Jump to content

என்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை – முத்தையா முரளிதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

muththaiya-muralitharan.jpg

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாகவே சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் போது அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தவிர அரசாங்கத்துடன் வேறு எந்த கூட்டணியும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பல கட்சிகளினதும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற போதிலும் எவரும் அரசியலில் ஈடுபடுமாறு அழைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசியல் களமிறங்கும் நோக்கம் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து உரிய முறையில் செயற்பட்டால் இலங்கை வீரர் சசித்திர சேனாநாயக்கவிற்கு எதிரான தடையை நீக்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், தடையை நீக்கிக் கொள்வது சசித்ர சேனாநாயக்கவின் கையில் உள்ளது என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

முழு நேர பயிற்றுவிப்பாளராக செயற்படும் திட்டங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.e-jaffna.com/archives/28013

Link to comment
Share on other sites

இலங்கை அரசின் படுகொலைகளை கண்டிக்க முரளிதரன் தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஒரு மனுசராக தன்னை அடையாளம் கண்டாலே போதும். ஆனால் இலங்கை அரசை காப்பாற்றுவதற்காக அதன் படுகொலைகளையும் இனவழிப்பையும் மறுத்து சொல்வதன் மூலம் தன்னை ஒரு காட்டுமிராண்டி என்றே உலகுக்கு உணர்த்துகின்றார். இவருக்கும் டக்ளசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டுமல்ல.. ஆறுமுகம் தொண்டமான் உட்பட்ட வகையறாக்களும் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. வடக்குக் கிழக்கு மக்களின் போராட்டத்தால் அதிகம் நன்மை பெற்றவர்கள் என்றால் அது மலையக மக்கள் தான். திம்புவில்.. எமக்காகவும் அவர்களுக்காகவும் பேசப் போய்.. அவர்களுக்காக குரல்கொடுத்து குடியுரிமையும்.. வாக்குரிமையும் பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் அதனை அவர்கள் எமக்காக பாவிக்க தவறி விட்டுள்ளார்கள். சந்திரசேகரன்.. மனோ கணேசன் போன்ற ஒரு சிலரைத் தவிர..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுக் கடலிலை போனாலும் ***** *********

தென் பகுதியில் வாழும் பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் சிங்களத்தையும் பேசிக்கொண்டு சிங்களத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். இவர்கள் இந்தியாவை மறக்கவில்லை!

Link to comment
Share on other sites

நடுக் கடலிலை போனாலும் ***** *********

தென் பகுதியில் வாழும் பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் சிங்களத்தையும் பேசிக்கொண்டு சிங்களத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். இவர்கள் இந்தியாவை மறக்கவில்லை!

 

மிகப் பிழையான அவதானம் இது.

 

தென்பகுதியில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் தென்னிலங்கையில் இயங்கிக் கொண்டு இருந்த போராளிகளுக்கு பல உதவிகள் புரிந்தவர்கள். எத்தனையோ நிழல் வேலைகளுக்கு அவர்கள் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. அது மட்டுமன்றி ஈழப் போராட்டம் தொடர்பாக எப்பவும் கரிசனையும் ஆதரவும் கொண்டே இருந்து வந்தார்கள்.  இன்றும் சிறைகளில் இருக்கும் பல தமிழ் அரசியல் கைதிகளில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் கணிசமானோர் உள்ளனர்.

 

தொண்டமான் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாது இம் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்ததுக்கும் அவர்களின் சிங்கள அரசுக்கான ஆதரவும் இன்னொரு தளத்தில் வைத்து விவாதிக்க வேண்டிய விடயம்.

 

வடக்கு கிழக்கில் பிறந்து, வளர்ந்து ஒட்டுக் குழுக்களில் ஒட்டிக் கொண்டு காட்டிக் கொடுப்பும், படுகொலைகளும் செய்த தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழர் தாயகப் பிரதேச மக்களுக்கு செய்த விரோதமான செயற்பாடுகள் மிக மிக சொற்பமாகவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.