Jump to content

மண்டேலா: அன்புசூழ் உலகு


Recommended Posts

564xNxmandela2_2008928g.jpg.pagespeed.ic

 

இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள்

கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி.

சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர்.

அசாதாரணமான சம்பவங்கள்

சிறையிலிருந்து அவர் விடுதலையானதும் அசாதாரணமான விஷயங்கள் நடைபெற்றன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர்களில் பலர் அவரைப் பயங்கரவாதி என்றே தொடர்ந்து சாடினாலும், வெள்ளையர்களின் தரப்பு என்ன, அவர்களுடைய அச்சம் என்ன என்று அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் மண்டேலா. அவர் செய்த சில செயல்கள், வார்த்தைகளைவிட வெகு வலுவாக அவருடைய எண்ணங்களைப் பறைசாற்றின.

அவர் அதிபராகப் பதவி ஏற்றபோது. சிறைச்சாலையில் அவருக்கு சிறை அதிகாரியாக இருந்தவரை முக்கியப் பிரமுகராக வரவேற்று அரங்கில் இடம்பெறச் செய்தார். அவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞரை மதிய உணவு விருந்துக்கு வரவழைத்து அருகில் அமர்ந்து உண்டார். எப்பேர்ப்பட்ட மகத்தான பெருந்தன்மை அது. அவருக்கு எதிராக வாதாடிய அந்த அரசு வழக்கறிஞர், அவருக்கு மரண தண்டனைக்குக் குறைவாக எந்த தண்டனையும் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்று தீவிரமாக வாதாடியவர். அதுமட்டுமல்ல, காலம்சென்ற தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசியல் தலைவர்களின் மனைவி யர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். 1958 முதல் 1966 வரை தென்னாப்பிரிக்கப் பிரதமராக இருந்தவரும், நெல்சன் மண்டேலாவைச் சிறைக்கு அனுப்பியதோடு தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தடைசெய்தவருமான எச்.எஃப். வெர்வேர்டின் மனைவிக்கும் அழைப்பு அனுப்பினார். உடல்நலம் சரியில்லாததால் வர முடியவில்லை என்று அந்த அம்மையார் தெரிவித்ததும், அவர் குடியிருந்த வீட்டுக்கே நேரே சென்று அவரிடம் நலம்விசாரித்து, தேநீர் அருந்திவிட்டு வந்தார்.

அன்பின் உறைவிடம்

நம்ப முடியாத அளவுக்கு அன்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார். முதல்முறையாகச் சுதந்திரத் தேர்தல் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின்போது எதிராளிகளுக்குச் சலுகைகளை விட்டுத்தர அவர் தயாராக இருந்தவிதம் வியப்பூட்டுவதாக இருந்தது. இன்காதா சுதந்திரக் கட்சியின் தலைவர் புத்தலேசி, தங்களுடைய கட்சிக்கு இந்தச் சலுகை வேண்டும், அந்தப் பதவி வேண்டும், இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று எதைக் கேட்டாலும் சிரித்தபடியே, சரி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்போடு கூறினார். இன்காதா ஒன்றும் நியாயமான விடுதலை இயக்கம் அல்ல என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த சிலர் கூறியபோது மனம் வருந்தினார். புத்தலேசி கேட்டால் மூத்த அமைச்சராகக்கூட அவரைச் சேர்த்துக்கொள்வேன் என்றார். நாட்டில் மீண்டும் ரத்தக்களரி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்குக் கருப்பர்கள் பற்றிய அச்சம் நீங்கி, நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக தென்னாப் பிரிக்க ரக்பி அணியான ஸ்பிரிங்பாக்கின் ஜெர்சியை அணிந்து விளையாட்டுத் திடலுக்குச் சென்றார். வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அந்த உடையை அருவருப்பாகப் பார்த்திருப்பார். அவரோ பெருமையோடு அணிந்து சென்றார். அந்த இடத்தை அவர் அடைந்தபோது அங்கிருந்தவர்களில் 99% வெள்ளையர்கள்தான் என்றாலும் அவர்களாலும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ‘நெல்சன், நெல்சன்’ என்று ஓலமிட்டு வாழ்த்தினார்கள்.

கோபமும் வரும்

அவருக்குக் கோபம் வந்தும் பார்த்திருக்கிறேன். 1992-ல் போய்படாங் என்ற இடத்தில் நடந்த படுகொலைகளில் 42 பேர் இறந்தபோது, அரசுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை விலக்கிக்கொண்டார். இதுகுறித்து ஏற்கெனவே அதிபர் எஃப். டபிள்யு. கிளார்க்குக்கு எச்சரிக்கை வந்தபோதும் அவர் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாக எடுக்கவில்லை, கருப்பர்கள் உயிர் என்றால் அற்பம்தானே என்று மண்டேலா கோபப்பட்டார்.

ஆஸ்லோ நகரில் நோபல் பரிசு பெறச் சென்றபோது நடந்த சம்பவமும் மண்டேலாவைக் கோபமுறச் செய்தது. ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்துப் பாடலை குழுவினர் இசைத்துக் கொண்டிருந்தபோது முன்னாள் அதிபர் கிளார்க்கும் அவருடைய மனைவியும் சளசளவென்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதைக் கவனித்தபோதும் அவர் கோபமுற்றார். ஆனால், அவ ருடைய பொறுமை, மன்னிக்கும் தயாள குணத்தைவிட அவருடைய கோபம் எந்த நாளிலும் பெரிதாக இருந்ததில்லை.

அதிபராக அவர் பதவிவகித்தது சில ஆண்டுகளே என்றாலும் அப்போது செய்த சாதனைகளைப் பார்க்கும்போது சிறையில் 27 ஆண்டுகளை வீணாகக் கழித்துவிட்டாரே என்ற வேதனை ஏற்படுவதுண்டு. ஆனால், சிறைவாசத்தை வீண் என்று கருத வேண்டியதுமில்லை. ஏனென்றால், அங்குதான் அவர் பக்குவப் பட்டு, பண்பட்ட தலைவராகத் திரும்பிவந்தார். சிறைக்குச் சென்ற போது அவர் கோபக்கார இளைஞராக இருந்தார். ஆனால், திரும்பிவந்தபோது எவரையும் மன்னிக்கும் மனோபாவம் அவரிடம் மிகுந்திருந்தது.

வெள்ளையர்களின் தவறுகளை மறந்து மன்னித்துவிடுங்கள் என்று அவர் கூறினால், ‘மன்னிப்பதா, சிறைக்குப் போய் அடி பட்டிருந்தால் உங்களுக்கு அந்தக் கஷ்டம் புரியும்’ என்று சொல் வதற்கு வாய்ப்பில்லாமல், அவரே 27 ஆண்டுகள் வெஞ்சிறையில் இருந்துவிட்டார். வின்னியை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய துயரம். ஆனால், அதை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அவருக்கு கிரேசா கிடைத்தார்.

அவர் எதை நிறுவ விரும்பினாரோ அதை நிறுவுவதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய பொருத்தமான அஞ்சலி. உலகில் யாருமே, இழக்க முடியாத அளவுக்கு முக்கியமானவர்கள் இல்லை என்பது அவருடைய கருத்து. ஆப்பிரிக்க தேசிய காங் கிரஸ் கட்சியைவிட தான் பெரியவன் அல்ல என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் நமக்கு உண்மை தெரியும். உலகின் எந்த மூலையில் யார் தலைமைப் பதவிக்கு வந்தாலும், தலை வராக இருப்பதற்கான தகுதிகள் எவை என்பதை மண்டேலா உணர்த்திவிட்டார்.

- டெஸ்மாண்ட் டூடூ, மனித உரிமை ஆர்வலர், ஆர்ச்பிஷப், சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

தி கார்டியன், தமிழில்: சாரி

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/article6223647.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.