Jump to content

இயற்கை விவசாய ஆர்வலர் நம்மாழ்வார் காலமானார்


Recommended Posts

இவருக்கு முத்திரை வெளியிட ஆதரவு கேட்டு petition திறந்துள்ளார்கள். விரும்பியோர் கையொப்பமிடுங்கள். http://www.change.org/en-IN/petitions/ministry-of-communications-and-information-technology-govt-of-india-release-a-commemorative-postage-stamp-for-dr-g-nammalvar-the-organic-scientist-from-india?share_id=GmHThFmcXm&utm_campaign=autopublish&utm_medium=facebook&utm_source=share_petition

 

விரும்பாதோர் தவிருங்கள். தயவு செய்து மட்டம் தட்டி யாரும் கருத்து எழுத வேண்டாம். :rolleyes:

Link to comment
Share on other sites

நம்மாழ்வார் யாருக்கும் கெடுதல் செய்து இருக்க முடியாது....ஆகவே அவரை பற்றி அவதூறு பரப்புவர்கள் என்றும் யாரும் இருக்க முடியாது....

Link to comment
Share on other sites

உழவுக்கும் உண்டு வரலாறு : திரு. கோ.நம்மாழ்வார்

 

nammalvar.jpg

ஒரு வருடத்திற்கும் முன்பே நான் வாசித்த நூல் "உழவுக்கும் உண்டு வரலாறு". திரு. கோ.நம்மாழ்வார் எழுதிய இந்த புத்தகம் ஏற்படுத்திய வலி ஒரு ஆறாத் துயரமாக நீடிக்கிறது. வேளாண்மை என்றாலே என்னவென்று தெரியாமல் இருக்கும் இன்றைய நகரத்து குழந்தைகள் இயற்கை வேளாண்மை பற்றி எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.

நம் சமூகத்தில் பெரும்பாலும் விவசாயிகளின் குறைகளையோ வேளாண்மையில் நடக்கும் தவறுகளையோ குறித்து அதிகம் பேசுவதில்லை. வேளாண்மை தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று பொதுவான வார்த்தைகளை பேசிவிட்டு விலகி நின்று கொள்கிறோம். இதன் விளைவு, அடுத்த தலைமுறை பற்றி கூட கவலைப்படாத வேளாண்மை இன்று இந்த தேசம் எங்கும் நடக்கிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பான எந்த சிறப்பான முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் எடுப்பது போலவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் திரு.நம்மாழ்வார் போன்ற இயற்கை மகத்துவம் தெரிந்த மாந்தர்கள் போராடுவது ஆறுதலான விஷயம் தான். ஆனால் இன்றும் இந்த மனிதர்கள் போராடிக் கொண்டிருக்க, நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது தான் இதில் கொடூரமானது.

இவர்கள் நமக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதே பலரும் புரிந்து கொல்லாத சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்றைய விவசாயிகள் படிப்பதை விடவும் இன்றைய நகரத்து இளைஞர்கள் படிக்க வேண்டியதே அவசியம் என நினைக்கிறேன். வேளாண்மை செய்ய முடியாதவர்கள், குறைந்தது இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கவாவது முன் வரவேண்டும்.

திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுடைய உரையையும் கேட்டுப்பாருங்கள்.

 

 

Link to comment
Share on other sites

அய்யா நம்மாழ்வார் இறுதி நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான்..

 

1512628_688922304480715_1237235008_n.jpg

 

1536478_688922404480705_753754993_n.jpg

 

1526601_688922431147369_74447043_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.