Jump to content

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-1


Recommended Posts

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு- 1

---------------------------

என்ர மண்டலாய்ப்பிள்ளையாரே!!!

இவங்களின்ர கோமாளிக்கூத்துகளை பாக்க வயித்தப்பத்தி எரியுது.

கொஞ்ச நாளுக்கு முன்னம் சத்தியப்பிரமாணம் செய்யுறதெண்டா எல்லாரும் ஒற்றுமையா

1.எங்கட மக்களுக்கு முன்னால்

2.முள்ளிவாய்க்கால் மண்ணில்

3.தந்தை செல்வாவின் நினைவு சமாதியின் முன்

செய்யுங்கோ எண்டு புலம்பியிருந்தம்!

இந்த கோதாரி விழுந்த மர மண்டைகளுக்கு ஒண்டும் விளங்கயில்லை!

இந்த சின்ன விசயம் கூட விளங்கயில்லை எண்டா உவங்கள் மாகாண சபையில என்னத்தை புடுங்கபோறாங்கள்??

ஒருத்தன் மகிந்தவுக்கு முன்னாலையும் இன்னும் கொஞ்சம் தந்தை செல்வாவின் நினைவு சமாதி முன்னாலையும் இப்ப இன்னும் கொஞ்சம் முள்ளிவாய்க்கால் மண்ணிலும் சத்தியப்பிரமாணம் எடுக்குதுகள்!

எனக்கு வாயில நல்லா வருகுது!

அடே நாசமறுப்பாரே உங்கள் எல்லாரையும் ஒண்டா ஒற்றுமையா இருங்கோ எண்டால் நீங்கள் என்னண்டா கோமாளிக்கூத்தல்லோ ஆடுறியள்!!!

தேர்தல் முடிஞ்சு ஒருமாதம் ஆகுறதுக்குள்ளயே இந்த வெட்டுகுத்துப்படுறியள்!

இனி என்னவெல்லாம் கூத்து காட்டப்போறியளோ!!!!!

ஏற்கனவே குப்பனும் சுப்பனும் வேலோடையும் நரைச்ச தலையில கிரீடத்தோடையும் கிளம்பிட்டாங்கள்!

பாவமடா நாங்கள்!

உங்களை நம்பித்தானே வாக்குப்போட்டம்.

எங்களின்ர வலிகளையும் கனவுகளையும் தியாகங்களையும் உறுதியையும் உங்கட சுயலாபங்களுக்காக பயன்படுத்தாதையுங்கோ!

சனம் பேசாமல் இருக்குது எண்டதுக்காக எல்லாத்தையும் ஏத்து கொண்டு இருக்குதுகள் எண்டு மட்டும் தப்புகணக்கு போடாதையுங்கோ!!!

இந்த தேர்தலில கொஞ்சபேர் பாடம்

பாடம் படிச்சிட்டினம்!

அது உங்களுக்கு வாசியாப்போச்சு!

உப்பிடியே போனியள் எண்டா அடுத்த தேர்தலில எங்கட சனம் நல்ல வடிவா பாடம் படிப்பிக்கும் கண்டியளோ!

அடே எங்கட பொடியள் அடுத்த தேர்தலில நில்லுங்கோடா!

அப்புவும் ஆச்சியும் ஊர் ஊரா போய் உங்களுக்கு வாக்கு போடச்சொல்லி கேக்குறம்!

உந்த கனக்க படிச்சவங்களையும் அரசியல் வலசுகளையும் கலைச்சுப்போட்டு ,

எங்கட அரசியல் போராட்டத்துக்கு இள ரத்தம் பாய்ச்சவேணும்!

எங்கட கம்பஸ் பொடியள் மனசுவைச்சா அது நடக்கும்!

எதையும் ஆரம்பிக்கைக்குள்ள தான் கொஞ்சம் கஸ்ரமடா பொடியள்!

நீங்கள் உறுதியா ஒற்றுமையா நில்லுங்கோ!

சனம் உங்களுக்கு பின்னால வரும்!

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் மாணவர் சார்பா ஒருத்தனை நிப்பாட்டுங்கோ!

நாங்கள் போடுறம் வாக்கு உங்களுக்கு!

ஆரையும் நாங்கள் உசுப்பேத்தயில்லை!

காலம் சில மாற்றங்களை தரும் பாருங்கோ!

அப்ப நான் சொன்னது கண்டிப்பா நடக்கும்!

உந்த அறுப்பார் செய்யும் அளப்பறைகளை தங்க்கமுடியல்லடா பொடியள்!

உந்த குறுக்கால போவாரின்ர கதையைக் கதைச்சு

அடியே எனக்கு களைக்குது!

சூடா தேத்தண்ணி ஒண்டைப்போடு!

குடிச்சுப்போட்டுத்தான் மிச்சம் கதைக்கவெணும்!

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தான் எப்ப அறிவும் ஆற்றலும் நேர்மையும் உள்ளவனுக்கு வாக்கு போட்டிருக்கிறான். அவையவையிண்ட யோக்கியதைக் கேற்பத்தான் அவையிண்ட மேய்ப்பான் அமைவான்.  கோமாளித்தனமான மக்களுக்கு கோமாளித்தனமான தலைமைதான் கிடைக்கும். குண்டுச் சட்டிக்கை குதிரை ஓட்டுற மக்களுக்கு குண்டு சட்டிக்கை குதிரை ஓட்டுகிற தலைவர்தான் கிடைப்பார். யாழ்ப்பான பல்கலைகழகத்தின் அறிவு திறன் ஒரு மேல்நிலை பள்ளியின் அறிவுத் தரத்துக்கு சற்று மேல். அவ்வளவுதான். அதை எல்லாம் பல்கலைக் கழகம் என்பதே பல்கலைக் கழகங்களுக்கு அவமானம். அவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவதை விட கூட்டணி கோமாளிகள் எத்தனையோ மேல்.

Link to comment
Share on other sites

ஒரு புறுபுறுப்பை வாசிப்பம் எண்டு வந்தால் இரண்டை வாசிக்கும்படி ஆகிட்டிது.. :D

Link to comment
Share on other sites

ஒரு தலைமுறை போராட்டம் என்டு வெளிக்கிட்டு ஒழுங்கா படிக்காம காலத்தை வீண்டிச்சுட்டுது. அடுத்த தலைமுறையாவது படிக்கட்டும் தமிழ் கிழவா. படிச்சு முடிச்சு பட்டம் பெற்று திறமையா அரசியல இறங்கட்டும். நீ தவறணையால வந்தமாம் கிழவின்ட கையால் சாபிட்டமாம் ஒரு சுறுட்ட பத்தினமாம், பேசாம படுத்து !!!!! தூங்கினமாம் என்டு கிட கிழவா!!!!!

Link to comment
Share on other sites

இந்தக் கிழடுகட்டையளிட்ட இவ்வளவுநாளும் பட்ட பாடு போதும். ஒருக்கால் இளம் பெடியளிட்டையும் கொடுத்துப் பார்ப்பம்.

இவ்வளவு நாளா நடந்ததைவிட என்ன ஆகப்போகுது....? பெடியள் தரவளியள் என்ன செய்யுறாங்கள் என்று அவங்களின் கையில் எங்கள் அதிகாரத்தைக் கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும்...! ஆனால்.... இந்த கிழடுகட்டையள் செய்த அநியாயக் கூத்துக்களையும் ஒத்தூதும் வேலைகளையும் செய்ய மாட்டாங்கள் என்பது மட்டும் நிச்சயம். அது போதுமே!!! :)

'மாற்றம்' என்பது மாறுதலுக்கான அவசியமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.