Jump to content

இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரம் பறிப்பு உலக மகா அரசியல் நாடகம் இலங்கையில்- சரவணை மைந்தன்


Recommended Posts

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
 

Eelam+(1).jpg

இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கை மற்றும் இந்திய நாடுகளால் உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு இணைத்த மாகாணங்களாக ஆக்கி அதற்கு சில குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் இல்லாவிடிலும் மிகவும் குறைந்த ஒரு அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆனால் இந்த திருத்த சட்டத்தை தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் ஏற்கனவே நிகரித்து இருந்தார்கள் ஆனால் EPRLF மட்டும் இதை ஏற்று வடக்கு கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி வரதராஜ பெருமாள் முதலமைச்சராக வந்தார் ஆனால் இந்த அதிகாரமற்ற மாகாணசபையை முதலமைச்சராக இருந்த அவர் எதுவும் பலனில்லை தமிழீழமே தீர்வு என்று அறிவித்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். இப்படியான வரலாற்றை கொண்ட இந்த 13வது அரசியல் சட்டம் தற்பொழுது மீண்டும் இலங்கை மற்றும் இந்தியா அரசுகளால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் தற்பொழுது இரண்டாக்கப்பட்டு கிழக்கு மாகாணம்,வடக்கு மாகாணம் என பிரிக்கபட்டுள்ளது கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது அடுத்து பலகாலமாக தேர்தலை சந்திக்காத வடக்குக்கு தேர்தல் நடத்தும் இலங்கை அரசின் நாடகம் அரங்கேற்றம் நடைபெறம் இத்தருணத்தில் மாகாணங்களுக்கான ஆதிகாரன்களை குறைத்து தேர்தலை வைக்குமாறு இனவாத குழுக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதற்க்கான அதிகாரங்களை குறைக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசு தற்பொழுது அரங்கேற்றியுள்ளது. இதில் ஒரு பெரும் நாடகமாம் இலங்கை ஜனாதிபதிக்கு இருந்த மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து எடுத்துள்ளது இது ஒரு பெரும் அரசியல் நாடகம் அதாவது தனியொரு நபரிடம் மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் இருக்குமாயின் அவர் எதையும் சொல்லி தப்பிக்க முடியாது உலக நாடுகள் 13வது அரசியல் சட்டத்தை ஆதாவது மிகவும் குறைந்த அதிகாரத்தை உடைய தீர்வை வழங்குங்கள் என்று மகிந்தவுக்கு கூறினால் மகிந்த சொல்லுவார் என்னிடம் அதிகாரம் இல்லை அமைச்சரவையை கூட்டி அல்லது பராளுமன்றத்தி கூட்டித்தான் அவர்களுடைய சம்மதம் பெறவேண்டும் என்று ஒரு பந்தை எறிவார் பின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை நான் என்ன செய்ய என்று உலகநாடுகளிடம் தப்பித்து கொள்வார். இதுதான் இலங்கை அரச இயந்திரத்தின் நாடக அரசியல். இதிலிருந்து உலக நாடுகளுக்கு ஒரு தகவல் தெரிந்திருக்கும் உலக நாடுகளே புரிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழர்களின் குரல் சிங்களம் சிறிய ஒரு அதிகாரத்தை கூட பகிர்ந்து கொள்ளாது தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள

சரவணை மைந்தன்

தொடர்புடைய செய்தி 
 

20101119eMahindaRajapaksa02.jpg

இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.
இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

http://www.vivasaayi.com/2013/06/blog-post_17.html

Link to comment
Share on other sites

இதை நேற்று ஒரு செய்தியில் வாசித்தபோது பலே இராஜ தந்திரம் (அல்லது ஏமாற்றுவேலை) என்று தோன்றியது.. அந்தக்காலம் தொட்டு சிங்களவன் ஹிந்தியனுக்கு பாடம் சொல்லித் தருகிறான்.. இவர்கள் மண்டையில் ஏறியதாகத் தெரியவில்லை.. :rolleyes:

Link to comment
Share on other sites

இது ஒரு பார்வையில் மகிந்தா வெளிநாடுகளுக்கு கையை விரிக்க உதவுவதற்காக என்று சொல்லப்படிருக்கு. இன்னொரு திசையில் அரசு கூட்டமைப்பின் சங்கல்பங்களின் வலிமையை சோதிக்கவாகவும் இருக்கும்.

கூட்டமைப்பு 13ம் திருத்தத்தை திருந்தினால் தேர்தலை பகிஸ்கரிப்போம் என்று சவால் விடுத்திருந்தது. இந்த நிலையில் வைத்து தேர்தலை பகீஸ்கரிப்பது உசிதமான நடவடிக்கை இல்லை. எனவே  கூட்டமைப்பு அவசரமாக பகிஸ்கரிப்போம் என்று கூறப்போவதில்லை. தேர்தல் திகதி கூட அறிக்கவில்லை. இப்போது கூட்டமைப்பு பகிஸ்கரித்தால் அதையே தான் தேர்தலை முன்னெடுக்காமைக்கும் காரணமாகும். 

 

தேவனந்தா அண்மையில் கூட்டமைப்பு தெரிவு குழுவுவை பகிஸ்கரிக்க கூடாது, போக வேண்டும் என்றவர்.  இன்று, தான் மந்திரி சபைக் கூட்டத்திற்கு போகாமல் பகிஸ்கரித்துவிட்டார்.  உண்மையில் கூட்டமைப்பு தெரிவு குழுவுக்கு போக வேண்டிய காரணங்களிலும் பார்க்க இவர் மந்த்திரி சபை கூட்டத்திற்கு போயிருந்திருக்க வேண்டிய காரணங்கள்தான் அதிகம். இந்த மந்திரிசபையில் ஒரு தெரிவுக்குழு அமைக்கவும் முடிவு எடுக்கபட்டது. அதில் யார் இருப்பர்கள் என்பது பற்றி தெரியாது. ஆனால் அதில் தேவானந்தா தெரியப்பட்டால் போவாரா? அந்த தெரிவுக்குழு தேவானந்த்தா போகாத சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவர் எந்த காரணத்துக்காக போகாமல் விட்டாரோ, அது போலவே, இன்னும் பார தூரமான திருத்தங்கள் தான் அங்கு ஆராயப்படப் போகிறது. அதில் கூட்டமைப்பு தெரியப்பட்டால், அவர்கள் போகமல்விட இடமுண்டு. அப்போது தேவானந்தா என்ன சொல்லப்போகிறார். கூட்டமைப்பை போக சொல்லபோகிறாரா அல்லது போக வேண்டான் எம்று தடுப்பாரா?

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.