Jump to content

Recommended Posts

Kostian1.jpg

Kostian1.jpg

நாளை மறுதினம், ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை வானில் தோன்றவுள்ள பூரண சந்திரன் 'Blue Moon' என அழைக்கப் படுகின்றது.

இதற்காக, வானில் நீல நிறத்தில் சந்திரன் தோன்றப்போகிறது, காண்பதற்கு தயாராக இருப்போம் என எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறலாம்.

ஒரு மாதத்தில் இரண்டு தடவை பூரண சந்திரன் வானில் தோன்றினால் இரண்டாவது தடவை ஏற்படும் பூரண சந்திரன் Blue Moonன் எனப்படுவது மரபு. அதாவது சந்திர நாள் காட்டியில் ஒரு சுற்று முடிந்து பூரண நிலவு அடுத்த முறை தோன்ற 29 நாட்கள் இடைவெளி உண்டு. ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாள் இருப்பதனால் சில சமயங்களில் பெப்ரவரி தவிர்த்து (28 நாட்கள்) ஏனைய மாதங்களில் இரண்டு தடவை பௌர்ணமி அதாவது பூரண் நிலா வானில் தோன்றும் சந்தர்ப்பங்கள் வரும். அப்படி ஒரு நிகழ்வே இந்த ஆகஸ்ட் 31 இல் நிகழவுள்ளது.

ஏனெனில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஏற்கனவே ஒரு பூரண சந்திரன் வானில் தோன்றியிருந்தது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி ஏற்படும் நிகழ்வு சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறையே ஏற்படும். இந்த அரிதான நிகழ்வே 'நீல நிலா' எனப்படும் Blue Moon என அழைக்கப் பட்ட போதும் நிஜமாகவே நீல நிறத்தில் சந்திரன் தோன்றும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இவை பௌர்ணமியில் மட்டும் தான் நிகழும் என்ற கட்டாயமில்லை.

அதாவது எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ போன்ற அனர்த்தங்களால் காற்றில் தூசு துணிக்கைகள் நிறைந்து அதனால் சந்திரன் நிறம் மாறி நீல நிறத்தில் தென்படுவதும் உண்டு.

உதாரணமாக 1883 இல் இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை 100 மெகாடொன் அணுகுண்டுகளுக்கு இணையாக வெடித்து வளிமண்டலத்தை மூடிய புகை காரணமாக சூரியன் சிவப்பு நிறத்திலும் சந்திரன் நீல நிறத்திலும் தென்பட்டதை மக்கள் அவதானித்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் நீல நிற சந்திரன் தென்பட்ட சந்தர்ப்பங்களாக 1983 இல் மெக்ஸிக்கோவின் எல் சிச்சொன் எரிமலை வெடிப்பையும் 1980 இல் சென்ட் ஹெலென்ஸ் வெடிப்பையும், 1991 இல் பினாட்டுபோ வெடிப்பையும் கூறலாம்.

http://www.4tamilmedia.com/newses/world/7838-2012-08-29-17-33-12?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Link to comment
Share on other sites

அண்மைக்காலத்தில் நீல நிற சந்திரன் தென்பட்ட சந்தர்ப்பங்களாக 1983 இல் மெக்ஸிக்கோவின் எல் சிச்சொன் எரிமலை வெடிப்பையும் 1980 இல் சென்ட் ஹெலென்ஸ் வெடிப்பையும், 1991 இல் பினாட்டுபோ வெடிப்பையும் கூறலாம்.

[size=4]இந்த முறை இலங்கையில் வரக்கூடாது [/size][size=4].[/size]

[size=4]http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/47539-2012-08-28-14-03-26.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த முறை இலங்கையில் வரக்கூடாது [/size][size=4].[/size]

[size=4]http://tamilmirror.l...8-14-03-26.html[/size]

கருத்துக்கு நன்றிகள் அகூதா.

Link to comment
Share on other sites

இன்று வானில் நீல நிலா காணலாம்!

எப்போதாவது நிகழும் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ப்ளூ மூன்´ (நீல நிலாக் காலத்தில்) என்று குறிப்பிடுவது வழக்கம்.

அதாவது வானில் வெண்மையாகத் தோன்றும் நிலா நீல வண்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது. அதே சமயம், இதுவும் வானியல் நிலைப்படி சரியாகவே அமைந்துள்ளது. அப்படி ஓர் அரிய நாள் இன்று வெள்ளிக்கிழமை (ஒகஸ்ட் 31) அமைகிறது. இன்றைய வானில் இரவு தோன்றும் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ம் திகதி முதல் முறையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலா நீலமாகத் தோற்றமளிக்கும்.

வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்´´ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நீல நிலா 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி, இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.

(தினமணி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... என்று, பார்த்து... வானம் ஒரே... மப்பாயிருக்கு.ilpleut.gif

Link to comment
Share on other sites

தெளிந்த வானம் அழகான பால்நிலவு .........ஆனால் நீலமாகத்தெரியவில்லை........நண்பரே ........

:) அதே கலர் அதே சைஸ்.........இப்படி ஒரு நிலா தான் எங்க ஊரிலேயும் இருக்கு.......... :D :D .

சில வேளை என் கண்தான் பிழையோ தெரியவில்லை ............ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெளிந்த வானம் அழகான பால்நிலவு .........ஆனால் நீலமாகத்தெரியவில்லை........நண்பரே ........

:) அதே கலர் அதே சைஸ்.........இப்படி ஒரு நிலா தான் எங்க ஊரிலேயும் இருக்கு.......... :D :D .

சில வேளை என் கண்தான் பிழையோ தெரியவில்லை ............ :icon_idea:

நீங்கள் எத்தனை மணிக்கு, நிலாவை பாத்தனீங்கள். பின்னேரம் 6:15 க்கு பாத்திருந்தால்... நீலமாய் தெரிஞ்சிருக்கும் :lol: .

------

01-blue-moon21-300.jpg

சென்னை: வானில் வெண்மை நிறமாக காட்சி தரும் நிலா நேற்று நீல நிலாவாக தோன்றியது.

கடந்த மாதம் 2-ந் தேதியும், 31-ந்தேதியும் இரண்டு முறை முழுநிலவு தோன்றி உள்ளது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை நிலா தோன்றும் போது நிலா நீல நிறமாகத் தோற்றமளிக்கும்.

நிலா நீல நிறமாக மாறுவதற்கு வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவையே காரணம் என்கிறது அறிவியல் உலகு. வரும் 2015ம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் இருமுறை வானில் நிலவு தோன்றும்.

நேற்று மாலை 6.15 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் மட்டும் நிலா நீலமாகத் தெரிந்தது. அதற்கு பிறகு மஞ்சள் நிறத்துக்கு மாறியது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.