Jump to content

இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது


Recommended Posts

இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை-தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது.


இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணிக்கும் இலங்கை அணிக்­கு­மி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறை­வ­டைந்த நிலையில் இன்று இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்­ப­மா­கியது.

ஒருநாள் தொடரை தென்­னா­பி­ரிக்க அணி 2-1 என வெற்றி கொண்­டி­ருந்­த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பித்துள்ளது.

இந்­நி­லையில் இன்று இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முத­லா­வது டெஸ்ட் காலியில் ஆரம்­ப­மா­கியது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கியுள்ள தென்னாபிரிக்க அணி 13 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 58 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் பறி­கொ­டுத்­துள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள போராடும் என்­பது நம்­பிக்கை. அதே­வேளை இத்­தொடர் மற்றும் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர்­க­ளுடன் டெஸ்ட் அரங்­கி­லி­ருந்து அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன ஓய்வு பெற­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளதால் இப்­போட்டி மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இத­னி­டையே மறு­பக்­கத்தில் புதிய அணித்­த­லைவர் ஹிசிம் அம்­லாவின் தலை­மையில் முதல் முறை­யாக கள­மி­றங்­க­pயுள்ள தெ.ஆ. அணி வெற்­றி­க்காக இறுதி வரை போராடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இரு அணி­களும் இது­வரை 20 டெஸ்ட் போட்­டி­களில் மோதி­யுள்­ளன. அதில் 10 போட்டிகளை தெ.ஆ. அணியும் 5 போட்டிகளை இலங்கை அணியும் வெற்றி கொண்டதுடன் 5 போட்டிகளில் முடிவு பெறப்படவில்லை.

 

http://www.virakesari.lk/articles/2014/07/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

Link to comment
Share on other sites

டீன் எல்கர் சதம்: தென் .ஆப்ரிக்கா அபாரம்

ஜூலை 16, 2014.

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், டீன் எல்கர் சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி வலுவான ஸ்கோரை நோக்கி முன்னேறுகிறது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஆம்லா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு அல்விரோ பீட்டர்சன் (34) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த டீன் எல்கர், டுபிளசி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இலங்கை அணி பந்துவீச்சை பதம்பார்த்த எல்கர், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டுபிளசி, தனது 5வது டெஸ்ட் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த போது, சுரங்கா லக்மல் பந்தில் எல்கர் (103) அவுட்டானார். கேப்டன் ஆம்லா (11) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டுபிளசி (80) நம்பிக்கை தந்தார். டிவிலியர்ஸ் (21) நிலைக்கவில்லை.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. குயின்டன் டி காக் (17), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2014/07/1405530272/DeanElgarSouthAfricaSriLankaTestCricket.html

Link to comment
Share on other sites

டுமினி சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
ஜூலை 17, 2014.

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், டுமினி சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 455 ரன்கள் குவித்தது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. குயின்டன் டி காக் (17), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

டுமினி அபாரம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (3) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய குயின்டன் டி காக், டெஸ்ட் அரங்கில், தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 51 ரன்கள் எடுத்த போது, தில்ருவான் பெரேராவிடம் சரணடைந்தார். அடுத்து வந்த பிலாண்டர் (27), மார்னே மார்கல் (22) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டுமினி, டெஸ்ட் வரலாற்றில் தனது 4வது சதம் அடித்தார்.

 

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. டுமினி (100) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா 4, சுரங்கா லக்மல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து, 425 ரன்கள் பின்தங்கி இருந்தது. உபுல் தரங்கா (20), கவுஷால் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405617821/duminysouthafrica.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சொதப்புது.சொந்த மண்ணிலே தோக்க போது வெட்கக்கேடு

Link to comment
Share on other sites

ஸ்டைன் மிரட்டல் பந்துவீச்சு: இலங்கை போராட்டம்

ஜூலை 18, 2014.

காலே: முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் வேகத்தில் அசத்த, இலங்கை அணி போராடுகிறது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. உபுல் தரங்கா (20), கவுஷால் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டைன் மிரட்டல்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு ஸ்டைன் தொல்லை தந்தார். இவரது அசத்தல் பந்துவீச்சில் சில்வா (8), ஜெயவர்தனா (3) சிக்கினர். சங்ககரா (24) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய உபுல் தரங்கா (83) அரைசதம் அடித்தார். திரிமான்னே (38) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

மாத்யூஸ் அரைசதம்:

பின், பொறுப்பாக ஆடிய கேப்டன் மாத்யூஸ், அரைசதம் அடித்தார். இவர் 89 ரன்கள் எடுத்த போது, தாகிர் ‘சுழலில்’ சிக்கினார். ஸ்டைன் பந்தில் சண்டிமால் (6), தில்ருவான் பெரேரா (0), சரணடைந்தனர். லக்மல் (6) நிலைக்கவில்லை.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. ஹெராத் (12), எரங்கா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 5, மார்னே மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2014/07/1405704357/DaleSteyncricket.html

Link to comment
Share on other sites

இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்களை வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.


காலியில் இடம்பெற்று வரும் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

எல்கார், டுமினி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உபுல் தரங்க 83 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 89 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

163 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை  ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்ற வேளை தனது 2 ஆவது இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.

டிவில்லியர்ஸ் அதிக பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

370 ஒட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

குமார் சங்கக்கார 58 ஓட்டங்களுடனும் கௌசல் சில்வா 37 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.  5 ஆவதும் இறுதியுமான நாளை இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 9 விக்கெட்டுகள் கையிலுள்ள நிலையில் 260 ஓட்டங்களைப் பெற வேணடும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/07/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-370-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Link to comment
Share on other sites

பந்தை சேதப்படுத்திய பிலாண்டருக்கு அபராதம்

 

 Sat, 07/19/2014 - 17:06

இலங்கைக்கு எதிராக காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமைக்காக போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


பந்தின் மேற்பரப்பில் தனது விரல்களால் கீறி சேதப்படுத்தியமைக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதற்காக பிலாண்டர் மீது ஐ.சி.சி. போட்டி நடுவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இந்த போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதாக சிக்கிய 2ஆவது தென்னாபிரிக்கா வீரர் பிலாண்டர் ஆவார்.  கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக டூப்ளசிஸ் சிக்கினார். அப்போது அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/07/19/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

கரை சேர்ப்பாரா சங்ககரா: காலே டெஸ்டில் ‘விறுவிறு’

ஜூலை 19, 2014.

காலே: காலே டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சங்ககரா கைகொடுத்தால் இலங்கை அணி சாதிக்கலாம். தென் ஆப்ரிக்க அணி ஸ்டைனை பெரிதும் நம்பி உள்ளது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஹெராத் 19 ரன்களில் அவுட்டானார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

பெரேரா அசத்தல்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (12) விரைவில் வெளியேறினார். திருவான் பெரேரா சுழலில் அல்விரோ பீட்டர்சன் (32), ஆம்லா (22) சிக்கினர். டிவிலியர்ஸ் (51) அரை சதம் கடந்து வலுசேர்த்தார். டு பிளசி (37), குயின்டன் (36) ஓரளவு கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. டுமினி (8) அவுட்டாகாமல் இருந்தார்.

சங்ககரா அரை சதம்:

இதனையடுத்து 370 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. உபுல் தரங்கா 14 ரன்களில் திரும்பினார். பின் இணைந்த கவுசல் சில்வா, சங்ககரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சங்ககரா டெஸ்ட் அரங்கில் 49வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 1 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. சில்வா (37), சங்ககரா (58), அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை வெற்றிக்கு இன்னும் 260 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் சங்ககரா கைகொடுத்தால், வெற்றியை வசப்படுத்தலாம். இதனை ஸ்டைன் தடுப்பாரா என பார்ப்போம்.

‘300’ அதிகம்

காலேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் எந்த அணியும் 300 ரன்களை தாண்டியதில்லை. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி (எதிர்: இலங்கை 2012) 300 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

பிலாண்டருக்கு அபராதம்

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர், பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஐ.சி.சி., விசாரித்தது. உண்மை இருப்பது தெரியவர, பிலாண்டருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

http://sports.dinamalar.com/2014/07/1405788648/Sangakkarasrilanka.html

Link to comment
Share on other sites

முதல் டெஸ்டில் இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா
2014-07-20 14:07:38

 

காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க 153 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

 

தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ஓட்டங்களைப் பெற்ற தென் ஆபிரிக்கா ஆட்டத்தை இடை நிறுத்தியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 292 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

 

பின்னர் 163 ஓட்டங்கள் முன்னிலையில் ஆட்டத்தை தொடர்ந்து தென் ஆபிரிக்கா 206 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. டி வில்லியர்ஸ் அதிகூடுதலாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

370 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சங்கக்கார 76 ஓட்டங்களைப் பெற்றார்.

 

தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களில் மோர்னி மோர்கல் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

தொடரின் 2ஆவதும் இறுதியுமான தீர்க்கமான போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6234#sthash.oCJM29ev.dpuf

 

Link to comment
Share on other sites

34ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார் மஹேல ஜயவர்த்தன
2014-07-24 15:09:19

 

தற்போது எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்த்தன தனது 34ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்துள்ளார்.

 

தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மஹேல, முதல் நாள் தேனீர் இடைவேளைக்கு முன்பதாக 138 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலான சதத்தைப் பூர்த்தி செய்தார்.

 

தேனீர் இடைவேளையின் போது இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தில் மெத்தியுஸ் 48 ஓட்டங்களுடனும் மஹேல 101 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6304#sthash.tRc9zhoC.dpuf

Link to comment
Share on other sites

இலங்கை - தென்ஆபிரிக்க இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள்
வியாழக்கிழமை, 24 ஜூலை 2014 18:24

 

இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நேர முடிவில் இலங்கை அணி 86 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்கள் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 144 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். மஹேல ஜெயவர்த்தனவின் 34ஆவது சதம் இதுவாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இவர் பெற்றுள்ள 11ஆவது சதம் இதுவாகும். தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.எஸ்.சி மைதானத்தில் இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இரு போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென் ஆபிரிக்கா அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 36 போட்டிகளில் 17 இல் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அதேவேளை 13 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரைக் கைப்பற்ற முடியும்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/119382-2014-07-24-12-56-52.html

 

Link to comment
Share on other sites

மஹேல 165, நிரோஷன் டிக்வெல்ல 72 இலங்கை அணிக்கு 421 ஓட்டங்கள்
2014-07-25 13:55:05

 

தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட்கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் நாளான நேற்று இலங்கை அணி,   5 விக்கெட் இழப்புக்க 305 ஓட்டங்கள் எனும் நிலையில் இருந்தது. நேற்று 140 ஓட்டங்களுடன் இருந்த மஹேல ஜயவர்தன இன்று 165 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.


இலங்கை அணியின் சார்பில் இரண்டாவது அதி கூடிய ஓட்டங்களைப்பெற்றவர் அறிமுக வீரரான நிரோஷன் டிக்வெல்ல ஆவார். 21 வயதான நிரோஷன் 116 பந்துகளில் ஒரு சிக்ஸர் 12 பௌண்டரிகள் உட்பட 72 ஓட்டங்களைப் பெற்றார்.

மஹேல, நிரோஷன் டிக்வெல்ல இருவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.


421 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.

 

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களில் வேர்ணன் பிலாண்டர் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேல் ஸ்டெய்ன் 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜீன் போல் டுமினி 80 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களையும் வீழ்த்தினர். மோர்ன் மோர்கெல், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6329#sthash.i0goTUnD.dpuf

 

 

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட் போட்டி : கன்னி அரைச்சதம் பெற்றார் நிரோஷன் டிக்வெல்ல

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.


இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அவர் இந்த இந்த சாதனையை படைத்தார்.

டிக்வெல்ல ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/07/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2

Link to comment
Share on other sites

மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மஹேல ஜெயவர்தனவின் சதம் கைகொடுக்க இலங்கை 421 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையில் உள்ளது.


இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

அதன்படி இலங்கை அணி சார்பாக களமிறங்கிய உப்புல் தரங்க 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் 2ஆவது விக்கெட்டுக் களமிறங்கிய சங்கக்காரா ஸ்டையினின் முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்கிய சில்வா 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். மெத்தியூஸ் 63 ஒட்டங்களும், டிக்வெல்ல 72 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த காரணமாக இருந்த ஜெயவர்தன சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இவர் அபாரமாக 165 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.

இலங்கை அணி போட்டியின் 2ஆவது நாளில் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஹசிம் அம்லா 46 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/07/25/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Link to comment
Share on other sites

282 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா; தில்ருவன் 69/5, ஹேரத் 71/4

2014-07-26 17:11:34

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களை யும் இழந்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியில் வேறு எவரும் அரைச்சதத்தையும் நெருங்கவில்லை.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 71 ஓட்டங்களுக்கு விக்கெட்களையும் வீழ்த்தினர். சுரங்க லங்மால் 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.metronews.lk/article.php?category=sports&news=6341

Link to comment
Share on other sites

இலங்கை ‘சுழலில்’ தப்புமா தென் ஆப்ரிக்கா

ஜூலை 27, 2014.

கொழும்பு: கொழும்பு டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியின் ‘சுழல்’ வலையில் சிக்கியுள்ள தென் ஆப்ரிக்கா தப்புவது கடினம் தான்.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்தது. உபுல் தரங்கா (6), கவுசல் சில்வா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

சங்ககரா அரை சதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. தரங்கா 30 ரன்களில் வெளியேறினார். மார்னே மார்கல் வேகத்தில் சில்வா (26) அவுட்டானார். இதன் பின் கைகோர்த்த சங்ககரா, கேப்டன் மாத்யூஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழையால் போட்டி ஒரு மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்டது. இதன் பின் மீண்டும் துவங்க, இம்ரான் தாகிர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சங்ககரா அரை சதம் எட்டினார்.

மார்கல் அசத்தல்:

மார்னே மார்கல் தனது வேகத்தை காட்ட, சங்ககரா (72), விதாங்கா (7) அடுத்தடுத்து சிக்கினர். மாத்யூஸ் அரை சதம் அடித்தார். திருவான் பெரேரா (7) உள்ளிட்டோரும் விரைவில் திரும்ப, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மாத்யூஸ் (63) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக மார்கல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

369 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு அல்விரோ பீட்டர்சன் டக்–அவுட் ஆனார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது. எல்கர் (13), குயின்டன் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 331 ரன்கள் தேவை. இலங்கையின் ‘சுழல்’ வீரர்களிடம் தாக்குப்பிடித்தால் மட்டுமே, தென் ஆப்ரிக்கா தோல்வியை தவிர்க்கலாம்.

மார்கல் ‘200’

நேற்றைய போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய மார்னே மார்கல் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய 6வது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 58 போட்டியில் பங்கேற்று 201 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

http://sports.dinamalar.com/2014/07/1406484500/DaleSteyncricket.html

Link to comment
Share on other sites

2ஆவது போட்டி சமநிலை: தொடரை கைப்பற்றியது தென்னாபி­ரிக்கா, இலங்கையின் வெற்றிக்கு முட்டுகட்டையான மழை!

இலங்கை மற்றும் தென்னாபி­ரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபி­ரிக்க அணி 1-0 என கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்கா–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்றது இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 421 ஓட்டங்களையும்;,தென்னாபி­ரிக்க 282 ஓட்டங்களையும் எடுத்தன. 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3ஆவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்களை எடுத்திருந்தது.


இந்த நிலையில் 4ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை (27) தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2ஆவது இன்னிங்சில் 53.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

குமார் சங்கக்கார (72 ஓட்டங்கள்), மெத்யூஸ் (63 ஓட்டங்கள்) அரைசதம் விளாசினர். முதலாவது இன்னிங்சில் சதம் கண்ட மஹேல ஜயவர்த்தன எவ்வித ஓட்டங்களும் பெறாது அரங்கு திரும்பினார். முன்னதாக உணவு இடைவேளையின் போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

தென்னாபி­ரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மோர்னே மோர்கலின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 201–ஆக (58 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 6ஆவது தென்னாபி­ரிக்க பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் மோர்கல் பெற்றார்.

இதன் மூலம் இலங்கை அணி தென்னாபி­ரிக்காவுக்கு 369 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. குறைந்தது 127 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியுடன் இலக்கை துரத்திய தென்னாபி­ரிக்க அணி 17 ஓவர்களில் அல்விரோ பீட்டர்சனின் (0) விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததாலும், மழை குறுக்கிட்டதாலும் 4ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது டீன் எல்கர் (13 ஓட்டங்கள்), குயின்டான் டீ கொக் (21 ஓட்டங்கள்) களத்தில் இருந்தனர்.

5ஆவது மற்றும் இறுதி நாளான இன்றைய ஆட்டம் 15 நிமிடத்திற்கு முன்பாக காலை 9.45 மணிக்கு ஆரம்பமானது. தென்னாபி­ரிக்க அணி வெற்றி பெற மேற்கொண்டு 331 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.  ஆனால் இலங்கையின் சுழலை சமாளித்து இறுதி நாளில் மிகப்பெரிய ஓட்ட இலக்கை அடைவதே கடினமாகவே காணப்பட்டது.  எனினும் போராட்டத்துக்கு மத்தியில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை தென்னாபி­ரிக்க அணி பெற்றிருந்த போது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. டி கொக் 37, அம்லா 25 ஓட்டங்களை அதிகமாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

போட்டி சமநிலையை மனதில் கொண்டே  தென்னாபி­ரிக்க வீரர்கள் விளையாடியமையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதற்கு மழையும் இடை இடையே குறுக்கிட்டு தென்னாபி­ரிக்க அணிக்கு உதவியதோடு இலங்கையின் வெற்றிக்கு முட்டுகட்டையாக இருந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சுழலில் சிறப்பாக செயற்பட்ட ரங்கண ஹேரத் 5 விக்கெட்டுகளையும் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக ஸ்டெயின் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபி­ரிக்க அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/articles/2014/07/28/2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Link to comment
Share on other sites

தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர்–1: பரபரப்பான டெஸ்ட் ‘டிரா’
ஜூலை 28, 2014.

 

கொழும்பு: பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.

 

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8/229 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 369 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.

 

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை அவ்வப்போது வந்து தொல்லை தந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (13) ஏமாற்றினார். ஹெராத் வலையில் குயின்டன் (37), டிவிலியர்ஸ் (12) சிக்கினர்.  திருவான் பெரேரா சுழற்பந்துவீச்சில் கேப்டன் ஆம்லா (25), டுமினி (3) அவுட்டாகினர். ஸ்டைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தவிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது.

 

கடைசி ஒரு மணி நேரத்தில் எஞ்சிய இரு விக்கெட்டை கைப்பற்ற, இலங்கை அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. துாணாக நின்ற பிலாண்டர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது. பிலாண்டர் (27), தாகிர் (4) அவுட்டாகாமல் .

21 ஆண்டுக்குப்பின்:

சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி(124 புள்ளிகள்), டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தையும் பிடித்தது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா(123), பாகிஸ்தான் (103) அணிகள் உள்ளன. இந்திய அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1406568296/amlateam.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.