Jump to content

"சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

OxfordSt_0802.JPG

என்ன கமலரஜனி..... லண்டனில.. ஏ/எல் சோதின மறுமொழி வந்திட்டுதாம்.. மகனுக்கு எப்படி... உங்க உள்ள பிரபல்யமான ஜூவலரி கடை முதலாளிட மகளுக்கு கேம்பிரிஜ் மெடிசின் கிடைச்சிருக்காம்.. கேள்விப்பட்டினியே..??!

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

அட லண்டனுக்குப் போனதும்.. பெயரையும் மாத்திப் போட்டியே. பறுவாயில்ல..! லண்டன் நாகரிகம் உனக்கும் நல்லாப் பிடிச்சிருக்குப் போல.

இல்ல.... அக்கா. இங்க ஆக்கள் கூப்பிட சுகம் என்று தான். நீண்டுப் பெயர் என்றால் கூப்பிடுறது கஸ்டமெல்லோ..! அதுவும் இல்லாமல்.. அதென்ன.. சினிமாக்காரங்கட பெயரில தூக்கி கலந்தடிச்சு எனக்கு வைச்சு விட்டிருக்கினம்.. என்ற வெறுப்பும் தானக்கா.

சரி சரி.. அதை விடு.. இப்ப பொடிக்கு யுனீவேர்சிட்டி கிடைக்குமோ.. இல்ல...

இன்னும் சரியா தெரியல்லயக்கா. இன்னும் ஒரு கட்டம் சோதனைகள் இருக்குது. அது முடியத்தான் தெரியும் அக்கா. நேற்றும் ஒரே சண்டை. செய்தன் செய்தன் என்டா.. என்ன எல்லாம் குறைஞ்சு வந்திருக்குது... என்று பேசிப் போட்டன்.வெள்ள, கறுப்பெண்டு.. ரியூசனுகளுக்கும் காசைக் கொட்டிப் போறான். நான் அவனைப் பேச அவன் பதிலுக்கு படிச்சு என்னத்தைக் காணப் போறன்... அம்மா நீங்கள் படிச்சுப் போட்டோ லண்டனுக்கு வந்தனீங்கள் என்று கேட்கிறான்..! இந்தக் காலத்தில பிள்ளையளப் பெத்து வளர்க்கிறது சரியான கஸ்டம் அக்கா. அதுவும் வெளிநாட்டில இன்னும் சரியான கஸ்டம். பொம்பிளப் பிள்ளையள் என்றால் சொல்லி வேலை இல்ல. நாய் மொச்ச கணக்கா அதுகளின்ர வீட்டை மொய்ப்பாங்கள் பொடியங்கள்..! ஏதோ எங்களால இயன்ற மட்டும் சமாளிக்கிறது தான். இல்லது வீட்டை விட்டு ஓடிடுங்களே..!

உன்ர பொடியின்ர பலன் என்னவாம். சாத்திரம் கேட்டுப் பாத்தனியே..! இங்க சாத்திரம் கேட்டுச் சொல்லவே. நல்ல ஒரு சாத்திரி இந்தியாவில இருந்து வந்திருக்குது. போர் முடிஞ்சது தான் தாமதம்.. உந்த மலையாள.. மாந்திரிகள் எல்லாம் இப்ப யாழ்ப்பாணத்துக்க தான் நிற்குதுகள்.

அதையேன் அக்கா பேசுவான். இங்க லண்டனிலும் அதுகளிற்கு குறைவில்ல. வீதி வீதியா நின்று ஒரு துண்டையும் எழுதி வைச்சுக் கொண்டு போற வாற ஆக்களட்ட நீட்டிக் கொண்டு நிற்குதுகள். பொம்பிளையளையும் கூட்டிக் கொண்டு வந்து எப்படித்தான் உழைக்குதுகளோ.. தெரியல்ல..??! முழத்துக்கு முழம் நிற்குதுகள். இப்ப அங்கையும் வந்திட்டுதுகளே..??!

ஓமடியப்பா. இங்க சனம்.. படையெடுக்குது. வெளிநாட்டுக்கு போற பலன்.. படிப்பு.. பதவி.. காதல்.. குழந்தைப் பாக்கியம்.. வீடு.. வாகனம்.. வசியம்.. பில்லி.. சூனியம்.. என்று அவங்களும் சொல்லாத குறிகள் இல்ல..!

எங்கட சனங்கள் உதுகளை இன்னும் நம்புதுகளே அக்கா..?!

நீ வேற.. எங்கட பவளம் அன்ரி.. வீட்டுக்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்கள் என்று சொல்லி.. அவான்ர மகன் கனடாவில இருந்து காசனுப்ப.. இரண்டு இலட்சம் செலவழிச்சு.. கழிப்பு கழிச்சவா எண்டால் பாரன். அதுவும் இல்லாமல் பர்வதம் பெத்தாச்சி.. பேத்திக்கு யாரோ லண்டனில வசியம் வைச்சிட்டாங்களாம் என்று அதை தேசிக்காய் வைச்சு வெட்ட வந்து நிண்டா..!

ஆஆ.. நீங்கள் உதுகளைச் சொல்லத்தான் எனக்கும் நினைவு வருகுது. இவன் என்ர பொடிக்கும்.. படிப்பை இடையில குழப்புவான் என்று முந்தி இந்தியா போன மூட்டம் கேட்க ஒரு சாத்திரி சொன்னவன். இவன்ர கதையை பார்த்தால் குழப்புவான் போலக் கிடக்கு. எதுக்கும் அவன்ர குறிப்பை ஈமெயிலில அனுப்பி விடுறன் பார்த்துச் சொல்லுறீங்களே அக்கா.

அதுக்கென்னடி. பார்த்துச் சொல்லுறன். அதுசரி.. உன்ர மகனுக்கு கேர்ள் பிரண்ட் அதுஇதெண்டு இருக்கே. அதனால சிலவேளை படிப்பில கவனம் குறைச்சிருக்கலாம் இல்லையே..!

அப்படி ஒரு சிலமனும் இல்ல. முந்தி ஒன்றோட கதைச்சுக் கொண்டு திரிஞ்வன் தான். அது வேற்று மதம்.. அம்மம்மா பேசுவா என்று சொல்லி முறிச்சு விட்டிட்டன். அவன் அம்மம்மா சொன்னால் கேட்ப்பான். அவாக்கு கலை வாறது தானே. ஒருக்கா இஞ்ச லண்டனுக்கு வந்து நிற்கேக்க கலை வந்திட்டுது. அப்ப அவா இவனுக்கு கலைல விபூதி அடிச்சுப் போட்டு சொன்னவா.. அம்மா அப்பா சொல் கேட்டு நட என்று. அதுக்குப் பிறகு அம்மம்மா என்றால் சரியான பயம். சாமி பக்தியும்..!

அதுதான் நல்லது. அப்படி வெருட்டி வைச்சால் தான் உந்தப் பிள்ளையள் கொஞ்சம் என்றாலும் அடக்க ஒடுக்கமா இருக்குங்கள். என்ன பாடுபட்டு என்றாலும் அவன யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிப் போடு. இல்ல இஞ்ச நான் தலைகாட்ட முடியாது. உன்ர ஒண்டவிட்ட தங்கச்சிட மகனுக்கு லண்டனில யுனிவேர்சிட்டி கிடைக்கல்லையாம். ரவுடியா சுத்துதாம் என்று நக்கலும் நளினமும் கூடிடும்..!

எனக்கு தெரியும் தானேக்கா. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதெண்டு. என்னால இயன்ற மட்டும் முயற்சிப்பன். போறதும் விடுறதும் பிள்ளைகளின்ர பலனிலும் இருக்கல்லே அக்கா.

ஓம்.. நீ சொல்லுறதும் சரி தான். எதுக்கும் அவன்ர குறிப்பை மறக்காமல் அனுப்பி விடு. நான் சாத்திரியிட்ட கொடுத்து.. பார்த்துச் சொல்லுறன். சரியே.

சரியக்கா. உங்கட உதவிக்கு நன்றி. இப்பவே அனுப்பி விடுறன். அந்த பழைய ஈமெயில் தானே.. இப்பவும் பாவிக்கிறியள்.

ஓம்.. அதுதான்ரியப்பா இப்பவும் பாவிக்கிறன்.

சரி.. சரி.. மகன் ஸ்கூலால வந்திட்டான். சாப்பாடு போட்டு தீத்தி விடனும்.

என்ன.. அவனுக்கு இப்ப தானே பெரிய கோல் எடுத்து 18 வது பிறந்த நாள் கொண்டாடினா. இன்னும்.. சாப்பாடு தீத்தி விடுறியோ..??!

அதையேன் அக்கா கேட்கிறீங்கள்.. அவனுக்கு படிக்கிறதும்.. லப் டொப்பில படம் பாக்கிறதும்.. ஐபொட்டில பாட்டுக் கேட்கிறதும்.. கேம் விளையாடிறதும்.. கால்பந்து விளையாடுறதும் தான் தெரியும். ஒரு வீட்டு வேலை செய்யமாட்டான். உடுப்பை வாசிங் மிசினில போடக் கூடத் தெரியாது. கசங்கின உடுப்பை அயன் பண்ணத் தெரியாது. சாப்பாடும் போட்டுக் கொடுத்தால் தான் சாப்பிடுவான். சில நேரம் தீத்தி விடனும். இல்ல தூக்கி வீசிட்டு.. மக்டொனால்ட் போறன் என்று போயிடுவான். சமைச்ச சோறு கறி கிடந்து இழுவிண்டும்..!

நல்ல பழக்கம் பழக்கி வைச்சிருக்கிறா. உவன் எப்படி வெளில போய் பிழைக்கப் போறானோ..??!

அவனுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்குது. யுனிவேர்சிட்டிக்கு போனால் எல்லாம் பழகிடுவான். எதுக்கும் யுனிவேர்சிட்டிக்கு போற பலன் இருக்கோ என்று நீங்கள் ஒருக்கா சாத்திரிட்ட கொடுத்து மறக்காமல் பார்த்துச் சொல்லுங்கோ. அவன்ர வாழ்க்கையே யுனிவேர்சிட்டில தான் இருக்குது. அது சாத்திரியின்ர வாக்கில தான் தங்கி இருக்குதக்கா.

சரி சரி..ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாத்தையும் கடவுள் மேல பாரமாப் போட்டிட்டு... சாத்திரியை நம்பு.. அப்புறம் பார்.. அவன் எல்லாம் பாஸாகி.. யுனிவேர்சிட்டி போய்.. பட்டமும் எடுத்திடுவான்.

சரி அக்கா. நீங்கள் சொல்லுற படியே செய்யுறன். எப்படியாவது அவனை யுனிவேர்சிட்டிக்கு அனுப்பிட்டன் என்றால் அது போதும் அக்கா.

வேற என்ன.. அப்ப நான் வைக்கிறன். இங்கையும் பொழுது இரவு 8 ஆச்சுது. அவர் வெளில போனவர் வரப் போறார். புட்டுக் கொத்திப் போட வேணும்.

சரி அக்கா.. நானும் அவனுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்கப் போறன். வைக்கிறன் அக்கா.

சரிடி. பிறகு கதைக்கிறன். பாய்.

பாய் அக்கா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கள உறவுகளினதும் மோகன் அண்ணாவினதும் அபிப்பிராயப்படி கதையின் தலைப்பில் தவறான புரிதலுக்கு இடமில்லாத வகையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

*****************************************************************************************************************************************************

நன்றி.

நட்புடன்

நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்படியே கூப்பிடுங்கோ. கூப்பிடச் சுகமெல்லே.

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு....தலைப்பை மாற்ற முயற்சியுங்கள்.

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

நெடுக்கர், கதை நல்லாயிருக்கு!

அதைவிடக் கமலரஜனி அக்காட ஆங்கிலம், படு திறம்!!!

நன்றி புங்கையூரன். கமலரஜனி அக்கா மட்டுமல்ல.. உங்க பல பேர் உப்படி தான். இலவச ஆங்கில வகுப்புக்கள் நடத்துது அரசாங்கம். ஒரு சிலரை தவிர மிச்சாக்கள் போறதே இல்ல. அப்படி போனாலும்.. அரச உதவிப் பணம் எடுக்க ஆதாரம் காட்ட என்று.. தான் போவார்கள்..! படிக்கப் போறதில்ல..! :lol::):icon_idea:

கதை நல்லாயிருக்கு நெடுக்ஸ், நல்ல கிராமத்து வசனங்கள்!!

எமது கிராமத்து வழக்கை அடையாளம் கண்டுகொண்டதற்கு நன்றி. எனக்கொரு பயமிருந்தது.. நம்மவர்கள் அதனையும் மறந்திருப்பார்களோ என்று..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: :icon_idea: :icon_idea:
Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு.

அண்மைய கதைகளில் 'லண்டன் டாமில்ஸ்' ஐப் போட்டு இந்த வாங்கு வாங்குகிறீர்கள். இப்பத்தான் தமிழ் சமூகத்தோடு பழகத் தொடங்கியிருக்கிறீர்கள் போலக் கிடக்கு. :lol:

சிலர் தமிழ்நாட்டு சினிமா தொலைகாட்சி கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஊரில் இருந்ததை விட இன்னும் மோசமாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு.

அண்மைய கதைகளில் 'லண்டன் டாமில்ஸ்' ஐப் போட்டு இந்த வாங்கு வாங்குகிறீர்கள். இப்பத்தான் தமிழ் சமூகத்தோடு பழகத் தொடங்கியிருக்கிறீர்கள் போலக் கிடக்கு. :lol:

சிலர் தமிழ்நாட்டு சினிமா தொலைகாட்சி கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஊரில் இருந்ததை விட இன்னும் மோசமாக இருக்கிறார்கள்.

நன்றி.

ஆமாம். தப்பிலி. பொதுவாக தமிழ் சமூகத்தோட பழகிறது உண்டு. ஆனாலும் இப்படி பல தரப்பட்ட அந்த சமூக அங்கத்தவர்களையும் சந்திக்கிற வாய்ப்பு முந்தி அவ்வளவா இருக்கல்ல. எந்தச் சமூகத்திலும் இளைய சமூகத்தோடு தான் அதிக உறவாடல் இருந்தது. இப்ப தான்.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. எல்லா மட்டத்திலும் ஊடுருவ முடியுது..! :lol::icon_idea:

நல்லதொரு ஊடுருவல்....

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் பல விடயங்களை தொட்டு சென்று இருக்கின்றீர்கள்,

நானும் இங்கு சிலரை அவதானித்திருக்கின்றேன் அவர்கள் பிள்ளைகளுக்கு பொதுவான பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை .......

மாறாக தனது பிள்ளை அந்த படிப்பு படிக்குது உன்ரபிள்ளை என்ன படிக்குது ? ரியூசனுக்கு எங்கு விடுகின்றாய் நான் ஒரு வெள்ளையிடம் விடுகின்றேன் என்று பெருமை பேசுவார்கள் பிள்ளைகளைப்பார்த்தால் வெளியில் வரும்போது மற்றவர்களுடன் கதைக்க கூடமுடியாது முழி பிதுங்கிப்போய் இருப்பினம் அங்கிளுக்கு காய் ..... சொல்லு என்றால் ஹாய் அவ்வளவுதான் பேசுவார்கள்,

இவர்களைப்பற்றி நான் எழுத வெளிக்கிட்டால் ..... நான் ஒரு தொடர்கதை எழுதுவது போல் ஆகிவிடும். :lol:

தொடர்ந்தும் எழுதுங்கள் நெடுக்ஸ், கதை சூப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கும் பல விடயங்களை தொட்டு சென்று இருக்கின்றீர்கள்,

நானும் இங்கு சிலரை அவதானித்திருக்கின்றேன் அவர்கள் பிள்ளைகளுக்கு பொதுவான பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பதில்லை .......

மாறாக தனது பிள்ளை அந்த படிப்பு படிக்குது உன்ரபிள்ளை என்ன படிக்குது ? ரியூசனுக்கு எங்கு விடுகின்றாய் நான் ஒரு வெள்ளையிடம் விடுகின்றேன் என்று பெருமை பேசுவார்கள் பிள்ளைகளைப்பார்த்தால் வெளியில் வரும்போது மற்றவர்களுடன் கதைக்க கூடமுடியாது முழி பிதுங்கிப்போய் இருப்பினம் அங்கிளுக்கு காய் ..... சொல்லு என்றால் ஹாய் அவ்வளவுதான் பேசுவார்கள்,

இவர்களைப்பற்றி நான் எழுத வெளிக்கிட்டால் ..... நான் ஒரு தொடர்கதை எழுதுவது போல் ஆகிவிடும். :lol:

தொடர்ந்தும் எழுதுங்கள் நெடுக்ஸ், கதை சூப்பர்.

கதை என்று கற்பனைகளையும் மற்றவர்களை இகழும்.. இட்டுக்களையும் செருகி எழுதுவதிலும் கண் முன்னால்.. நம்முன்னால் நடப்பதை பிரதிபலிபத்து எழுதுவதே.. சமூகம் தன் தவறை.. நடத்தையை இனங்காணவும்.. திருத்த வேண்டியதை திருத்தவும்.. சீர்திருத்த வேண்டியதை.. சீர்செய்யவும்.. வகை செய்யும்..! அதையே தான் நாங்கள் பிரதானமாக கையில் எடுத்துள்ளோம்..!

நன்றி தமிழரசு. உங்களின் சில கதைகளையும் படித்திருக்கிறேன். நல்ல சமூக நோக்கோடு அவை எழுதப்படுவதையும் அவதானித்திருக்கிறேன்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

கண்டதை சொல்லியிருக்கிறியள்.. கொஞ்சக் காலத்தால அனுபவிச்சதையும் சொல்லவேணும்.. அப்ப சிலதுகளோ இல்லாட்டி பலதுகளோ வித்தியாசப்படலாம்.

ஊரில பாருங்கோ சொந்தம் பந்தமெண்டு நெருக்கமா சுத்திச் சுத்தி ரண்டு மூண்டு ஒழுங்கேலை ஊருப்பட்ட சனம் இருந்ததுகள்.. ஆனா இஞ்சை.. குடும்பமெண்டு வந்தால் தாய் தேப்பன் பிள்ளையள்.. அதுவும் ஒண்டு ரண்டு பிள்ளையள்.. ஊரைப்போலை ஆறேழு பிள்ளையளும் இல்லை.. உந்த ரீவீயள் கொம்பியூட்டரள் ரெலிபோனளை அங்கால வைச்சுட்டு பாத்தால் தாய் தேப்பனுக்கு கொஞ்சமாலும் அன்போடை மனம்விட்டு உரிமையோடை கதைக்குறதுக்கு பிள்ளையள்தான் கெதி.. இந்த நாட்டு சனங்களைப்போல நாய் பூனையளை வளத்தலாவது அதுகளோட பொழுதைப் பிராக்காட்டி மனசை றிலாக்சாக்கலாம்..

இப்பிடி பிள்ளையளோட கொஞ்சம் செல்லங்குடுத்துப் பழக.. அதுகளும் சிலவேளை அப்பா அம்மா ஒண்டும் பேசாயினம் எண்டு கொஞ்சம் ஓவரா நடக்க வெளிக்கிடூதுகள்.. அடிச்சு வளக்காத பிள்ளையுமில்லை முறிச்சு வளக்காத முருங்கையுமில்லை எண்டு சொல்லுவினம்.. முருங்கை ஊரிலை எல்லோ கிடக்குது.. அதாலை அது இஞ்சை சரிப்படாது..

இப்படி கொஞ்சங்கொஞ்சமா தங்கடை இஸ்டத்துக்கு வளருற பிள்ளையள் கொஞ்சக்காலத்தால பெரிய படிப்பு அது இதெண்டு தனிய போகேக்கை.. அப்பா அம்மான்ரை சின்னச் சின்ன அட்வைசுகளையே ஏதோ பெரிய தொந்தரவெண்டமாதிரி நினைச்சு.. ரெலிபோன் எடுத்தா கதைக்காம.. இப்பிடி அப்பிடி எண்டு தூரத்தூர விலகிக் கொண்டே போறது கனவீடுகளில நடக்குது.. பாவம் தாய் துப்பனும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு எண்ட மாதிரி பிள்ளை என்ன செய்யுறானோ.. படிக்கிறானோ.. ஒழுங்காச் சாப்பிடுறானோ எண்டு வீட்டுக்கை இருந்து யோசிச்சு யோசிச்சு.. பிள்ளையபற்றி வேறையாக்களிட்ட விசாரிச்சால் மானம் போவிடும் எண்டு இல்லாத பொல்லாத மானத்தையும் நினைச்சு.. யோசிச்சு யோசிச்சு.. பிறசரும் ஏறி... என்னத்தை சொல்ல.. என்னத்தை பறைய..??!!

இப்ப கனபேருக்கு பிறசரால கை கால் வாயெல்லாம் ஒருபக்கம் இழுக்குதாம்.. :o:D:rolleyes:

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்

நீங்கள் சொன்னவிடயம் உண்மை

ஆனால் சொன்னவிதம்

இதை நீங்களும் நாங்களும் ரசிப்பது போலுள்ளது.

ஆனால் இதுவும்தமிழரது அவலங்களில் ஒன்றல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதை சொல்லியிருக்கிறியள்.. கொஞ்சக் காலத்தால அனுபவிச்சதையும் சொல்லவேணும்.. அப்ப சிலதுகளோ இல்லாட்டி பலதுகளோ வித்தியாசப்படலாம்.

ஊரில பாருங்கோ சொந்தம் பந்தமெண்டு நெருக்கமா சுத்திச் சுத்தி ரண்டு மூண்டு ஒழுங்கேலை ஊருப்பட்ட சனம் இருந்ததுகள்.. ஆனா இஞ்சை.. குடும்பமெண்டு வந்தால் தாய் தேப்பன் பிள்ளையள்.. அதுவும் ஒண்டு ரண்டு பிள்ளையள்.. ஊரைப்போலை ஆறேழு பிள்ளையளும் இல்லை.. உந்த ரீவீயள் கொம்பியூட்டரள் ரெலிபோனளை அங்கால வைச்சுட்டு பாத்தால் தாய் தேப்பனுக்கு கொஞ்சமாலும் அன்போடை மனம்விட்டு உரிமையோடை கதைக்குறதுக்கு பிள்ளையள்தான் கெதி.. இந்த நாட்டு சனங்களைப்போல நாய் பூனையளை வளத்தலாவது அதுகளோட பொழுதைப் பிராக்காட்டி மனசை றிலாக்சாக்கலாம்..

இப்பிடி பிள்ளையளோட கொஞ்சம் செல்லங்குடுத்துப் பழக.. அதுகளும் சிலவேளை அப்பா அம்மா ஒண்டும் பேசாயினம் எண்டு கொஞ்சம் ஓவரா நடக்க வெளிக்கிடூதுகள்.. அடிச்சு வளக்காத பிள்ளையுமில்லை முறிச்சு வளக்காத முருங்கையுமில்லை எண்டு சொல்லுவினம்.. முருங்கை ஊரிலை எல்லோ கிடக்குது.. அதாலை அது இஞ்சை சரிப்படாது..

இப்படி கொஞ்சங்கொஞ்சமா தங்கடை இஸ்டத்துக்கு வளருற பிள்ளையள் கொஞ்சக்காலத்தால பெரிய படிப்பு அது இதெண்டு தனிய போகேக்கை.. அப்பா அம்மான்ரை சின்னச் சின்ன அட்வைசுகளையே ஏதோ பெரிய தொந்தரவெண்டமாதிரி நினைச்சு.. ரெலிபோன் எடுத்தா கதைக்காம.. இப்பிடி அப்பிடி எண்டு தூரத்தூர விலகிக் கொண்டே போறது கனவீடுகளில நடக்குது.. பாவம் தாய் துப்பனும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு எண்ட மாதிரி பிள்ளை என்ன செய்யுறானோ.. படிக்கிறானோ.. ஒழுங்காச் சாப்பிடுறானோ எண்டு வீட்டுக்கை இருந்து யோசிச்சு யோசிச்சு.. பிள்ளையபற்றி வேறையாக்களிட்ட விசாரிச்சால் மானம் போவிடும் எண்டு இல்லாத பொல்லாத மானத்தையும் நினைச்சு.. யோசிச்சு யோசிச்சு.. பிறசரும் ஏறி... என்னத்தை சொல்ல.. என்னத்தை பறைய..??!!

இப்ப கனபேருக்கு பிறசரால கை கால் வாயெல்லாம் ஒருபக்கம் இழுக்குதாம்.. :o:D:rolleyes:

அய்ய்ய்... நம்மட சோழியண்ணா. எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்கீங்க.. நான் உங்களுக்கு வைத்தியப் பார்க்க என்றே தானே படிக்கிறன்..! கவலைப்படாதேங்கோ சோழியண்ணா..! ஓகேவா..! :):lol:

தங்கள் நேரத்துக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி அண்ணா. :)

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

எந்த விதத்தில் என்ன செய்து சாத்திரி உங்களுக்கு துரோகியானார் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

நன்றி.

அது வேற.. இது வேற. ஆட்டுக்க ஏன் மாட்டைக் கலக்கனும்..! தயவுசெய்து சாத்திரி என்ற கள உறவோடு நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. அவர் நமக்கு நல்ல நண்பர். உங்களுக்கு அவரோட தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தா.. அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கோ. இந்த தலைப்பு அவருக்கானதல்ல..! இது நிஜ சாத்திரிகள் பற்றியது.. மட்டுமே..! :):icon_idea:

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

இதுக்கையும் அரசியலா. ஒருவேளை புளொட்டு ராஜீவ் காந்திக்கு சாத்திரம் சொல்லுற சாத்திரியோட பேசி இருந்தா.. தமிழீழம் இல்ல.. இப்ப மாலைதீவையாவது ஆட்சி செய்திருக்கலாம். :lol::D

Link to comment
Share on other sites

உந்த எல்லாம் வல்ல சாத்திரியிடம் இறுதிப்போருக்கு ஆரம்ப திகதியை கேட்டிருக்கலாம்

மாலைதீவு தாக்குதலும் இந்த நாள் பாக்காததால் தான் பிழைச்சதாம்.மெய்யே?? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பை நகைச்சுவையுடன் விபரிக்கும் நெடுக்கருக்கு பாராட்டுக்கள்

கதை சொல்வது போல நிஜத்தில... நடக்காதவைக்கு இது நகைச்சுவை. நடக்கிறவைக்கு கடுப்பு..! அந்த வகையில் நிலாமதி அக்காவிற்கு நகைச்சுவையாக அமைந்துள்ளது. நன்றி அக்கா..! :)

Link to comment
Share on other sites

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

கதை நன்றாக உள்ளது . ஆனால் இதில் ஒரு சிக்கல் நிர்வாகத்தால் தடைசெய்த ஒரு துரோகி மனிசரை ஏன் தலப்பாய் போட்டியள் ? இதைவைச்சே களவிதிப்படி உங்களுக்கே ஆப்படிச்சுபோடுவினம் . பேந்து அந்தாளின்ரை ஜல்றா கோஸ்ரியள் தொடங்குவினம். யோசியுங்கோ .

துரோகி?

ஒருமனிதனை எப்படியெல்லாம் திடீரென்று தூற்றுகிறீர்கள்.

அதுசரி, தமிழராயிற்றே.

Link to comment
Share on other sites

தலைப்பு நிஜ சாத்திரியை குறிக்கிறது கு.சாண்ணா. நிஜ சாத்திரிகளை எல்லாம் வல்லவராக நினைக்கிற எமது சனத்தின்ர மூட நம்பிக்கைகளின் மையமே கதை..! அவையை நம்பி.. பொன்னை.. பொருளை.. பணத்தை.. நிம்மதியை.. சொந்த முயற்சியை.. தினமும் இழக்கிறார்கள் நம்மவர்கள். மேலும் தலைப்பில் கருத்து முரண் வரக்கூடாது என்பதற்காகவே "---" பாவிச்சு போட்டிருக்கிறம். :):icon_idea:

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நெடுக்ஸ்.

என்ன, இங்கேயெல்லாம், எம்மவருக்கு, மொழிப் பிரச்சனை இருப்பதால், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. மேலும் இங்குள்ள பல பள்ளிக்கூடங்களில் பாடங்கள் நன்றாகவே நடத்தப்படும். என்றாலும் ரியூஷன் ஒரு பேஷனாகி இருக்கிறது. பிள்ளைகள் பாடசாலை homework செய்யவும் ரியூசனுக்கு போய் காசை விரயம் செய்வதை கவனித்துள்ளேன்.

நன்றி அண்ணா.

பல பெற்றோர் நினைக்கினம்.. இங்க இங்கிலாந்தில் படிக்கிறது ஊரில படிக்கிறது போல என்று. ஆனால் இங்க கொஞ்சம் வேறுபாடு உண்டு. அங்கே போட்டிப் பரீட்சைக்குப் படிக்கிறார்கள். இங்கே தரமறி பரீட்சைக்குப் படிக்கிறார்கள். அங்கே பல்கலைக்கழக நுழைவு இன்றேல்.. வேறு வழி கண்டறிவது கடினம். இங்கே பல்கலைக்கழகம் போக பல்பேறு வழிகள் உள்ளன.

அதுமட்டுமன்றி ஊரில் சாதாரண தரமோ.. உயர்தரமோ.. குறித்த ஆண்டில் ஒரு தடவை தான் தோற்றலாம். ஆனால் இங்கு சாதாரண தரத்தில் கூட.. ஒரு பாடத்தையே பகுதி பகுதியாக பிரித்து ஆண்டுக்கு பல தடவை தோற்ற வைத்து சித்தியடைய வைக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பிப்புக்களின் தரம் ஊரில் கிரமமாக பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு அவை கிரமமாக பரிசோதிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தகுந்த வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

இருந்தும் எம்மவர்கள்.. பிள்ளைகளுக்கு அதிக வேலைப்பளு உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மணித்தியாலத்துக்கு 20.. 25 பவுன் கொடுத்து படிக்க அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் பள்ளியில் படித்ததையே திருப்பிப் படிக்கிறார்கள். பல மாணவர்கள் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காகவே இப்படிப் படிக்கின்றனர். இதனால் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் சுய கற்றல் ஆற்றல் இன்றி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

தமிழ் பெற்றோர் ஒன்றை மனதில் இருத்த வேண்டும். இங்கிலாந்து சிறீலங்கா அல்ல. அங்கு வேறு வகையான கல்வித்திட்டம் நுழைவு முறைமைகள். இங்கு இலகுபடுத்திய செயல்முறை ரீதியான கல்வித்திட்டமும்.. கூடிய அளவு திறந்த நுழைவும்.. எல்லோருக்கும் உயர் கல்வி வாய்ப்பும் என்பது அமுலில் உள்ளது. இங்கே பல்கலைக்கழகம் போவது சாதனை அல்ல.. தேவை..! அங்கே தான் அது சாதனை.. காரணம் அங்கு இலவசக் கல்வி.. போட்டிச் சூழல்..!

பல பெற்றோர் தாம் சிறீலங்காவில் இழந்த கல்வியை எண்ணி இங்கிலாந்தில் பிள்ளைகளைப் போட்டு வாட்டி வதைக்கின்றனர். இது மிகவும் தவறான ஒரு அணுகுமுறை. இதனால் பல்கலைக்கழகத்தில் அது எதிர்பார்க்கும் திறமைகள் இன்றி மாணவர்கள் உள் நுழைவதையே ஊக்குவிக்க முடிகிறது. இதனால் பெற்றோர் அல்ல சிரமப்படுவது. மாணவர்களே. அதனால் தான் பல தமிழ் மாணவர்கள் தொடங்கிய பட்டப்படிப்பையே நிறைவு செய்ய முடியாமல் இடை நடுவில் விட்டு வேறு துறைகளுக்கு தாவித் தாவி காலத்தையும் அரசின் நிதிக் கடனையும் வீணாக்குகின்றனர்..!

இதனை தமிழ் பெற்றோர் நன்கு உணர்ந்து கொண்டு செயற்படுவது அவசியம்..! இதை.. உணரும் பக்குவம்.. படித்த பெற்றோரில் இருந்து சாதாரண பெற்றோர் வரை அநேகரில்.. இருப்பதாகத் தெரியவில்லை.

இதனை இங்கு எழுத வாய்ப்பளித்த ஈஸ் அண்ணாவுக்கு மீண்டும் நன்றி. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் களத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தலைப்பு இந்த நேரத்துக்கு சரியானதாகத் தெரியவில்லை. :(

நாமே ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு அதற்குள் தான் நிற்போம் என்ற நிலையில் இருந்து பார்ப்பதால் வரும் குழப்பம் இது என்று நினைக்கிறேன். இந்தத் தலைப்பு அந்த வழக்கத்தை மாற்ற முனைந்தால் அதுவும் ஒரு வகை சீர்திருத்தமாகவே கருத்தப்பட வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.