Jump to content

நூலகத்த எரிச்சவையள் காணி ஆவணங்களையும் எரிக்க துவங்கியிருக்கினம்? யாழ்ப்பாணத் தம்பி


Recommended Posts

Army%20attack_CI.jpg

கடவுளே நல்லூரானே உனக்கு கண் இல்லையே? இப்பிடி எல்லாம் ஒரு மண்ணில அநியாயம் நடக்குதே! ஒரு நாள் இரண்டு நாளாh? ஒரு இடம் இரண்டு இடமா? ஒவ்வொரு நாளும் தமிழரின்ட காணியள பிடிக்க ஓயாமால் வாறாங்களே? எங்கட சனத்த நிம்மதியாய் இருக்க விடாம உப்பிடி அலைக்கிறாங்களே? இப்பிடி எல்லாம் தாத்தா திண்ணையில இருந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். 

நானும் வடிவா பாத்து வைச்சிருக்கிறன். 
 
ஏன் தெரியுமே? நாளைக்கு எனக்கும் உந்த நிலைதானே?
 
டெய்லி ஒரு காணிக்கு சுவிகரிப்பு நோட்டிசு அனுப்பத் திரியிறினம். எத வளைச்சுப் போடலாம் எண்டு திரியிறினம். ஒண்டக் கவனிச்சியளே? முந்தி சனங்கள் எங்கட காணியை தா எண்டு வலி வடக்கிலயும் அத மாதிரி இடங்களிலயும் போராட்டம் நடத்திச்சுதுகள். இப்ப இவன் எங்கட படலைக்குள்ளயே வந்திட்டான். 
 
குந்தியிருக்கவும் விட மாட்டினமாம்
 
ஆமிக் காம்பு அமைக்கிறத தவிர வேறு ஒரு நோக்கமும் இல்லாத சட்டம் ஒன்றை எங்கட மண்ணில நடைமுறைப்படுதியருக்கினம். ஓம் காணி சுவீகரிப்புச் சட்டமாம். அத வைச்சு எங்கட மண்ணை அபகரிச்சு திண்ணுற திட்டம் உவைக்கு. கேட்டால் சட்டமாம். உங்கட சட்டங்கள் எங்கள பயங்கரவாதி எண்டு குண்டு போடுற சட்டம்தானே. அது எங்கள அழக்கிற சட்டம்தானே. அது எங்கட மண்ணையும் அழிக்கும் அபகரிக்கும். ஓ.. அது அவையின்ட கண்டறியாத சட்டம். 
 
அதென்ன நீதியான சட்டமே? 
 
இப்ப இன்னொரு புதினம் இண்டைக்கு நடந்திட்டுது. அந்த மனுசி ஒப்பாரி வைச்சு அழுகுது. உதப் பாத்து எங்கட பாட்டிகொல்லைப் பக்கமாய் திட்டிக் கொண்டு போகுது. காணிக்குச் சொந்தகாரின்ட வீட்டில போய் காணிக்குரிய ஆவணங்கள எடுத்து எரிச்சுக்கிடக்காம். ஆமிய கேட்டார் இனந்தெரியாத நபர்களாம். உந்த இனந்தெரியாத நபர்கள் ஆர் எண்டும் அவையள் என்ன செய்வினம் எண்டும் தெரியும்தானே. 
 
அந்த காணிக்கார மனுசி அழுது குளறு. துடிக்குது. பாவம்.  
 
அடக்கோதாரி! ஆமி அபகரிக்கிற காணியின்ட ஆவணத்த மட்டும் ஏன் எரிக்கவேணும்? இப்பிடி எல்லாம் குள்ள நரி வேலையள் பாத்து எங்கட காணியள பிடிக்க நிக்கினம் எண்டால் உவையள் எப்பிடிப்பட்ட ஆக்கள்? இது எப்பிடியான காலம் எண்டு பாருங்கவன். யாழ்ப்பாண நூகலகத்தை எரிச்சதுக்கும் உதுக்கும் என்ன வித்தியாசம்? 
 
அத எரிச்சவை உத எரிப்பினம்தானே? 
 
எல்லாத்தையும் எரிக்கவும் அழிக்கவும் மட்டும்தான் தெரியும்!
 
எங்கட சனங்களே உங்கட காணி ஆவணங்கள் எல்லாத்தையும் கவனமாய் வைச்சிருங்கோ. நானும் எதப் பாதுகாக்கச் சொல்ல? கருவில இருக்கிற உங்கட குழந்தைய பள்ளிக்குப் போற சின்னஞ் சிறுமியள, காணி ஆவணங்கள, காணிய எல்லாத்தையும் கவனமாய் வைச்சிருங்கோ. 
 
கொலைகாரப் படையள் நிக்கிற மண்ணில ஆடு, மாடு, நாயள் எல்லாம் கவனம்! 
 
இனியும் என்ன நடக்கவேணும்? 
 

யாழ்ப்பாணத் தம்பி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109724/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.