Jump to content

உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது


Recommended Posts

உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது
 
உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ்.போகோ ஹராம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதம் தொடர்பில் இலங்கையிலுள்ள சூறா சபை உலமா சபைகளின் நிலைப்பாடு. இதனை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென சவால் விடுக்கும் பொதுபலசேனா.
images%20%281%29_0.jpg
அரபுலகின் பணத்துக்கும் எண்ணெய்க்கும் இலங்கையையும் சிங்கள பௌத்தத்தையும் காட்டிக்கொடுக்க முடியாதென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.
 
கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
 
சூறா சபை மற்றும் உலமா சபைகள் எல்லாம் அரபு நாடுகளிலேயே இயங்குகின்றது. அவ்வாறான அமைப்புக்கள் இலங்கைக்கு தேவையில்லை. எனவே, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த சபைகள் உண்மையிலேயே மனித உரிமைகளை ஜனநாயகத்தை மதிக்கும் சபைகள் என்றால் இதனை மீறும் இயக்கங்கள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
 
இல்லா விட்டால் இந்த பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவே எண்ண வேண்டி வரும். அவ்வாறே கருத வேண்டி வரும். அதேபோன்று அரசாங்க சார்பற்ற நிறுவனம் ?????? மனித உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர்.
 
போகோ ஹராம் இயக்கம் பெண்களை கடத்தி பாலியல் வர்த்தகத்திற்கு ஈடுபடுத்துவது கொலை செய்வது உட்பட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும்.
 
உலகில் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. கிறிஸ்தவர்கள் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்படுகின்றார்கள். எனவே, அரபுலகின் பணத்திற்காகவும் எண்ணெய் வளத்திற்காகவும் இலங்கையையும் சிங்கள பௌத்தர்களையும் காட்டிக்கொடுக்க முடியாது.
 
சர்வதேசம்
 
அடிப்படைவாத சக்திகள் சர்வதேச ரீதியாக எமக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள ஒரு சிலர் வெளிநாட்டு தூதரகங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு எமக்கெதிரான புத்தகங்களையும் தயார்படுத்தி வருகின்றனர்.
 
எம்மிடம் இனவாதம் இல்லை. ஆனால் சிங்களவர்களாகட்டும் தமிழர்களாகட்டும் முஸ்லிம்களாகட்டும் அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றோம்.
 
எமது இந்த அலுவலகத்தில் அண்மையில் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்போது அவர்களுக்கு தொழுகை நடத்த இங்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.
 
தர்மம் என்பது சத்தியம் ஆகும். இதனையே நாம் வெளிப்படுத்துகின்றோம். ஒரு சிலருக்கு இது கசப்பாக இருக்கலாம்.
 
நிறைவேற்று அதிகாரம்
 
இதில் அபரிதமான அதிகாரங்கள் இருப்பதையும் அதனை குறைக்க வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லையென்பதையும் இங்கு உணரப்பட வேண்டும். நாட்டில் 10 இலட்சத்திற்கு மேல் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நிறைவேற்று அதிகாரத்தின் கடிதங்களையே மதிப்பதில்லை. நடைமுறைப்படுத்துவதில்லை.
 
அவ்வாறானதோர் நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
இந்தியா
 
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எமக்கு சாதகமாக உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.