Jump to content

Tesco PLC நிறுவனத்துடன் இணைந்து தமது உலகளாவிய பிரசன்னத்தை விஸ்தரிக்கும் MD


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
MdLogo.JPG
MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருகின்றது. 1919ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெஸ்கோ நிறுவனமானது தரமான மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புக்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கி உலகளவில் முன்னணியில் திகழ்கிறது.
 
டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் பிரசித்தி பெற்ற பழக்கலவை, அன்னாசி மற்றும் விளாம்பழச் சுவை கொண்ட MD ஜாம் வகைகளும், MD இன் புகழ்பெற்ற தயாரிப்புகளான extra hot chillie sauce மற்றும் green chillie sauce போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தற்போது MD கட்டச் சம்பல், மாழ்பழ சட்னி மற்றும் விளாம்பழ நெக்டா பழச்சாறுகள் போன்றனவும் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
மேலும் எதிர்காலத்தில் ஷர்பட் சிரப் மற்றும் நெல்லி கோர்டியல் போன்ற MD கோர்டியல் வகைகளும் தேங்காய் வினாகிரி மற்றும் கித்துல் பாகு போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
 
இந்த அபிவிருத்தி குறித்து லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.எஃப்.தோஸா கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய சில்லறை வலையமைப்பினை கொண்ட டெஸ்கோ பிஎல்சி போன்ற நிறுவனத்தில் எமது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உயர்தரத்துடன் நாம் உற்பத்தி செய்யும் தயாரிப்புக்களின் சுவையை தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பாவனையாளர்களும் அனுபவிக்க முடியும். இது எம்மை இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தியாளராக எம்மை முன்னேற்ற வழிவகுக்கும்' என்றார். 
 
லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் MD வர்த்தகநாமமானது பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தல் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கை சந்தையில் MD ஜாம், கோர்டியல் மற்றும் சோஸ் வகைகளுக்கு என தனித்துவமான இடத்தை கொண்டுள்ளது. MD தயாரிப்புக்கள் தற்போது USA, UK, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. MD ஆனது SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Tesco இலங்கையில் sourcing centre திறந்துள்ளது. சிங்கள நிறுவனங்கள், அதன் ஊடாக பொருட்களை அனுப்புகிறார்கள். 

சாதாரண மார்கெற்றிங்கே தெரியாதவர்கள், Tesco வுடன் இனைவதில் என்ன பிரியோசனம்?

பிரிட்டனில் தமிழர்கள் அதிகம். அவர்கள் கடைகளும் அதிகம். அங்கே விற்கும் விலையிலும் பார்க்க அதிக விலையில் Tesco வில் விற்றால் யார் வாங்குவார்கள்?

Asda எனும் இன்னுமோர் பெரும் அங்காடியில் அதிக விலையில் சூரியா மிளகாய்த்தூள், சீனீசம்பல் பார்த்தேன். அடுத்தவாரம் clearance பகுதியில், discount விலையில் பார்த்தேன். வாங்கினேன். அவர்கள், இந்தியர் நிறுவனம் ஊடாக கொடுத்த படியால், அவர்கள் அதிக விலை போட்டு விட்டார்களாம்.

அவ்வளவுதான். இனி சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

முயல்வது நன்று, ஆனால் சரியான Strategy ம் தேவை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா மிளகாய்த்தூள் நிரு வின் ஏக போக இறக்குமதி(Monopoly) பொருள். சூரியா தயாரிப்புகள் இங்கு வரமுன்னரே kingsமிளகாய்த்தூள்க்கு எதிராக நிருவின் மிளகாய்த்தூள் போட்டியில் நிற்க முடியாமால் ரெடிமேட் ஆக நிருவால் இந்தியாவில் இருந்து ஏகபோக இறக்குமதி உரிமையை பெற்று ஐரோப்பாவில்  விநியோகம் செய்யபட்டது .

2013 ல் தமிழ்கடைகளை விட tesco வில் niru தயாரிப்புகள் விலை குறைவு இதை தமிழ் பெரிய கடைகள் முற்றாக niru தயாரிப்புகளை நிராகரிக்க தொடங்க niru இறங்கி வந்தது md க்கு முதல் niru தமிழருடையது .தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் உள்ள tesco வில் இன்றும் niru ,trs போன்ற தயாரிப்புகளை காணலாம் .நீங்கள் clearanceல்  எடுத்தது அவர்களுடைய உண்மையான விற்பனை விலையாக இருக்கலாம் .

கொசுறு . சூரிய மிளகாய்த்தூள் பெற்ற வெற்றியை தொடர்ந்து சூர்யா கொம்பனி தூள் தவிர்ந்த அவர்களின் மற்றைய தயாரிப்புகளை லண்டனில் அறிமுகபடுத்தி மொக்கை அடி வேண்டுவதும் நடக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா மிளகாய்த்தூள் நிரு வின் ஏக போக இறக்குமதி(Monopoly) பொருள். சூரியா தயாரிப்புகள் இங்கு வரமுன்னரே kingsமிளகாய்த்தூள்க்கு எதிராக நிருவின் மிளகாய்த்தூள் போட்டியில் நிற்க முடியாமால் ரெடிமேட் ஆக நிருவால் இந்தியாவில் இருந்து ஏகபோக இறக்குமதி உரிமையை பெற்று ஐரோப்பாவில்  விநியோகம் செய்யபட்டது .

2013 ல் தமிழ்கடைகளை விட tesco வில் niru தயாரிப்புகள் விலை குறைவு இதை தமிழ் பெரிய கடைகள் முற்றாக niru தயாரிப்புகளை நிராகரிக்க தொடங்க niru இறங்கி வந்தது md க்கு முதல் niru தமிழருடையது .தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் உள்ள tesco வில் இன்றும் niru ,trs போன்ற தயாரிப்புகளை காணலாம் .நீங்கள் clearanceல்  எடுத்தது அவர்களுடைய உண்மையான விற்பனை விலையாக இருக்கலாம் .

கொசுறு . சூரிய மிளகாய்த்தூள் பெற்ற வெற்றியை தொடர்ந்து சூர்யா கொம்பனி தூள் தவிர்ந்த அவர்களின் மற்றைய தயாரிப்புகளை லண்டனில் அறிமுகபடுத்தி மொக்கை அடி வேண்டுவதும் நடக்குது .

Exclusive என்று வரவேண்டும். Monopoly வேறு அர்த்தம் அல்லவா?

நான் வாங்கியது சீனி சம்பல் £1. தமிழ் கடைகளில் £2.69.

சூரியா இந்திய தயாரிப்பு. சப் காண்ட்ராக் கொடுத்து அவர்கள் தடை செய்யப்பட்ட டை கலந்து இங்கே இரண்டு தடவை கண்டைனர் தடுக்கப் பட்டதாக கேள்வி. அதனால் நான் வாங்குவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர்களுடையது monopoly business தான் ஒரு பிராண்டை உருவாக்கி அவர்கள் எண்ணப்படி விலையை நிர்ணயிப்பது,மற்றயவர்கள் யாரும் அந்த பிரண்ட் பெயரோ அல்லது அந்த பெயரில் இறக்குமதி செய்யவோ முடியாது இங்கு கூட சூரிய கம்பனியால் லண்டனில் சூர்யா மிளகாய்த்தூள் விற்க முடியாது .monopoly business இதில் விண்டோவ்ஸ் ம் அடக்கம் .oligopoly market என்ன என்பது நீங்கள் விளக்குவீர்கள் என நம்புறன் .

கிங்க்ஸ் ன் விலை உடன் பார்க்கையில் உணவுசாலைகளுக்கு சூர்யா மிக மலிவான ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

Monopoly என்பது தனிக்காட்டு ராஜா போன்றது. சூரியா மட்டுமே போட்டியில்லாது மிளகாய்த்தூள் செய்தால் Monopoly. ஆனால், Kings, Leela என சந்தையில் பல இருப்பதால் monopoly கிடையாது. சந்தையில், சில போட்டியாளர்கள், ஒருவர மட்டுமே (சூர்யா?) முன்னிலையில் என்றால் Oligopoly.

இங்கே இருப்பது Oligopoly. ஆனால் யார் முன்னிலை என தெரியவில்லை.

ஆனால் சூரியாவின் மிளகாய்த்தூள், UK விநியோகத்தர், பெருமாள் மட்டுமே ஆயின் exclusive distributor.

மேலும், Windows தனது monopoly நிலையை, ஆப்பிள், Unix போன்ற போட்டியாளர் வரவால் இழந்து விட்டது.

இன்னுமோர் வகையில் பார்ப்போமா? இலண்டணுக்கும், பாரிசுக்கும் ரயில் விடுவதில் ஈரோ ஸரார் Monopoly. விமானசேவையில், Easyjet, BA, Air France, Ryanair இருப்பதால் அங்கே monopoly இல்லை.

ஈரோ ஸரார் monopoly ஆயினும், மக்களுக்கு, விமானம், Ferry என பல choices இருப்பதால், தான் நினைத்த விலை அடிக்க முடியாது.

நீங்கள் சொல்ல வருவதில் எனக்குப் புரிவது என்னவெனில், BMW brand காரில் என்ஜினை அகற்றி, பென்ஸ் brand என்ஜினை போட்டு BMW என விற்க முயல்வது. அது மோசடிக் குற்றம். (Copy right & Brand infringement )

சரி, ஒரு மாதம் இங்கே இலண்டனில் மட்டும் எவ்வளவு 900g மிளகாய்த்தூள் பக்கற் விற்கிறது என ஒரு அனுமானம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

தெரியும், வேடிக்கைக்காக சொன்னேன்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பிக்கல் பிடுங்கல் எண்டுபோட்டுத்தான் நம்ம ஆக்கள் சிலர் இப்ப மிளகாய்த் தூளில் இருக்கும், மிளகாயை தூக்கிப் போட்டு தனியே தூளை மட்டும் கடத்தி நல்ல சோக்கா வாழீனம் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

 

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

அப்படி எண்டால், மாதம், உலகெங்கும் 200,000 பாக்கெற்றுகள் என்று சொல்லலாமா?

சரி நாதமுனி பிராண்டை, எப்படி நம்பர் ஒன் ஆக்கலாம் என்று Tips தாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

பல வீட்டு தலைவிகளின்  நம்பிக்கையான பிராண்ட் என்பதை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

சொல்லுங்க, மீன் கதையை?

சரி, அவுசில் என்கிறீர்கள், நிரு கனடாக் காரர். அவரது உறவினர் லண்டணில், சூரியாக்காரர் என்று கேள்விப்பட்டேன். தவறானதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.