Jump to content

கலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு


Recommended Posts

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹெலியும் லிமோவும் தான் மற்றவர்களின் சடங்கைவிட அதிகமாக இருக்கிறது.
 
ஹெலிக்கு பெரியவருக்கு 250 யூரோவும் சிறுவருக்கு 200 யூரோ.
 
ஹெலிக்கும் லிமோவுக்கும் ஒரு 2000 யூரோ செலவளிச்சிருப்பார்.
ஒரு நாள் தானே.
 
அந்தாள் தன்ட காசத்தானே செலவளிக்குது. அதுவும் தன் மகளுக்கு.
 
நீங்கள் எல்லாம் ஏன் எரியிரீங்க ??
 
கனடாவில, லண்டனில‌ இருந்து தமிழ்ப் பெடியள் தாய்லாந்துக்கு விபச்சாரிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர் செலவளித்து பிளேனில போய் வாறங்கள். இந்தக் கணக்கெல்லாம் யார் பார்ப்பது ?? 

 

 

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

Link to comment
Share on other sites

இங்கு ஜேர்மனியில் ஒரு திருமண வீடு பார்த்தேன்.

 

மணமகன் ஹெலியில் வந்து மண்டப வாசலில் இறங்கினார்.

'மணமகளை சிறை மீட்க ஹீரோ ஹெலியில் வந்து இறங்குகிறாராம்!'

 

ஒரு மாதம் கழிந்திருக்கும்!!!!

பிள்ளை கண்ணைக் கசக்கிக்கொண்டு பெற்றோரிடமே வந்துவிட்டது.

 

இப்ப கதாநாயகனுக்கு வில்லன் வேசம் போலை!!  :o  :lol:

Link to comment
Share on other sites

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

 

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 

 

 

F 16 இல ஏத்தி.. ஒரு பரசூட் குண்டோட கட்டி.. நடு வானத்தில இருந்து.. கழற்றி விட்டும் பார்க்கலாம் தானே. பரசூட்டில.. பிள்ளை.. எப்படி இறக்குது என்று. அதெல்லோ நவீனம். :lol::D

 

உந்தப் பிள்ளையை உளவியலாளர்கள் பரிசோதனை செய்தால் தெரியும்.. அது உண்மையில் தன் சந்தோசத்துக்கு இதைச் செய்ததா அல்லது பெற்றோரின் சந்தோசத்திற்காக கட்டாயப்படுத்தப்பட நிலையில் வரவழைக்கப்பட்ட சந்தோசத்தில் இதை செய்ததா என்று.

 

அது மட்டுமன்றி.. இந்தக் குடும்பங்களின் ஆடம்பர நடவடிக்கைகளுக்கான பண வருவாய் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

 

அண்மையில்.. லண்டனில்.. ஒரு குடும்பம் அரச பணத்தில் இருந்து கொண்டு ஆடம்பர சாமத்திய வீடு.. அயலவர்களோ.. உறவினர்களோ.. எரிச்சலில் கவுன்சிலுக்கு பெட்டிசன் போட.. விசயம்.. பிடிபட்டு.. இப்போ.. பல ஆயிரம் பவுன்ஸ்களை அரசுக்கு மீளச் செலுத்தக் கேட்கப்பட்டுள்ளனர். இப்படியும் நடக்குது. பிரான்ஸில இதுக்கு இன்னும் வழி தெரியாது போல.  :):icon_idea:

 

Link to comment
Share on other sites

மலேசிய நன்பர் ஒருவர்.. உணவகம் ஒன்று வைத்திருக்கிறார்.
 
ஒருமுறை சொன்னார். " என்னங்க உங்க ஆளுங்க வந்து எள்ளுறுண்டை இருக்கா  ? என்று கேக்கிறாங்க..!!! " :wub:  :wub:  :D  
 
 
உலகம் முன்னேறிக்கொண்டு போகுது.
 
நாங்க எங்களுக்க நிண்டு கொண்டு மற்றவைய பார்த்து "கெக்கே.. கொக்கே.." என்டு கொன்டும் ஆளுக்கு ஆள் மாறி மாறி முதுகு சொறிஞ்சு கொண்டும் நிக்கிறோம்.  :wub:
 
 
அவரின் பண வருவாய் பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவரின் கெட்டித்தனம். கடன் எடுத்து செலவளிக்காதவரை அவரின் கெட்டித்தனமே!
 
பிரான்ஸ் கேணல் கடாபியின் பில்லியன்களை "கெட்டித்தன்மாகத்" தானே எடுத்தது.
 
 
ஒரு கொண்டாட்டம் சிறிது ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் கவலைப் படவேண்டியவன் கொண்டாட்டத்திற்கு செலவு செய்தவன் மட்டுமே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

Link to comment
Share on other sites

ஈசன் சொல்வதும் நியாயம்தான். அவரது காசு.. அவர் செலவழிக்கிறார். நெடுக்கின் உளவியல் வாதம் வீக்காக இருக்கு. :D

 

ஆனாலும், பொதுத்தளத்தில் இக்காணொளி பகிரப்பட்டுள்ளதால் பலரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை வைக்கிறார்கள். அச்செயலிலும் பிழை காண முடியாது.  :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

 

ஈழத்தமிழன் சிக்கோயினார் மாதிரி மாறிக்கொண்டு வாறான் எண்டுறியள்????  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

 

கணவர் எது சொன்னாலும் அடங்கிறார் இல்லயே,சொல்வளி  கேக்கிறார் இல்லயே என்ற அம்மாக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கும்,இவ்வாறன விழாக்களை கொண்டாட வைப்பதில் வெற்றி காண்கிறார்கள்..எப்ப,எப்ப என்று எதிர் பார்த்து இருப்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்.

காரணம் மகள் பெரியவள் ஆகிட்டாள் என்றால் தந்தைக்கு சொல்லி அடக்குவாள் என்று எதிர் பார்ப்பு வேறு....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்த்தேன். வழமையான சாறிப்பார்ட்டியாகத்தானே உள்ளது. இந்த இலகு ரக ஹெலிக்கு அதிகம் செலவு வந்திருக்காது! விழா நடக்கும் மண்டபமும் தெரிந்ததாகவே இருக்கின்றது!!

இலண்டனில் எனக்குத் தெரிந்த வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் சாமத்தியவீடு சிறப்பாகத்தான் நடந்திருக்கின்றது. இனியும் நடக்க இருக்கின்றது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதம் எல்லாம் கிடையாது. வசதி உள்ளவர்களும் இல்லாதவர்களும் தமது பெண்பிள்ளைகளுக்கு இந்த விழாவைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டுச் செய்கின்றார்கள். வழமை போன்றே போட்டி போட்டுப் புதினமாகச் செய்யவேண்டும் என்று ஹெலி, குதிரைவண்டி, பல்லக்கு, கடிலாக் லிமோசின் என்று ஆடம்பரமாகச் செலவழிக்கின்றார்கள். இதையெல்லாம் இனி மாற்றமுடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே சாறிப்பார்ட்டிகளுக்குப் போய் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதும் மகிழ்வாக இருப்பதும் புலம்பெயர் நாடுகளில் தொடரத்தான் போகின்றது. நானும் சாமத்திய வீடுகளைத் தவிர்ப்பதில்லை என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டேன்.

http://www.youtube.com/watch?v=DunKaaqePd8

Link to comment
Share on other sites

கவனித்துப் பார்த்தீர்களானால் இவர்கள் கிறிஸ்தவர்கள். எனக்குத் தெரிந்த கிறிஸ்தவர்கள் சாமத்திய வீடு செய்வதில்லை. படம் காட்டுவது தவிர இதனைக் கலாச்சாரத்திற்காக இவர் செய்ததுபோல் தோன்றவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

 

கலியாணவீட்டுக்கு நீர்வேலியிலையிருந்து குலையோடை வாழை இறக்கின தமிழனுக்கு பச்சைத்தென்னோலை எடுப்பிக்கிறது பெரிய விசயமில்லை. :D
 

என்ன ஒண்டு இப்பிடியான சம்பிரதாயபூர்மமான விசயங்களை செய்யிறவைக்கு அதின்ரை  அடிப்படை தார்ப்பரியங்கள் தெரியாது sign0186.gif  .........இனி அடுத்த சாமத்தியவீடு நீர்மூழ்கி கப்பலிலை...............   tongue4fj_zps3812ed91.gif   

Link to comment
Share on other sites

 

இவர்கள் தமது சொந்தப் பணத்தில் தமது வீட்டு வைபவத்தினைச் செய்கிறார்கள்.அது அவர்களின் விருப்பம், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தவறைச் சுட்டிக் காட்டலாம் (அது தான் சரியான முறை) , அதைவிடுத்து அவர்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விமர்சிப்பதென்பது  எனது பார்வையில் சரியெனப்படவில்லை. ஆகக்குறந்தது அவர்களது முகங்களையென்றாலும் மறைத்திருக்கலாம்,  இங்கு விருந்த்தினர்களாக வந்திருப்பவர்கள் உட்பட அணைவரும் தெளிவாகத் தெரிகிறார்கள். 
 
இங்கே புலம் பெயர் தேசங்களில்  மக்களிடம் மில்லியன் கணக்கில் மக்களிடம் பணத்தினச் சேர்த்து கோயில்களக் கட்டி ஆன்மிகம் எனும் பெயரில் மிகப் பெருந்த்தொகைப் பணத்தினை வீண‌டிக்கிறார்கள் ,  வாருங்கள் அவற்றில் உள்ள தவறுகளை விவாதிப்போம். ஏனெனில் இங்கே பொது மக்களின் பணம் வீணடிக்கப்ப்டுகிறது.

 

ஆதவன், இங்கு வீடியோவை யாரும் தனிநபர்கள் தரவேற்றி மகிழவில்லை. அந்த வீடியோவை எடுத்த வீடியோ நீறுவனமே தரவேற்றி உலாவவிட்டுள்ளது. இது அக்குடும்பத்தினதோ அல்லது விருந்தினர்களினதோ அனுமதி இல்லாது போடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

படிப்பறிவில்லாதவனால்தான் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்கிறீர்களா?!  :D

 

என்னைப் பொருத்தளவில்...

'அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்!'

 

இதற்கான பதில் யாயினியின் கருத்திலும் வாத்தியாரின் கருத்திலும் உள்ளது.   நான் "படித்தவன்" என்று குறிப்பிடவில்லை.  "படிப்பறிவில்லாதவன்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஏனெனில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல.  யாயினி குறிப்பிட்டதுபோல, உழைத்துப் பெற்ற பணத்தை இப்படி ஒரு நாளில் வீணடிக்க மனம் வராது.   கொண்டாட்டங்கள் செய்வது என்பது வேறு.  ஆனால், இப்படி படம் காட்டி செய்வது என்பது வேறு.  இது படம் காட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

 

ஒருசிலர், தாங்கள் கொடுத்ததை வசூலிப்பதற்காகவும் இதனைச் செய்வதுண்டு.    :icon_idea:

Link to comment
Share on other sites

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

யாருக்குமே தெரியாமல் சில விடையங்களை பெண் பிள்ளைகள் செய்ய முயற்சிக்கும் போது, பெற்றோர்  தாங்கள் முன் நின்று பல லட்சம் கொட்டி செய்யும் இந்த மாதிரியான விழாக்கள் பறவா இல்ல என்று சொல்ல வாறிங்களா அலையக்கா...ம்ம்ம்..

Link to comment
Share on other sites

அலையக்காவுக்கு தான் என்ன சொல்ல வந்தவா என்டது மற‌ந்து போச்சாம். ஒரு "பெக்" அடிச்சிட்டு வந்து விலாவாரியாச் சொல்லுவா.. கொஞ்சம் பொறுங்கோ பிள்ள...   :D

Link to comment
Share on other sites

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

Link to comment
Share on other sites

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

இதுக்குத்தான் சொல்றது இடையிடை இசையரசன் வரவேணுமெண்டு. :D

Link to comment
Share on other sites

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

 

 

நன்றி இசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

Link to comment
Share on other sites

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

 

 

கு.சா. Youtube பக்கம் போறேல்லைப் போல கிடக்கு.  கிடைத்தற்கரிய படங்களைப் போடும் கு.சா.வுக்கு இவை கண்ணுக்கு அகப்படேல்லையோ   :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

ஏபா எசை...
 
சையிக்கிள் கப்பில கடா வெட்றதல எக்ஸ்பேர்ட் ஆய்ட்டாப்பல....  :wub:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிள்ளை ஆசைப்படுகிறா அதனால செய்யிறம்" என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஊரை ஏமாத்தப்போகினம்? பிள்ளை ஆசைப்படுகிற எல்லாத்தையும் செய்து கொடுப்பினமா? 16வயது பிள்ளை ஒருத்தனோட வந்து நின்றாலும் இதே பதில் வருமா?  :icon_idea:

 

இது அவரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப்பிரச்சனை. இவர்கள் செய்வதை பார்த்து நாளை வெறோருவர் தொடங்குவார். அவரிற்கு அறிவில்லையா என்று கேட்கின்றீர்கள்? ஆம் அவர்களிற்கு அறிவு இல்லை! அனைவருக்கும் ஒரே அறிவும் ஒரே மனமும் இருந்தால் இந்த உலகில் எந்தப்பிரச்சனையும் இல்லை. பலசாலியும் பலவீனமானவர்களும் வாழும் உலகமிது. பலவீனமானவர்களை பலமானவர்கள் தூக்கிவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி செய்பவர்கள் பணத்தில் பலமானவர்கள. ஆனால் புத்தியில் பலவீனமானவர்கள். முட்டாள்கள் எப்படி இவ்வளவு பணம் சம்மாதிக்க முயும் என்று கேட்கின்றீர்களா? பணம் சம்மாதிப்பதற்கு அறிவு முக்கிய தேவையல்ல. லாட்டரி சீட்டில் பணம் விழுந்தால் அதற்கும் அறிவு காரணமாக முடியாது தானே. 

 

செய்கின்ற எந்த காரியத்திற்கும் ஒரு குறிக்கோள் வேண்டும். இந்த ஆடம்பரத்தில் என்ன குறிக்கோள் என்று செய்பவர்களை கேட்டால் அவர்களிடம் பதில் வராது. காரணம் தங்களின் பண பலத்தை சொந்தங்களிற்கும் ஊரவர்களிற்கும் காட்டுவதே இவர்களின் நோக்கம். இதனை நேரடியாக வெளியில் சொல்ல மாட்டார்கள். இதை தவிர இந்த விழாக்களில் என்ன பலன் அந்த பிள்ளைக்கும் பெற்றோர்களிற்கும் வந்துவிட முடியும்? 

 

மாறாக மொய் எழுதிகின்றேன் என்ற பெயரில் பலர் ஆயிரக்கணக்கான (இப்பொழுதெல்லாம் நூற்றுக்கணக்காக எழுதுவிதில்லை) பணத்தினை கடனாக விழா நடாத்துபவர்களின் தலையில் கட்டிவிட்டு செல்கின்றனர். பணம் வரும் போது கொண்டாட்டம். அதனை திரும்ப கொடுக்கும் போது வரும் திண்டாட்டம் பற்றி இவர்கள் சிந்திக்கவா போகின்றார்கள். 

 

மொத்தத்தில் விழா நடத்தியவர் தூர நோக்கு பார்வையில் ஒரு பெரும் கடனை சுமக்க வேண்டியுள்ளது. விழாக்கு வருபவர்கள் யாராவது மனதாரா வாழ்த்திச்செல்கின்றார்களா என்று கவனியுங்கள்? சாப்பிட்டு முடிக்க முன்னரே மேடையில் ஏறி வரிசையில் நிற்கின்றார்கள். விழா நடத்துபவர்களும் வந்தவர்கள் நேரத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் 4-5 ஆடைகள் மாற்றுவதில் குறியாக நிற்பார்கள் வந்தவர்களை பற்றி இவர்கள் ஏன் சிந்திக்க வேண்டும். ஒரு வகையில் வந்தவர்கள் இவர்களிடம் கடன் வாங்கிய அடிமைகள் அல்லது கடன் கொடுக்க வந்த வியாபாரிகள். யாராக இருந்தாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் நின்று பணத்தை கொடுத்துவிட்டு தானே செல்ல வேண்டும். 

 

மே 19ஆம் திகதி திருமண விழா செய்தவர்களையும் நவம்பர் 27ஆம் திகதி பிறந்தநாள் விழா செய்தவர்களையும் நான் அறிவேன். ஊரே செத்த வீடாக இருக்கும் போது இவர்கள் மட்டும் விழா கொண்டாடுகிறார்கள் என்றால் இவர்களிடம் போய் எதனை விளங்கவைப்பது? இந்த விழா கொண்டாடியவர்களையும் நான் அப்படி தான் பார்க்கின்றேன்.

 

இப்படியான வெட்டிச்செலவுகளை மிச்சம் பிடித்து இவர்கள் வறுமையில் வாழும் தமிழர்களிற்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்கலாம். அதுவே அந்த பிள்ளைக்கு செய்யும் தொலைநோக்கு நன்மை. 

 

இவ்வளவு பேசுறியே நீ என்ன பெரிய திறமோ என்று மனதிற்குள் கேட்பது விளங்குது. :D

 

நான் கொண்டாட்டங்களிற்கு போவது குறைவு. நேரம் கிடைத்தால் செல்வதுண்டு. நான் மொய்பணம் வாங்கவில்லை என்பதால் வருகின்ற அனைத்து அழைப்பிதழ்களிற்கும் செல்லவேண்டிய கட்டாயம் இல்லை (மொய்பணம் வாங்கவில்லைல என்பதாலோ என்னவோ எனது திருமணத்தில் பாதி மண்டபம் காலியாகவே இருந்தது). நண்பர்களின் கொண்டாட்டம் என்றால் செல்வதுண்டு. நான் வைக்கின்ற சிறிய மொய்க்கு அதிகமாகவே ஆறுதலாக இருந்து அனைத்த வகையான சாப்பாடுகளையும் சுவைத்துவிட்டு தான் வருவேன். இதை மொய் என்று சொல்வதைவிட நான் சாப்பிட்டதற்கான பில் என்றே சொல்லலாம்.  :lol:

மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவது இன்னொரு காரணம். 

 

நான் திருமணம் செய்யும் போது (யாழ்கள கன்னிகளே சோகம் வேண்டாம் :wub: ) எனது அறியாமையால் சில தவறுகள் செய்ததுண்டு. அதற்கு காரணம் எனது முன்னோர்களே. தமிழ் கலாச்சாரம் என்று நான் நினைத்த பலவிடயங்கள் தமிழ் கலாச்சாரமே அல்ல என்பதை பல வருடங்கள் சென்ற பின்னரே அறியமுடிந்தது. எமக்கு முன்னர் விழா செய்தவர்கள் அப்படி செய்யதனால் வந்த வினை இது. பெற்றோர்களும் எமது விருப்பமே என்று விட்டது இன்னொரு காரணம். 

இன்னொரு முறை திருமணம் செய்தால் தவறை திருத்திக்கொள்கின்றேன் :D

 

இப்படியானவர்கள் புதிது புதிதாக சிலவற்றை செய்யும் போது அது காலப்போக்கில் அடுத்த சந்ததிக்கு கைமாறி ஒரு 100வருடங்களில் அதுவே எமது கலாச்சாரம் என்று வந்துவிடும் என்பதே கவலைக்குரிய விடயம். நாம் வாழுகின்ற நாடுகளிற்கேற்றாற்போலும் காலநிலைக்கு ஏற்றாற்போலும் சில விடயங்களை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவை இரண்டிற்கும் பொருந்தாத விடயங்களை மாற்றுவதில் தான் பிரச்சனை. 

 

இப்ப புதிசா ஒரு சம்பிரதாயம் வந்திருக்கு. ஒரு பாடலுக்கு  ஆட்டம் போட்டு அதனை வீடியோ எடுத்து விழா மண்டபத்தில் போட்டுக்காட்டுவது. சரி அவர்கள் பணம் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் சில வேளைகளில் அவர்களை பார்ப்பதற்கே சகிக்கமுடியாமல் இருக்கும். சற்று குண்டான ஒருவர் சற்றும் பொருத்தமில்லாத ஆடைகளை போட்டிருப்பார். கேட்டால் அது விலையுயர்ந்த ஆடையாம். இந்த வீடியோக்களை பார்த்து சிரித்தது தான் அதிகம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு :rolleyes:

 

இந்த வீடியோக்கள் என்றைக்கு சமூக வலைத்தளங்களில் வருகின்றதோ அன்றே இது பொதுவிடயமாகி விடுகின்றது என்பதை இனி என்றாலும் விளங்கிக்கொள்ளுங்கள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.