Jump to content

1,2,3,...........05 செக்கன்கள் - உண்மைக்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து

டென்மார்க்  பயணம்.

 

அத்தானின் ஒரு வருட  துவசம் என்பதால்  பொருட்களையும் வாங்கி

அவசரமாக புறப்படுகின்றோம்.

 

இரவு ஓட்டம்

பலகாரச்சூடு  சமையல் என ஆட்கள் தேவை என்பதால்

யேர்மனி  சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு

பயணம் தொடங்குகிறது.....

 

நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன்.

ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்..

வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது..

 

நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன்.

திடீரென எனது பாதை  முடிவடைவதற்கான பதாதை  ஒன்று கண்ணில் தெரிகிறது.

பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர

அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை.

முன்னால் பார்க்கின்றேன்

எனது பாதை முடிவடைந்து விட்டது தெரிகிறது

பக்கத்தில் பார்க்கின்றேன்

பெரிய ரக றக்  ஒன்று நல்ல வேகத்தில் என்னை மறைத்தபடி செல்கிறது..

 

ஒரு சில செக்கன்களே உள்ளன

பிரேக் பிடித்தாலும் நிறுத்தமுடியாது

லொறிக்குள் ஓரங்கட்டப்பட்டு குடும்பத்தடன் நசுக்கப்படுவேன்

வாகனத்தின்  வேகத்தை அதிகரிப்பதைத்தவிர வேறு வழியில்லை...

 

கால்கள் உடனடியாக செயற்பட

வாகனம் வேகம் எடுக்கிறது.......

 

1,2,3,...........05 செக்கன்கள் 

வாகனம் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்துக்கு மேலெழுகிறது...

எனது பக்கம் ஒரு இஞ்சி

லொறிப்பக்கம் ஒரு இஞ்சி இடைவெளியில் வாகனம் லொறிக்கு முன்னால்  நகர்கிறது..

லொறிக்காறன் ஒலி ஒளி பாய்ச்சி தடுமாறுகின்றான் என்பது பின்னால் தெரிகிறது...

 

ஆனாலும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியது எப்படி என நம்பமறுத்து 

ஆளையாள் நலம் விசாரிக்கின்றனர்..

 

அடுத்த சில கிலோமீற்றரில் ஒரு பார்க்கில் வாகனத்தை நிறுத்திய  நான்

வெளியில் நடந்து பார்க்கின்றேன்

காலைப்பார்க்கின்றேன்

என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்

நடமாடுவது நான் தானா என...

 

(நாடுகள் மாறும் போது பதாதைகள் சம்பந்தமாக கவனமாக இருங்கள் உறவுகளே..)

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure: உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

Link to comment
Share on other sites

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

 

 

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

Link to comment
Share on other sites

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

Link to comment
Share on other sites

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.
வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.
மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :oவாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure:உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

 

ஒன்றில் முதலில் காட்டிய  பதாதையை  நான் கவனிக்காமல் இருந்திருக்கணும்

அல்லது அந்த முதலாவது பதாதை போன பின் இந்த பாதைக்குள் (highway)  நான் வந்திருக்கவேண்டும்..

 

பிரான்சின் பதாதைகள் பழக்கப்பட்டவை......

ஆனால் நாட்டுக்கு நாடு வித்தியாசமானவை

(வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் ஒரே மாதிரியாக இருந்தபோதும் காட்டும்,  எழுதும் முறைகள் வித்தியாசமானவை)

 

இந்த வீதியில்  இந்த வேகத்தில் ஆயிரம்  கிலோமீற்றருக்கும் அதிகமாக ஓடவேண்டியிருந்ததாலும்

அப்பொழுது தான் உள்நுழைந்து  ஓடத்தொடங்கியிருந்ததாலும்  கொஞ்சம் அசட்டையீனம் இருந்திருக்கலாம்  என்று படுகிறது.

 

 

நன்றி  தம்பி  இசை

அன்புக்கும் கருத்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

 

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

 

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

 

 

பதாதையை  நான் தான் கவனிக்கவில்லை சோழியான்....

 

லொறிக்காறன் 2வது வரிசையில்

வேகத்தில் தான் வந்தான்...

அதேநேரம் நான் தப்பியதற்கு

பக்கத்தில் வந்தது  லாறி  என்பதும் ஒரு  காரணம்

இல்லாது விட்டால் வேகமெடுத்து முந்திச்செல்லமுடியாது   போயிருக்கும்.....

ஆனால் பிரேக்  பிடித்து பின்னால் நுளைந்திருக்கலாம் (பின்னால் வாகனங்கள் இல்லாதுவிடில்)

 

பிரேமனால் தான் சென்றேன்

ஆனால் அதற்கு இன்னும் 600 கிலோமீற்றர் போகணுமே..

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

 

 

உண்மையில் இப்ப நினைத்தாலும்  தப்பியதை நம்பமுடியவில்லை..

 

மற்றும்படி

அப்ப  இல்லை

இப்பவும்  பாட்சாதான்...... :D

(எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது)

 

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

 

 

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

இரண்டே இரண்டு  வழிகள் தான்

வேகப்படுத்தி முன்னுக்கு உள்நுழையணும்

அல்லது பிரேக்  பண்ணி அதே இடத்தில் நிறுத்தணும்..

பிரேக் செய்து நிறுத்தக்கூட இடம் போதாது என்பதால் ஒரே தெரிவு

வேகப்படுத்துதல்

தற்கொலைக்கு ஒப்பானது

வரும் லொறி பின்னால் ஒரு சிறு தட்டு தட்டினாலும் வாகனம் வட்டமடிக்க ஆரம்பிக்கும்.... :(  :(  :(

 

எனது பிள்ளைகள் 3 பேர் புது வாகனசாரதி பத்திரக்காறர்கள்

அவர்கள் வாகனத்தை செலுத்தியிருந்தால்

மூளை உடனே பிரேக்கில்தான் கால்வைக்கச்சொல்லும்

நான் செலுத்தியதால் 30 வருடத்துக்கு மேலான எனது அனுபவம் 

சில நொடிகளில் நிதானமாக முடிவேடுத்திருக்கு என்று பின்னர் நினைத்தேன்...

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

 

 

நன்றியண்ணா...

எனது அனுபவங்கள் மற்றவர்கள் ஒருவருக்கேனும் பாடமாக அமையணும் என்பதற்காகவே பதிகின்றேன்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

 

 

உண்மை கிருபன்

நீங்கள் சொல்லும் 2  காரணங்களும் உண்மை

அந்த லொறிச்சாரதி  சிறிது பிரேக் செய்தும் மற்றப்பக்கதால் சிறிது விலகியும் இருக்கலாம்

இந்த தப்புதலில் நிச்சயம் அவரது பங்கும் உண்டு என்று தான் நானும் நினைக்கின்றேன்....

 

நன்றி  நேரத்துக்கும்  கருத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.

வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.

மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

 

 

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

 

உசுப்பேத்த எழுதவில்லை ரதி

எனது அனுபவங்களை எழுதி

கவனம் என்றே எழுதினேன்...

 

காரணம் நாடுகளுக்கு போகும் போது மிக மிக அவதானமாக இருக்கணும்

பழக்கப்பட்ட பாதைகளுக்கும் பழக்கப்பட்ட பதாதைகளுக்கும் சிரமங்கள் இருக்காது

ஆனால் புதுபாதைகளும் மொழிகளும் தடுமாற வைத்துவிடும்...

 

மற்றும்படி

கார் ஒட்டத்தில் நானொரு வெறியன்

என்னிடமுள்ள ஒரேயொரு கெட்டபழக்கமும் இதுதான்....

இதையும் மற்றவர்களின் நலனுக்காகவே சொல்கின்றேன்..

 

நன்றி சகோதரி

அன்புக்கும் வருகைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.
ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நாஷனல் வீதிகளிலும் (ஒரே வீதியில் எதிரெதிராய் வாகனங்கள் வரும் வீதி). இப்படியான  சம்பவங்கள் நேர்வதுண்டு. ஆனால் அங்கு ஒரு வாகனத்தை முந்தும்போது வலு அவதானமாய் தூரத்தில் வரும் வாகனங்களைக் கவனித்து செய்யிறது.இங்கு அவர் இதை எதிர்பார்க்கவில்லை. லொறிக்காரன் ஒரே வேகத்தில் தான் 90 ல் சென்ருகொண்டிருப்பான், குறைக்கமாட்டான். நாம் 130ல் வேகமாய் அவரைத் தான்டிவிட முடியும், தான்டவில்லையெனில் தாட்டுப்போடும்...!

Link to comment
Share on other sites

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

 

 

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

 

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

 

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

 

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

 

 

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

 

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

 

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

 

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

 

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

 

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

 

 

ஒரு காரில என்னென்டைய்யா ரெண்டு பேர் ரேஸ் ஓடுவது ? 
 
ஒவ்வொருவரும் தங்கட காரில ரேஸ் ஓடுவமே என்டு கேக்கிறார்.
 
 
:D  :D  :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

 

பரிமளத்திட்டை எல்லாத்தையும் சொல்லுறதுக்கு நான் என்ன அரிச்சந்திரன் பரம்பரையே????  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

 

 

நிச்சயமாக  தம்பி  சேரன்

ஆனால் முடியல அப்பா

ஒழுங்கா  ஓடுவம் என்று முடிவெடுத்த ஓடினாலும்

எவனாவது குறுக்கவந்து கடுப்பேத்தி என்னை மாற்றிவிடுகின்றார்கள் :(

கீழே குமாரசாமியண்ணையைப்போல.... :lol:  :D

 

பிள்ளைகள் வளர்ந்தபின் ரொம்ப மாறியிருக்கின்றேன்

அவர்களும் என்னை  பின்பற்றக்கூடாது என்பதற்காக...

அதனால் தான் மணிக்கு 160 கிலோமீற்றர்....

 

நன்றி  தம்பி  அன்புக்கும் கட்டளைக்கும்...

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

 

 

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.

ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

 

 

நிச்சயமாக காட்டியிருப்பார்கள்

ஒன்றில் நான் இடையில் வந்திருக்கணும்

அல்லது கவனிக்காது விட்டிருக்கணும்

 

நன்றி  வாத்தியார்

அன்புக்கும் ஆலோசனைக்கும் அறிவுறுத்தல்களுக்கும்...

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

 

1987_01.jpg

 

இப்படியிருக்கவில்லை  பஞ்ச்

 

வீதியை  முடித்தே விட்டார்கள்

ஒன்றில் வந்தபாதையில் நிறுத்தணும்

அல்லது அடத்த பாதைக்குள் நுளையணும்

2 தெரிவு தான்..

ஒரு பத்து மீற்றர்கூட  எனது கண்ணுக்குப்படவில்லை

 

நன்றி  விளக்கத்துக்கும் நேரத்துக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1- விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
2- அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
3-அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.

 

 

1-  எனது 30க்கும் மேற்பட்ட வாகன அனுபவம் தான் என்னைக்காத்ததாக நினைக்கின்றேன் அண்ணா

இதே எனது பிள்ளைகளோ

புது சாரதிகளோ

நிச்சயம்  பிரேக்கில் தான் கால்வைத்திருப்பார்கள். :(

 

2- எனது வேக ஓட்டம்  காரணமாக எப்பொழுதும் அவதானமாக இருப்பதால்தான் இதுவரை எதுவித விபத்தக்களிலும் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் வீட்டில் சொல்லியுள்ளேன் சந்திக்கும் விபத்து மிக பயங்கரமானதாக இருக்கும் என்று. .. :(

 

3- ஓடக்கூடிய  இடங்கிளிலேயே  ஓடுவது எனது பழக்கம்

மழை பனி  காலங்களிலும் வளைவுகளிலும் வீரம் காட்டுவதில்லை...

ஆனால் இந்த சூழ்நிலைகள் தவிர்ந்த இடங்களில் எப்பொழுதுமே வேகம் அதிகமாக இருக்கும்...

முன்பெல்லாம் 850 கிலோமீற்றர் லூர்து  மாதா கோயில் எனக்கு 51/2 மணித்தியால பயணம் தான்.

காலையில் போய்க்கும்பிட்டுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்..... :(

 

நன்றியண்ணா

அன்புக்கும் நேரத்துக்கும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.