Jump to content

தங்கப் பந்து: இறுதிப் பட்டியலில் நெய்மர் உள்ளிட்ட 10 பேர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
தங்கப் பந்து: இறுதிப் பட்டியலில் நெய்மர் உள்ளிட்ட 10 பேர்

xneymar_1998707h.jpg.pagespeed.ic.SIOti2

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதுக்கான (கோல்டன் பால்) இறுதிப்பட்டியலில் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.

 

 

அர்ஜென்டீனா தரப்பில் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜேவியர் மாஸ்கெரனோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும், ஜெர்மனி தரப்பில் கேப்டன் பிலிப் லாம், தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மெஸ்ஸி 4 கோல்களையும், முல்லர் 5 கோல்களையும் அடித்துள்ளனர்.

 

கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேசில் வீரர் நெய்மர் 4 கோல்களை அடித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் தவிர இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் (6 கோல்கள்) கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் மற்றும் நெதர்லாந்தின் அர்ஜென் ராபன் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 

இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் உருகுவேயின் டீகோ போர்லான் (2010), பிரான்ஸின் ஜினெடின் ஜிடேன் (2006), ஜெர்மனி கோல் கீப்பர் ஆலிவர் கான் (2002), அர்ஜென்டீனாவின் டீகோ மரடோனா (1986) ஆகியோர் தங்கப் பந்து விருதை வென்றுள்ளனர்.

 

தலைசிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதுக்கு கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெய்லர் நவாஸ், ஜெர்மனியின் மானுவேல் நூயர், அர்ஜென்டீனாவின் செர்ஜியோ ரொமேரோ ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். சிறந்த இளம் வீரருக்கான விருது நெதர்லாந்தின் மெம்பிஸ் தேபே, பிரான்ஸின் பால் போக்பா, ரஃபேல் வரானே ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்த விருது அறிவிக்கப்படும்.

 

தி ஹிந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க ஷூ விருது யாருக்கு?

 

300cf1a9-a2ba-4223-a372-b4316a7be6e3_S_s

 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (கோல்டன் பூட்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான தங்க ஷூ–வை வெல்வது யார்? என்பதில் 6 கோல்கள் அடித்த கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், 5 கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆகியோர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் ஒரு கோல் அடித்தால் 6 கோலை எட்டுவார். அப்போது இருவருக்கும் இடையேயான கோல் எண்ணிக்கை சமநிலையை எட்டும். இருவர் இடையே சம நிலை ஏற்படும் போது கோல் அடிக்க யார் அதிகம் உதவி இருக்கிறார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அப்படி பார்த்தால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2 முறை கோல் அடிக்க உதவி இருக்கிறார். தாமஸ் முல்லர் 3 தடவை கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். கோல் சமநிலை ஏற்பட்டால் தாமஸ் முல்லருக்கு தான் தங்க ஷூ கிடைக்கும்.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் கோல் அடிக்காவிட்டால், ரோட்ரிக்ஸ் தங்க ஷூவை தன்வசப்படுத்தி விடுவார். அர்ஜென்டினா அணி வீரர் லயோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்தால் மட்டுமே தங்க ஷூவை பற்றி நினைக்க  முடியும்.

 

  மாலைமலர்

Link to comment
Share on other sites

மெஸ்சிக்கு கிடைக்கும் போலை இருக்கு.. :huh::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.