Jump to content

கிளி அம்மான் -கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளி அம்மான்

-கோமகன்

இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூடி வெண்மையாக இருந்தது.நேர் எதிரே இரண்டு மாடிக்கோபுரங்களுக்கு இடையில் முழு நிலவு அப்பளமாக வானில் பரவியிருந்தது. சாதாரணமாக இந்தக் காட்சிகளில் நேரக்கணக்காக மயங்கி நின்று இருக்கின்றேன்.ஆனால் இன்று கிளி அண்ணையின் நினைவுகள் என் மனதை வலிக்கச்செய்தன.எனது கைகள் தன்னிச்சையாக சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தன.

0000000000000

ஏறத்தாழ இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு இதை விடக் கடுமையான குளிர் காலத்தில் தான் எனக்கு கிளி அண்ணையின் அறிமுகம் கிடைத்தது .அன்று சைபரில் இருந்து கீழே இறங்கி பத்துப் பாகையை பாதரசம் தொட்டுக்கொண்டிருந்தது.வரலாறு காணாத குளிர் என்றபடியால் அந்தக்குளிரில் எல்லோருமே அல்லாடினார்கள்.நான் வேலையை முடித்துக்கொண்டு வெளியில் வந்த பொழுது பனி பெய்துகொண்டிருந்தது.தரையில் சப்பாத்துகளை மூடி பனி கிடந்தது. நான் பாதாள ரெயில் நிலையத்தை அடைய முன்பே எனது கைகால்கள் குளிரால் குறண்டி இழுத்தன.குளிருக்கு கபே குடித்தால் சுப்பறாக இருக்கும் என்று நினைத்துகொண்டே அருகில் இருந்த கபே பாருக்குள் நான் நுழைய முயன்ற பொழுது,”தம்பி நீங்கள் தமிழோ ??”என்ற குரல் கேட்டு எனது கால்கள் நின்றன.குரல் வந்த திசையில் எனது பார்வை போன பொழுது, அங்கே ஒரு கட்டுமஸ்தான நெடிய உருவம் நின்றிருந்தது.”ஓம் வாங்கோ .உள்ளுக்கை போய் கதைப்பம்” என்றவாறே உள்ளே நுழைந்தேன்.அந்த உருவம் என்னருகே தயங்கியவாறே நின்றது.இருவருக்கும் கபே சொல்லிவிட்டு, “சொல்லுங்கோ அண்ணை.என்ன விசயம்??” என்றேன்.” தம்பி என்ரை பேர் கிளி.இப்ப எனக்கு கொஞ்ச நாளாய் இருக்க இடம் இல்லை. வெளியிலைதான் ஒரு பார்க்கிலை படுத்து எழும்பிறன்.இண்டைக்கு செரியான குளிராய் கிடக்கு.நான் உங்களோடை வந்து இருக்கலாமோ”? என்றார்.

முன் பின் தெரியாதவர் ஒருவர் என்னிடம் இப்படி கேட்டது எனக்கு திகைப்பையே ஏற்படுத்தியது.ஆனாலும் நான் அதை வெளிக்காடாமல் அவரயிட்டு விசாரிக்கத் தொடங்கினேன்.”தம்பி என்னை பற்றி பெரிசாய் ஒண்டும் சொல்ல இல்லை.நீங்கள் ஓம் எண்டு சொன்னால் நான் உங்களை என்ரை வாழ்க்கையிலை மறக்க மாட்டன்”என்றார் கிளி அண்ணை.அவருடைய தோற்றமும், கதைக்கும் முறையும் அவர் பொய் சொல்பவராகத் தெரியவில்லை.நாங்கள் எல்லோருமே ஆரம்பத்தில் வரும் பொழுது கையில் ஷொப்பிங் பாக்குடன் வந்தவர்கள் தான்,அதை நான் என்றுமே மறந்தது இல்லை.குளிரில் ஒரே நாட்டை சேர்ந்தவன் ஒருவன் விறைக்க, நான் அவரைக் காய்வெட்ட எனது இளகிய மனதுக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக,”சரி அண்ணை.என்ரை றூமிலை நாலு பேர் இருக்கிறம்.சின்ன அறை. நீங்கள் இருக்கிறது எண்டால் நிலத்திலைதான் படுக்கவேணும்.உங்களுக்கு பிரச்னை இல்லையெண்டால் சொல்லுங்கோ” என்றேன்.தான் உடனடியாகவே வருவதாக சொன்னார்.

நாங்கள் இருவரும் பாதாள ரயில் நிலையத்தில் இறங்கினோம்.எனது பெயரில் அறை இருப்பதால் அறை நண்பர்கள் பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றே நம்பினேன்.கிளி அண்ணை இறுக்கமாகவேSort Story - Kili Amman (2) இருந்தார்.நாலு கேள்வி கேட்டால் ஒரு பதில் வந்தது. நாங்கள் அறைக்குப் போன பொழுது இரவு பன்னிரெண்டு மணியாகி விட்டிருந்தது.அறை நண்பர்களான ரகு,குணா,சுகு வேலையால் வந்து ரெஸ்லிங் கொப்பி போட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.குசினியில் சமைத்து இருந்தது .அனேகமாக ரகுதான் சமைத்து இருப்பான்.ஆட்டு இறைச்சி கறி வாசம் மூக்கைத் துளைத்தது.நான் அவர்களுக்கு கிளி அண்ணையை அறிமுகப்படுத்தினேன்.சுகு என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்.நாங்கள் சமைத்ததில் கிளி அண்ணைக்கும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்தோம்.நான் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே இருந்த கட்டிலில் இருந்த சுகு,” உது ஆர் மச்சான் “?? என்று என்னை நோண்டினான்.சுகுவுக்கு எல்லாம் விலாவாரியாக சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு தலை வெடித்து விடும்.நான் அவனுக்கு விடிய சொல்வதாக சொல்லி விட்டுப் படுத்து விட்டேன்.

மறுநாள் காலையில் “புஸ்… புஸ் ” என்று சத்தம் எனது நித்திரையை குலைத்தது.நான் கட்டிலில் இருந்து இறங்க மனமில்லாது,கட்டிலின் கரைக்கு உருண்டு வந்து கீழே எட்டிப்பார்த்தேன்.கிளி அண்ணை தான் படுத்திருந்த படுக்கையை மடித்து வைத்து விட்டு “புஷ் அப்” எடுத்துக் கொண்டிருந்தார்.சுகு அவருக்கு அருகே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.கிளி அண்ணையின் கட்டான உடல் கீழும் மேலுமாக நடனமாடியது.நான் நித்திரை குலைந்த எரிச்சலில் “என்னண்ணை விடியக்காத்தாலை ??” என்றேன். “தம்பி உமக்குத் தெரியாது.விடியப்பறம் எக்ஸ்சயிஸ் செய்யிறது உடம்புக்கு நல்லது.எழும்பும்.நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்”.என்று குசினிக்குள் போனார் கிளி அண்ணை.என்னிலும் பார்க்க வயது மூத்தவரை என்னால் எதிர்த்துக் கதைக்க முடியாமல் இருந்தது. நான் ,எனக்குள் புறுபுறுத்தவாறு படுக்கையை மடித்து வைத்தேன். படுக்கையை மடித்து வைக்காத சுகு, கிளியண்ணையிடம் செப்பல் பேச்சு வாங்கினான். நானும் சுகுவும் வேலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் இருவருக்கும் கிளி அண்ணை தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்து தந்தார் ……..

000000000

அறையில் வந்த உடனேயே எதுவும் பாராது தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் கிளி அண்ணையை எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஆனாலும் சுகு உடனடியாக அவருடன் சேராது முரண்டு பிடித்தான்.சுகுவின் சோம்பல்த்தனத்தை கிளி அண்ணை கண்டித்ததால் அவன் அவர்மேல் கடுப்பாக இருந்தான்.

நான் அன்று மாலை வேலையால் வரும்பொழுது கிளி அண்ணை போடுவதற்கு நான்கைந்து சேர்ட்டுக்களும் கால்சட்டையும் வாங்கி வந்தேன்.முதலில் கடுமையாக வாங்க மறுத்த அவர்,எனது அழுங்குப்பிடியினால் அவற்றை வாங்கிக் கொண்டார்.எதிலும் யாரிடமும் கடமைப்படாத அவரின் குணம் என்னை வெகுவாகவே கவர்ந்தது .அவர் அறைக்கு வந்ததின் பின்பு எல்லோரும் ரெஸ்லிங் பார்ப்பது நின்றது.”வெறும் நடிப்புக்காக யாரோ சண்டை பிடிப்பதை ஏன் நீங்கள் காசுகளை குடுத்து பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்?” என்பது அவரின் வாதம்.அவரது விளக்கம் ரகு ,சுகு, குணாவைக் கவர்ந்தாலும்,”உப்புடியே எல்லாத்துக்கும் கதை சொன்னால் நாங்கள் பொழுது போக்கிறதுக்கு என்ன செய்யிறது?” என்று கிளி அண்ணையைப் பார்த்து இடக்காகவே சுகு கேட்டான். அவனது கேள்விக்கு கிளி அண்ணை கோபப்படாது “உங்களுக்கு பொழுது தானே போகேலை?நான் உங்களுக்கு செஸ் விளையாட சொல்லித்தாறன் “என்று அதை செயலிலும் காட்டினார்.செஸ் விளையாடுவதில் கிளி அண்ணையை யாருமே வெல்ல முடியவில்லை.எல்லோரையும் உள்ளே வரவிட்டு பெட்டி அடித்து செக் வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்.அவர் செஸ் விளையாடும் பொழுது கைகளும் கண்களும் செஸ் போர்டை ஒருவிதமான குறுகுறுப்புடன் பார்த்தபடியே இருக்கும்.எப்பொழுது செக் வைப்பார் என்று யாருக்குமே தெரியாது.எனக்கு முதலில் இந்த விளையாட்டில் ஆர்வம் இல்லாது போனாலும் காலப்போக்கில் அவரின் விளையாட்டு ரசிகனானேன்.அவர் விளையாடும் பொழுது சுகு வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான்.ஒருநாள் அவன் அடக்க மாட்டாதவனாய் “அண்ணை நீங்கள் இயக்கத்திலை இருந்தியளோ ?ஏனென்டால் அங்கை இருந்தவைதான் உப்பிடி கட்டுசெட்டாய் இருப்பினம்” என்றான். அவர் ஓம் என்றும் சொல்லாது, இல்லை என்றும் சொல்லாது சிரித்தபடியே, ” உமக்கு எப்பவும் பகிடிதான் சுகு” என்றார்.என்னால் அவரை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.இருக்க இடம் இல்லாமல் நடு றோட்டில் குளிருக்குள் விறைத்துக் கொண்டு நின்ற ஒரு சக தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றேன் என்ற எல்லைக் கோட்டிலேயே நான் நின்று கொண்டேன்.

0000000

அமைதியாக சென்று கொண்டிருந்த கிளி அண்ணையின் வாழ்வில் தாயகத்தில் இருந்தும்,இங்கிருந்தும் இரு புயல்கள் ஒரேநேரத்தில் தாக்கின.தாயகத்தில் பலாலியில் நடந்த ஒரு குண்டு வீச்சில் அவரது அப்பா ,அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பலியான செய்தி அவருக்கு வந்தது.இங்கோ அவருடைய அகதி அந்தஸ்துக் கோரிக்கையை உள்துறை அமைச்சு நிராகரித்து இருந்தது .கிளி அண்ணை இடிந்தே போய் விட்டார்.நானும் குணாவும் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தோம்.அவரால் அந்த இரு சம்பவங்களிலும் இருந்து மீளமுடியவில்லை.நாளடைவில் கிளி அண்ணையின் போக்கில் மெதுமெதுவாக மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.முதலில் பியரில் ஆரம்பித்த அவரின் தண்ணி அடிக்கும் பழக்கம்,இப்பொழுது விஸ்கி வரைக்கும் முன்னேறி இருந்தது .எவ்வளவோ மனக்கட்டுப்பாடாகவும், மற்றயவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்த கிளி அண்ணையின் போக்கு எனக்கு கவலையையே தந்தது.அவரின் திடீர் பழக்கங்கள் சுகுவை எரிச்சல் ஊட்டின.அவன் அடிக்கடி காரணமில்லாது அவருடன் கொழுவ ஆரம்பித்தான்.சில வேலைகளில் கிளி அண்ணை இரவில் நித்திரை கொள்ளும் பொழுது இருந்தாற்போல் கடும் தூசணத்தில் , “அடியடா…… அடியடா……. அந்தா…. அந்தா…. அந்த பத்தையுக்கை நிக்கிறான். இந்தா இங்கை பின்னாலை வாறான். விடாதை……… செவிள் அடி குடு. அடியடா….. அடியடா ……. ” என்று கத்துவார்.அப்பொழுது அவருக்குப் பக்கத்தில் படுத்து இருக்கும் சுகு பயந்து போய் அவரை தட்டி எழுப்பி ” என்னண்ணை செய்யிது? ” என்று கேட்டு குடிக்கத் தண்ணி கொடுப்பான் .அந்த நேரம் கிளி அண்ணை வியர்த்து விறு விறுத்து அலங்க மலங்க முழித்தபடி இருப்பார். கிளி அண்ணை கனவில் கத்துவது தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒருநாள், நான் மாலை வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பிய பொழுது கிளி அண்ணையை வீட்டில் காணவில்லை. அவருடைய உடுப்புகள் வைக்கும் இடம் வெறுமையாக இருந்தது. எனது உதவிக்கு நன்றி சொல்லி தன்னை யாருமே தேடவேண்டாம் என்ற கடிதமே எனக்கு மிஞ்சியிருந்தது.சுகு தன்னால்தான் கிளி அண்ணை கோபித்துக்கொண்டு போய் விட்டார் என்று மறுகினான். நாங்கள் எல்லோருமே அவரைத் தேடினோம்.அது அவ்வளவு சுலபமாக எங்களுக்கு இருக்கவில்லை.ஏனெனில் அவர் தன்னையிட்டு பெரிதாக எதுவுமே எங்களுக்கு சொல்லியிருக்கவில்லை.நாங்கள் அவரைத் தேடிக்கொண்டே இருந்தோம்.இறுதியில் அவர் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. கிளி அண்ணை சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தலைமறைவானதால் எங்கள் அறையில் இருந்த சந்தோசம் பறிபோய் விட்டது.

0000000

காலம் தன் கடமையை செவ்வனே செய்து மூன்று வருடங்களை முன்னகர்த்தியது. குணாவுக்கும் சுகுவுக்கும், ரகுவுக்கும் “கலியாணம்” என்ற வசந்தம் வீசியது.அவர்கள் “பச்சிலர் வாழ்க்கையை விட்டு குடும்ப வாழ்வுக்குள் நுழைந்து கொண்டனர்.ஆனாலும் இடைக்கிடை அவர்கள் குடும்பத்துடன் வந்து போனவர்கள் பின்பு படிப்படியாக தங்கள் தொடர்புகளை குறைக்கத் தொடங்கினார்கள். நான் தனித்து விடப்பட்டேன். மறந்திருந்த கிளி அண்ணையின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன. நான் தான் அவரை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேனோ என்றே இப்பொழுது அதிகமாகக் கவலைப்பட்டேன்.

ஒருநாள் மாலை வேலை முடிந்து லாச்சப்பலுக்கு சாமான்கள் வாங்கப்போனேன்.அப்பொழுது லாச்சப்பலில் ஒரிரண்டு கடைகளும் ,எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்களது உணவகங்களுமே இருந்தன. ஆனால் லாச்சப்பல் பின்னேரங்களில் எப்பொழுதுமே எங்கள் சனங்களால் திமிறும்.வட்டிக்கு குடுப்பவர்களும், சீட்டு கட்டுபவர்களும், உணவகங்களில் வேலை செய்வோரின் இடை நேரப் பொழுது போக்க வந்தவர்களும் தான் இங்கு கூடுதலாக கூடுவார்கள்.அன்றும் அப்படித்தான் சனம் அலை மோதியது.நான் சனங்களின் ஊடாக முன்னேறினேன்.தூரத்தே நடு றோட்டில் ஒரு உருவம் லெப்ட். ரைட்… லெப்ட் … ரைட் … என்று கைகளை விசுக்கியவாறு மார்ச் பண்ணியவாறு வெறும் காலுடன் நடந்து வந்தது.இடையிடையே புழுத்த தூசணத்தில் அடியடா…….. அடியடா ……..அங்கை நிக்கிறான். பின்னாலை நிக்கிறான். செப்பல் அடி குடடா ……….. என்றவாறே கையை துவக்கு மாதிரி வைத்துக்கொண்டு டப் டப் என்று வாயால் அபினயித்தபடி ஓடிக்கொண்டிருந்தது.

எனக்கு இந்த வசனத்தை கேட்டதும் மண்டையில் பொறி தட்டியது. “கிளி அண்ணையாய் இருக்குமோ” என்று நினைத்தவாறே சனங்களை விலத்தியவாறே அந்த உருவத்துக்கு கிட்ட போனேன். எனக்கு உலகமே இருண்டது .அது கிளி அண்ணையேதான். நான் கிட்டப் போய் கிளி அண்ணையை பிடித்து உலுக்கினேன்.அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை.புத்தி பேதலித்தவராகவே அவர் காணப்பட்டார். நான் அவரை பிடித்து இழுத்து றோட்டுக்கரைக்கு கூட்டிவந்தேன். அவரின் முகம் கன நாட்களாக ஷேவ் எடுக்காமல் தாடி புதர் போல் மண்டி இருந்தது.ரவுசரரின் ஒரு பக்கம் முழங்காலுக்கு கீழே இல்லாமல் இருந்தது.கால்களில் சப்பாத்து இல்லை.அவரின் உடலில் இருந்து புளித்த வைனின் வாசம் மூக்கைத் துளைத்தது.கண்கள் இரண்டும் உள்ளுக்குப் போய் பூஞ்சையாக இருந்தது.எனக்கு அவரின் கோலத்தைப் பார்க்க அழுகை அழுகையாக வந்தது.” இதென்னண்ணை கோலம் ?? ஏன் என்னை விட்டுப் போனியள்? வாங்கோ வீட்டை போவம் “என்று அவரை அழைத்தேன். அவர் கையை மேலே காட்டினார். அவரின் பிடிவாதம் எனக்கு தெரிந்ததுதான். “எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்க காசு தா “என்று வாயை கோணியவாறே கேட்டார்.எனக்கு அவர் இருந்த நிலையில் காசு கொடுக்க மனம் வரவில்லை.கொடுத்தால் மீண்டும் “விஸ்க்கி ” அடித்து விட்டு இருப்பார் என்றே நினைத்தேன் .” சரி வாங்கோ சாப்பிடுவோம் ” என்றவாறே எனது நண்பனின் உணவகத்தில் நுழைந்தேன்.” வா மச்சான். என்ன வைன் கோஸ்ரியளோடை தொடுசல் வைச்சிருக்கிறாய்”? என்று ஒருமாதிரியாக வரவேற்றான் நண்பன். “மச்சான் இவர் முந்தி என்ரை அறையிலை இருந்தவர்.இருந்தால் போலை காணாமல் போட்டார். எவ்வளவுகாலமாய் இவர் இங்கை இருக்கிறார் எண்டு உனக்கு தெரியுமே?”என்றேன்.”அதை ஏன் கேக்கிறாய். உந்தாளாலை இங்கை நெடுக பிரச்சனைதான் .ஊத்தை குடி.மண்டையும் தட்டி போட்டுது. றோட்டிலை நிண்டு மார்ச் பாஸ்ற் செய்து கொண்டு போறவாற சனத்தை தூசணத்தால பேசிக்கொண்டு இருக்கும்.ஒருத்தரும் அண்டிறேல .உந்தாள் திருந்தாத கேஸ் மச்சான். நான் பாவம் பாத்து இடைக்கிடை சாப்பாடு குடுப்பன். நீ றோட்டிலை போற ஓணானை தூக்கி கழுத்துக்கை விடுறாய் ” என்றான்.எனக்கு நண்பனது பேச்சு கோபத்தை வரவழைத்தது.” மச்சான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்காதை. இவர் எனக்கு தெரிஞ்சவர். ஒவ்வரு நாளும் இவருக்கு சாப்பாடு குடு.உனக்கு நான் காசு தாறன்” என்றேன் .” இல்லை மச்சான் என்ரை வியாபாரமேல்லோ கேட்டு போடும்? என்ற நண்பனை இடை மறித்து,” மச்சான் எங்கடை முதல் சீவியத்தை ஒருக்கால் யோசிச்சு பார்.இவருக்கு ஒரு சாப்பாடு குடுக்கிறதால உன்ரை வருமானம் ஒண்டும் கெட்டு போகாது.எனக்காக செய்யடாப்பா “என்றேன். “சரி மச்சான் நீ எனக்கு எவ்வளவு செய்தனி உனக்காக செயிறன்” என்றான் நண்பன்.நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல கிளி அண்ணை தனது உடம்பை சொறிந்து கொண்டிருந்தார்.நான் ஓடர் பண்ணிய மரக்கறி சாப்பாடு வந்தது.கிளி அண்ணை ஒருவித கெலிப்புடன் சோற்றை அள்ளி அள்ளி வாயினுள் அடைந்தார்.அதில் அவரின் பசி அப்பட்டமாகவே தெரிந்தது.

2a

கிளி அண்ணை எப்பொழுதுமே நிதானமாக உள்ளங்கையில் சாப்பாடு படாமல் சாப்பிடுபவர்.அவர் சாப்பிட்டதன் பின்பு கோப்பை துடைத்த மாதிரி இருக்கும்.அவ்வளவு தூரத்துக்கு சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்தவர்.இன்று அவர் சாப்பிடுவதைப் பார்க்க எனக்கு விசரே பிடித்தது .அவர் வாயிலும் உடலிலும் சோற்றுப்பருக்கைகள் பரவி இருந்தன.நான் பொறுமையாக ரிஸ்யூ பேப்பரால் அவற்றைத் துடைத்து விட்டேன்.நான் இறுதியாக அவரை வீட்டிற்கு வரும்படி மன்றாடினேன். அவரோ வேறு உலகில் இருந்தார்.கையை மேலே மேலே தூக்கிக் காட்டிக்கொண்டிருந்தார்.நான் மனம் கேட் காமல் அவர் பொக்கற்றினுள் நானூறு பிராங்குகளை வைத்து விட்டுக் கனத்த மனத்துடன் அறைக்குத் திரும்பினேன்.

காலம் மூன்று மாதங்களை விழுங்கி எப்பமிட்டவாறே என்னைப் பார்த்து இழித்தது .காலத்துக்கும் எனது வேலைக்கும் சண்டையே நடந்து நான் அதனுள் அமிழ்ந்து போனேன்.கிளி அண்ணையின் நினைவுகளும் அதனுள் அமிழ்ந்துபோனது.குளிர்காலம் மொட்டவிழ்க்கின்ற மாதத்தின் தொடக்கப்பகுதி ஒன்றின் ஒருநாள் இரவு வேலை முடிந்து அலுத்துக்களைத்து அறைக்குத் திரும்பினேன். தொடர் வேலை உடம்பு இறைச்சியாக நொந்தது.சமைப்பதை நினைக்க கடுப்படித்தது.எனது கைத்தொலைபேசி சிணுங்கல் வேறு எரிசலூட்டியது.வேண்டா வெறுப்பாக அழைப்பை எடுத்தேன். தொலைபேசியில் குணா பரபரத்தான்,” மச்சான் விசையம் கேள்விப்பட்டியோ?? எங்களோடை இருந்த கிளி அண்ணை ரெயிலுக்கை விழுந்து செத்துப்போனாராடா. இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன.

என்னால் கிளி அண்ணையின் அவலச்சாவை தாங்க முடியவில்லை.கிளி அண்ணையின் உடலத்தை பொறுப்பெடுக்க வைத்தியசாலை நோக்கி விரைந்தேன்.வைத்தியசாலையில் குணா எனக்காகக் காத்திருந்தான் .சுகுவும், ரகுவும் ,வந்திருந்தார்கள்.சுகு அழுது கொண்டு நின்றான்.நாங்களே செத்தவீட்டை செய்வதாக முடிவெடுத்தோம்.செத்தவீட்டுக்கு ஓர் மலர்ச்சாலையை பதிவு செய்தோம்.எங்கடை சனங்களுக்காகக் களமாடி தன் வாழ்வையே தொலைத்த கிளி அம்மானுடைய செத்த வீட்டுக்கு எந்தச் சனமுமே வரவில்லை,நோட்டிஸ் ஒட்டியவர்கள் உட்பட. நான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு மின்சார அடுப்பின் பொத்தானை தட்ட, கிளி அண்ணை என்ற கிளி அம்மானின் உடலம் மெதுவாக மின்சார அடுப்பினுள் நகர ஆரம்பித்தது.

000000

http://eathuvarai.net/?p=4401

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பாணியில மஜிகல் ரியலிசம் இல்லாத உள்குத்துத் தொடங்கி இருக்கிறேர் கோ! மார்க்கெற்றிங் ஸ்ட்ரடஜி! :D

Link to comment
Share on other sites

கதையும் கதை எழுதிய விதமும் நன்றாக இருக்கின்றது. கோமகனின் எழுத்து நடையும் மாறியிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமயான கதை. கோமகனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பாணியில மஜிகல் ரியலிசம் இல்லாத உள்குத்துத் தொடங்கி இருக்கிறேர் கோ! மார்க்கெற்றிங் ஸ்ட்ரடஜி! :D

 

ஜஸ்டின் கதையை கதையாகப் பார்ப்பதைத் தவிர்த்து  ஒரு தனிமனிதர் மேல் தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவதையே உங்கள் கருத்துக் காட்டி நிற்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது , பகிர்வுக்கு நன்றி கிருபன்...!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ....எழுத எழுத எழுத்து மெருகேறும்  என்பதற்கு நீங்கள் சாட்சி..வீறு நடை தொடர்ந்து போட

ட்டும் எழுத்துக்களுடன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் கதையை கதையாகப் பார்ப்பதைத் தவிர்த்து  ஒரு தனிமனிதர் மேல் தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவதையே உங்கள் கருத்துக் காட்டி நிற்கிறது.

 

 

கதை பற்றித் தான் கருத்து வைத்தேன்! தனி நபர் தாக்குதல் எண்டால் "ரிப்போர்ட்டை" அழுத்தித் தெரிவிக்கலாமே? ஏன் தயக்கம்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது... கோமகன்!

 

கருத்து முரண்பாடுகளைத் தனிநபர் முரண்பாடுகளாக நினைக்காமல் யாழில் இந்தக் கதை உங்களால் நேரடியாகப் பகிரப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்! 

 

இன்னும் காலம் கடந்துவிடவில்லை!

 

வாழ்த்துக்கள் கோமகன்!

 

இணைப்புக்கு நன்றிகள் கிருபன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

கருத்து முரண்பாடுகளைத் தனிநபர் முரண்பாடுகளாக நினைக்காமல் யாழில் இந்தக் கதை உங்களால் நேரடியாகப் பகிரப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்! 

-------

 

கோமகன் எங்களுடன், கோவித்துக் கொண்டு சென்ற படியால்....

அவரால், இக் கதையை... நேரடியாக பதிய முடியாது புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்....

Link to comment
Share on other sites

"இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன."  இது எனக்கு விளங்கவில்லை.முன்பு இயக்கம் இருக்கும்போது இப்படி சம்பவங்கள் நடந்ததா? 

Link to comment
Share on other sites

சும்மா வாசிக்கலாம் ஒழிய பெரிதாக சொல்ல எதுவும் இல்லை கோ .

 

இப்படி சம்பவங்கள் நடந்ததாக நான் அறியவும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 90 களுக்கு முன்பாகவே தாயக மக்களுக்காகக் களமாடிய  கிளி அம்மான்

கடைசியில் கோமகனின் கையால் சீதை மூட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டது மிகவும் அவலம் தான்

இணைப்பிற்கு நன்றி  கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அரிப்புக்கு ஏற்றவாறு இப்போது எவரும் எதுவும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அரிப்புக்கு ஏற்றவாறு இப்போது எவரும் எதுவும் எழுதலாம்.

 

மிகச் சரியான கருத்து நந்தன்.

பச்சை முடிந்து விட்டது. நாளை நிச்சயம் போட்டு விடுகின்றேன். :)

Link to comment
Share on other sites

கதை கற்பனையாக எழுதப்பட்டுள்ளது. வளமையான கோப்பி சிகரெட் குளிர்காலம் கோமகனின் மனிதாபிமானம் என  தனது இலக்கிய ஆழுமையை வெளிப்படுத்தியுள்ளது. 
 
ஒருவரின் படைப்பு விமர்சனத்துக்கு உள்ளானால் அதுவே தனது வெற்றியென பல எழுத்துலகச் செம்மல்கள் பெருமைப்படுவதுண்டு. மக்களால் ஏற்கப்படாத உண்மைக்கு பறம்பான எழுத்துக்களையும் மக்கள் விமர்சனத்துக்கு உட்படுத்துவார்கள் என்பதனையும் எழுத்தாளர் கோமகன் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
 
கோ கற்பனை செய்து உருவாக்கிய கிளியம்மான் சோபா அம்மானை ஏனோ சுட்டுப்போட்டமாதிரி இருக்கு.  கோவின் கற்பனையான கிளியம்மான் இனிமேல் பிரான்சில் உருவாகுவார். அந்த செம்மலுக்கு கோவின் கையால் சிதை மூட்டப்பட்டு தியாகம் கௌரவிக்கப்படும். 
 
மேஜர் பட்டமில்லாமல் கோவின் கருணையால் மார்ஸல் பட்டத்தi கொடுத்து கௌரவித்தால் பிரான்சில் அலையப்போகும் கிளியம்மான்(''''') பெருமைகொள்ளலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் யாழ்களத்துக்கு வாங்கோ பதிவிடுங்கோ கதைக்கு நன்றிகள்......இனத்துக்காக போராடிய பொன்சேக்காவுக்கும் இந்தநிலைதான் மதத்திற்காக போராடிய சதாம்,பின்லாடன்,கடாபி இன்னும் பலர்.......உண்டு....எவன் ஒருவனுக்கு சமுதாயத்தை சுழிக்க தெரியுமோ அவன் தப்பி பிழைப்பான்.....

Link to comment
Share on other sites

கோவின் இக்கதைகள் குறித்து என் கருத்து  சாந்தியக்காவின் கருத்தினைப் போன்றதே. அத்தோடு,

இக்கதை குறித்தான 'ரொம்பவும் காரசாரமான' விமர்சனத்தினை கோமகனின் காதுகுளிர   தொலைபேசி வாயிலாக கொடுத்த திருப்தி எனக்குள்ளது. :lol::wub::D 

 

அதுதவிர எனக்கு ஒரு சந்தேகம்.... ,

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

நிர்வாகத்த்திடம் அவரா போனார..? அல்லது தடை செய்தீங்களா??? என்று டவுட்டு கேட்டு ஒரு நாலைஞ்சு  தனிமடல் போட்டு கேட்டுட்டன்... இந்த நிமிஷம் வரைக்கும் பதிலில்லை. நித்திரை போல.... ! :lol:

 

 

 

Link to comment
Share on other sites

 

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

கோ தன்னால் தானே வெளியேறினார் கவிதை ? யார் இங்கே துரத்தினார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவின் இக்கதைகள் குறித்து என் கருத்து  சாந்தியக்காவின் கருத்தினைப் போன்றதே. அத்தோடு,

இக்கதை குறித்தான 'ரொம்பவும் காரசாரமான' விமர்சனத்தினை கோமகனின் காதுகுளிர   தொலைபேசி வாயிலாக கொடுத்த திருப்தி எனக்குள்ளது. :lol::wub::D

 

அதுதவிர எனக்கு ஒரு சந்தேகம்.... ,

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

நிர்வாகத்த்திடம் அவரா போனார..? அல்லது தடை செய்தீங்களா??? என்று டவுட்டு கேட்டு ஒரு நாலைஞ்சு  தனிமடல் போட்டு கேட்டுட்டன்... இந்த நிமிஷம் வரைக்கும் பதிலில்லை. நித்திரை போல.... ! :lol:

 

கவிதை....

கோமகனுக்கு.... நிர்வாகம், அவர்  யாழ்களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க விருப்பமா? இல்லையா?

என்று...... மூன்று தெரிவுகளை, கொடுத்திருந்தது நல்ல ஞாபகம்.

 

அதில்... ஒரு தெரிவு தானாகவே விலகிச் செல்வது.

அதனைத்தான்... அவர், விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

 

அதனை... விடுத்து, மற்றவர்கள் மேல், பழி சுமத்துவது நியாயம் அல்ல.

இதனைப் பற்றி.... அக்கு வேறாக, ஆணி வேறாக விவாதிக்க வேண்டும் என்றால்......

புது திரியை.... ஆரம்பியுங்கள். இங்கு வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.