Jump to content

வாத்தியின் வரிகளில்......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியின்  வரிகளில்........ :wub: 

 

 

வயது நான்கு -  ஆறு

 

அம்மாவின் கைப்பையில் அவன் கண்ட அந்த இரண்டு ரூபாய் நோட்டு

மின்னல் போல அடிக்கடி அவன் கண்கள்  முன் வந்து போனது

அப்பச்சி கடையில் அவன் விரும்பும் அந்த அற்புதமான கல் பணிஸ்

வாயில் எச்சிலை ஊறவைக்க கைவைத்தான் அம்மாவின் கைப்பையில் :)

 

அழகிய அந்த இரண்டு ரூபாய் நோட்டு இப்போது அவன் கையில்

பழகிய நண்பர்களைப் பார்த்தும் மறைந்தான் வேறு ரூட்டில்

உலகத்திலே அவன் தான் பணக்காரன் பறந்தான் கற்பனை வானில்

நிலத்தில் கால்கள் நிக்கவில்லை  நிமிர்ந்தான்  அப்பச்சி கடைவாசலில் :D 

 

அப்பச்சி கடையில் அன்று  அவன் உண்ட அந்தக் கல் பணிஸ்

அப்பப்ப இனித்தாலும் அன்று  அவன் அம்மா கையில்

பணம் இல்லாமல் கல்லூரி வரை கால் கடுக்க நடந்தது

தினம் அவன் நெஞ்சத்தில்  கொஞ்சம் ஈரத்தைக் கொட்டியது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது  நான்கு -  ஆறு

 

பாலகப் பருவம் பக்கத்து வீட்டில்
பருவத்து விளையாட்டுக்கள்
நான் அப்பா நீ அம்மா

அப்பா என்றால் வெளிக் கேற்றால் உள் நுழைவார்
அம்மா என்றால் அப்பாவிற்கு சோறு ...  
அத்துடன் முட்டைப்பொரியல் ......

மூன்று கல்லில் தேங்காய்ச்  சிரட்டை
தண்ணீரும் அரிசியும் சிரட்டையை நிரப்பும்
 

இல்லையே முட்டை.....  

அடுத்த நாள்

இட்டதே முட்டை வீட்டில் கோழி
அப்பாவிற்குரியது.....
அடுத்த வீட்டில்  சிரட்டைக்குள்  வீழ்ந்து சிதறியது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அனுபவக்கவி நன்றாக இருக்கிறது. இரசித்து வாசிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது வாத்தியார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், இளமைக்காலத்து அனுபவங்களின் இனிமையை, எப்.எம். அலைவரிசையில கேட்கிற மாதிரி, அனுபவங்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன!

 

இருந்தாலும், இந்த அப்பா -அம்மா விளையாட்டுக்கள் போன்றவை தான் ஒரு பெண்ணின் மனதில் ஒரு விதமான, 'அடிமைத் தனத்தை' விதைத்து அவளது  'ஆழுமைகளை' வளர விடாமல் தடுக்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்! :rolleyes:

 

நானும் இப்படியான விளையாட்டுகள் விளையாடி இருக்கிறேன்! :D

 

ஆனால் அப்போது புரியாத, புரிய விரும்பாத சில விடயங்கள், இப்போது புரியிற மாதிரிக்கிடக்கு!

 

தொடருங்கள் வாத்தியார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அனுபவக்கவி நன்றாக இருக்கிறது. இரசித்து வாசிக்கிறேன்

 

பல பசுமையான  நினைவுகள்  எப்போதும் மனதில் ஒட்டியிருக்கும்

அவற்றைப் பதிவிட யோசித்தேன், இது கவிதைத் தொகுப்பல்ல :D

மனதில் வரும் நினைவலைகள்

 

வருகைக்கு நன்றி வல்வை சகாரா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் படிக்கச் சுவையாய் இருக்கின்றது , தொடருங்கள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுமேரியர்,புங்கையூரன் மற்றும் சுவி அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு  எந்த ஊரு??? :icon_idea:

நன்றாக  உள்ளது

தொடர்க.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது வாத்தியார். சுயசரிதை போல இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பான வயதுமில்லை தப்பான எண்ணமும் இல்லை
தவறான  நோக்கமும் இல்லை..  இல்லை..
இப்பவே சொல்லிப்புட்டன்  அப்புறமா அடிக்க வரக்கூடா   :D
இது எப்போ நடந்த ஆபிரேசன்

அப்போ அப்பா ஆசுப்பத்திரியில்
 அவசரப்பிரிவில் அறுவைச் சிகிச்சை
அப்பெண்டிசைற்றாம் ஏதோ கண்றாவி

பெரிசுகள் எல்லாம் அம்மாவோடை அவசரம்

அவசரமாய்  ஆஸ்பத்திரிப்பக்கம் ஒரே அலைச்சல்
அப்பா வீட்டிலை செல்லப் பிள்ளையாம்

எங்கடை வயதுக்கு விஷயம்  விளங்கேல்லை
முன் கடை கந்தசாமி முகட்டைப்  பாத்து முணுமுணுப்பு  
அப்பெண்டிசைற்றாம்  என்னண்ணை.... கொஞ்சம் பொறப்பு
டாக்குத்தர் கொப்பற்றை வயித்திலை கத்தி வைப்பார்....
டக்கெண்டு ஒரு கிழமை போச்சுது அப்பா வீடு வந்தார்

நான் டாக்குத்தர் ஆக வேணும் மனதிலை அடிக்கடி யோசனை :wub:

மாமா வீட்டிலை மச்சாள் பக்கத்திலை நேரம் போகுதில்லை :lol:
சும்மா ஓடிப்பிடிச்சு எத்தனை நாள் பொழுதும் போகுதில்லை
நம்ம ஐடியா நான் டாக்குத்தர் நீ நோயாளி உனக்கு அப்பெண்டிசைற் :o
கம்மெண்டு இரு கத்தி வைக்கின்றேன்  சட்டையெல்லாம் அவுற்
மச்சாளின் வயிற்றில் கத்தியின் முனைகள்... ஆபிரேசன் சக்சஸ் .. :D:lol:

கிணத்தடியில் மாமா கால் கழுவ  வந்தவர் கண்றாவியைக் கண்டவர்
சுணக்கமே இல்லை  கனக்க யோசிக்கவில்லை முதுகில் :o
விழுந்தது இரண்டு முறை.... பின்னங்கால்கள் முட்டியது எங்கோ...
தழும்புகள் இன்றும் தடுமாறுகின்றன்  நினைவலைகளாய்.... :D





 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு  எந்த ஊரு??? :icon_idea:

நன்றாக  உள்ளது

தொடர்க.

 

பக்கத்து ஊரு தான் விசுகு  அண்ணை :D

வருகைக்கு நன்றிகள்

 

நன்றாக இருக்கின்றது வாத்தியார். சுயசரிதை போல இருக்கு :rolleyes:

 

சுய சரிதை எழுதினால் குடும்பம் குட்டி என்னாகின்றது :D

எல்லாம் தணிக்கையின் பின்னர் வருவது :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.