Jump to content

கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்!
ஜெரா

DSC_0665-800x365.jpg


படம் | நேர்க்காணல் கண்டவர்

அதைப் பெருந்தேடல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விழிப்புணர்வுக்காக, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரின் கதையை வெளியிடுவது என்று நீண்டகாலமாகவே திட்டமிட்டு, குறித்த நோயாளர்களைத் தேடிவந்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களில் பேச மறுக்கின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து, “நாங்கள் ஊடகங்களில் பேசுகின்றோம்” என்று முன்வந்தது ஒரு குடும்பம்.

“எங்கள பாக்க வருத்தம் வந்தாக்கள் மாதிரி தெரியேல்லயோ?” அவர்களை நாங்கள் கண்டதும் கேட்ட முதல் கேள்வியில் நிலைகுலைந்துதான் போனோம்! 30 வயதுக்குட்பட்ட இளந் தம்பதியினர் அவர்கள். உடல்சோர்வோ, மனச் சோர்வோ இல்லாது, துடிப்பாக இயங்குகின்றனர். மெலிந்து எலும்பான உடல், பற்கள், கண்கள் வெளித்தள்ளிய தோற்றம், தலைமுடி கொட்டிய தலை, உடல் சுருக்கம் என எச்.ஐ.வி. விழிப்புணர்வு விளம்பரப் படங்களில் வரும் எந்த அறிகுறியும் அவர்களிடம் இல்லை. அழகானவர்கள்.

எப்பயிலயிருந்து?

1999ஆம் அண்டு உறவுமுறையான அவருக்கும் எனக்கும் பொருத்தம் பார்த்துப் பேசி திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். திருமணத்தின் பின்னர் அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது. காய்ச்சலும் இருந்தது. அது மாறவில்லை. அதனால், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அவருக்கு ரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்த்தனர். அவருக்கு எயிட்ஸ் என்பதனை திருமணம் செய்து 11ஆவது நாளில் பரிசோதனை உறுதிப்படுத்தியது. அதனைச் சொல்லும்போது எனக்கு வயது 18 வயது. என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் அழுது புலம்பினேன்.

கணவரின் மனநிலை எப்படியிருந்தது?

அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது. ஆனால், அவர் கூறினார், அநியாயமா உன் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன் என்று. அவர் அவ்வாறு கூறியது தனக்கு ஏற்கனவே இருக்கு என்பதனை மறைத்ததனால் கூறினாரா அல்லது தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து, எனக்கும் அதனைப் பரப்பி விட்டேன் என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறினாரா என்பது தெரியாது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், நான் அதன் பின்னர் அது பற்றிக் கேட்பதைத் தவிர்த்து விட்டேன்.

கணவருக்கு எய்ட்ஸ் என்றபோது?

அவருக்கு எயிட்ஸ் என்ற விடயத்தை அவருடைய குடும்பத்தினருக்குச் சொன்னபோது அவர்களுக்கும் அதிர்ச்சிதான். திருமணம் செய்து 16 வருடங்களின் பின்னர்தான் அவர் பிறந்துள்ளார். அதனால், அவரை நல்ல செல்லமாக வளர்த்துவிட்டனர். வரமிருந்து கிடைக்கும் பிள்ளை நல்லதல்ல என்று ஜாதகத்தில் சொன்னார்கள் என்று மாமி சொல்லியிருந்தார்.

நோய் வந்துவிட்டது. எனி என்ன செய்வது. குடிக்காது இருந்தால் இன்னும் சிறிது காலத்துக்கு வாழமுடியும். குடிக்க வேண்டாம், அவருக்கு ஒன்றரை வருடம் நான் கூறிவந்தேன். நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவார். ஆனால், அவருக்கு அந்தப் போதையில் இருக்கும் போதுதான் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. தனது நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் மட்டும் இப்படியாகிவிட்டேன். அவர்களைப் போல வாழ முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதற்குச் சிகிச்சை பெறுமாறு கேட்டுப் பார்த்தோம். அவர் கேட்கவில்லை. முன்னர் அவர் எப்படி மற்றவர்களின் பேச்சைக் கேட்கமாட்டாரோ அவ்வாறுதான் இறுதியிலும் கேட்கவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார்.

அதுக்குப் பிறகு?

எனக்கு முன்னரும் இக்கட்டான காலம்தான். நான் பிறந்து 6 மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இரண்டாவது திருமணம் செய்து 6 பிள்ளைகள். அம்மாவிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லை. சீதனம் கேட்கவில்லை என்பதற்காக எனக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். பிறகு எனது ரத்தம் எடுத்து சோதித்தனர். எனக்கும் அவர் மூலமாக எயிட்ஸ் பரவியமை உறுதிப்படுத்தப்பட்டது. என்னால் அதனை நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. மீண்டும் அழுது புலம்புகிறேன். அந்தநேரம் நான் இருந்த நிலமையை என்னால் விபரிக்க முடியாதுள்ளது.

வீட்டுக்கு எப்பிடி சொன்னீங்கள்?

யாரிடம் சொல்வது? என்னத்தைச் சொல்வது என்று மூளை எல்லாம் குழம்பிப் போய் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். எச்.ஐ.வி. அவ்வாறு தான் வரும் என்று அப்போழுதுதான் தெரியும். அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா சொன்னார், அது உன் தலையெழுத்து. நான் என்ன செய்யிறது? என்றார். அதன் பின்னர் அம்மா என்னைத் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். பாசத்தில் கூட்டிச் செல்லவில்லை. கணவர் தந்த நகைகள் என்னிடம் இருந்தன. அதனைப் பெறத்தான் என்னைக் கூட்டிச் சென்றார்.

ஊருக்குள் என்ன பேசிக் கொண்டார்கள்?

அவர் இறந்தபோது பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. பெயர் வரவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர், முகவரி என்றெல்லாம் வந்துவிட்டது. அதனால், எனது இடத்து மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்படி வந்ததனால் ஊரார் என்னை ஒதுக்கி விட்டனர். சிலர் நேரடியாக வந்து கேட்டனர், உனக்கு எயிட்ஸ் உள்ளதாம், உன்னுடன் பழகக்கூடாதாம் என்று சொல்றாங்க என்று. மிகவும் கவலையடைந்தேன். நோய் வந்த பிறகு நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதில்லை. என்னைச் சமூகம் ஒதுக்கியது. அதனைவிட வீட்டில் எனது அம்மா கூட ஒதுக்கினார். வீட்டிலேயே நான் ஒதுக்கப்பட்டதால் சமுதாயம் ஒதுக்கியதனை நான் பெரிதாக கொள்ளவில்லை. நான் எந்தவொரு தவறும் செய்திருக்கவில்லை. வீட்டில் அம்மா சொல்வார், இப்படி இருப்பதால் தம்பி ஆக்களுக்கு கலியானம் செய்ய முடியாது. எங்காவது போ அல்லது செத்துப்போ என்றார். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. (அழுகிறார்… அழும்போதெல்லாம் அவரது கையைப் பற்றிப் பிடித்து அவரை ஆறுதல்படுத்தி சாதாரண நிலைக்குக் கொண்டுவருகிறார் அவருக்கு அருகில் இருக்கும் அவரது தற்போதைய கணவர்)

அம்மா என்ன செய்திருக்கவேண்டும்?

திருமணத்துக்கு முன்னர் அவரைப் பற்றி எனது பெற்றோர் விசாரித்திருக்க வேண்டும். திருமணம் செய்து தள்ளிவிட்டால் சரி என்று அம்மா நினைத்து விட்டார்தானே. நோய் இருப்பது தெரியாதுவிட்டாலும் அவரது முன்னைய பழக்கவழக்கங்கள் பற்றியாவது விசாரித்திருக்கலாம் தானே? அவர் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் பலவீனமானவராக இருந்துள்ளார். அதனை அவர் பின்னர் சொல்லியிருக்கிறார்.

அதுக்குப் பிறகு அம்மா?

அதன் பின்னர் என் மனதை நோகடிக்கும் வகையில் கதை சொல்வார். தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொண்டார். சின்னப் பிள்ளைகள் இருப்பதனால் என்னை வைத்திருக்க வேண்டாம். வெளியேற்று என்று கிராம அலுவலர் தெரிவித்ததாக அம்மா சொன்னார். எனக்குப் பத்தொன்பதரை வயதாக இருக்கும்போது அவர் இறந்து விட்டார். கிராம அலுவலர் சொல்கிறார் என்கிறீர்கள்? நான் எங்கு போவது? யாழ்ப்பாணத்தில் இடமும் தெரியாது. வீட்டில் எனக்குத் தொல்லையாக இருந்தது. அதனால் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.

தற்கொலையா?!

ஆம், 700 தூக்கமாத்திரைகளை வாங்கி, 100 மாத்திரைகள் வீதம் பிரித்து வைத்து ஒவ்வொரு பிரிவாக 400 குழிசைகளை விழுங்கி விட்டேன். அதன் பின்னர் நான் மயங்க விட்டேன். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால், சாவும் வரவில்லை. கோமா நிலையில் இருந்து தப்பிவிட்டேன். நான் எங்காவது போக வேண்டும் என்று நினைத்து கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு போய், என்னை ஊரில் வாழ விடுகிறார்கள் இல்லை. கிராம அலுவலரிடம் சென்றால் குற்றம், வெளியில் சென்றால் குற்றம் என்கிறார்கள். நீங்கள் என்னை உயிர் பிழைக்க வைக்கவேண்டாம். எப்படியாவது சாகடியுங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.

அவர்கள் என்ன சொன்னார்கள்?

அவர் என்னை ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (ADT) நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பின்னர்தான் நான் தற்போதைய நிலைக்கு வந்தேன். தற்போது பேட்டி தரவும் முடிகிறது. பேட்டி தருவதன் நோக்கம், இந்நோய் அடுத்தவர்களுக்கு வராதபடி இருக்க வேண்டும் என்பதே. அதற்காக என்னால் இயன்றதை நான் சொல்லுவேன். அதனைக் கேட்டு அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும். எனக்கு வந்த நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது.

இவருடனான (இப்போது திருமணம்) சந்திப்பு எப்படி?

பிறகு நான் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (ADT) நிறுவனத்துக்குச் சென்றேன். அங்குதான் இவரைக் கண்டேன். (தற்போது திருமணம் செய்திருக்கும் இளைஞனைக் காட்டுகிறார்). கடந்த ஜனவரியில் தாம் இருவரும் சேர்ச்சில் திருமணம் செய்துகொண்டோம்.

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவரின் மனநிலை எப்படியிருக்கும்?

எய்ட்ஸ் நோயாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், எயிட்ஸ் நோயாளர்களை ஒதுக்கக் கூடாது. பாதிக்கப்படவர்கள் கவுன்சிலிங் எடுத்து எங்களைப் போல மாறமுடியும். தவறின் அவர்கள் 2 விதமான முடிவை எடுப்பர். ஒன்று தம்மை அளிக்க வேண்டும் என்று நினைப்பர் அல்லது இதனை இன்னும் பலருக்குப் பரப்ப வேண்டும் என்ற மனநிலை உருவாகிறது. இந்த இரண்டுமே ஆபத்துத்தான். அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளுவது சமுதாயம்தான்.

சரி, உங்களைப் பற்றிச் சொல்லுங்களன்? (கணவனை நோக்கித் திரும்பினோம்)

எனது அம்மா மனநோய்வாய்பட்டவர். அதனால், அம்மா சின்னப்பிள்ளை மாதிரி. தனது வேலைகளைக்கூட செய்துகொள்ளமாட்டார். அப்பா குடித்துவிட்டு வருவார். ஒரு அக்கா. வீட்டில் வறுமை. நான் பாடசாலைக்குப் படிக்கச் செல்லும்போது சிலர் (ஆண்கள்) எனக்கு உதவுவதாகக்கூறி என்னை தவறான வழியில் பயன்படுத்த முற்பட்டனர். தவறான உடலுறவுக்குப் பயன்படுத்த முற்பட்டனர். பணம் தந்து கேட்பார்கள். அதனால், ஒரு கட்டத்தில் மது, சிகரெட், கஞ்சா எல்லாம் குடிக்கத் தொடங்கி விட்டேன். வீட்டில் எவரும் கண்டித்திருக்கவில்லை. எவரும் ஆலோசனை செய்திருக்கவில்லை. கேட்டிருந்தால் நான் தப்பியிருப்பேன்.

பிறகு?

அதன் பின்னர் வெளிநாடு போக சந்தர்ப்பம் கிடைத்தது. அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு அங்கு என்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடமிருந்து கிடைத்தது. ஒரு வருடமாக அவளுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தேன். உடலுறவு கொண்டேன். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தேன். இரண்டாவது தடவை வந்துபோகும்போது மருத்துவப் பரிசோதணை செய்தனர். அதன்போதுதான் எனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியவந்தது. அவள் வேண்டுமென்றே எனக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பியமை பின்னர்தான் தெரிந்தது. அதுதான் சொன்னேனே சில பேர் தனக்கு தந்ததை 10 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்குவார்கள். அவர் என்னை நாஷமாக்கிவிட்டார். எனக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனால் 6 மாதங்கள் சிறையிலிருந்தேன்.

எப்படி இலங்கை திரும்பினீர்கள்?

நவீனரக சூட்கேஸ் பெட்டியுடன் சென்ற நான், ஒரு சொப்பின் பையில் 2 சேட்டுடன் திரும்பி இலங்கைக்கு வந்தேன். வீட்டுக்கும் போகமுடியாது. முகம் கொடுக்க கஷ்டமாக இருந்தது. வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன். கடலில் விழுந்து செத்திடுவமா என்று யோசித்தேன்.

பின்னர் என்னிடம் உள்ள முழுப் பணத்தையும் கொண்டுசென்று கொழும்பில் பரிசோதித்தேன். எயிட்ஸ் என்பதனை உறுதிப்படுத்தினர். மருந்து எடுத்து வாழலாம் என்றனர். சில நாள்களின் பின்னர் இவரைச் சந்தித்தேன். (மனைவியைக் காட்டுகிறார்)

உங்கள் வீட்டுக்குத் தெரியாதா?

வீட்டுக்குத் தெரியவந்தது. அக்கா கேட்டதனால் அவருக்குக் கூறினேன். அவர் கதறி அழுதார். “எனக்கு நோய் வந்திட்டுது அக்கா. வீட்டில எவருக்கும் சொல்லாதே அக்கா. அம்மா அப்பாவைக் கஷ்டப்படுத்தக்கூடாது. நான் இதோட செத்திடுவன். நான் உனக்கும் கரைச்சல் கொடுக்கமாட்டேன்” என்றேன். (அழுகிறார். கண்ணீர் வழிந்தோடுகிறது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்கிறார்). அக்காவுக்கும் அதிர்ச்சி. சிறிது நாள் சென்றபின்னர், அதில் தொடாதே, இதில் தொடாதே என்று அவளும் சொல்லத் தொடங்கிவிட்டாள். பின்னர் எனது உடுப்புகளை எடுத்து வெளியே எறிந்து போ என்று கலைத்து விட்டார்.

இவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு? (மனைவியைக் குறித்து)

நடந்ததை இவருக்குச் சொன்னேன் (மனைவிக்கு). ஆறுதல் வார்த்தை கூறினார். நீங்கள் குடிக்க வேண்டாம் என்றார். அன்றிலிருந்து நான் குடிப்பதில்லை. கவுன்சிலிங் போனேன். தற்போது தனியார் நிறுவனத்தில் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பெண்ணால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். என் வாழ்க்கை அதற்கு சரியான ஆதாரம்.

இப்போது உங்கள் மனநிலை எப்பிடி?

நான் பாதிக்கப்பட்டபோது, எனக்கு வந்த எண்ணம் என்னுடன் இது அழிந்திட வேண்டும் என்பதே. ஆனால், சிலர் இதனை இன்னும் பலருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னை ஒரு பெண்தானே அழித்தார். அதனால், இன்னும் பத்துப் பெண்களை அழிக்காமல் சாகமாட்டேன் என்ற மனநிலை உருவாகிறது. அவ்வாறே பெண்ணின் மனநிலையிலும் எண்ணம் ஏற்படுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து வாழமுடியும் என்பது பரப்பட வேண்டும்.

(இருவரிடமும் கேட்டோம்)

நீங்கள் எடுக்கும் மருந்துகள் பற்றி?


இந்த நோய் ஏற்பட்டால் இரண்டு வகைப்பட்ட 3 குளிசைகள் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு வகைக் குளிசை 1998ஆம் ஆண்டு 15 ஆயிரம் ரூபா. மற்றையது 10 ஆயிரம் ரூபா. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை 3 ஆயிரம் ரூபாவுக்கு வந்து தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இவை பயன்படுத்துவதன் நோக்கம் நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கே. தற்போதுள்ள வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு உள்ளவர்களுக்கு உறுப்புகள் கழற்றவேண்டிவரும். விரும்பிய உணவு உண்ண முடியாது. ஆனால், எமக்கு எந்த உணவுக்கட்டுப்பாடும் இல்லை.

நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா?

எயிட்ஸ் நோயாளர்கள் இருவர் திருமணம் செய்வதென்றால் வெண்குருதி சிறுதுணிக்கை இருவருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். ஒருவருக்குக் கூடவும் மற்றையவருக்கு குறையவும் இருந்தால் கூடாது. ஏனெனில், உடலுறவில் ஈடுபட்டால் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு மாறி அது ஆபத்தாகிவிடும்.

இப்போது என்ன செய்கிறீர்கள்?

எம்மை எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், விழிப்புணர்வு ஊட்டவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உள்ளதனால் நாமாகவே அதனைச் செய்கிறோம். கத்தியால் குத்தப்பட்டவருக்குத்தான் அதன் வலி தெரியும். அவ்வாறே பாதிக்கப்பட்டிருக்கும் நாம் விழிப்புணர்வு செய்துவருகிறோம். எந்தவகை விழிப்புணர்வும் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்படும்போதுதான், முழுப்பயனையும் அடையமுடியும். நாங்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மேற்கொள்ள எங்கும், எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதற்கான உதவிகளைச் செய்யுங்கள் சுகதேகிகளே!

நிறுவனத்தின் இணைப்பாளர் என்ன சொல்கிறார்?

இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் போனால் வேலையை மட்டும் செய்து உண்டு உடுத்து இருக்க வேண்டுமே தவிர எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளக்கூடாது எனப் பணிவுடன் அறிவுறுத்துகிறோம். வெளிநாட்டுக்குச் செல்வோர் இந்த விடயத்தில் இனிமேலாவது மிகவும் அவதானமாக இருங்கள். யாழ்ப்பாணத்திலுள்ள நோயாளர்கள் பலர் சிகிச்சை பெறச் செல்வதில்லை. பிடித்து அடைத்து விடுவார்கள் என்ற பொய்யான அச்சம். ஆனால், எந்தவிதப் பயமும் இல்லை. சந்தேகம் இருந்தால்கூட பரிசோதிக்கமுடியும்.

வெளிநாடு செல்வோர்க்கு விழிப்புணர்வூட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கொண்டம் பாவித்து உடலுறுவு வைத்துக் கொள்ளலாமே?

இந்த எண்ணம் தவறு. பொதுவாகவே ஒரு குழந்தை கிடைத்து குறித்த கால இடைவெளிக்குள் இன்னொரு குழந்தை கிடைக்கக்கூடாது என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குத்தான் ஆணுறை (கொண்டம்) பயன்படுத்தப்படுகிறது. தவிர அதனைப் பயன்படுத்தி திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் என்பதற்கல்ல. 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தயாரித்தவரது பெயரிலேயே தற்போது அது அழைக்கப்படுகிறது. ஆனால், அதனைப் பயன்படுத்தி எப்படியும் வாழலாம் என்ற கருத்தையே வியாபாரிகள், வியாபார நோக்கத்துக்காக பரப்பி வருகின்றனர்.

http://maatram.org/?p=1446

Link to comment
Share on other sites

இதுக்குத்தான் முன்னோர் ஒரு பழமொழியை விட்டுச் சென்றுள்ளார்கள்.  :huh:

 

Spoiler
"Keep your d*ck in your pants!"  :o  :lol: 

 

இதனை ஆண்கள் பின்பற்றினால், எல்லோரும் வளமுடன் வாழலாம்!  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

சமூகத்தில் சாதாரணமாக தோன்றுகின்ற பலர்  பெரும் சமூக பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். இவர்களும் இந்த வகைக்குள் சேர்கின்றனர். தமக்கு வந்த ஆபத்தினை மற்றவர்கள் எதிர்கொள்ளக் கூடாது என்ற அவர்களின் உணர்வு போற்றுதலுக்குரியது.

 

HIV தொற்றுள்ளவர்கள் அது Aids ஆக மாறாமலே பல காலம் வாழ்ந்து இயற்கையாக மரணம் எய்தும் அளவுக்கு இப்போது மருந்துகள் பல உள்ளன.  அப்படியே Aids ஆக மாறினும் கூட அது ஒரு நீண்ட கால நோயாக (சிறிய காலத்துக்குள் சாகாமல்) ஆகி பல நாட்கள் வெளியில் எவருக்கும் தெரியாமலே வாழக் கூடிய மருந்துகள் உள்ளன. ஆனால் இவற்றை குடிப்பதற்கு அவரவர் தம்மை HIV பரிசோதனைக்குட்படுத்தி கண்டறிந்து இருக்க வேண்டும். பலர் இதனை செய்யாமல் இருப்பதால் நோய் உச்சக்கட்டத்தினை அடையும் போதே தமக்கு இருப்பதை அறிந்து கொள்கின்றனர் (...ஆனால் கனடாவில் ஒருவருக்கு அடிக்கடி தொற்றுநோய் ஏற்படின் மருத்துவர் உடனே HIV test இற்கு எழுதிக் கொடுத்து விடுவார்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்!

---

கணவரின் மனநிலை எப்படியிருந்தது?

அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது.

-----

எனக்கு முன்னரும் இக்கட்டான காலம்தான். நான் பிறந்து 6 மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இரண்டாவது திருமணம் செய்து 6 பிள்ளைகள். அம்மாவிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லை. சீதனம் கேட்கவில்லை என்பதற்காக எனக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர்.

------

 

கணவர் வீட்டினர், சீதனம் கேட்கவில்லை என்னும் போதே....

அந்தக் குடும்பத்தவர்களுக்கு, இவருக்கு எய்ட்ஸ் உள்ளது என்பதை மறைத்து திருமணம் செய்து... ஒரு இளம் பெண்ணின், வாழ்வை..... சீர்குலைத்து விட்டார்கள்.

 

எய்ட்ஸ்.... உள்ள நாறல் பயல், என்ன இழவுக்கு கலியாணம் கட்ட ஆசைப்பட்டவன். :(  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

privacy என்பது தமிழர்களிடத்தில் கட்டிக்காக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம்.

 

அடுத்தவன்ர தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிற கெட்ட குணம் தான் தமிழர்களுக்குள்ள பெரிய பிரச்சனை.

 

மேற்கு நாடுகளில்.. ஒருவருக்கு எச் ஐ வி தொற்று இருந்தால்.. அது பற்றி அவரின் மருத்துவ கிஸ்ரியில் இருக்குமே அன்றி.. அதுபற்றி ஊரான்.. உலகத்தானுக்கு சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

 

இது.. எயிட்ஸ் நோயாளிகள் மற்றவர்கள் முன்னிலையில் சாதாரண வாழ்வை வாழ முக்கியம்.

 

ஒருவர் தனக்கு எயிட்ஸ் உள்ளது என்று அறியாமல்.. கூட மேற்படி பெண்ணை திருமணம் செய்திருக்கலாம்.

 

இங்கு அவதானிக்கப்பட்ட விடயம்.. தாம் அறியாத பெண்களோடு.. ஆண்கள் கொண்டிருந்த திருமணத்துக்கு முந்தைய  உறவுகள் தான் எயிட்ஸ் நோயை அவர்களுக்கு கொடுத்துள்ளது.

 

எயிட்ஸ் கட்டுப்படுத்தும் பிரச்சாரத்தில் இது தான் முக்கியமாகச் சொல்லப்படுகிறது..

 

* நீங்கள் அறிந்த தெரிந்த நம்பிக்கையானவர்களுடன் மட்டும் பாதுகாப்பை உறுதி செய்து.. உறவு கொள்ளுங்கள்... என்று.

 

இது காலம்காலமா சொல்லப்பட்டு வந்தாலும்.. நடைமுறையில்.. மக்கள் இதனைப் பின்பற்றாமல்... முன் பின் தெரியாத அல்லது.. குறுகிய காலம் பழகிய பெண்களோடு.. அவர்களின் பின்னணி அறியாமல் வைக்கும் பாதுகாப்பற்ற உறவுகளே எயிட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணம். இதுமட்டுமல்ல.. ஓரினச் சேர்க்கைகளும்.. போதை ஊசிகளும்.. இந்த நோயை இலகுவாக பரப்பி வருகின்றன.

 

எல்லாம் பாதுகாப்பாக இருந்தும்.. சில மருத்துவமனை தவறுகளால் கூட எயிட்ஸ் தொற்று ஏற்படலாம்..

 

எயிட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால்.. அத்தோடு வாழ்க்கை முடிந்தது என்று சொல்ல வேண்டியதில்லை இன்று. எயிட்ஸ் தொற்றோடு நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இன்றைய மருத்துவ உலகம் நிரூபித்து வரும் அதேவேளை ஓரிருவரில்.. எயிட்ஸ் எச் ஐ வி தொற்றை முற்றாக இல்லாமல் செய்தும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 

எயிட்ஸ் நோயாளிகளை சமூகம் ஒதுக்க வேண்டியதில்லை என்று சொன்னாலும்... மனதளவில்.. அவர்கள் பற்றிய ஒரு அச்சம் எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் தான்.. மருத்துவ கிஸ்ரி தவிர வேறு எங்கும்.. ஒருவர் தன்னை எயிட்ஸ் நோயாளி என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

 

இப்போது மேற்கு நாடுகளில் எல்லாம் விபச்சாரிகளுக்கு கூட வாராந்த.. மெடிக்கல் ஸ்கிரீனிங் செய்து சான்றிதழ் வழங்குகிறார்கள். அதன்படி.. அந்த விபச்சாரிக்கு எந்த வித உபாதையும் இல்லை என்றால் மட்டும் தான் அவளால் தன் தொழிலை தொடர்ந்து செய்ய முடியும். விபச்சாரத்தை ஒளிச்சு வைச்சு நடத்த அனுமதிப்பதிலும்.. கண்காணிப்போடு நடத்த அனுமதிப்பதே கூடிய பாதுகாப்பளிக்கும். இதனை உலகெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டாயம் ஆக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு ஆண் வாடிக்கையாளர்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

 

ஆக.. வெளிநாட்டில் இருந்து வரும்.. அல்லது சிறீலங்காவின் தென்பகுதியில் இருந்து வரும்.. ஆண்.. மற்றும் பெண்கள் தொடர்பில்.. உள்ளூர் சமூகம் விழிப்புணர்வோடு இருப்பதோடு.. முன் பின் பழக்கமற்ற.. நம்பிக்கைக்கு பாத்திரமற்ற எவரோடாவது.. உறவு கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர்களின் மருத்துவச் சான்றிதழை பரிசோதித்த பின் தான்.. பாதுகாப்பான உறவு கொள்ள வேண்டும்.

 

கொண்டோம்.. பாவிப்பது 100% எயிட்ஸ் எச் ஐ வி தொற்றை தடுக்காவிட்டாலும் கூட.. 80% - 90% தடுக்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பதோடு... மலிவான இலகு முறை எச் ஐ வி தொற்றை குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று என்பதால்.. அதனைப் பாவிப்பது பாதுக்காப்பான உறவுக்கு ஓரளவு.. வழி வகுக்கும்.

 

எயிட்ஸை தவிர்க்கனுன்னா..

 

செய்ய வேண்டியது..

 

* நம்பிக்கைக்குரிய.. பின்னணிகள் சரிவர அறிந்த.. அல்லது மருத்துவச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட ஒருவருடன் உறவு கொள்ளுதல்.

 

* சந்தேகத்துக்குரிய நபர்களுடன் உடல் உறவை தவிர்த்தல்.

 

* நம்பிக்கை குறைவான ஆனால் ஓரளவு பழக்கமானவர்களுடன் உறவு கொள்ளும் போது பாதுகாப்பான (கொண்டோம்) உறவு கொள்ளுதல்.

 

எயிட்ஸ் தொற்று கண்டவர்கள் என்று சந்தேகிப்போர்..

 

மருத்துவர்களிடம் சரியான பரிசோதனைகள் செய்து எச் ஐ வி + என்றால்.. அதற்குரிய மருத்துவ முறைகளை கையாண்டு நீண்ட வாழ்க்கையை பெறுவதை உறுதி செய்வதோடு.. தமக்குரிய பொறுப்புணர்ந்து எச் ஐ வி தொற்றற்றவர்களுடன் உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்காக மக்களோடு பழகுவதை வேலை செய்வதை சாதாரண வாழ்க்கையை ஓட்டுவதை தவிர்க்கனுன்னு அவசியம் ஏதும் இல்லை.

 

எச் ஐ வி + என்பதை ஊருக்கு.. ஏன் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல் உறவு என்பது இரு நபர்கள் சம்பந்தப்பட்டது. வீட்டுக்குள் உள்ள எல்லோரும் சம்பந்தப்பட்டது அல்ல. அந்த நபர்கள்.. இது குறித்து தெரிந்து கொள்வதோடு.. ஒருவர் மற்றவரின் அந்தரங்க தகவல்களை தற்காத்துக் கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

 

எச் ஐ வி + என்பது.. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் தவிர்ந்த வேறு எங்கும் குறிப்பிட்டப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிறீலங்காவிலும் இதுவே நடைமுறையாக இருக்கும் எனலாம்.

 

எச் ஐ வி + உள்ளவர்கள் தமக்குரிய மருந்துகள் மாத்திரைகளை சரியாக உட்கொள்வதோடு.. மன நல ஆலோசனைகள்.. வாழ்வியல் ஆலோசனைகள் தேவைப்பட்டால்.. சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பு கொள்ளும் வசதிகள் இலகுவாக மருத்துவர்களால் செய்து கொடுப்படுதல் வேண்டும். மருத்துவர்கள் இது குறித்து அவர்களுக்கு சரியான வழிகாட்டலைச் செய்ய வேண்டும். சமூகம் அல்ல இதைச் செய்வது.

 

சமூகத்தின் எண்ணத்திலும்.. எச் ஐ வி + உள்ளவர்கள் பற்றிய பயம் நீங்க வேண்டும். எச் ஐ வி என்பது ஒரு வைரஸ் கிருமி ஆனாலும்.. உடலுக்கு வெளியே அது மிகவும் பலவீனமான கிருமி. உடலுக்கு வெளியே ஒரு 5 நிமிடம் கூட அது வாழாது.

 

நேரடி உடற் திரவ (இரத்தம் { இரத்தப் பரிமாற்றம்.. ஊசிகள்.. சலூன் பிளேட்}.. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் வழி வெளியேறும் திரவங்கள்.. மற்றும் தாயில் இருந்து குழந்தைக்கான சூல்வித்தக திரவ பரிமாற்றம்.. தாய்ப்பால்..) பரிமாற்றங்கள் மூலமே அது அதிகம் பரவுகிறது.

 

அந்த வகையில்.. இப்படியான சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட இருந்தால்.. அந்தச் சந்தர்ப்பங்களில் கூடிய எச்சரிக்கையோடு செயற்படுங்கள்.

 

மற்றும்படி.. எச் ஐ வி தொற்றுப்பட்ட ஒருவரின் கைபட்டால்.. கால்பட்டால்.. எச்சில் பட்டால் எல்லாம் எயிட்ஸ் பரவாது. ஆனால்.. சில வகை முத்தமிடல்களுடன் இரத்தக்கலப்பு ஏற்பட்டால் தொற்றுக்கு வாய்ப்புள்ளது.

 

வேறு எந்த வகையிலும்.. எச் ஐ வி + உள்ளவர்கள் சாதாரணமானவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் கிடையாது..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எயிட்ஸ் அறிகுறிகள்..

 

1133px-Symptoms_of_acute_HIV_infection.s

 

AIDS-50.jpg

 

பிரதான தொற்று வழிமுறைகள்.

 

photo5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் வீட்டினர், சீதனம் கேட்கவில்லை என்னும் போதே....

அந்தக் குடும்பத்தவர்களுக்கு, இவருக்கு எய்ட்ஸ் உள்ளது என்பதை மறைத்து திருமணம் செய்து... ஒரு இளம் பெண்ணின், வாழ்வை..... சீர்குலைத்து விட்டார்கள்.

 

எய்ட்ஸ்.... உள்ள நாறல் பயல், என்ன இழவுக்கு கலியாணம் கட்ட ஆசைப்பட்டவன். :(  :o

 

 

திருமணம் செய்வதும் விடுவதும் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட பிரச்சனை.ஆனால் தனக்கு எயிட்ஸ் தொற்று நோய் இருக்கிறது என்று அறிந்து கொண்ட,தெரிந்து கொண்ட நபர் என்றால் ஓரளவுக்குகேனும் புரிந்து திருமணத்திலிருந்து விலகி இருந்திருக்கலாம்.....அசாதரமான ஒரு வருத்தத்தைக் கூட ஒரு பெரிய இசுவாக  எடுக்கின்ற சமுதாயமாக எங்கள் சமுதாயம் மாறிட்டு அப்படி இருக்கையில் எயிட்ஸ் போன்ற வருத்தங்களோடு இருப்பவர்களோடு பழகுதல்,திருமணம் செய்தல் என்பது இன்னும் விளிப்பாக இருக்க வேண்டிய விடையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எயிட்ஸ் நோயுடன் பிறந்து பின் ஆரம்பத்தில் இருந்தே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முற்றாக எச் ஐ வி அகன்றுவிட்டதாகக் கருதப்பட்ட அமெரிக்கா மிசிசிப்பியை சேர்ந்த குழந்தைக்கு மீண்டும் இரண்டு வருடங்களின் பின் எச் ஐ வி கண்டறியப்பட்டுள்ளது.

 

எச் ஐ வி மனித உடலில் தொற்றிக் கொண்ட பின்.. தீவிர சிகிச்சையில் இருந்து தப்ப மூளை.. மற்றும் குடல் பகுதிகளில் ஒளிந்து கொள்வதாகவும்.. பின் சிகிச்சை நிறுத்தப்பட்டதும்.. தனது புதிய தாக்குதலை ஆரம்பிப்பதாகவும் கருதப்படுகிறது.

 

உலகில்.. எச் ஐ வி தொற்றுக் கண்ட வளர்ந்தோரில்.. ஒரே ஒருவருக்கு தான் இதுவரை எச் ஐ வி முற்றாக அகற்றப்பட்டிருக்கிறது. அவருக்கு மரபணு சார்ந்து அருமையான மாற்றத்துடன் கூடிய எலும்பு மச்சை செலுத்தப்பட்ட பின் எச் ஐ வியை முற்றாக அவரின் உடலில் இருந்து அகற்ற முடிந்திருக்கிறது.

 

HIV re-emerges in 'cured' Mississippi girl

 

_66179351_m0501034-hiv_particles,_com.gi
 
The human immunodeficiency virus (HIV) attacks the immune system
 

A baby girl in the US born with HIV and believed cured after very early treatment has now been found to still harbour the virus.

 

Tests last week on the four-year-old child from Mississippi indicate she is no longer in remission, say doctors.

 

http://www.bbc.co.uk/news/health-28257768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.