Jump to content

விடுதலைப் புலிகள் மீண்டும் வந்தனரா? - சுபத்ரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ltte.jpg

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக, 2009 மே மாதம் அரசாங்கம் பிரகடனம் செய்தது.

ஆனால், இன்று வரை, புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டும் பழக்கத்தில் இருந்து மட்டும் அரசாங்கத்தினால் விடுபட முடியவில்லை.

எதற்கெடுத்தாலும் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் கடந்த முப்பதாண்டு காலபழக்க தோஷத்தில் இருந்து புலிகளால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து – அரசாங்கம் இன்னும் மீளவில்லை.

மனிதஉரிமைகள் பற்றிப் பேசினால், உடனடியாக அவர்களுக்குப் புலிகள் நிதி வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும். அரசுக்கு எதிரான ஏதாவது கருத்தை முன்வைத்தால் புலிகளோடு முடிச்சுப் போட்டு குற்றம்சாட்டப்படும்.

இது தான் போர் முடிந்த – புலிகள் அழிக்கப்பட்ட – மூன்றாண்டுகளில் நடந்து வருகிறது.

புலிகளை தமிழ் மக்கள் மறந்து போக நினைத்தாலும், அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்றளவுக்கு புலிகளை வைத்துப் பிரசாரம் நடத்தப்படுகிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள புலிகளே பின்னணியில் இருந்ததாகவும், அவர்கள் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் தான், அமெரிக்கா ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அரசாங்கம் கூறியது.

அழிந்துபோன புலிகள் இயக்கம் அமெரிக்காவையே வளைத்துப் போடும் அளவுக்கு வெளிநாடுகளில் செயற்படுகிறது என்று கூறினால் – அது அரசாங்கத்துக்குத் தான் அவமானம் என்பதை அரசில் உள்ளவர்கள் எவரும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 150 விடுதலைப் புலிகள் நாடு திரும்பியுள்ளதாகவும், சீர்குலைவு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் கசிய விடப்பட்டன.

இந்தச் செய்திகளின் பின்னணியில் இருந்தது அரச புலனாய்வுச் சேவை தான். இதனை அந்த ஊடகங்களே தமது செய்தியில் ஆதாரம் காட்டியிருந்தன. இந்தச் செய்திகளுக்கு வலுவூட்டும் விதத்தில் திருகோணமலையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். ்

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், கடந்த மாத நடுப்பகுதியில் குச்சவெளிப் பகுதியில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் முத்து எனப்படும் ரகுநாதனின் கொலை தான்.

அவரது சடலம் அருகே கிடந்த – ’எல்.ரி.ரி.ஈ’ என்ற ஒரு சிறுகுறிப்புத் தான் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டப்படக் காரணமானது.

கொலை செய்தவர்கள் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிப் பெற்றுத் திரும்பியதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 3 இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 புலிகள் நாசவேலைகளை மேற்கொள்ள வடக்கு, கிழக்கில் பதுங்கியுள்ளதாகவும், அவர்களே ஈ.பி.டி.பி உறுப்பினரையும் வேறு பலரையும் கொலை செய்திருப்பதாக நம்பப்படுவதாகவும் கதை கட்டப்பட்டது.

கடந்த 5 மாதங்களில் காணாமற்போயுள்ள 30 பேர் பற்றிய தகவல்களைத் தருமாறு ஜெனிவாவில் அரசிடம் கோரப்பட்டிருந்தது. இதுபற்றி அமெரிக்காவும் தனியாக விளக்கம் கோரியுள்ளது.

அதைவிடப் போருக்குப் பின்னர் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் பற்றிய கேள்விகளும் அரசதரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், ஈ.பி.டி.பி உறுப்பினரை மட்டுமன்றி, வேறு பலரையும் புலிகளே கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியானது, எல்லாப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக் கொள்ளும் தந்திரமாகவும் கருதலாம்.

தமிழ்நாட்டில் இரகசிய முகாம்களில் புலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானதும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், அது அடிப்படையற்ற – முற்றிலும் தவறான – ஆதாரமற்ற செய்தி என்று மறுத்தது.

தமிழ்நாடு காவல்துறை ஆணையாளரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் இந்த செய்தியை நிராகரித்தனர்.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்த விவகாரத்தினால், இந்தியா தொடர்பாக, கொழும்பு அவ்வளவு திருப்தியான நிலையில் இல்லை.

இத்தகைய நிலையில் இந்தச் செய்தி புதுடெல்லியை அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைச் சீண்டிப் பார்க்கும் வேலையாக இருக்கலாம் என்று புதுடெல்லி சந்தேகித்திருந்தாலும் ஆச்சரியமில்லை…

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததற்காக, இந்தியா மீது கோபமும் இல்லை, குறையும் இல்லை, உறவுகளில் மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறினாலும், ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், இருநாடுகளுக்கும் இடையில் வெளித் தெரியாத இடைவெளி ஒன்று இருக்கவே செய்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடியின் பேரில் தான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக, புலிகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால், அது பாரதூரமான விடயமாகவே பார்க்கப்படும். இது மத்திய அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை நன்றாகக் கணித்தே, இந்தச் செய்தி கசிய விடப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறையே இந்த சந்தேகத்தை முதலில் வெளியிட்டது. பின்னர், அவ்வாறு இல்லை இராணுவப் பேச்சாளர் மறுத்தாலும், இந்தத் தகவலை வெளியிட்ட ஊடகங்களுக்கு எந்த மறுப்பையும் அனுப்பவில்லை.

அதைவிட, இந்திய – இலங்கைப் புலனாய்வுத் துறைகளுக்கு இடையில் நெருக்கமான உறவுகள் பேணப்படுகின்ற தகவல்கள் பரிமாறப்படுகின்ற போதும், இப்படி ஒரு செய்தி இந்தியாவுக்கு கொடுக்கப்படவில்லை.

ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது தான், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம். இந்தியாவை குறிப்பாக, தமிழ்நாட்டை சிக்கலில் மாட்டி வைக்கவே இந்த முயற்சி. அடுத்து, இந்தப் பிரசாரத்தின் பின்னர் மீண்டும் புலிகள் வந்து விட்டதாக தேடுதல்களும் நடத்தப்பட்டன.

ஜெனீவா தீர்மானம் படைக்குறைப்பை வலியுறுத்த, அரசாங்கமோ மீண்டும் தேடுதல்களை நடத்தி இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தியது. மீண்டும் புலிகள் வந்து விட்டதாகக் கூறி அரசபடைகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மக்களைப் பீதி கொள்ள வைக்கும் வகையில் அமைந்தன.

புலிகளின் அடிப்படைக் கட்டுமானங்கள் ஒன்று கூட மிச்சமில்லாமல் துடைத்தழிக்கப்பட்டு விட்ட பின்னர், 150 புலிகள் வந்து குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக தகவல் வெளியிடப்பட்டது சாதாரணமானதல்ல.

இது தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு புலிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியில் இருந்து அரசாங்கம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதற்கான உதாரணம்.

இதனை மனதில் கொண்டு தான் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அழிந்து போன புலிகளைப் பற்றிப் பேசிப் கொண்டிருக்காமல், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி பேசுங்கள் என்று சினந்து கொண்டார்.

ஆனாலும் அரசாங்கத்துக்குப் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டியே பழகிப் போய் விட்டது. தம் மீதான நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் புலிகள் தான் அவர்களுக்கு நினைவில் வருகின்றனர். மாற்று உபாயம் ஒன்று அகப்படும் வரையில் இந்த மாயையில் இருந்து அரசினால் விடுபடவே முடியாது.

http://www.vannionli...-post_8775.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.