

Link to comment
Share on other sites

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் தாம், செய்த கொலைகளையும்..... விடுதலைப் புலிகள் மேல் போட்டு, தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்த பனைகள் எழுதியவர்களில்.. இடம்பெற்ற குழுவினரில்.. சிலர் கொழும்பை மையமாக வைத்துச் செயற்பட்டவர்கள். சிலர் மட்டுமே வடக்கை மையமாகக் கொண்டிருந்தனர்.

 

முறிந்த பனைகள்.. வெறுமனவே இயக்கங்களின் மனித உரிமை மீறல்களை மட்டும் சொல்லவில்லை. இந்தியப் படைகளின் மோசமான மனித உரிமை மீறல்களையும் எடுத்து வைத்தன. அதன் பின்னணியில்.. ரோவின் தூண்டுதலில்.. இந்தியக் கைக்கூலிகளாக செயற்பட்ட ஈபி ஆர் எல் எவ் ஒட்டுக்குழுவினரால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை சாட்சியங்களோடு.. அதே அமைப்பில் இருந்து பின் ஈபிடிபியில் இயங்கிய தினமுரசு அற்புதன் எழுதி இருந்தார். அதன்பின் அவர் டக்கிளஸ் தேவானந்த குழுவினரால் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

 

சிலர் முள்ளிவாய்க்கால்.. பாவத்தின் வி(பு)தைகுழி என்று இப்போது கருத்துச் சொல்லி திரிகிறார்கள். 1989 ஜே வி பி கிளர்ச்சியின் பின் தென்பகுதியில் முளைத்த புதைகுழிகளும்.. இவர்களைப் பொறுத்த வரை பாவத்தின் வி(பு)தைகுழிகள்.

 

போர் எங்கு நிகழ்ந்தாலும்.. அதற்கு பாவம் பரிகாரம் என்று போதிப்பவர்கள்.. தோற்றவர்கள் மீது பழிபோடுபவர்கள் எம்மினத்தில் அதிகம். இந்த ஈனப்பிறப்புகளில் மனிதம் என்பது மரத்துப்போன ஒன்று. சந்தர்ப்பவாதமானது. இதே பிறப்புகள்.. போர் இலக்கியங்களான மகா பாரதத்தையும்.. ராமாயணத்தையும் தூக்கிப் பிடிப்பது தான் ஏனென்று புரியவில்லை. அதற்கு மேடை போட்டு பட்டிமன்றங்களும்.. வழக்காடு மன்றங்களும் வைத்துப் பிழைக்கின்றன..! அங்கு மனித அழிவுகள் இடம்பெற்றதை ரசிக்கின்றன. அதன் பெறுதியே இதுவாக இருக்க முடியும்.

 

ஆனால்.. முள்ளிவாய்க்காலும் சரி.. செம்மணியும் சரி.. தென்னிலங்கை புதைகுழிகளும் சரி.. நிஜத்தில் இலங்கைத் தீவில்.. கொடிய சிங்கள அரச பயங்கரவாதமே ஆட்சி செய்கிறது.. என்ற உண்மையையே தசாப்தங்களாக சொல்லி வருகின்றது. அது மனித உரிமை மீறல்கள் என்பதற்கும் அப்பால்.. மனித இன அழிப்பை தொடர்ந்து உலகின் உருப்புமறைப்பு கொள்கைகளுக்குள் இருந்து தண்டனைக்கு வெளியில் இருந்து..செய்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது.

 

அதற்கு முடிவெழுத வேண்டிய நேரத்தில்.. முள்ளிவாய்க்கால் பாவத்தின் வி(பு)தைகுழி என்று பேசும்.. அநியாயப்படுவாரின்.. அறிவுச் சிறுமை என்பது அவர்களின் பேதமையின் வெளிப்பாடு. மனிதம் தொலைத்த நிலையின் வெளிப்பாடு.

 

முறிந்த பனைகள்.. இந்திய அராஜகம் குறித்துப் பேசிய அதேவேளை.. அதே காலத்தில் தென்னிலங்கையில் நிகழ்ந்தேறிய அராஜகங்கள் குறித்து.. மனித உரிமை மீறல்கள் குறித்து மெளனம் காத்தது. யாழ்ப்பாணத்தில் முறிந்த பனைகள் பற்றி பேசிய மனிதம்.. அம்பாந்தோட்டையில் உள்ள பனைகள் முறிந்து விழுந்தது பற்றி பேசவில்லை.  இவர்களின்.. "நீதியான ஜனநாயகம்" என்ற வேசத்துக்கு அது ஒரு சான்றும் கூட.

 

ஏதோ.. இந்திய அராஜகம் பற்றி பேசனுன்னா..இந்திய அராஜகம் + ஒட்டுக்குழு அராஜகம் பற்றிப் பேசலாம்.. கூடவே புலிகள்.. பற்றியும் பேசனுன்னு சட்டம் எழுதி வைப்பவர்கள்.. சிங்கள அராஜகம் பற்றி எழுதுவதில்லை. காரணம்.. பதவிகள்.. அங்கு காவல் காக்கின்றன. காத்தன..!!!!!!! இது தான் நம்மவரின் மனிதாபிமான அக்கறையின் உண்மை முகம். "நீதியான ஜனநாயகம்" என்ற இவர்களின் உச்சரிப்பின் பின்புலம்..!!!!! 

 

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளக்கங்கள்....நெடுக்கர்.ஜூட்,,தமிழ் ஶ்ரீ........இந்தப் புற்றுப் பாம்புகL..இப்படியான நேரத்தில்தான்  தோலுரிக்கிறவை...

Link to comment
Share on other sites

3ம் விதி என்பது போட்டு தள்ளுறது மட்டுமல்ல. சிங்கள பேரினவாதம் 50 வருசமா செய்த கொலைகளுக்கு எதிராக‌ தமிழர்களும் சர்வதேசமும் செயற்படுவதும் 3ம் விதி தான். ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர் தாக்கம் இருக்கும்

 

 

 

மேற்கு நாடுகள் 1000 வருடங்களாக செய்யும் கொலைகள், நாடு பிடிப்புக்கள் போன்றவற்றுக்கு நியூட்டனின் 3ம் விதி என்ன செய்தது?
 
நியூட்டன் இவைகளுக்கு தான் 3ம் விதியை வகுத்தார் என்பதை உங்கள் மூலம் தான் அறிந்தேன். பச்சை வேறு.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

அற்புதன் எழுதினால் அது சரியாகிவிடுமா?

ஆயிரம் பேர்கள் ஆயிரம் எழுதினாலும் சொன்னாலும் நடந்த  பல விடயங்கள் விடயங்கள் அனைவரும் அறிந்ததுதான் .

எந்த இயக்கமும் தான் செய்த கொலையை  உரிமை கோரமுடியாமல் போனால்அதில்  இருந்து  தெரியவேண்டும் தாங்கள் செய்தது பிழை என்று அவர்களுக்கே தெரியும் என்று

.அந்த பட்டியலில் பல பெயர்கள் இருக்கு .

கேவலம் கேட்ட இனம் அடிமையாய் வாழ்வதில் வியப்பில்லை .

Link to comment
Share on other sites

அற்புதன் எழுதினால் அது சரியாகிவிடுமா?

 

அற்புதன் எழுதியது ஓரளவுக்கு சரியாக இருக்கலாம். அற்புதன் முதலில் ஈபியில் இருந்து பின் ஈபிடிக்கு சென்றவர். ஈபிடிபியின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய தலைவராகவும் இருந்தவர். டக்ளஸால் போட்டுத் தள்ளும் வரைக்கும் ஈபிடிபியின் மூத்த உறுப்பினராகவும், யாழ்ப்பாணத்து எம் பியுமாக இருந்தவர்.

 

ராஜினியை கொன்றது பற்றி அதனை ஏவிய ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிந்து இருக்காது.  ராஜினி கொல்லப்படும் காலத்தில் அன்று யாழில் கோலோச்சிக் கொண்டு இருந்தது புலிகள் அல்ல. மண்டையன் குழுவும், பதமநாபாவின் கொலைக் குழுவான ஈபி யும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்

 

மாவீரருக்கு அஞ்சலி  செலுத்தமுடியாத பூமியில்

இவருக்கு அஞ்சலி  செலுத்தமுடிகிறது  என்றால்

இதன் நோக்கமும்

அனுமதிப்பும் புரிந்து கொள்ளக்கூடியதே........ :( 

Link to comment
Share on other sites

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

 

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

 

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும் 

 

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும் 

 

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

Link to comment
Share on other sites

ராஜினியை கொன்றது பற்றி அதனை ஏவிய ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிந்து இருக்காது.  ராஜினி கொல்லப்படும் காலத்தில் அன்று யாழில் கோலோச்சிக் கொண்டு இருந்தது புலிகள் அல்ல. மண்டையன் குழுவும், பதமநாபாவின் கொலைக் குழுவான ஈபி யும் தான்.

பத்மநாபா விட்டு செண்ற சுரேஸ் பிரேமசந்திரனின் தலைமையிலான மண்டையன் குழு எண்டு வரவேண்டும் நிழலி...

Link to comment
Share on other sites

தினமுரசு பத்திரிகையில் “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” அற்புதன் எழுதிய அரசியல் தொடர் 176 (ஏப்பிரல் 12 – 18.1998 )

ரஜனி திரணகம

http://www.padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

Link to comment
Share on other sites

உந்த தொடர் வாசித்துதான் நான் எமது போராட்டத்தில் நடந்ததை அறிய வேண்டிய தேவை எதுவும் இல்லை .

 

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்தர்களுக்கு புல்லரிக்க எழுதிய தொடர் அது .

Link to comment
Share on other sites

அர்ஜுன் தனக்கு விருப்பமான ஆட்கள் சொல்வதை தான் நம்புவார். அதாவது தமிழ் மக்களால் கைவிடப்பட்ட ஆட்கள் எழுதினால் தான் நம்புவார்.

Link to comment
Share on other sites

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

 

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

இதுவரை இப்படி ஒரு கண்கண்ட சாட்சி இருக்கிறார் என்றோ இப்படி ஒரு பதிவு இருப்பதாகவோ நான் அறியவில்லை.

லங்கா வெப் முதல் தேனீ வரை தவறாமல் படித்தும் காணாத இந்த பதிவு - அருண் நீங்களாவது இதை தர முடியுமா?

  • அந்த வைத்தியரின் பெயர் என்ன?
  • அவருக்கு சுட்டவரை முன்னரே தெரியுமா?
  • சுட்டவர் விடுதலை புலிகளில் இருந்ததை அறிந்திருந்தாரா?

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும் 

 

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும் 

 

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

சுட்ட அன்று யாழ் பல்கலைக்கழக நூல்நிலைய வாயிலில் கையால் எழுதி நாம் இதை செய்யவில்லை. தயவு செய்து எம்மை நம்புங்கள். புத்தகம் எழுதுவதற்காக நாம் இப்படி செய்ய மாட்டோம் என்று ஒட்டி இருந்த்தது. காலையில் நான் அதை பார்த்தேன். மதியம் அந்த பிரசுரத்தை காணவில்லை.

இந்த கொலையும் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலை போல செய்யப்பட்டுள்ளது.

அருண்,

நீங்கள் பிளாட்டில் இருந்தீர்கள். சித்தார்த்தன் இன்று அதன் தலைவர். அவரின் தந்தையான தர்மலிங்கம் அவர்களை யார் கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

உங்களுக்கு இலங்கை சிக்கலில் உள்ள ஆழம் எவ்வளவு தூரம் புரியும் என்பதை இதற்கான பதில் காட்டும்.

Link to comment
Share on other sites

இந்தியா லண்டன் கனடா  ஆகிய இடங்களில் பெரும்பாலான காலத்தை களித்து விட்டு பக்கத்தில் இருந்து கண்டதாக சொல்வதில்  அர்ஜுன் வல்லவர். அதிலும் புலிகளுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு  yes sir சொல்லக்கூடியவர்,

Link to comment
Share on other sites

தமிழ் உலகிற்க்கு தேவையான சிலர் இந்த போராடத்தின் போது சரியாகவோ / பிழையாகவோ கொல்லபட்டு விட்டார்கள். ஒட்டு குழுக்கள் / அராசங்கம் 95 % என்றால் புலிகள் 5% ( இந்த விகிதாசாரம் உங்கள் கணிப்பு) ஆனால் இழப்பு தமிழர்களிற்கே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இப்படி ஒரு கண்கண்ட சாட்சி இருக்கிறார் என்றோ இப்படி ஒரு பதிவு இருப்பதாகவோ நான் அறியவில்லை.

லங்கா வெப் முதல் தேனீ வரை தவறாமல் படித்தும் காணாத இந்த பதிவு - அருண் நீங்களாவது இதை தர முடியுமா?

  • அந்த வைத்தியரின் பெயர் என்ன?
  • அவருக்கு சுட்டவரை முன்னரே தெரியுமா?
  • சுட்டவர் விடுதலை புலிகளில் இருந்ததை அறிந்திருந்தாரா?

சுட்ட அன்று யாழ் பல்கலைக்கழக நூல்நிலைய வாயிலில் கையால் எழுதி நாம் இதை செய்யவில்லை. தயவு செய்து எம்மை நம்புங்கள். புத்தகம் எழுதுவதற்காக நாம் இப்படி செய்ய மாட்டோம் என்று ஒட்டி இருந்த்தது. காலையில் நான் அதை பார்த்தேன். மதியம் அந்த பிரசுரத்தை காணவில்லை.

இந்த கொலையும் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலை போல செய்யப்பட்டுள்ளது.

அருண்,

நீங்கள் பிளாட்டில் இருந்தீர்கள். சித்தார்த்தன் இன்று அதன் தலைவர். அவரின் தந்தையான தர்மலிங்கம் அவர்களை யார் கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

உங்களுக்கு இலங்கை சிக்கலில் உள்ள ஆழம் எவ்வளவு தூரம் புரியும் என்பதை இதற்கான பதில் காட்டும்.

 

 

ஐயா

 

இந்தப்போராட்டம் என்பது எம் கண்முன்னால் நடந்தது

நாம் ஒவ்வொருவரும்

எம்மால் முடிந்தளவில்

பங்காளிகளாக இருந்த    போராட்டம்.

 

இதில் கதைகளை நாம் அறிவோம்

 

அர்யூனைப்பொறுத்தவரை..

பழி  உணர்வை  வைத்துக்கொண்டு

அதனால் போராட்டமே  அழிந்தாலும்  பரவாயில்லை

என்று திரிபவர்.

யாழ் அதை அறியும்......

 

யாழில் கூட தற்போதைய அவரது நடவடிக்கைகள்

கருத்துக்களத்தில் அரசியல் பகையான ஆட்களின்  செயல்களுக்கு

எதிராக எவர் எழுதினாலும்

அவர்களை  ஆதரிப்பதாகவும்

பச்சை போடும் அளவுக்கே உள்ளது....

இது தான் அவரது இலக்கு...

அரசியல்..

மற்றும் அறிவுயீவித்தனம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும்

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும்

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

எவர் என்று சொல்லுங்கோவன் நான் அவரிடம் கேட்டு இங்கு வந்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.